innraya tv nigalchi

89 Posts • 14K views
saravanan.
558 views 29 days ago
#innraya SINTHANAY சிந்தனை".* (11.03.2026) --------------------------- *"விமர்சனம்...* --------------------------- பெரும்பாலும் மற்றவர்களுடன் உறவை பாதிக்கக் கூடிய முக்கியமான செயலாக சில நேரங்களில் அமைந்து விடுவது என்னவென்றால் மற்றவர்களை மனம் நோகும்படி விமர்சனம் செய்வதால். ஒவ்வொரு மனிதருக்கும் சுய கெளரவம் இருக்கின்றது.. உங்களின் விமர்சனம் அவர்களின் சுயகெளரவத்தை எள்ளளவும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.. கூடுமானவரை அவரின் சுய கெளவரத்தை உயர்த்தும் வகையிலும், நமது சொற்களும், விமர்சனமும் இருக்க வேண்டும்.. ஒருவேளை அவர் தவறு செய்து இருந்தால் மற்றவர்கள் முன்னிலையில் விமர்சனம் செய்வதைக் கூடுமானவரை தவிர்த்து விடுங்கள்.விமர்சனம் செய்வதை தனியாகவும், இரகசியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.. விமர்சனம் செய்தே ஆக வேண்டும் என்ற சூழல் ஏற்ப்பட்டால் அவர் செய்த தவறை மட்டும் விமர்சனம் செய்யுங்கள்..அவரின் மற்ற குணங்களை விமர்சனம் செய்யாதீர்கள். விமர்சனம் செய்வது அவரின் நன்மைக்கே என்று அவர் உணரும் வகையில் மென்மையாகவும், அன்பாகவும், பொருத்தமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள்.. *ஆம்..நண்பர்களே.* .ஒரு செயலைக் குறித்து பலமுறை விமர்சனம் செய்யாதீர்கள்.. ஏனெனில், மீண்டும், மீண்டும் ஒருவரின் தவறை சுட்டிக் கொண்டே இருந்தால் யாரும் விரும்ப மாட்டார்கள்.. மற்றும் அவர் உங்களை அவர் தவிர்க்க இது வாய்ப்பாக அமையலாம். (ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி.....................)💐💐💐💐💐💐💐
16 likes
11 shares
saravanan
627 views 11 days ago
#innraya SINTHANAY சிந்தனை.*.( 29.03.2026). .................................. *" குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள்''* .................................. குழந்தைகளின் இயல்பான வளர்ச்சியில், ஆரோக்கியம் விளையாட்டுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்பதை பெற்றோர் உணர்வதே இல்லை இன்றைக்கு எத்தனை பெற்றோர் தங்களின் குழந்தைகளை விளையாட அனுமதிக்கிறார்கள்? . இன்றைய போட்டி நிறைந்த உலகில் கல்வி என்பது பிள்ளைகளின் வாழ்க்கையில் மிக முக்கியம் ஆனது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அதே சமயம் குழந்தைகளின் ஆரோக்கியம் என்பதும் முக்கியமானது என்பதை பல பெற்றோர் மறந்து விடுகின்றனர். படிப்பில் தங்களின் பிள்ளை முதல் ஆளாக வர வேண்டும் என ஏதேதோ செய்து மெனக்கெடும் பல பெற்றோர்கள், அதே போல ஆரோக்கியமாக தன் பிள்ளை இருக்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை. இப்போது பல பள்ளிகளில் விளையாட்டு எனபது பெயர் அளவில் மட்டுமே இருக்கிறது. மேலும் பல குழந்தைகளுக்கு விளையாட்டுக்களின் பெயர் கூடத் தெரிவதில்லை... இன்றைய சூழலில் மாணவர்களைப் படித்து அதிக மார்க் வாங்கும் இயந்திரங்களாக உருவாக்குவதில் பள்ளிகளுக்கு இடையே பெரும் போட்டி ஏற்பட்டு உள்ளது. இதில் விளையாட்டு உட்பட வேறு தனித்திறமைகளை குழந்தைகளிடம் கண்டறிந்து அவற்றை வளர்க்க உதவும் பள்ளிகளும், ஆசிரியர்களும் மிகக் குறைவு. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாலும் குழந்தைகளுக்கு விளையாட வாய்ப்புகள் மிகவும் குறைவு. விடுமுறை நாட்களிலும் வீட்டுப்பாடம்,ட்யூசன் போன்றவைகள் குழந்தைகளின் நேரத்தை தீர்த்து விடுகிறது. விளையாட்டு என்பது உடலுக்கு மட்டும் பலம் சேர்ப்பது அல்ல. விளையாட்டு என்பது குழந்தைகள் சகமனிதர்களுடன் தயக்கமில்லாமல் பழகவும், வெற்றி தோல்விகளை எளிதாக எடுத்துக் கொள்ளவும், விட்டுக் கொடுக்கும் உதவும் ஒரு வழி. தாங்கள் விளையாடாமல் டி.