Failed to fetch language order
வேலுப்பிள்ளை பிரபாகரன்
645 Posts • 6M views
-
1K views
இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை விக்கிலீக்ஸ், இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை விக்கிலீக்ஸ், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள். அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். அதன் காரணமாகவே போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறிப்பு அரசாங்கமோ பாதுகாப்புப் படைகளோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் ராஜபக்சேவுக்கும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாயவுக்கும் போர் களத்தின் உண்மையான நிலவரம் பற்றிய சரியான தகவல்ஒருங்கிணைப்பு கிடைக்கவில்லை. இதனால் இலங்கை அரசு விரும்பியதுபோல பிரபாகரன் உயிருடன் அராசங்கப் படைகளிடம் சிக்கவில்லை, என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 25, 2009 ல் புலிகளுடனான போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரிடம் ராஜபக்சே கூறியதாகவும், இந்தத் தகவல் இந்திய வெளியுறவுச்செயலர் நாராயணனுக்கு தெரியும் என்றும், ஆனால் கடைசி வரை அதனை வெளியிடாமலேயே விட்டுவிட்டதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. தகவலின்படி பிரபாகரன் உயிருடன் இருப்பாராயின் நவம்பர் 27 மாவீரர் தின உரை ஆற்றுவார் ஊடகங்களில்ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில்தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதிசனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத்தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். நெருங்கிவரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத்தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர்வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமானசிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின்சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட,புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது. களத்தில்இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின்இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்றவேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந்தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக்கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர்என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர். #வேலுப்பிள்ளை பிரபாகரன்
35 likes
19 shares
-
1K views
#யார்_தீவிரவாதி..? போரின் இறுதி நாட்களில் நாளொன்றுக்கு 200 தமிழ்மக்கள் படுகொலை செய்யபட்டுகொண்டிருக்க குறிப்பாக மே 15 அன்று காயம்பட்டு கிடந்த பல்லாயிரக்காணக்கான மக்கள் புல்டோசர் ஏற்றி படுகொலை செய்யபட்டபின் கொழும்பு நகரில் பதற்றம்,கொழும்பு மக்கள் மத்தியில் பதற்றம்,கொழும்பு இராணுவ உயர் மட்டத்தில் பதற்றம் ஏன் தெரியுமா இந்த படுகொலைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக கொழும்பு நகரை குறிவைத்து புலிகளால் மிகக் கடுமையானதொரு தாக்குதல் நடாத்தபடுமென்ற எதிர்பார்ப்பு,பரிதவிப்பு உண்மையில் இப்படியானதொரு படுகொலைக்கு பின்பு தளபதிமார்களால் தலைவருக்கு கொழும்பு நகரை மையமாக வைத்து மிகக் கடுமையானதொரு தாக்குதல் நடத்தபட வேண்டுமென்ற அப்படியொரு அழுத்தம் கொடுக்கபட்டது உண்மைதான். ஆனால் அதுக்கு அண்ணை என்ன சொன்னார் தெரியுமா? "தமிழ் மக்களுக்கான நீதியை வரலாற்றுக்கும் உலக சமுதாயத்திற்கும் விட்டுவிடுகின்றேன். புலிகள் இயக்கம் அப்படியொரு செயலை செய்து அவனுக்கும் நமக்கும் வித்தியாசமில்லையென்டு காட்டவேண்டாம். நிராயுதபாணியாக நிக்கும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது கோழைகளின் செயல். புலிகள் ஒருபோதும் கோழைகள் அல்ல" என்று பழிக்கு பழி வாங்க துடித்த தளபதிமார்களின் அந்த தாக்குதல் திட்டத்தையும் நிராகரித்தார். அன்றுகூட தலைவர் நினைத்திருந்தால் ஆமி கொன்ற தமிழ் மக்களைவிட பத்துமடங்கு சிங்கள மக்களை அழித்தொழித்திருக்க முடியும். ஆனால் அப்படியேதும் நடக்ககூடாதென கண்டிப்பான உத்தரவிட்டிருந்தார். எது பயங்கரவாதம்? யார் கொடுங்கோலன்? யார் தீவிரவாதி? யார் பயங்கரவாதி? யாரடா சர்வாதிகாரி? மனிதத்தை போதிக்கும் மன்றங்களே புனிதத்தை போதிக்கும் தேசங்களே சர்வதேச நாட்டாமைகளே,தீவிரவாதி முத்திரை குத்தியவர்களே,மனித உரிமை ஆர்வலர்களே,நீதிமான்களே,நடுநிலையாளர்களே. எங்கட அண்ணண் இருக்கும் திசையை நோக்கி வணங்குங்கள் ஏனெனில் #பிரபாகரம் என்பது அத்தனை புனிதமானது. அத்தனை உயர்வானது அத்தனை உன்னதமானது அத்தனை மென்மையானது அத்தனை மேன்மையானது அத்தனைக்கும் மேலானது. #வேலுப்பிள்ளை பிரபாகரன்
25 likes
13 shares