💚Ayya 💗 Vaikundar💚

7K Posts • 29M views
D Muthu Prakash, Kanchipuram 💐
840 views 22 days ago
#அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 13ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 29.07.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம்: ======== மண்ணுடன் மனைக ளாசை மாடுடன் வீடு மாசை பெண்ணுடன் பொருளி னாசை பூதலப் பொன்னி னாசை எண்ணுடன் எழுத்தி னாசை இடறுபொல் லாசை வேசை ஒண்ணுடன் ஆசை நீக்கி உடையவ னாசை கொண்டார் . விளக்கம்: ========= மண்ணாசை, பூமிகள் ஆசை, மாடு ஆசை, வீடு ஆசை, பெண் ஆசை, பொருள் ஆசை, உலகில் காணும் பொன் ஆசை, கல்வி கற்றல், எழுதுதல் போன்ற தவத்துக்கு இடையூறான ஆசைகளை எல்லாம் ஒட்டு மொத்தமாக நீக்கி விட்டுத் தமக்குடையவனாகிய திருமால் மேல் ஆசை கொண்டு தவம் பூண்டனர். . . அகிலம்: ======== கொண்டுநல் மனதிற் பூண்டு குருபரா தஞ்ச மென்று பண்டுநல் துவார கையின் பதிவாட வாசல் தன்னில் தெண்டிரை வாவை சூழ்ந்த செகற்கரை தனிலே வந்து கண்டுநற் பதியில் புக்கி கருத்துடன் இருந்தா ரன்றே . விளக்கம்: ========== அவர்கள் திருமாலின் மேல் ஆசை கொண்டு, குருவாக நிற்கும் பரம்பொருளே தஞ்சம் என்று எண்ணி, முன்னரே அமைந்து இருந்த நல்ல துவரயம்பதியின் வடக்கு வாசலில், தெளிந்த திரைகள் சூழ்ந்த வாகைப்பதியின் கடற்கரையில் வந்து, நல்ல இடத்தைத் தேர்ந்தெடுது்து, ஒரு கருத்துடன் அப்பதியில் துவையல் தவசு புரிந்தனர். . . அகிலம்: ======== இருந்தவர் தலமும் பார்த்து ஏகநல் வெளியுங் கண்டு பொருந்திடும் ஞான வான்கள் புண்ணிய மனதி லெண்ணி வருந்திடக் கனிவே காணும் வாவைநற் பதியி தாகும் தெரிந்திடக் கடலில் மூழ்கிச் சிவகலை யணிந்தார் தாமே . விளக்கம்: ========== தவத்தில் இருந்தவர்கள் நல்ல இடத்தையும் தேர்ந்தெடுத்து, பரம்பொருளை அடைய நல்ல வழிகளையும் அறிந்து, அங்கே, அமர்ந்திருந்த ஞானவானகள் எல்லாரும் தம்முடைய புண்ணியமான மனதில் திருமாலை எண்ணி எண்ணி வருந்திடவும், கனிவு பொருந்திய திருமாலைக் கண்டிடவும் அவர்கள் தவம் இருந்தனர். அந்த நல்ல பதியின் பெயர் வாவைப்பதி ஆகும். அத்தலத்தில் எல்லாவற்றையும் அறிந்திட வாவைப்பதி கடலில் மூழ்கிச் சிவ கலையாகிய காவி உடை அணிந்தார்கள். . . அகிலம்: ======== அணிந்தவர் பெண்ணு மாணும் அன்புடன் மகிழ்ச்சை கூர்ந்து துணிந்தவர் தங்கள் தங்கள் துயரங்க ளறவே நீக்கப் பணிந்தவர் நாதன் தன்னைப் பரிவுடன் மனதுள் ளாக்கித் தணிந்தவர் கோப வேகத் தகுளியைத் தள்ளி வாழ்ந்தார் . விளக்கம்: ========== காவி உடை அணிந்த ஆண்களும், பெண்களும் ஒருவருக்கு ஒருவர் அன்பு பூண்டு மகிழ்ச்சி கொண்டு, தங்களுக்கு இருந்த இன்ப துன்பங்களை அறவே நீக்கி, மிகவும் துணிச்சலுடன் இறைவனுக்குள் எல்லாவற்றறையும் அடைக்கலப் பொருளாக்கி, நாராயணரை அன்புடன் மனதினுள் நிலை நிறுத்தி கோபமாகிய அகழியை அழித்து, அங்கே தவவாழ்க்கை வாழ்ந்து வந்தனர். . . 24 நிமிடம் = ஒரு நாழிகை 7 நாழிகை = 7 X 24 நிமிடம் = 168 நிமிடம் 168 நிமிடம் என்பது 2.8 மணி நேரம் தமிழ் நாள் கணக்கு படி காலை 6.00 மணிக்கு அடுத்த நாள் ஆரம்பம் அதனால் காலை 6.00 மணி + 2.8 மணி = 8மணி 8 நிமிடம். அய்யா உண்டு, தொடரும்... அய்யா உண்டு.
7 shares