oru Kadhal kadhai
2 Posts • 220 views
ராமதாஸ்-பாமகவை திமுக உதாசீனப்படுத்தியது எதைக்காட்டுகிறது? அதன் பின்விளைவுகள் திமுக கூட்டணிக்கு எப்படி இருக்கும்? எவ்வளவோ மன்றாடிய பின்னும் ராமதாஸ்-பாமகவிற்கு திமுக கூட்டணியில் இடம் இல்லை. ஏனென்றால், அதற்கு விசிக எதிர்ப்பு தெரிவிக்கிறது. அன்புமணியின் பின்னால்தான் பாமகவின் தொண்டர்களும் அனுதாபிகளும் நிற்கிறார்கள் என்பதை திமுகவின் உதாசீனம் உறுதிப்படுத்துகிறது. அதாவது, ஒன்றுபட்ட பாமகவில் டாக்டர் ராமதாசுக்கு குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கு செல்வாக்கு இருந்திருந்தாலும் ஓட்டுக் கணக்கை கருத்தில் கொண்டு விசிகவை உதறித் தள்ளிவிட்டு, ராமதாஸ்-பாமகவை திமுக அணைத்துக் கொண்டு போயிருக்கும். இன்னும் சற்று விளக்கமாகச் சொல்லப்போனால், திருமாவளவனால் திமுகவிற்கு அழுத்தம் கொடுக்க முடிகிறது, அல்லது ராமதாசை விலக்கி வைக்க மறைமுகமாக நிர்ப்பந்திக்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் 2026 தேர்தலில் டாக்டர் ராமதாசைவிட திருமாவளவனுக்கு ஓட்டுக்கள் அதிகம் கிடைக்கும் என்ற கணக்குதான். ஒன்றுபட்ட பாமகவின் கிட்டத்தட்ட தொண்டர்கள் 90 சதவீதம் பேரும், ஆதரவாளர்களில் 80 சதவீத மக்களும் அன்புமணி-பாமக வின் பக்கமே நிற்கிறார்கள். அன்புமணியே பாமகவின் எதிர்காலத்தின் நம்பிக்கை நட்சத்திரம் என்பது நிதர்சனம். இது அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய பலம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதற்கும் ஒருபடி மேலே போய், ஒன்றுபட்ட பாமகவின் தொண்டர்களும் சரி, பாமகவின் அனுதாபிகளும் சரி, திமுக கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு நேர்ந்த அவமானங்களை ரசிக்கவில்லை. யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பது பழைய சொல்லாடல். இது தேர்தலில், திமுக கூட்டணிக்கு பாதகமாக, முக்கியமாக விசிகவுக்கு வரவேண்டிய திமுக வாக்குகளில், எதிரொலிக்கும். திருமாவளவனுடைய கண்களுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தவாக போன்ற கட்சிகளை விட பாமகதான் சாதிமத அடிப்படையிலான கட்சியாகத் தெரிகிறதா? இது வெறுப்பு அரசியலின் உச்சமாகத் தெரியவில்லையா? என்ன இருந்தாலும், டாக்டர் பாமகவின் ஸ்தாபகர். பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்காக பல்வேறு போராட்டங்களை முன்னிறுத்தி நடத்தியவர் என்ற வகையில் வன்னியர்கள் மட்டுமல்லாமல், பிற சமுதாயத்தை சேர்ந்வர்களிடமும் அவருக்கென தனி மரியாதை உண்டு. திமுக கூட்டணியில் ராமதாசின் வருகையை திருமாவளவன் ஆதரித்திருந்தால், சாதிகளால் பிளவுபட்ட தமிழகத்தில், அது சமூக நல்லிணக்கத்திற்கான ஒரு துவக்கப் புள்ளியாக அமைந்திருக்கும். அந்த வாய்ப்பினை திருமாவளவன் தவறவிட்டுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அவரிடம் அப்படி ஒரு பரந்த மனப்பான்மை இல்லாமல் போனது துரதிர்ஷ்டம்! எதிர்வரும் தேர்தலில் இந்த கூட்டணி சலசலப்புகள் நிச்சயம் வடதமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணிக்கு சாதகமாக ஏதிரொலிக்க வாய்ப்புள்ளது. #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
15 likes
18 shares