வரலட்சுமி பூஜை அலங்காரம்

73 Posts • 183K views
MUTHUPANDIAN RAMKUMAR
609 views 3 days ago AI indicator
#வரலட்சுமி விரதம் 🙏🙏 #வரலட்சுமி ௮ம்மன் #வரலட்சுமி பூஜை தின நல்வாழ்த்துக்கள் 🌺🙏 #வரலட்சுமி பூஜை அலங்காரம் #எங்க வீட்டு வரலட்சுமி பூஜை அள்ளித்தருவாள் அலைமகள் - வரலட்சுமி விரதம் குறித்த சந்தேகங்களும் பதில்களும் நம் இல்லங்களில் லட்சுமி கடாட்சம் வேண்டும் என்று விரும்பாதவர்கள் யார்? செல்வ வளமும் சேர்ந்த உடன் சேர்ந்த நலமும் தரும் விரதங்களை நம் முன்னோர்கள் அருளியிருக் கிறார்கள். அவற்றில் தலையாயது வரலட்சுமி விரதம். தீர்க்க சுமங்கலி பாக்கியமும் பொன் பொருள் சேர்க்கையும் அருளும் இந்த விரதத்தைப் பெண்கள் மிகுந்த ஆர்வமுடன் கடைப்பிடிப்பது வழக்கம். அப்படிப்பட்ட விரதம் குறித்த சில கேள்விகளை ஜோதிடர் பாரதி தரிடம் கேட்டோம். “இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் எப்போது என்கிற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டது. சிராவண மாத பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை என்பதே பலரின் கருத்து. இது குறித்து பஞ்சாங்க பேதங்கள் இருந்தன. அவற்றை மனதில் கொண்டு காஞ்சி சங்கர மடத்திலிருந்து சமீபத்தில் ஒரு விளக்க அறிக்கை கொடுக்கப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் மாதம் 21 - ம் தேதியே வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று வழிகாட்டி உள்ளனர். இந்த நாளில் வீட்டில் மகாலட்சுமி தாயாரை வரலட்சுமியாக வழிபட வேண்டியது அவசியம். பொதுவாக வரலட்சுமிதேவியை கலசத்தில் ஆவாஹனம் செய்து வழிபடுவது ஒரு வழக்கம். கலசத்தில் அரிசி, பருப்பு, மஞ்சள், காசுகள் ஆகியன சேர்த்து மேலே மாவிலை, தேங்காய், ஆகியன வைத்துத் தயார் செய்ய வேண்டும். சிலர் ஜாதிக்காய், மாசிக்காய், பச்சைக் கற்பூரம் ஆகிய பொருள்களையும் சேர்ப்பார்கள். கண் மை டப்பியையும் போட்டு வைக்கும் வழக்கம் உண்டு. இவ்வாறு அம்மன் கலசங்களில் இட்டுவைத்த மையைப் பிறந்த குழந்தைகளுக்கு திலகமிட பயன்படுத்துவார்கள். அத்துடன் கட்டாயம் காதோலை கருகமணி சமர்ப்பிக்க கலசத்தின் இரு பக்கமும் தொங்கும்படி அதை மாட்டிவிட வேண்டும். வெள்ளிமுகம் இருப்பவர்கள் அதைக் கலசத்தில் பொருத்தலாம். இதில் பலரும் கேட்கும் கேள்வி ஒன்று உண்டு. வீட்டில் கலசம் வைத்து வழிபடும் வழக்கமே உள்ளது. இப்போது முகம் வாங்கி வைத்து வழிபடலாமா என்பதுதான். குடும்பத்தில் கலசம் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளவர்கள் அதையே செய்ய வேண்டும். பெண்கள் திருமணமாகி வரும்போது வெள்ளி முகம் சீதனாகக் கொண்டு வருவார்கள். அந்தப் புதிய முகத்தைக் கலசத்துக்கு அருகில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த