*வரலாற்றில் இன்று*
அக்டோபர் 31
475 : ரோமுலஸ் அகஸ்டுலஸ் மேற்கு ரோமப் பேரரசராக முடி சூடினார்.
683 : மெக்கா முற்றுகையின் போது காபா தீப்பற்றி அழிந்தது.
802 : பைசண்டைன் பேரரசி ஐரீன் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
நிதி அமைச்சர் நிகபோரஸ் பேரரசராக நியமிக்கப்பட்டார்.
1517 : கிறிஸ்தவ சீர்திருத்த இயக்கம் :- மார்ட்டின் லூதர் தனது 95 கொள்கைகளை ஜெர்மனியின் விட்டன்பர்க் தேவாலய வாசலில் வெளியிட்டார்.
1754 : நியூயார்க்கில் கொலம்பியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
1803 : ஆங்கிலேயப் படைகள் பண்டாரவன்னியின் படைகள் மீது முல்லைத்தீவில் தாக்குதல் நடத்தின.
இதில் பலர் கொல்லப்பட்டனர்.
1837 : மிசிசிப்பியில் இரு படகு மோதிய விபத்தில் 300 பேர் உயிரிழந்தனர்.
1863 : நியூசிலாந்தில் நிலை கொண்ட பிரிட்டிஷ் படைகள் வைக்காட்டொ என்ற இடத்தில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மவோரி போர் மீண்டும் ஆரம்பமானது.
1864 : நெவாடா அமெரிக்காவின் 36 வது மாநிலமாக இணைந்தது.
1876 : தென்னிந்தியாவின் கிழக்குக் கரையில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியில் இரண்டு லட்சம் பேர்வரை உயிரிழந்தனர்.
1913 : அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலை லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
1918 : முதலாம் உலகப் போர்:- ஆஸ்திரியா-ஹங்கேரி 1867 -ம் ஆண்டு ஒப்பந்தம் கைவிடப்பட்டு ஹங்கேரி முழுமையான விடுதலை அடைந்தது.
அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 21 ஆயிரம் பேர் வைரஸ் காய்ச்சலினால் உயிரிழந்தனர்.
1931 : தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் சென்னையில் திரையிடப்பட்டது.
1937 : ஸ்பெயின் அரசாங்கம் வலென்சியாவிலிருந்து பார்சிலோனாவுக்கு இடம்பெயர்ந்தது.
1940 : இரண்டாம் உலகப்போர் :- பிரிட்டன் போர் முடிவுற்றது.
1941: இரண்டாம் உலகப் போர்:- ஐஸ்லாந்து அருகில் அமெரிக்கக் கப்பல் ஒன்றை ஜெர்மனிப் படகு தாக்கி மூழ்கடித்ததில் 100 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
இங்கிலாந்தில் ஆடைத் தொழிற்சாலை ஒன்று தீப்பற்றியதில் 49 பேர் உயிரிழந்தனர்.
1954 : அல்ஜீரியாவில் பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்கு எதிராக அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி போராட்டத்தை ஆரம்பித்தது.
1956 : சூயஸ் நெருக்கடி :- பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் சூயஸ் கால்வாயை திறக்க வற்புறுத்தி எகிப்தின் மீது குண்டுகளை வீசின.
1963 : இன்டியானாவில் பனிக்கட்டி சறுக்கல் களியாட்ட விழாவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 74 பேர் பலியானார்கள்.
1968 : வியட்நாம் போர் :- பாரிஸ் அமைதிப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து வடக்கு வியட்நாம் மீதான அனைத்து தாக்குதல்களையும் நவம்பர் 01 லிருந்து நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் அறிவித்தார்.
1969 : வால்மார்ட் தொடங்கப்பட்டது.
1979 : மெக்ஸிகோ நகரில் வெஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விழுந்ததில் 73 பேர் உயிரிழந்தனர்.
1984 : இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதன் பின்னர் டெல்லியில் இடம்பெற்ற கலவரத்தில் 3,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமராக பதவியேற்றார்.
1991: ஜப்பானில் தேயிலை அறிமுகப்படுத்தப்பட்டு 800 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தபால் தலை வெளியிடப்பட்டது.
பெங்களூரில் நடந்த ரயில் விபத்தில் 36 பேர் இறந்தனர்.
1994 : அமெரிக்கன் ஈகிள் விமானம் இன்டியானாவின்
ரோஸ்லான் அருகே விபத்துக்குள்ளானதில் விமானத்திலிருந்த 68 பேரும் உயிரிழந்தனர்.
1996 : பிரேஸிலின் விமானம் ஒன்று சாவோ பாலோவில் விழுந்ததில் 99 பேர் உயிரிழந்தனர்.
1999 : எகிப்து விமானம் ஒன்று மாசாசூசெட்ஸில் விழுந்ததில் அதில் பயணம் செய்த 217 பேரும் உயிரிழந்தனர்.
ஜெசி மார்டின் 11 மாதங்கள் பாய்மரக் கப்பலில் தனியே இடைவிடாது உலகை சுற்றிவந்து மெல்போர்ன் திரும்பினார்.
2000 : சிங்கப்பூர் விமானம் தைவானில் விபத்துக்குள்ளாகியதில் 83 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு அங்கோலாவில் தனியார் விமானம் வெடித்துச் சிதறியதில் 50 பேர் உயிரிழந்தனர்.
2003 : 22 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் மலேசியப் பிரதமர் மகதிர் பின் முகமது தமது பதவியைத் துறந்தார்.
இவர் 2018 ல் மீண்டும் தனது 92 வயதில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2011 : உலக மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டியதாக அறிவிக்கப்பட்டது.
2015 : மெட்ரோஜெட் விமானத்தை வடக்கு சினாயில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதில் 224 பேர் கொல்லப்பட்டனர்.
2018 : குஜராத் மாநிலத்தில் வல்லபாய் பட்டேல் சிலை திறந்து வைக்கப்பட்டது.
#தெரிந்து கொள்வோம் #வரலாறு #உலகம் #போர்