வி.யில் மற்றவர்கள் விளையாடுவதை வேடிக்கை மட்டும் பார்க்கும் குழந்தைகள் எப்படி ஆரோக்கியமாக இருப்பார்கள்? தினமும் அதிகாலையில் இருந்து இரவு உறங்கும் வரை படிப்பும், எழுத்தும் என்று இருக்கும் குழந்தைகளுக்கு, உடல் நலம் இன்மையும் மனஉளைச்சலும் ஏற்படுவது இயல்பு. குழந்தைகளுக்குக் கல்வியைப் போலவே உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்படி செய்வதே பெற்றோரின் கடமை. *ஆம்.,நண்பர்களே..,* தினமும் மாலை நேரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும். அது அவர்களின் மன,உடல் நலத்திற்கு நன்மையைத் தரும் என்பதை உணர வேண்டும் குழந்தைகள் குழந்தைகளாக இருந்து குழந்தைப் பருவத்திற்கே உண்டான மகிழ்ச்சியை முழுமையாக அவர்கள் அனுபவிக்கட்டும். அதற்கு பெற்றோர் தடையாக இல்லாமல் உறுதுணையாக இருப்பது அவசியம். (ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி....)💐💐💐💐💐 -
19 likes
15 shares
saravanan
613 views 5 days ago
#innraya SINTHANAY சிந்தனை".*.( 04.04.2026) .................................. *உடல்,மனம் மேம்படுத்த'..* ................................. ஆரோக்கியம்’ என்றால் என்ன? `உலக சகோதர மையம்’ என்ற அமைப்பு சொல்கிறது… உடலில் எவ்வித நோயுமில்லாதது மட்டுமே ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவர் எனக் குறிப்பிட முடியும்’என்கிறது. ஒருவருக்கு எவ்வித உடல் நோயும் இல்லை, ஆனால் அவருக்கு மன அளவில் மகிழ்ச்சி இல்லை அல்லது சமூகத்தோடு ஒன்றி வாழ இயலவில்லை என்றால், அது பூரண ஆரோக்கியமல்ல. இந்தச் செய்தி பலருக்குத் தெரியாத காரணத்தாலேயே, தங்களின் உடலைப் பேணிக் காப்பதைப் போல அவரவர் மனதைப் பேணத் தவறுகின்றனர். உண்மையில், உடலும் மனதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. உடல் ஆரோக்கியம் குறைந்தால் மன ஆரோக்கியம் குறையும்; அதுபோலவே மன ஆரோக்கியம் குறைந்தால் உடல் ஆரோக்கியம் குன்றிப்போகும். மனதில் தோன்றும் எண்ணங்கள் தான் உடலின் ஆரோக்கியத்திற்கு உந்து சக்தியாக அமையும். இதைக் குறித்து பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. நேர்மறை எண்ணங்களுடன் வாழ்வது என்பது ஒரு அற்புதக் கலை. அதை அனுபவித்தவர்கள் பகிர்ந்த சாட்சிகள் பல இணையத்தில் உள்ளது. உடல் நோய் வாய்ப்படும் பொழுது மனதை திடமாக இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் கால அளவை விட மனம் நொந்து இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் கால அளவு என்பது அதிகம் ஆகிறது. எனவே தான் மருத்துவர்கள் தைரியமாக இருங்கள் என்று நோயாளிகளிடம் கூறுவதைக் கண்டு இருக்கிறோம். உடல் ஆரோக்கியம் என்கிறதை அடைவதற்கு முதலாவது மன ஆரோக்கியம் முக்கியமானதாக இருக்கிறது..!! நம்மில் பலருக்கு தினமும் மனதையும், உடலையும் மேம்படுத்த நேரம் இல்லை என்பார்கள்.. ஆனால் தினமும் உடற்பயிற்சிக்கும் மற்றும் மனப் பயிற்சிக்கும் என்று செலவு செய்பவர்கள் வாழ்க்கையை தினம் தினம் முழுமையான ஆரோக்கியத்துடன் முழமையான இனிமையுடன் அனுபவிக்கலாம். *ஆம்.,நண்பர்களே..,* ''நோயற்ற வாழ்க்கையே ஆரோக்கியமான வாழ்க்கை". இனிமையான ஆரோக்கியமான வாழ்க்கை என்பது, உடல், மனம் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்து, இயங்கி ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மனிதனுக்குக் கிடைக்கும் ஒரு வரப்பிரசாதம். (ஆக்கம். உடுமலை. சு.தண்டபாணி)💐💐💐💐💐
6 likes
6 shares