அம்மா தாயே போற்றி போற்றி

11 Posts • 20K views
MUTHUPANDIAN RAMKUMAR
8K views 12 days ago AI indicator
#🙏🌺மகாலட்சுமி 🌺🙏 #மகாலட்சுமி #மகாலட்சுமி தாயே போற்றி 🙏 #அன்னை மகாலட்சுமி 🙏🌺 #மகாலட்சுமி தாயே போற்றி போற்றி #லட்சுமியின்_18_புத்திரர்கள் – இவர்களை நினைவுகூர்வதே லட்சுமி தேவியை மகிழ்விக்கிறது #லட்சுமி_தேவியின்_18_புத்திரர்களைப் பற்றி சாஸ்திரங்கள் விவரிக்கின்றன. இந்த 18 திருநாமங்களும் மிகவும் தொன்மையானவை மற்றும் மர்மமானவை. இவற்றை நினைவுகூர்வதே லட்சுமி தேவியை மகிழ்வித்து, தன் பக்தர்களுக்கு ஆசிகளைப் பொழிகிறது. இந்த 18 திருநாமங்களும் லட்சுமி தேவியையே உள்ளடக்கியுள்ளன; அவற்றுடன் செல்வம், செழிப்பு, வெற்றி, மகிழ்ச்சி மற்றும் வளம் ஆகிய அனைத்து கூறுகளும் அடங்கியுள்ளன. ஒரு பக்தர் இந்தத் திருநாமங்களை நினைவுகூரும்போது, ​​லட்சுமி தேவி தன் புத்திரர்கள் வழியாக அவர்களை நோக்கி ஈர்க்கப்பட்டு, அவர்களின் வாழ்வில் நிதிச் செழிப்பு, கடன் நிவாரணம், வியாபார இலாபம், அமைதி மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறார். #லட்சுமியின்_புத்திரர்களின் 18 திருநாமங்கள் – ஓம் தேவசகாய நமஹ (ஸ்வாஹ) – தேவர்களின் நண்பன். ஓம் சிக்லிதாய நமஹ (ஸ்வாஹா) – சிக்லித்தின் (நீர் அல்லது ஈரப்பதம்) வடிவம். ஓம் ஆனந்தயாய நமஹ (ஸ்வாஹா) – ஆனந்தத்தின் வடிவம். ஓம் ஸ்ரீகர்தமய நமஹ (ஸ்வஹா) ஸ்ரீ மற்றும் செழிப்பின் கர்த்தம் (திரள்) ஆவாள். ஓம் ஸ்ரீப்ரதாய நமஹ (ஸ்வாஹா) – ஸ்ரீயை (செல்வத்தை) அருள்பவன். ஓம் ஜத்வேதாய நமஹ (ஸ்வாஹா) – நெருப்பின் வடிவில் இருந்து அனைத்தையும் அறிந்தவன். ஓம் அனுராகய நமஹ (ஸ்வாஹா) – பாசம் மற்றும் அன்பின் வடிவம் ஆவாள். ஓம் சம்வதாய நமஹ (ஸ்வாஹ) – இது உரையாடல் மற்றும் பேச்சின் வடிவம். ஓம் விஜயய நமஹ (ஸ்வாஹ) – வெற்றியின் வடிவம். ஓம் வல்லபாய நமஹ (ஸ்வாஹ) – அனைவருக்கும் பிரியமானவர். ஓம் மதாய நமஹ (ஸ்வாஹ) – இது உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியின் வடிவம். ஓம் ஹர்ஷய நமஹ (ஸ்வாஹ) – இது மகிழ்ச்சி மற்றும் ஆனந்தத்தின் வடிவம். ஓம் பலய நமஹ (ஸ்வாஹ) – இது வலிமை மற்றும் சக்தியின் வடிவம். ஓம் தேஜ்சே நமஹ (ஸ்வாஹ) – இது பிரகாசம் மற்றும் ஒளியின் வடிவம். ஓம் தமகாய நமஹ (ஸ்வாஹ) – இது பிரகாசத்தின் வடிவம். ஓம் சாலிலாய நமஹ (ஸ்வாஹ) – இது நீரின் (ஓட்டத்தின்) வடிவில் உள்ளது. ஓம் குக்குலாய நமஹ (ஸ்வாஹ) – குக்குள வடிவில் இருப்பவரே. ஓம் குருந்தகாய நமஹ (ஸ்வாஹ) – குருந்தக வடிவில் இருப்பவரே. 💫 லட்சுமியின் புத்திரர்களை நினைப்பதால் கிடைக்கும் அற்புதமான பலன்கள் இந்த 18 நாமங்களைத் தவறாமல் உச்சரிப்பது லட்சுமி தேவியை மகிழ்விப்பதோடு, பக்தரின் வாழ்வில் செல்வம், செழிப்பு, நிதி நிலைத்தன்மை, கடன் நிவாரணம், வியாபார லாபம், மன அமைதி, இல்லத்தில் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் அனைத்து விதமான அச்சங்களிலிருந்தும் விடுதலை ஆகியவற்றை வழங்குகிறது. கிரகத் தடைகளும் நீங்கி, குடும்ப நல்லிணக்கம் அதிகரிக்கிறது. 🪷 சாதனா செய்யும் முறை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த முறையில் சாதனா செய்யுங்கள்: குளித்துவிட்டு மஞ்சள் நிற ஆடை அணியுங்கள். சன்விதையின் மீது (வில்வத்தில் எழுதப்பட்டிருக்கும்) குக்குளு மற்றும் வெள்ளை எள் விதைகளை ஆஹுதியாகச் சமர்ப்பிக்கவும். இந்த 18 நாமங்களையும் உச்சரித்து, ஒவ்வொரு நாமத்திற்கும் ஒரு ஆஹுதியைச் சமர்ப்பிக்கவும். இது சாத்தியமில்லை என்றால், இந்தப் பெயர்களைக் குறைந்தபட்சம் 11 முறையாவது உச்சரிக்கவும். இந்தச் சாதனையை 7, 11, அல்லது 21 வெள்ளிக்கிழமைகளுக்குத் தொடரவும். . ஓம் ஸ்ரீ லக்ஷ்மி புத்ரேப்யா நமஹ்
