சகோ சுதாகர் காட்வின்

95 Posts • 37K views
sudhakar godwin
689 views 14 days ago
🌿 *இன்றைய தேவ வார்த்தை* 🌿 📖 *தேவ வசனம்* *“முதலில் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூடக் கொடுக்கப்படும்.”* — *மத்தேயு 6:33* 🎙️ *செய்தி* உண்மையான வெற்றி பெற, நிரந்தரமான வெற்றி உங்களிடம் நிலைத்திருக்க *முற்றிலும் வெற்றி பெற்ற இயேசு கிறிஸ்து உங்கள் வாழ்க்கையில் நிலைத்திருக்க வேண்டும்*. உங்கள் பின்னணி, உங்கள் குடும்பம், உங்கள் திறமை, உங்கள் அறிவு, உங்கள் ஞானம், உங்கள் கல்வி—இவை எதுவும் உங்கள் வெற்றிக்கான அடிப்படை அல்ல. உங்கள் ஆள் பலம், பண பலம், அதிகாரம், செல்வாக்கு—இவைகளும் உங்கள் வெற்றியை உறுதி செய்யாது. என்பதை நீங்கள் நன்றாக அறிந்திருக்கிறீர்கள்—விஷயங்கள் எளிதாக இருப்பதால் நீங்கள் வெற்றி பெறவில்லை. உங்களுக்கு உதவுகிற மனிதர்களால் மட்டும் நீங்கள் உயரவில்லை. *வெற்றி தேவனுடையது!* அவர் தமது பிள்ளைகளுக்கு நிலையானதும் நிரந்தரமானதும் ஆன வெற்றியை அருளுகிறவர். அந்த *வெற்றியின் ஆதாரம் இயேசு கிறிஸ்துவே.* நீங்கள் தேவனை முதலிடத்தில் வைத்தால், தேவன் எல்லாவற்றிலும் உங்களை முதலிடத்தில் வைப்பார். ✨ *தேவனை முதலிடத்தில் வைுங்கள்; உண்மையான வெற்றியிலும் தெய்வீக ஜெயத்திலும் நடக்க ஆரம்பிப்பீர்கள்.* 🙏 *ஜெபம்* கர்த்தரே இயேசுவே, நான் என் வாழ்க்கையை உமக்கு ஒப்பு கொடுக்கிறேன். எல்லாவற்றிலும் உம்மை முதலிடத்தில் தேட உதவி செய்யும். என் வெற்றியின் அடித்தளமாக நீங்க இருங்கள். உமது நீதியில் என்னை நடத்தி, உமது சித்தத்தின்படி எல்லாவற்றிலும் முதன்மையானவர்களாய் வெற்றியுடையவர்களாய் என்னை மாற்றும். ஆமென். — ✍️*சகோ சுதாகர் காட்வின்* 🔥*ஹெப்ரான் ஜெப ஊழியங்கள்* #சகோ சுதாகர் காட்வின் #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
14 likes
14 shares
sudhakar godwin
545 views 6 days ago
🌿 *இன்றைய தேவ வார்த்தை* 🌿 📖 *தேவ வசனம்* *“யெப்தா கர்த்தருக்குப் பொருத்தனை செய்து: ‘நீர் அம்மோனின் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுத்தால், நான் அம்மோனின் புத்திரரிடமிருந்து சமாதானமாய் திரும்பிவரும் போது என் வீட்டின் வாசலிலிருந்து என்னை எதிர்கொள்ள வருகிறவன் எவனாகிலும் கர்த்தருக்குரியவனாக இருப்பான்’ என்றான்.”* — *நியாயாதிபதிகள் 11:30-31* 🎙️ *செய்தி* *யெப்தா போருக்குச் செல்லும் முன் தேவனிடம் ஒரு பொருத்தனை செய்தான். அவன் வெற்றியை வேண்டி தேவனை நாடினான்*. *தேவன் அவனுக்கு வெற்றியையும் கொடுத்தார்.* *ஆனால் இந்த நிகழ்வு நமக்கு ஒரு முக்கியமான ஆவிக்குரிய பாடத்தை கற்பிக்கிறது.* தேவனுக்கு நாம் சொல்லும் வார்த்தை மிகவும் பரிசுத்தமானது. நாம் தேவனிடம் ஜெபிக்கும் போது, துன்பத்தில் அல்லது தேவையை நினைத்து பல நேரங்களில் பொருத்தனை களை, வாக்குத்தத்தங்களைச் சொல்லலாம். ஆனால் வேதாகமம் சொல்லுவது என்னவென்றால்: தேவனுக்கு செய்யும் பொருத்தனை கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சி பெருக்கில் அல்லது செய்ய கடினமான, நிறைவேற்ற முடியாத, நமக்கு இழப்பை, பாதகத்தை உண்டு பண்ணும் பொருத்தனை செய்ய வேண்டாம், பொருத்தனை செய்தால் அதை உண்மையுடன் நிறைவேற்ற வேண்டும். தேவனுக்கு சொன்ன வார்த்தையை லேசாக எண்ணக்கூடாது. யெப்தா செய்த பொருத்தனையால் தன் முன் வெற்றியை கொண்டாட வந்த மகளை பொருத்தனை நிமித்தம் இழக்க நேரிட்டது. இன்றைய நாளில் நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் தேவன் முன் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொருத்தனைகளை நிறைவேற்றாவிட்டால் அது நமக்கு சாபமாகவும் மாறும். அதனால் விசுவாசத்துடனும், பொறுப்புடனும் தேவனை நாடுவோம். தேவ நன்மையை ஆசீர்வாதத்தை பெற்று கொள்ளுவோம். 