கேள்வி, இதுவரை எங்கள் குடும்பங்களில் வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் பழக்கம் இல்லை. நாங்கள் புதிதாகத் தொடங்கலாமா என்பதுதான். நிச்சயமாகத் தொடங்கலாம். எந்தத் தவறும் இல்லை. ஆனால் தொடர்ந்து அதைக் கடைப்பிடிக்கும் மன உறுதி வேண்டும். ஆசைக்கு ஓர் ஆண்டு செய்துவிட்டு அதைக் கைவிட்டுவிடக் கூடாது. அம்மனை அழைப்பது என்பது வரலட்சுமி விரதத்தில் மிகவும் முக்கியமானது. விரத நாளுக்கு முன் தினம் மாலையே அம்மனை அலங்காரம் செய்துவிட வேண்டும். அந்த நாளில் இரவு அம்மனுக்கு புலகம் எனப்படும் துவரம்பருப்பு பொங்கல் செய்து நிவேதனம் செய்ய வேண்டும். மறுநாள் காலையே அம்மனை அழைக்க வேண்டும். வீட்டின் வாசலில் கோலமிட்டு அதில் மனைப் பலகை ஒன்றை அலங்கரித்து வைத்து அதில் அலங்கரித்த அம்மனின் கலசம் அல்லது முகத்தை அதில் எழுந்தருளச் செய்து பின் லட்சுமி வாராய் என் இல்லத்துக்கு என்று பாடி அழைக்க வேண்டும். வெள்ளிக் கிழமை காலை 8-9 மணிக்குள் அழைக்க வேண்டும். பிறகு அம்மனை மண்டபத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும். அம்மனைத் தனி ஒருவராக அழைத்துச் செல்லக் கூடாது. இருவர் அவசியம். இருவரும் சுமங்கலிக ளாக இருந்தால் சிறப்பு. உங்கள் வீட்டில் நீங்கள் ஒரு சுமங்கலி தான் என்றால் பக்கத்து வீடுகளிலுள்ளவர்கள் உதவிக்கு அழைத்துக் கொள்ளுங்கள். இதுகுறித்து முன்னரே அவர்களுக்குச் சொல்லி விட்டால் அவர்களும் குளித்து தயாராக இருப்பார்கள். பொதுவாக இந்த பண்டிகைகளே அனைவரோடு கூடியிருந்து குளிரத்தான் என்பதால் அக்கம்பக்கத்தில் நல்லுறவைப் பேண இவை உதவும். மண்டபம் அமைக்கும் வழக்கம் சில வீடுகளில் உண்டு. அதற்கு வீட்டில் இருக்கும் மர ஸ்டூல்களைப் பயன்படுத்துவார்கள். அப்படிப் பயன்படுத்தும்போது அதை முன் தினமே தூய்மை செய்து வைத்துவிட வேண்டும். அதற்கு வெள்ளை மற்றும் காவி வர்ணம் மாறி மாறிப் பூசி அலங்கரிக்க வேண்டும். முடிந்தவர்கள் புதிய ஸ்டூல் வாங்க முடிந்தால் நல்லது. வரலட்சுமியை ஆவாஹனம் செய்து பூஜையைத் தொடங்கலாம். வெள்ளிக் கிழமைகளில் 10.30.12 ராகு காலம் என்பதால் அதற்கு முன்பாகத் தொடங்கிவிடலாம். பூஜையைத் தொடங்கும் முன்பு கைகளில் கட்டிக்கொள்ளும் தோரணங்களை (மஞ்சள் சரடு) அம்மன் மீது அலங்காரமாக சாத்த வேண்டும். நம் வீட்டில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கையோடு ஒருசில சரடுகள் சேர்த்து வைக்க வேண்டும். இந்த சரடுகளில் ஒன்பது முடிச்சுகள் போட வேண்டும். பூஜையின் முடிவில் அந்த முடிச்சிகள் ஒவ்வொன்றுக்கும் பூஜை செய்து பின் கைகளில் கட்டிக்கொள்ள வேண்டும். முதலில் பிள்ளையார் பூஜையோடு தொடங்கி அவரவர் வழக்கப்படி நாமாவளிகள் சொல்லி நறுமண