196 likes
1 comment 248 shares
MUTHUPANDIAN RAMKUMAR
3K views 5 days ago AI indicator
#🙏🌺மகாலட்சுமி 🌺🙏 #மகாலட்சுமி தாயே போற்றி 🙏 #அன்னை மகாலட்சுமி 🙏🌺 #மகாலட்சுமி தாயே போற்றி போற்றி #மகாலட்சுமி ஐஸ்வர்யங்களை பெற்று தரும் வரலட்சுமி விரதம் ! வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இந்துக்களின் நோன்பாகும். இந்நாளில் வீட்டைச் சுத்தம் செய்து விளக்கேற்றி வாசனைப் புகையினால் இல்லத்தை நிறைத்து கலசம் ஒன்றில் லட்சுமியை வணங்கித் தொடங்குவர். கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடு ம், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர். நாம் செய்யும் பாவ, புண்ணியத்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள். மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எனவே தான் அன்னை மகாலட்சுமியை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொள்கி றார்கள். ஆகஸ்டு 20ஆம் தேதி வெள்ளிக் கிழமை வரலட்சுமி விரதம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும். லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும். வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும். வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளி ல் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அன்னை மகாலட்சுமி மாதுளம் கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மாவதி என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகாராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்ட மையால் சீதை என்றும் பாற்கடலிலிருந்து தோன்றிய தால் ஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள். எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள்.இதனால் தான் திருமணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்ற னர். மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம். லட்சுமியின் திருக்கரங்கள் ஸ்வர்ண ஹஸ்தம் எனப்படுகிறது. எல்லா லட்சுமிகளும் அபய வரத ஹஸ்தத்துடன் அருள்புரிகின்றார்கள். லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன. மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும். மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும். அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந் தால் லட்சுமியின் அருள் கிடைக்கும். செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிட லாம். வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். லட்சுமியை வில்வத்தால் அர்ச்சனை செய்து பூஜிக்கலாம். வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமமாகும். வாமன புராணத்தில் மகாலட்சுமியின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது. வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள் என்று கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட வில்வ மரமே மகாலட்சுமி சொரூபமாக விளங்குகிறது. நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம். துளசி செடியிலும் மகாலட்சுமி எழுந்தருளி வாசம் செய்கிறாள். இதேபோல் மஞ்சளிலும் இருக்கிறாள். அதனால் துளசி