sinthanai

67 Posts • 103K views
saravanan.
689 views 18 days ago
🤔 *சிந்தனை துளிகள்* 🤔 நாளின் முடிவில்... #sinthanay thuligal. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, *நீங்கள் யார் என்பதே முக்கியம்.* நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பது முக்கியமல்ல, *நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே முக்கியம்.* நீங்கள் எப்படி காணப்படுகிறீர்கள் என்பது முக்கியமல்ல, *நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதே முக்கியம்.* நீங்கள் யாரை நேசிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, *உங்களைத் திரும்ப நேசிப்பவர் யார் என்பதே முக்கியம்.* யாரை நீங்கள் கவர்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, *நீங்களாக இருப்பதே முக்கியம்.* என்ன தவறாக நடக்கிறது என்பது முக்கியமல்ல, *நீங்கள் என்ன சரியாகச் செய்கிறீர்கள் என்பதே முக்கியம்.* வாழ்கையில் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பது முக்கியமல்ல, *நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதே முக்கியம்.* நீங்கள் எவ்வளவு காலம் வாழ்ந்தீர்கள் என்பது முக்கியமல்ல, *அதை நீங்கள் எவ்வளவு நிறைவாக வாழ்ந்தீர்கள் என்பதே முக்கியம்.* 🍁🪻🍁🪻🍁🪻🍁🪻
14 likes
15 shares
saravanan.
8K views 4 months ago
#sinthanay sitharal. சமுதாயத்தில் உள்ள அனைவருமே தனக்கு ஏதோ அடைய வேண்டிய லட்சியம் அல்லது தான் சாதிக்க வேண்டியது ஏதோ ஒன்று இருப்பதாக நினைத்துக் கொண்டு தங்கள் ஆற்றலை எல்லாம் அதில் செலவழித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டுக் கொண்டும், பொறாமைப்பட்டுக் கொண்டும், மற்றவருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டும் வாழ்வதையே வழக்கமாக்கிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல. இயற்கை (இறைவன்) ஒருவரைப் போல அது இன்னொருவரை உருவாக்கவில்லை. அப்பொழுதே நீங்கள் புரிந்து கொண்டிருக்களாம் நீங்கள் மற்றவரை போல வாழ வந்தவர் இல்லை என்று. அனைவருமே இளையராஜாவாகவோ, டோனியாகவோ ஆக வேண்டும் என்று விரும்புகின்றனர்.சினிமா வாழ்வில் புகழ் பெற வேண்டும் என்று தங்களுடைய வாழ்வை தொலைத்தவர்கள் எவ்வளவோ இருக்கிறார்கள். ஆனால் வெற்றி பெற்றவரின் வாழ்வே உங்களுக்குத் தெரிகிறது. தோற்றவர்களின் வாழ்க்கை மறைந்தே இருக்கிறது. யார்யார் எந்த வேலைக்காக இங்கு வந்தார்களோ அதை மட்டுமே அவர்களால் செய்ய முடியும்.அதேபோல் நான் எதுவுமே செய்ய மாட்டேன் என்று நீங்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருந்தாலும் உங்களை வைத்து இயற்கை என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்தே தீரும். உங்கள் இயக்கசக்தியும், இந்த பிரபஞ்சத்தை இயக்கும் இயக்க சக்தியும் வேறுவேறல்ல ஒன்றே. அதை உணர்ந்து அதனிடம் உங்களை ஒப்படைத்து விடுங்கள். அது உங்களை வைத்து என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாகவே செய்து விடும். நீங்கள் எதையும் எதிர்பார்க்காதீர்கள். அது உங்களை ஒரு குடியரசுத் தலைவராக உயர்த்தினாலும் சரி. அடையாளமே தெரியாத சாதாரணமான குடிமகனாக வைத்திருந்தாலும் சரி. அதில் இயற்கையில் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை. குடியரசு தலைவருக்கும், குடிமகனுக்கும் வித்தியாசம் பார்ப்பதெல்லாம் உங்கள் அறியாமையே. அனைவரும் வாழப்பிறந்தவர்களே வாழ்க்கையை இயற்கையிடம் கொடுத்து வாழ்வை மட்டும் நீங்கள் வாழ்ந்து பாருங்கள் குடியரசுதலைவர் மட்டும் அல்ல வேறு எவ்வளவு பெரியவராக இருந்தாலும் உங்களுக்கு போட்டியாகவே தெரிய மாட்டார்.ஏனென்றால் நீங்கள் பிரபஞ்சத்திற்கே ராஜாவாக இருப்பீர்கள். இது வாழ்க்கையில் போராடி சில அனுபவங்களைப் பெற்றவர்களுக்கே. இன்னும் போராடவே ஆரம்பிக்காதவர்களுக்கு இதைப் புரிந்து கொள்ள முடியாது 😊😊😊
273 likes
2 comments 432 shares