மலர்கள் சாத்தி வழிபடலாம். நிவேதனங்களும் அவரவர் வசதிப்படி செய்தால் போதுமானது. பூஜையில் வில்வம் இருப்பது சிறப்பு. திருமகளை ‘ பில்வ நிலயாயை நம:’ என்று போற்றித் துதிப்பார்கள் (பில்வம் -வில்வம் ). எனவே நமக்கு திருமகளின் கருணை கிடைத்து செல்வ வளம் சேரும். இந்த பூஜையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது சரடி கட்டிக்கொள்வதுதான். கட்டிக்கொள்ளும் சரடுகளுக்கு மலர் தூவி பூஜை செய்ய வேண்டும். ஒன்பது முடிச்சிகளையும் பின் வரும் மந்திரங்களைச் சொல்லி பூஜிக்க வேண்டும். ஓம் கமலாயை நம: ப்ரதம க்ரந்திம் பூஜயாமி ஓம் ரமாயை நம: த்வீதீய க்ரந்திம் பூஜயாமி ஓம் லோக மாத்ரே நம: த்ருதீய க்ரந்திம் பூஜயாமி ஓம் விச்வ ஜநந்யை நம: சத க்ரந்திம் பூஜயாமி ஓம் மகாலட்சுமியை நம: பஞ்சம க்ரந்திம் பூஜயாமி ஓம் க்ஷீராப்தி தநயாயை நம: ஷஷ்ட க்ரந்திம் பூஜயாமி ஓம் விவ்வஸாக்ஷிண்யை நம: ஸப்தம க்ரந்திம் பூஜயாமி ஓம் சந்த்ரஸோதர்யை நம: அஷ்டம க்ரந்திம் பூஜயாமி ஓம் ஹரிவல்லபாயை நம: நவம க்ரந்திம் பூஜயாமி என்று 9 முடிச்சையும் பூஜை செய்ய வேண்டும். அதாவது நவசக்திகளையும் அந்தக் கயிற்றில் எழுந்தருளச் சொல்லி பூஜிக்கிறோம். இதன் மூலம் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் தாயாரின் கருணை எப்போதும் நிறைந்திருக்கும்.✍🏼🌹
9 likes
8 shares
செல்வம் மற்றும் செழிப்பின் தெய்வமான மகாலட்சுமி தேவியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, வித்யாலட்சுமி, ஜெயலட்சுமி என 8 அஷ்டலட்சுமிகளாக பிரித்துள்ளனர். ஏனெனில் லட்சுமி தேவி 8 வகையான செல்வங்களை வாரி வழங்குபவள். இந்த அஷ்ட லட்சுமிகளையும் ஒரே நாளில் வழிபடும் நாள் தான் வரலட்சுமி விரதம். அந்த வகையில் இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் எப்போது வருகிறது, பூஜை செய்ய உகந்த நேரம் எது, விரதத்தின் முக்கியத்துவம், புராண கதை மற்றும் வழிபடும் முறை குறித்து விரிவாக இப்போது காண்போம். வரலட்சுமி விரதம் 2026 எப்போது? வரலட்சுமி என்றால் 'வரங்களை அருளும் தேவி' என்று பொருள். வரங்களை வாரி வழங்கும் மகாலட்சுமி தேவிக்காக மேற்கொள்ளப்படும் வரலட்சுமி நோன்பானது பாம்பு பஞ்சாங்கத்தின் படி ஆகஸ்ட் 28 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, வரலட்சுமி நோன்பானது ஆகஸ்ட் 21 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், பக்தர்கள் தங்கள் சமூகம் அல்லது உள்ளூர் கோயில் கடைப்பிடிக்கும் பஞ்சாங்கத்தைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இருப்பினும், தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. வரலட்சுமி விரதம் 2026 பூஜைக்கான சுபமுகூர்த்த நேரம் வரலட்சுமி பூஜையை லக்னங்களின் போது