செடியுடன் மஞ்சள் செடியையும் சேர்த்து நம் வீட்டில் வளர்ப்பது நல்லது. பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம்,கோலம்,சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள். மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ. மகாலட்சுமி யை சாமந்திப்பூ, தாழம்பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம். நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனி யை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும். ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார். மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமி யின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படு கின்றன. தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர். வரலட்சுமி விரதத்தின் போது வீடு சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தம்தான் மகாலட்சுமி க்கு பிடித்தமானது. சூரிய உதயத்திற்கு முன்னாள் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். உங்க கையால் கோலம் போட்டு மகாலட்சுமியை அழைக்க வேண்டும். லட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக விநாயகர் வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜையை மனநிறை வோடு செய்ய வேண்டும். ஒரு ரூபாய்க்கு கற்பூரம் ஏற்றி வரலட்சுமியை வழிபட்டாலும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். மஞ்சள் குங்குமம் பூ வைத்து முடி கயிறு வைத்து பூஜிக்கலாம். ஒன்பது முடிச்சு இருக்கும் நோன்புக்கயிறு அவசியம். வயது மூத்த சுமங்கலிகள் கையால் நோன்புக்கயிறு கட்டிக்கெள்ள வேண்டும். சர்க்கரைப் பொங்கல் பாயசம், தாமரை மலர் அவசியம். மனதில் பக்தியுடன் சந்தோஷத்துடன் பூஜை செய்ய வேண்டும். பட்டுத்துணியால் அவசியம் அம்மனை அலங்கரிக்க வேண்டும். சரிகை உள்ள துணியால் அலங்கரிக்க வேண்டும். வெள்ளை கறுப்பு நிறத்தில் வஸ்திரம் இருக்கக்கூடாது. மஞ்சள் நிறம், சந்தன நிறத்தில் வஸ்திரம் இருந்தால் அற்புதமானது. கலசத்தில் ஸ்ரீ வரலட்சுமி நமஹ என்று இருக்க வேண்டும். அம்மன் அலங்காரம் செய்த உடன் முடிக்கயிறு தயாரிக்கும் போது 9 முடிச்சுகள் போட்டிருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலைதான் இந்த முடிச்சு போடவேண்டும். பூஜை செய்பவர்கள் பட்டு வஸ்திரம்தான் அவசியம் அணிய வேண்டும். சரிகை இருப்பது அவசியம். பூஜைக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு,வளையல், ரவிக்கை துணி கொடுத்து ஆசி பெற வேண்டும். வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. லஷ்மியை மகிழ்விக்கும் இந்த விரதமிருக் கும் பெண்மணி இவ்வுலகில் சகல போகங்களையும் பெற்று அனுபவித்தபின் வைகுந்தம் சேருவாள். எல்லா சுக்லபட்ச வெள்ளிக்கிழமைகளில் மஹாலஷ்மியை முறைப்படி பூஜிப்பவர்கள் வாழ்நாள் முழுதும் செல்வ செழிப்புடன் ஆரோக்கிய மாக வாழ்வார்கள். அவர்கள் குடும்பம் தழைக்கும். இந்த விரதக்கதையை படிப்பவர்கள் கேட்பவர்களும் வரலஷ்மியின் அருளால் தனதான்ய சம்பத்துடன் சௌக்கிய மாக வாழ்வார்கள் என தேவர்கள் வாழ்த்துகின்றனர். வரலட்சுமி நோன்பு விரதத்தை நடத்துபவரு க்கு எவ்வளவு சிறப்புகள் கிடைக்குமோ, அதே போல் அதில் கலந்து கொள்பவர் களுக்கும் சிறப்பு வந்து சேரும். இந்த விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது அனுஷ்டித்து வந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
35 likes
79 shares