🔴 இன்றைய முக்கிய செய்திகள்
663 Posts • 2M views
சட்டப்பேரவைத் தேர்தலில் நாதக வழக்கம் போல் தனித்துப் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக-வை விட கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டுமென நாதக-வினர் முனைப்புக் காட்டுகின்றனர். இந்த நிலையில், பிப்.21-ம் தேதி திருச்சியில் `மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' என்ற பெயரில் மாநாடு நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறது நாதக. இந்த மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளர்களையும் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்த உள்ளார். இந்த நிலையில், அந்தந்த மாவட்டத்தில் உள்ள நாதக நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களை மாநாட்டுக்கு அழைத்து வருகின்றனர். சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூரில் அவரது தாயார் அன்னம்மாள் வீடு வீடாகச் சென்று வெற்றிலை, பாக்குடன் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். இந்த அழைப்பின் போது, "கண்டிப்பாக அனைவரும் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் வாகனம் ஏற்பாடு செய்துள்ளோம். தயாராக இருந்தால் போதும்" என்று கிராமத்து பாணியில் பேசி வருகிறார் அன்னம்மாள். அவருடன் மாநில கட்டமைப்பு குழுப் பொறுப்பாளர் தங்கராஜ், கிழக்கு மண்டலச் செயலாளர் திசைக்கர்ணன், மாநில இளைஞர் பாசறைஒருங்கிணைப்பாளர்கள் மனோஜ், விஷ்ணு, வடக்கு மாவட்டத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் உடன் சென்றனர். தனது மகனின் கட்சி என்றாலும் நாதக விஷயத்தில் அன்னம்மாள் இதுவரை தலையிடாமல் இருந்து வந்தார். தற்போது அவரே களத்தில் இறங்கி வீடு வீடாகச் சென்று நாதக மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தது சொந்த ஊர் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது #நாம் தமிழர் கட்சி #🔴இன்றைய முக்கிய செய்திகள்
10 likes
5 shares
இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்தத்தக்க சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் நதீம் அலிஸ் தனது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த 13 வயதுடைய இளம் பெண் ஷிஃபா என்ற பெண்ணுடன் பழகி அவரையும் காதலிப்பதாக கூறி அந்த பெண்ணுடனும் நெருக்கமாக இருந்திருக்கிறார். இருவரையும் ஒரே நேரத்தில் காதலித்து அவர்களுடன் தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நதீம் அலிஸ் தன்னை தவிர வேறு ஒரு பெண்ணுடன் பழகுவதை அறிந்த தபசும் ஷிஃபா குறித்த விவரங்களை அறிந்து கொண்டு நேரடியாக அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார். பின்னர் வீட்டில் இருந்த ஷிஃபாவிடம் "நானும் நதீமும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறோம் அவருடன் பேசுவதை விட்டு விடு இல்லையென்றால் நீ உயிருடன் இருக்க மாட்டே" என் மிரட்டி இருக்கிறார். அதற்கு ஷிஃபா 'என்னை தான் நதீம் உண்மையாக காதலிக்கிறார் நான் அவரை விட்டு பிரிய மாட்டேன்' என் கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடைபெற்றது. எனவே அச்சமடைந்த ஷிஃபாவின் பெற்றோர் அவரது மகளை தங்களது சொந்த ஊரான பைபாவன் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். தங்களது சொந்த ஊரிலேயே ஆறு மாதம் இருந்த ஷிஃபா அங்கு குளிர் அதிகமாக இருப்பதால் தன்னால் இருக்க முடியவில்லை என கூறி மீண்டும் கோவண்டிக்கு கடந்த மாதம் 28 ஆம் தேதி வந்திருக்கிறார். அப்போது ஷிஃபாவை சந்தித்த நதீம் அவருடன் பேச தொடங்கியிருக்கிறார். இதனை அறிந்து ஆத்திரமடைந்த தபசும் தனது சகோதரனுடன் ஷிஃபா வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது ஷிஃபா மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இருவருக்கும் இடையே காதல் குறித்து மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது. அப்போது தபசும் உடனிருந்த அவரது சகோதரர் அவர் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை தபசுமிடம் கொடுத்த நிலையில் தபசும் ஷிஃபாவின் கன்னத்தில் துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். பின்னர் மகள்காயமடைந்ததை அறிந்து வீட்டிற்கு சென்ற ஷிஃபாவின் தந்தை அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு ஷிஃபாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஷிஃபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலைக்கு காரணமான தபசும் மற்றும் அவரது சகோதரரை கைது செய்திருக்கின்றனர். தொடர்ந்து பதுங்கி இருக்கும் காதலன் நதீமை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண் காதல் பிரச்சனையால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது #🔴இன்றைய முக்கிய செய்திகள் #💔காதலர் தினத்தில் காதல் தோல்வி😢
13 likes
9 shares