சாத்தான்குளம் news

1 Post • 110 views
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ்.. 2020-ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கில் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று இரவு முழுவதும் போலீசார் கொடூரமாக தாக்கியதில் ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.. இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது.. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் - இன்ஸ்பெக்டர்கள் ரகு, கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.. சம்பவம் நடந்தது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீசார் ரேவதி, பியூலா, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர்.. மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் சிபிஐ 2427 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.. கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரி, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு மார்ச் 23 ஆம் தேதி வழங்கப்பட்டது. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவலர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் கடந்த 2-ம் தேதி வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது.. ஆனால் அன்றைய தினம் தீர்ப்பு விவரம் ஒத்திவைக்கப்பட்டது.. இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் 9 பேருக்கும் ஏப்ரல் 6, அதாவது இன்று கிழமை தண்டனை விபரங்கள் வெளியிடப்படும் என நீதிமன்றம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.. அப்போது " சாத்தான்குளம் வழக்கு அரிதினும் அரிதான வழக்கு.. இந்த வழக்கில் லாக் அப் மரணங்களை சகித்துக் கொள்ள முடியாது என்று மாநில அரசும், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மத்திய அரசும் பரிந்துரைத்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.. மேலும் " காவல்நிலைய மரணம் மிக கொடியது, தந்தையையும், மகனையும் இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும்.. காவல்துறை அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதால், இதை கொடுமையாகவே கருதப்படுகிறது.. எனவே சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை விதிப்பதே சிறந்தது.. ஆனாலும் மரண தண்டனை தான் வழங்க வேண்டுமா என்பதையும் ஆலோசிக்க வேண்டி உள்ளது.. தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையும் நிர்வாணப்படுத்தி மனம் போன போக்கில் காவல்துறை அதிகாரிகள் தாக்கி உள்ளனர். காவல்துறையினரின் செயலை வாசித்தாலே மனம் பதைபதைக்கிறது.. எனவே இதுபோன்ற காவல் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கினால் அது மற்ற காவல்துறையினருக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தாது.. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய இவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.. சாத்தான்குளம் சம்பவம் சமூகத்தின் வளர்ச்சியை ஒடுக்கும் வகையில் உள்ளது.. அதற்கு ஏற்றார் போல் இந்த தீர்ப்பு இருக்க வேண்டும்.. எதிர்காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பொருளாதார ரீதியிலும் தண்டனை இருக்க வேண்டும்.. எனவே இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.." என்று நீதிபதி தெரிவித்தார்.. மேலும் குற்றவாளிகளுக்கு அபராத தொகையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.. அதன்படி காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #சாத்தான்குளம் செய்திகள் #📰ஏப்ரல் 6 முக்கிய தகவல் 📺
16 likes
8 shares
Ambalavanan
531 views 16 hours ago
#சாத்தான்குளம் news சட்டம் ஓர் வலிமையானது, எல்லாவற்றிற்கும் மேலானது, அது நேர்மையாக தீர்ப்பை கூறும் சமயத்தில் சட்டம் 99 முறை தோற்கலாம் மனித தவறால்... ஆனால் அது தன் கடமையைச் செய்யும் பொழுது யாரும் அதன் முன் நிற்க முடியாது. தீர்ப்பின்_கூறுகள்: சாத்தான்குளம் காவல் நிலைய கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்தது ஏன்? - மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பின் விவரம்* ஒரே நேரத்தில் தந்தை மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது. சாதாரண நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இதில் குற்ற செயல்களை செய்துள்ளனர். காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களில் நேரடி சாட்சிகள் அரிதிலும் அரிதாகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்த வழக்கில் நேரடி சாட்சியம் உள்ளது. குற்றவாளிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் கடுமையான தண்டனை வழங்கினால் தான் இது போன்ற குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும். சட்டத்தை காக்க வேண்டியவர்களே குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார்கள். வேலியே பயிரை மேய்ந்து அதிகார அதிக பிரயோகம் செய்துள்ளனர். தந்தை மகன் இருவர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. எங்கு அதிகாரம் உள்ளதோ அங்கு பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும். சட்ட திட்டங்களை காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர். இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும். குற்றவாளிகளை சார்ந்து குடும்பம் உள்ளது என்பதால் தண்டனையை குறைக்க வேண்டுமென்பதை ஏற்க இயலாது. தண்டனை குற்றத்தின் தன்மையை பொறுத்தே தீர்மானிக்க வேண்டும். குற்றவாளிகள் அதிகாரத்தை அதிகபிரயோகம் செய்துள்ளதால், கடுமையான குற்றமாகவே கருத வேண்டும். பொதுமக்கள் பணத்தில் அரசு ஊதியம் பெற்றவர்கள், பொருளாதார அழுத்தத்தையோ, மன அழுத்தத்தையோ காரணமாக கூற இயலாது. காவல் நிலையத்தில் வைத்து இருவரும் காவல் சித்திரவதை செய்யப்பட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர். இருவரும் நிராயுதபானியாக இருந்தபோதும், இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். இருவரும் வியாபாரிகள். சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள். அவர்கள் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்றே தெரிகிறது. வழக்கில் கைது செய்யப்பட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதிப்பதே சிறந்தது. இதுபோன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கினால், இப்படி செயல்படும் போலீசாருக்கு அச்சம் ஏற்படாது. 9 பேருக்கும் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர் பேனாவின் முள் நுனியை உடைத்தார் நீதிபதி முத்துக்குமரன்.. இது போன்று இனி நடக்காமல் இருக்கவும் குற்றம் புரிபவர்கள் இனி பயப்படவும் இந்த தீர்ப்பு முக்கியமானது.. செய்தி
20 likes
6 shares