செய்யும்போது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அதுவும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி காலை 8.00 மணி முதல் 10 மணி வரை சிம்ம லக்னமாகும். இந்த நேரத்தில் வரலட்சுமி பூஜையை செய்யலாம். வரலட்சுமி விரதம் முக்கியத்துவம் ஆடி/ஆவணி மாத பெளர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் மேற்கொள்ளப்படும் வரலட்சுமி விரதத்தை வீட்டில் செல்வம் செழிக்கவும், ஆரோக்கியத்திற்காகவும், தீர்க்க சுமங்கலியாக வாழவும் திருமணமான பெண்கள் மட்டுமின்றி, நல்ல வாழ்க்கைத் துணை அமைய வேண்டுமென்று திருமணமாகாத பெண்களும் மேற்கொள்வார்கள். மேலும் இந்த விரதத்தை வீட்டில் உள்ள பெண்கள் மேற்கொள்ளும் போது குடும்பத்தினருக்கு அஷ்டலட்சுமியின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை...... வரலட்சுமி விரதத்தின் புராண வரலாறு மகதை நாட்டில் சாருமதி என்ற பெண் வாழ்ந்து வந்தாள். அவள் தினமும் லட்சுமி தேவியை பக்தியுடன் மனதார வழிபாடு செய்து வந்தாள். அவளது பக்தியைக் கண்டு மகிழ்ந்த லட்சுமி தேவி ஒரு நாள் அவளது கனவில் தோன்றி கூறினாள்: "ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை அன்று என்னை கலசத்தில் ஆவாஹனம் செய்து வழிபாடு செய். உனது குடும்பத்திற்கு அனைத்து வரங்களும் கிட்டும்." சாருமதியும் அவ்வாறே செய்தாள். கலசத்தில் லட்சுமியை ஆவாஹனம் செய்து, பூக்களையும் பழங்களையும் படைத்து வழிபட்டாள். அன்றிலிருந்து அவள் வாழ்க்கை முழுவதும் செல்வமும் சுகமும் கிட்டியது. இந்த கதையே வரலட்சுமி விரதத்தின் ஆதாரக் கதை ஆகும். அன்று முதல் தென்னிந்திய பெண்கள் ஆண்டுதோறும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். திருமணமான பெண்கள் மட்டுமின்றி, திருமணமாகாத பெண்களும் நல்ல வரன் பெற இந்த விரதம் இருக்கலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. வரலட்சுமி பூஜைக்கு கலசம் தயாரிப்பது எப்படி? வரலட்சுமி பூஜை செய்ய, விரதத்திற்கு ஒரு நாள் முன்னரே திருமணமான பெண்கள் அதிகாலையில் எழுந்து, குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்து, ரங்கோலி மற்றும் மா கோலத்தால் பூஜை அறையை அலங்கரிக்க வேண்டும். பிறகு பூஜை அறையில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைய வேண்டும். அதன்பின் வீட்டில் வெள்ளி அல்லது வெண்கல கலச செம்பை எடுத்துக் கொண்டு, அதில் கலசப் பொருள்களைச் சேர்க்க வேண்டும். நீர்க்கலசமாக தயாரித்தால் அதில் தண்ணீர் சேர்த்து வாசனைத் திரவியங்களான பச்சைக் கற்பூரம், எலுமிச்சை வேர், ஜாதிக்காய், ஏலக்காய் போன்றவற்றை போட்டு வைக்க வேண்டும். அதுவே அரிசிக் கலசமாக இருந்தால் அதில் அரிசியுடன் வெற்றிலையைச் சேர்க்க வேண்டும். இப்படி