ராஜ் பிரபாகரன்
644 views
ஒரு பேருந்தில் இரண்டு பெண்களுக்கு இடையே சண்டை..
பெண்கள் என்றாலே சண்டை என்பது சகஜம் தான்.
நடத்துனர் வந்து எதுக்கு
சண்டை போடுறீங்க என்று கேட்டார்.
அதுக்கு முதல் பெண், கதவை திறந்தால், காற்று நிறைய வரும். அது எனக்கு ஒத்துக் கொள்ளாது. இறந்து விடுவேன் என்று சொன்னாள்.
இரண்டாவது பெண்ணோ, காற்று வரா விட்டால் நான் இறந்து விடுவேன்னு சொன்னாள்.
சண்டை தீர்ந்த பாடில்லை.
நடத்துனருக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை.
அந்த பெண்களின் பின்னால் இருந்த ஒரு ஆண், கொஞ்ச நேரம் கதவை திறங்க, ஒருத்தி சாகட்டும், கதவை மூடுங்க, இன்னொருத்தி சாகட்டும் என்று சொன்னான்.
அதுக்கு நடத்துநர், அவிங்க வீட்டு ஆளுங்க வந்து கேட்டால் என்ன செய்ய.
அதுக்கு அந்த அப்பாவி ஆள், அதுல ஒருத்தி என் மனைவி, இன்னொருத்தி என் துணைவி.
இவிங்க போனால் நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்றான்.
இதை கேட்ட நடத்துனருக்கோ மயக்கம் வந்து விட்டது.. ஆளு பார்க்க அப்பாவியாட்டம் இருக்க. எப்படி இவ்வளவு விவரமா யோசனை சொன்ன.
அதுக்கு அந்த அப்பாவி, எனக்கு ஒண்ணும் தெரியாது. பின்னாடி சீட்டில் இருக்கும் என் இணைவி தான் இந்த ஐடியா கொடுத்தா.
நடத்துநரோ பலே ஆளுய்யா நீ.
சரி சரி எந்த ஊருக்கு போகணும்
திருக்குவளைக்கு ஐந்து டிக்கெட் தாங்க.
யாருயா அந்த அஞ்சாவது ஆளு.
டிரைவர் சீட் கிட்ட கறுப்பு சிகப்பு கலர் புடவை கட்டி இருக்கே, அவளை பஸ் ஏறும் போதே அதை கரெக்ட் பண்ணி விட்டேன். அவளுக்கும் சேர்த்து டிக்கெட் கொடுங்க.
நடத்துநருக்கோ கடும் கோபம் வந்து
யோவ்
அது என் பொண்டாட்டியா.
#நக்கல் #நக்கல் #🎭காமெடியன் வீடீயோஸ்😂
9 likes
5 shares