SIR எனும் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின் மூலம் தமிழர்களின் வாக்குரிமையை பறித்து தமிழர்களை வஞ்சிக்கும் தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக 10-11-2025 அன்று சென்னையில் நடைபெற்றது. தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கூடிய தோழர்கள், பாஜகவிற்கு சாதகமாக செயல்படும் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், தமிழர்களின் வாக்குரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் தமிமுன் அன்சாரி, வேல்ஃபேர் கட்சியின் மாநிலத் தலைவர் தோழர் அப்துல் ரஹ்மான், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை. திருவள்ளுவன், இந்திய தவ்ஜீத் ஜமாஅத் தோழர் சையது அலி, மக்கள் அதிகாரக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன், தாயக மக்கள் கட்சியின் தலைவர் தோழர் தமிழ்ச்செல்வன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சுந்தரமூர்த்தி, வன வேங்கைகள் கட்சியின் தலைவர் தோழர் இரணியன், தமிழர் விடியல் கட்சியின் தோழர் இளையராஜா, தலித் இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் தோழர் மெலட்டூர் கார்த்திக், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தோழர் ராஜசேகர், குடியுரிமை பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் பாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளும் தோழர்களும் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் SIR திட்டத்தை கண்டித்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலரின் அலுவலகம் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற போது தலைவர்கள், தோழர்கள் என நூற்றுக்கணக்கானோர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
#தேர்தல் ஆணையம் எச்சரிக்கை #📰தமிழக அப்டேட்🗞️ #🚨கற்றது அரசியல் ✌️ #💪 மே17 இயக்கம் #தமிழ்த்தேசியம்