life feelings sad dilogue

57 Posts • 34K views
🌾 “எழுந்து வா மகனே” 🌾 மகன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தான். வேலை இல்லை. கையில் இருந்த முயற்சிகள் எல்லாம் வெறும் காகிதம் போல. “அம்மா… நான் முயற்சி செஞ்சது எல்லாமே தோல்வியா போச்சு.” அம்மா அடுப்பை அணைத்து வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். “மகனே… நீ தோல்வியடைந்தவன் இல்லை. நீ முயற்சி செஞ்சவன்.” அவன் எதுவும் பேசவில்லை. “காலையில் எழுந்து வேலைக்கு போகும் எல்லாரும் ஜெயிச்சவங்கன்னு யார் சொன்னது?” அம்மா அவன் கையைப் பிடித்தாள். “இந்த மண்ணுல நெல் கூட ஒரு நாள் நட்டா மறுநாள் அறுவடை வராது.” அவன் தலை நிமிர்ந்தது. “நீ இப்போ நிக்கற இடம் உன் வாழ்க்கை முடிவு இல்லை. இது நடுவழி.” அம்மா மெதுவா சொன்னாள்— “விதி உன்னை கீழே தள்ளல. நீ நின்று மூச்சு வாங்க ஒரு இடம் குடுத்திருக்கு.” அவன் கண்களில் நீர். “மகனே… உன் நேரம் உன்னை விட்டு ஓடாது. அது உன்னை அடைய மெதுவா வருது.” அம்மா எழுந்து சொல்லும்போது— “இன்னொரு விஷயம் நினைச்சுக்கோ. இந்த வீட்டுல நீ தோற்றவன் இல்லை. நீ என் மகன். அது போதும்.” மகன் நிமிர்ந்து நின்றான். வெளியுலகம் மாறவில்லை. ஆனா அவனுக்குள் ##😫சோக ஸ்டேட்டஸ் #😢Sad Feelings💔 #😔தனிமை வாழ்க்கை 😓 #😞Sad Quotes #😒தனிமை Quotes #life feelings sad dilogue #my sad quotes in my life #sad life feelings quotes #sad ....#life feelings# ஒரு சின்ன துணிச்சல் மீண்டும் வந்து உட்கார்ந்தது.
14 likes
9 shares
சில சமயங்களில் சில ஆண்களின் கண்களை உற்று நோக்காதீர்கள்.. எல்லோரும் புதுத்துணி எடுத்தாச்சு நாமதான் எடுக்கலை ன்னு சொல்லும் பையனின் ஏக்கத்தை தீர்த்து வைக்கமுடியாமல் கீழ்நோக்கும் அப்பாக்களின் கண்களை, அம்மாவை தரக்குறைவாக பேசும் மனைவியின் பேச்சினை நிறுத்த முடியாமல் தன் இயலாமையை எண்ணி துயருறும் கணவர்களின் கண்களை, துரோகத்தை தாங்கமுடியாமல் காதலியின் கைகளை பிடித்துக்கொண்டு நானென்ன செய்தேன் என்று அழுது கெஞ்சிக்கொண்டிருக்கிற காதலனின் கண்களை, கடன்காரர்கள் வெளியே நிற்கிறார்கள் என்கிற மகனின் தாழ்வான குரலுக்கு பதில் தரமுடியாமல் கூனி குறுகும் குடும்ப தலைவனின் கண்களை, தன்னை விட சிறியவனின் திருமணத்தில் உனக்கு அடுத்தது எப்போ? என்ற கேள்வியை எதிர்க்கொள்ளும் முதிர்கண்ணனின் கண்களை, வரிசையில் நிற்கும்போது தன்னை முந்திச்செல்லும் வலியவனிடம் எதிர்த்து பேச திராணியில்லாமல் விட்டுக் கொடுக்கும் அப்பாவியின் கண்களை, சரியாக உண்ணும் போது இன்னும் எத்தனை நாளைக்கு தான் வேலை கிடைக்காமல் இப்படியே இருப்பாய் என்ற தந்தையின் நக்கலுக்காக பாதியில் எழுந்துச்செல்லும் வேலையில்லா பட்டதாரியின் கண்களை, உச்சி வெயிலில் மேல் சட்டை இல்லாமல் சாலை வேலை செய்யும் ஒருவன் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று உட்கார்ந்த வேளையில் மேலாளரின் அதட்டல் சத்தம் கேட்டு எழுந்து போகின்ற சாமனியனின் கண்களை, இருபதாம் தேதியே சம்பளம் தீர்ந்த நிலையில் இன்னும் பத்து நாட்கள் எப்படி ஓட்டமுடியும் என்று நினைத்து தூங்காமல் தவிக்கும் சராசரி மனிதனின் கண்களை, எப்போதும் உற்று நோக்காதீர்கள், அப்படி பார்த்தீர்களானால் கரைந்து போவீர்கள்...... படித்ததில் பிடித்தது......💔😿😿😿🌿🌿🌿 #📷நினைவுகள் ##Sad# #alone# #Fake best friend# #Life feelings # #90´s &80 `s # #Sad & girl, boys feelings # #Fake People 😑#Broken💔 #Love Failure #Sad Life #Aloneboy#Depression #Feelings #Thanimai Kathalan ##😫சோக ஸ்டேட்டஸ் #😢Sad Feelings💔 #😔தனிமை வாழ்க்கை 😓 #😞Sad Quotes #😒தனிமை Quotes #life feelings sad dilogue
17 likes
7 shares