ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள்

36 Posts • 87K views
ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் லோக குரவே நம ஸ்ரீ மத் வரவரமுநயே நம ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை அனைவருக்கும் ஶ்ரீ ருக்மிணிப் பிராட்டி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் இனிய நாள் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐 விஷ்வாவசு ஸம்வத்ஸரzம் (विश्वावसु षसंवत्सर:) ஸர்வே ஜனா: ஸுகிநோபவந்து! सर्वे जना: सुखिनो भवन्तु। 15/3/26 மாஸப்ரவேஸம் பங்குனி-1 திருவோணம்- 🌸ஸ்ரீ பொய்கையாழ்வார் 🌺ஸ்ரீ பிள்ளையுலகாரியன் 🌸ஸ்ரீ வேதாந்தாச்சாரியர் ஞாயிற்றுக்கிழமை 💐💐💐💐💐💐💐💐💐💐 காலை 6:00: விஸ்வரூபம் 6:15 - 7:45 திருவாராதனம் காலசந்தி 💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐 மாலை 5:00 🪷ஸ்ரீ பார்த்தசாரதி 🌺ஸ்ரவணம் புறப்பாடு சின்னமாடவீதி 6:30 🪷ஸ்ரீ பார்த்தசாரதி 🌸ஸ்ரீ பொய்கையாழ்வார் 🌺ஸ்ரீ பிள்ளையுலகாரியன் 🌸ஸ்ரீ வேதாந்தாச்சாரியர் 🪷ஆஸ்தானம் 🌺முதல் திருவந்தாதி 9:30 திருநடைக்காப்பு 💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐🪔 மாசி பிரமோற்சவங்கள் திருக்கண்ணபுரம் 2026/2/23 -2026/3/8 ஸ்ரீரங்கம் 2026/2/19- 2026/2/27 திருபுட்குழி 2026/2/13- 2026/2/22 திரு வரகுண மங்கை 2026/2/13- 2026/2/22 திருவல்லா 2026/2/20- 2026/3/1 திருவன்மண்டூர் 2026/2/11- 2026/2/20 உலகளந்த பெருமாள் காஞ்சிபுரம் 23/1/26-1/2/26 குடந்தை ஆதி வாராக 22-2-26 to 3-3-26 குடந்தை ராஜகோபால சுவாமி 22-2-26 to 3-3-26 குடவாசல் செங்காளி புரம் ரங்க நாதர் 22-2-26 to 3-3-26 மதனப்பள்ளி தறி கொண்ட நரசிம்மர் 22-2-26 to 3-3-26 திருப்பதி சீனிவாச மங்கpuram 8-2-26 to 16-2-26 மங்களகிரி நரசிம்மர் 22-2-26 to 3-3-26 மேலக்கோட்டை நாகமங்கலம் 22-2-26 to 7-3-26 ஸ்ரீமுஷ்ணம் 22-2-26 to 7-3-26 காரமடை 23-2- 2026 to 4-3-2026 கரூர் தான்தோன்றி மலை 21-2-2026 to 13-2-2026 திருச்சி கொடியாலம் 1-3-2026 to 10-3-2026 கதிரி நரசிம்மர் கோயில் 2026 2026/3/8 நரசிம்மர் தர்மபுரி ஆந்திர பிரதேஷ் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 27-2-2026 to 8-3-2026 தொண்டமான் புரம் வெங்கடேஸ்வர சுவாமி காளாஸ்தி அருகில் 16-2-2026 to 24-2-2026 மகிழ்மாறன் பொன்னடி குழாமின் அடுத்த கைங்கர்யங்கள் உறையூர் கமலவல்லி நாச்சியார் ரங்கநாதர் பங்குனி-15 ஆயில்யம் சேர்த்தி வருகிற மார்ச் -29 ததியாயாதனை நடைபெற உள்ளதால் பாகவத கோஷ்டியும் மற்றும் அனைத்து பக்த கோடிகளும் எழுந்தருளூமாறு பிராத்திக்கிறோம் - மகிழ்மாறன் பொன்னடி குழாம் 7695998995 மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள் 1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி 2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல் • முமூஷிப்படி 3,சுயஅபிமானம் அறவே கூடாது -முமூஷிப்படி 4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம் 5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர் 6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர் 7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்), திதி தர்பணாதிகள் அகங்கார, மமகாரம் தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல். -முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்) 8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களை விட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி 9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர் 10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம். ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை 11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள் இவையனைத்தும் ஆழ்வார் திருநகர் ஸ்ரீ இளையவல்லி பூவராக ஸ்வாமி மற்றும் மதுரை ஸ்ரீ உ. வே அரங்கராஜன் ஸ்வாமிகளால் அடியேன் செவிசாய்த்தது ததியாராதனை கைங்கர்யம் நடைபெறும் திவ்ய தேசங்கள். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீ பொய்கையாழ்வார் ஐப்பசி திருவோணம் -7695998995 திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி(சித்திரை) மகிழ்மாறன் பொன்னடி குழாம் திருவல்லிக்கேணி +918056054526,+919840822461 -சீனிவாச ராமாநுஜ தாசன் -+919791111307 தெள்ளிய சிங்கர்(ஆனி) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் - +917401499217,+919791731347 திருவள்ளூர்(சித்திரை) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் -+919941199741,7695998995 தை- ஸ்ரீ கலியன் ஜீயர் ராமானுஜ ஜீயர் கூடம் குலசேகர ராமானுஜ தாசன் -+919789888756 பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன் -9789832341 திருஇந்தளூர் திருநீர்மலை(சித்திரை) திருநின்றவூர் (பங்குனி) திருவிடந்தை (சித்திரை) திருகடல்மல்லை சோளிசிம்மபுரம்(சித்திரை) திருகண்ணபுரம் திருகண்ணமங்கை திருச்சேறை நாச்சியார் கோயில் குடந்தை சாரங்கபாணி திருவெள்ளறை கூடவழகர் ஸ்ரீ வைகுண்டம் வானமாமலை ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன் ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை) ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி) திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை) கோவிந்தராமாநுஜதாசன் 9840701743 9841855810 எம்பார் -மதுரமங்கலம் -9444726959* கண்ணன் ராமாநஜதாசன் திருச்சேறை சாரநாத பெருமாள் 9994703968 ஆராவமுதன் ராமாநுஜதாசன் திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290* சம்பத்குமார் கூரம்-கூரத்தாழ்வான்- 9025989182 ராமமூர்த்தி ராமாநுஜதாசன் -+919791111307 சீனிவாச ராமாநுஜ தாசன் ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம் 9095540609 கிருஷ்ணன் ராமாநுஜதாசன் திறுக்குறுங்குடி,(வைகாசி) கைசிக ஏகாதசி (கார்த்திகை) திருக்கோளூர்(சித்திரை) ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869 ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி) ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் . மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி) சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410 உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில் ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம் அழகிய மணவாளன். +919790077019 (திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்) கைங்கர்யம் -பாகவதாள் லஷ்மிகாந்த் #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #🙏பெருமாள் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
9 likes
1 comment 14 shares
🚣🏿‍♀அற்புதமான பதிவை கண்டேன் அனைவருக்கும் ஆனந்தமாக்குகின்றேன்.🚣🏿‍♀ 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 🚣🏿‍♀ராம ராம ஓடமும்_பாடமும்.