கலசம் தயாரிக்கப்பட்ட பின், செம்பின் மேல் மா இலைகளை வைத்து, சுத்தம் செய்து மஞ்சள் பூசிய தேங்காயை வைத்து, அதன்மேல் கலசத்திற்கு பட்டுத்துணியால் ஆன பாவாடையைக் கட்ட வேண்டும். மேலும் லட்சுமி தேவிக்கு பிடித்த தாமரை, மல்லிகை, செவ்வரளி பூக்களால் அலங்கரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இந்த கலசத்தில் லட்சுமி தேவி குடிகொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக கலசத்திற்கு முன் தவறாமல் ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து, வெற்றிலையில் வைக்க வேண்டும். மேலும் கலசத்தின் அருகில் குத்து விளக்கு ஏற்றுவது கூடுதல் சிறப்பு ஆகும்..... வரலட்சுமி பூஜை முறை வரலட்சுமி பூஜையின் போது முதலில் விநாயகப் பெருமானை வணங்கி, பின் மகாலட்சுமிக்குரிய ஸ்லோகங்களைச் சொல்லி, ஆரத்தி செய்து, தெய்வத்திற்கு இனிப்புகளை படைத்து வழிபாடு செய்யப்படுகிறது. பூஜை முடிந்த பின் பெண்கள் தங்கள் கைகளில் மஞ்சள் கயிற்றினைக் கட்டிக்கொள்வார்கள். இந்த பூஜையின் போது அப்பம், வடை, பொங்கல், கேசரி, பால் பாயாசம் மற்றும் வெல்லத்தால் செய்யப்பட்ட இனிப்புகள் நைவேத்தியங்களாக வைக்கப்படும். விரதம் முடிந்து மறுநாள் சனிக்கிழமையன்று சடங்குகளை முடித்து, குளித்த பிறகு கலசத்தை அகற்றுகிறார்கள். வரலக்ஷ்மி விரதத்தைக் கடைப்பிடிப்பது அமைதி, செழிப்பு மற்றும் நிதி ஆசீர்வாதங்களைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. மேலும் வரலட்சுமி பூஜை செய்யும் நேரத்தில் தாலிச்சரடு மாற்றிக் கொள்ள விரும்பும் பெண்கள் மாற்றிக் கொள்ளலாம். வரலட்சுமி பூஜையின் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் ஓம் லக்ஷ்மிதேவியே நமோ நம: ஓம் தாமரைப் பூவில் அமர்ந்தவளே நமோ நம: ஓம் பாற்கடல் உதித்தோய் நமோ நம: ஓம் செந்தூரத் திலகம் அணிந்தாய் நமோ நம: ஓம் நாரணன் நெஞ்சில் நிறைந்தவளே நமோ நம: ஓம் கருணையில் சிறந்தவளே நமோ நம: ஓம் அலை கடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே நமோ நம: ஓம் அமரர்தம் துதிபாடும் அமுதமும் நீயே நமோ நம: ஓம் அன்பர்களைக் காத்திடும் அலைமகளே நமோ நம: ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே நமோ நம: ஓம் விஜயலக்ஷ்மியே நமோ நம: ஓம் ராஜ்ய லக்ஷ்மியே நமோ நம: ஓம் ஜயலக்ஷ்மியே நமோ நம: ஓம் தான்ய லக்ஷ்மியே நமோ நம: ஓம் தனலக்ஷ்மியே நமோ நம: ஓம் தைர்ய லக்ஷ்மியே நமோ நம:ஓம் மஹாலக்ஷ்மியே நமோ நம: ஓம் உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே நமோ நம: (பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.) #வரலெட்சுமி விரதம்🙏🏻🌺🙏🏻 #வரலெட்சுமி நோன்பு🙏🏻🌺🙏🏻 #வரலெட்சுமி பூஜை #வரலெட்சுமி பூஜை அலங்காரம் 🙏
17 likes
9 shares