🙏 *ஜெபம்:* கர்த்தாவே, உம்முன் பேசும் எங்கள் வார்த்தைகள் பரிசுத்தமாக இருக்க உதவிசெய்யும். நாங்கள் செய்யும் வாக்குத்தத்தங்களை உண்மைபாய் நிறைவேற்றும் கிருபையை தாரும்.ஒரு வேளை நாங்கள் தவறும் பட்சத்தில் அது எங்களுக்கு சாபத்தை வருவிக்காமல் அதை மன்னித்து எங்களை ஆசீர்வதியும், நிறைவேற்றக் கூடிய பொருத்தனைகளை செய்ய ஞானத்தையும் நிதானத்தையும் தாரும்.ஆமேன். — ✍️*சகோ சுதாகர் காட்வின்* 🔥*ஹெப்ரான் ஜெப ஊழியங்கள்* #சகோ சுதாகர் காட்வின் #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
11 likes
14 shares
sudhakar godwin
544 views 2 days ago
🌿 *இன்றைய தேவ வார்த்தை* 🌿 📖 *தேவ வசனம்* *யோவான் 19:30* *“இயேசு அந்த காடியை பெற்றுக்கொண்டு:* *‘எல்லாம் முடிந்தது’ என்று சொல்லி, தலையை வளைத்து ஆவியை ஒப்புக்கொடுத்தார்.”* ✨*“எல்லாம் முடிந்தது”*– ஆழமான தியானம் *இயேசு சிலுவையில் சொன்ன இந்த வார்த்தை கிரேக்க மொழியில்* *Tetelestai (Τετέλεσται) என்று உள்ளது*. இந்த வார்த்தையின் அர்த்தம்: *“முழுமையாக நிறைவேறியது / பூரணமாக முடிந்தது / கடன் முழுவதும் செலுத்தப்பட்டது.”* பழைய காலத்தில் ஒரு மனிதன் கடனை முழுவதும் செலுத்தினால், ரசீதில் *Tetelestai என்று எழுதுவார்கள். அதாவது “Paid in Full – முழுக் கடன் செலுத்தப்பட்டது”* என்று அர்த்தம். இயேசு சிலுவையில் இந்த வார்த்தையைச் சொன்னபோது, மனிதகுலத்தின் பாவக் கடன் முழுவதும் அவருடைய இரத்தத்தால் செலுத்தப்பட்டது என்று அறிவித்தார். 📖 Colossians 2:14 “நமக்கெதிராக இருந்த கடன்பத்திரத்தை அவர் சிலுவையில் அறைந்து அகற்றினார்.” ✨ சிலுவையில் முடிந்தவை 1️⃣ பாவத்தின் கடன் முடிந்தது மனிதன் செய்த எல்லா பாவங்களுக்கும் இயேசு விலையாக தம்மை கொடுத்தார். 📖 Isaiah 53:5 *“நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் குத்தப்பட்டார்.”* 2️⃣ சாபத்தின் அதிகாரம் உடைந்தது 📖 Galatians 3:13 *“கிறிஸ்து நமக்காக சாபமாகி நம்மை நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து மீட்டார்.”* 3️⃣ சாத்தானின் அதிகாரம் தோற்கடிக்கப்பட்டது 📖 Colossians 2:15 *“அதிகாரங்களையும் ஆட்சிகளையும் அவர் வெட்கப்படுத்தி சிலுவையில் ஜெயித்தார்.”* 4️⃣ இரட்சிப்பின் வாசல் திறக்கப்பட்டது 📖 Hebrews 10:19 *“இயேசுவின் இரத்தத்தினாலே பரிசுத்தஸ்தலத்திற்குள் செல்ல தைரியம் பெற்றிருக்கிறோம்.”* 🙏 *தியானம்* “எல்லாம் முடிந்தது” என்பது தோல்வி வார்த்தை அல்ல. அது இரட்சிப்பின் வெற்றி அறிவிப்பு. இயேசு சிலுவையில் கூறியது: 👉 பாவத்தின் கடன் செலுத்தப்பட்டது 👉 சாபம் உடைக்கப்பட்டது 👉 சாத்தான் தோற்கடிக்கப்பட்டான் 👉 இரட்சிப்பு வழி திறக்கப்பட்டது ஆகையால் இன்று நாமும் விசுவாசத்தோடு சொல்லலாம்: *“கிறிஸ்துவின் சிலுவையினால் எனது வாழ்க்கையில் வெற்றி ஆரம்பமாகியுள்ளது.”* 📖 1 John 5:12 *“குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்.”* -- ✍️ *சகோ சுதாகர் காட்வின்* 🔥*ஹெப்ரான் ஜெப ஊழியங்கள்* #சகோ சுதாகர் காட்வின் #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
7 likes
12 shares