🚣🏿‍♀ 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 சில விஷயங்கள் பாரதத்தில் தேடும்போது கிடைக்காது. பாகவதத்தில் கண்ணில் படும். ராமாயண விஷயம் பாகவத்தில் அறியும்போது அட இது எப்படி ராமாயணத்தில் படிக்கவில்லை என்று ஆச்சர்யப்பட வைக்கும். அதற்கு எல்லாம் காரணம் காரியம் அவசியமில்லை. அதில்_உள்ளடங்கிய_நீதி_அல்லவோ_முக்கியம். ராமனை ஊரே, உலகமே அறியும் எனும்படி அவன் மஹிமை, பெருமை எங்கும் பரவி இருந்தது. ராமன் காட்டிற்கு போக உத்தரவு. சீதை லக்ஷ்மணன் அவன் கூட செல்கிறார்கள். கங்கை நதியை கடந்து அக்கரை செல்லவேண்டும். அப்போது தான் முதன் முதலாக குகன் ராமனை பார்க்கிறான். ராமனைப் பற்றி சகல விஷயங்களும் அவனுக்கு தெரியும். நாட்டை இழந்து தன் முன் நிற்கும் மரவுரி தரித்த ராமனை காணமுடியாமல் கண்களில் கண்ணீர்த்திரை. ''என்னால் உனக்கு என்ன உதவி செய்ய முடியும் ராமா?'' என பக்தியோடு கேட்கிறான். ''கங்கையை கடந்து அக்கரை செல்ல வேண்டும் குஹா.'' அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டு விட்டு புறப்பட தயாராகியது. கேவத் என்பவன் ஓடக்காரன். குகன் அவனை அணுகி ''கேவத் உன் படகை இங்கே கொண்டுவா '' என படகு நெருங்கி வருகிறது. ''கேவத், இதோ நிற்கிறார்களே யார் தெரியுமா அயோத்தி மஹாராஜா, ராமர், அது சீதாதேவி ராணி, அவர் மனைவி, அது லக்ஷ்மணன் அவருடைய வீர சகோதரன்.இவர்களை அக்கரை கொண்டு சேர்'' கேவத் ராமலக்ஷ்மணர்களை சீதாவை வணங்குகிறான். அவன் தினமும் காலையில் எழுந்திருக்கும்போதும் இரவில் பாட்டுக்கு முன்பும் ராம நாமம் சொல்பவன். '' ஐயா குகனே, நான் இவர்களை கங்கையின் மறுகரை கொண்டு சேர்க்கிறேன். ஆனால் முதலில் இந்த ராமரின் கால்களை நன்றாக கழுவிவிடவேண்டுமே . தூசு தும்பு இருக்கக்கூடாது '' ' ஓ அவருக்கு பாத பூஜையா, அதை அப்புறம் மறுகரையில் இறக்கி விடும்போது வைத்துக் கொள் ''- குகன். ''அப்படி இல்லை ஐயா, என் படகில் ஏறுவதற்கு முன்னால் தான் அதை செய்யவேண்டும்.'' குகனின் கண்கள் கோபத்தால் சிவந்தது. என்ன பிடிவாதம் இந்த கேவத்துக்கு. கேவத் இதை கவனித்துவிட்டு நேராக ராமனை வணங்கி சொல்கிறான். ''மஹாராஜா, நான் ஒரு ஏழை ஓடக்காரன். இந்த பழைய சிறிய ஓடம் தான் எனக்கு ஜீவனோபாயம். இதில் கிடைக்கும் சிறிய வருமானம் என் மனைவியையும் என்னையும் வாழ வைக்கிறது. என்னிடம் வேறு படகு கிடையாது,இன்னொன்று வாங்க வசதியும் இல்லை '' ''எதற்கு இப்படி பேசுகிறாயப்பா '' - ராமர். ''எனக்கு உங்களை பற்றி தெரியுமய்யா. உங்கள் காலில் உள்ள தூசி பட்டால் போதும் கல்லும் கூட பெண்ணாகும். உங்கள் கால் தூசி பட்டு என் படகும் ஒரு பெண்ணானால் நான் அவளை எப்படி காப்பாற்றுவேன், என் படகு காணாமல் போய்விடுமே!'' அந்த ஆபத்து என் படகுக்கு வரக்கூடாது என்பதற்காகவே நீங்கள் என் படகில் கால் வைக்கும் முன்பே, உங்கள் கால்களை தூசி, இல்லாமல் முதலில் கழுவ ஆசைப்பட்டேன். கேட்டுக்கொண்டேன். என்னையும் என் படகையும் நீங்கள் தான் ரக்ஷிக்க வேண்டும் '' ராமர், சீதை லக்ஷ்மணன் குகன் அனைவரும் கேவத்தின் எளிமை,பக்தி சமயோசிதம் ஆகியவற்றை ரசித்து மனமார மகிழ்கிறார்கள். கேவத் அவன் மனைவி இருவரும் கங்கை ஜலத்தால் ஸ்ரீ ராமரின் பாதங்களை கழுவி வணங்கி அந்த ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொள்கிறார்கள். கேவத் தனது வஸ்த்ரத்தால் ஸ்ரீ ராமர் பாதங்களை துளியும் தூசி இல்லாமல் துடைக்கிறான். அவர்களை கங்கை நதியின் மறுகரையில் கொண்டு சேர்க்கிறான். அவர்கள் மறுகரை சேர்ந்ததும், ராமர் பாதங்களை தனது உள்ளங்கையில் முதலில் வைத்து விட்டு இறங்கவேண்டும் சொல்கிறான். இவ்வாறு ஸ்ரீ ராம பாத சேவை முழுதும் பெறுகிறான் கேவத். . கையைப் பிடித்து எல்லோரையும் படகில் இருந்து கரை இறக்குகிறான் கேவத். சீதா தேவி மன நிறைவோடு தனது மோதிரம் ஒன்றை கழற்றி ராமனிடம் தருகிறாள் ''இதை அவருக்கு பரிசாக கொடுங்கள் '' என்கிறார். ''அம்மா ஸ்ரீ ராமனுக்கும் உங்களுக்கும் சேவை செய்ய பரிசு வாங்கினால் என் புண்யம் குறைந்து விடும் '' என பரிசை ஏற்க மறுக்கிறான். ''ஓ அப்படியா, கேவத், நீ இதை பரிசாக ஏற்கவேண்டாம் எங்களை படகில் ஏற்றி கங்கையை கடக்க செய்ததற்கு கூலியாக ஏற்றுக்கொள் '' என சிரித்துக் கொண்டே அந்த மோதிரத்தை அவனிடம் நீட்டுகிறார் ஸ்ரீ ராமன். ''ஸ்ரீ ராமா, ஒருவேளை நான் பரிசாகவாவது ஏற்றுக்கொண்டிருப்பேன். நிச்சயம் கூலி வாங்க மாட்டேன் ஐயா '' ''என்னப்பா கேவத் நீ பேசுவதோ விநோதமாகவே இருக்கிறதே. ஏன் என்னிடம் கூலி வாங்கமாட்டாய்?''