தமிழ்சீயான்43
1K views • 12 days ago
🌿 இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
30.06.2026 (செவ்வாய்)
துயர்நிறை மறையுண்மைகள்.
முதலாவது. கெத்சமணித் தோட்டத்தில் ஆண்டவர் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்
"ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்." என கூறப்பட்டுள்ளது.
இயேசுவின் இரண்டாம் வருகைக்காக நாம் அனுதினமும் காத்திருக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
இரண்டாவது. ஆண்டவர் இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
"ஆண்டவர் இயேசு அவர்களை நோக்கி, “நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்து கொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று." என வாசித்தோம்.
எண்ணற்ற இன்னல்கள் இருந்தாலும் இறைவன் இருக்க குறை என்ன நமக்கு? என்ற மனநிலையோடு நாம் எப்போதும் இருக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
மூன்றாவது. ஆண்டவர் இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இந்த ஜூன் மாதம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக
இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
நான்காவது. ஆண்டவர் இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
இந்த ஆண்டு ஆண்டவர் இயேசு நமக்கு நல்ல பருவ மழையைத் தந்தருள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஐந்தாவது. ஆண்டவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய்க் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #வேளாங்கண்ணி மாதா #✝️வேளாங்கண்ணி சர்ச்⛪ #சகாய மாதா
27 likes
29 shares