- ராமர் ''எதற்கு ?'' ''தொழில் விசுவாசம் ஐயா'' ''அப்பா கேவத் கொஞ்சம் புரியும்படியாக சொல்லேன்'' ''ஒரு நாவிதன் மற்றொரு நாவிதனுக்கு சேவை செய்யும்போது கூலி வாங்கமாட்டான். துணி வெளுப்பவன் அப்படித்தான். ''புரியவில்லை. விளக்கமாக சொல். நீ துணி வெளுப்பவனோ, நாவிதநோ எனக்கு அவ்வாறு சேவை செய்யவில்லையே. நீ படகோட்டிதானே'' என்கிறார் ராமர். ''உங்களுக்கா புரியாது.. என்னை சோதிக்கிறீர்கள். நாம் இருவருமே ஓடக்காரர்கள். படகோட்டிகள். நான் ஒரு கரையிலிருந்து இந்த நீரை மட்டும் கடக்க உதவும் ஓடக்காரன். நீங்களோ எல்லோரையும் ஜனன மரண துன்பங்களிலிருந்து இந்த ஸம்ஸார கடலிலிருந்து கரை சேர்க்கும் தாரக ராமன். நாம் இருவரும் படகோட்டிகள் தானே. நான் சின்ன படகோட்டி. நீங்கள் பெரிய பெரிய படகோட்டி. தொழில் ஒன்றுதானே பகவானே. என்னையும் ஒருநாள் இந்த சம்சார சாகரத்தை கடக்க உதவி செய்து உங்கள் கணக்கை நேர் செய்து கொள்ளுங்கள்'' என்று ராமர் காலில் விழுந்து வணங்குகிறான் கேவத். ராமர் கண்களின் ஓரத்தில் நீர் கசிகிறது. ஆனந்த பாஷ்பம். என்ன ஒரு அருமையான பக்தன் இவன். பாவத்தோடு (BHAVAM ) நம் பாவம் தீர ஆதி சங்கரரின் பஜகோவிந்தம் ஸ்லோகம் பாடுகிறார் காதில் விழுகிறதா? புனரபி ஜனனம் புனரபி மரணம். புனரபி ஜனனி ஜடரே சயனம். இஹ சம்சாரி, பஹு துஸ்தாரே , க்ரிப்பாயா பாரே பாஹி முராரே....... நண்பர்களே , பகவானிடம் எனக்கு சொத்து கொடு, சுகம் கொடு, வீடு,கார் கொடு, பங்களா கொடு என்று கேட்காதீர்கள். மஹா பெரிய தனவந்தனிடம், வள்ளலிடம் ஒரு ரூபாய் காசா எதிர்பார்ப்பது? நமது துன்பங்களை போக்கி மாய உலகத்தை நீங்கி அவன் திருவடி தர காத்திருக்கிறான். கேவத் சொல்லிக் கொடுக்கிறான் ். ஒரு படிக்காத ஓடக்காரனிடம் பாடம் படிப்போம். 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 என்றும் இறை பனியில் Mg 🚩tks nalini gopalan #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
8 likes
12 shares
ஸ்ரீ மதே சடகோபாய நம. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஸ்ரீ மதே லோக குரவே நமக ஸ்ரீ மதே வரவர முநயே நம செவ்வாய்க்கிழமை 14/4/26 சித்திரை--1 சதயம் த்வாதசி ஸ்ரீ மதே ராமானுஜாய நம பங்குனி ஆழ்வார் ஆச்சரிய உற்சவங்கள் நஞ்சியர் (கூரத்தாழ்வார் சன்னதி ) ஸ்ரீ ரங்கம் 31/3'26 திருவரங்கதமுதனார் ஸ்ரீ ரங்கம் 2/4/26 பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம் தேவராஜன் ராமானுஜதாசன் 9042604831 அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை +918122105889 ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள் 1. अहमेव परम तत्त्वं । நாமே பரம்பொருள். 2. धर्सनम भेद एव च। ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு. 3. उपायेती प्रपत्तिस्याद। என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி. 4. अंतिम स्मृति वर्जनं। என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்கத் தேவையில்லை 5. देहावसाने मुक्तिस्याद । என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்‌ஷம் அளிப்பேன் 6. पूर्णचार्य समाश्रय: மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க. கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத். #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
17 likes
18 shares