ஆன்மீக செய்தி

944 Posts • 180K views
Nethaji
521 views 18 days ago
#ஆன்மிகம் #🙏கோவில் #👏Inspirational videos #💪இலட்சிய கனவு 💭 #🖌பக்தி ஓவியம்🎨🙏 22, 2026 *திருச்சிற்றம்பலம்* *திருநாவுக்கரசர் அருளிய ஐந்தாம் திருமுறை - தேவாரம்* *திருநெல்வாயில் அரத்துறை - திருக்குறுந்தொகை - கடவுளைக் கடலுள்* *பாடல்*: *பரப்பு ஒப்பானைப்* *பகல்இருள் நன்னிலா* *இரப்பு ஒப்பானை* *இளமதி சூடிய* *அரப்பு ஒப்பானை* *அரத்துறை மேவிய* *சுரப்பு ஒப்பானைக்* *கண்டீர்நாம் தொழுவதே.* - 5.002.04 *பொருள்* : *எங்கும் பரந்து விரிந்திருக்கும் ஆகாயம் போன்றவனும், பகல் பொழுது, இருள் நிறைந்த இரவுப் பொழுது, குளிர்ந்த நல்ல நிலவொளி ஆகிய அனைத்துமாய் விளங்குபவனும் தன்னிடம் வந்து இரந்து நிற்கும் அடியார்களின் வறுமையையும், அறியாமையையும் நீக்கி அருள்வதில் நிகரற்றவனும், தன் சடாமகுடத்தில் இளம்பிறைச் சந்திரனைச் சூடியவனும் நஞ்சுடைய பாம்பை ஆபரணமாகத் தன் உடலில் தரித்தவனும், திருஅரத்துறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி வாழ்பவனும், கறவைப்பசு தன் கன்றை நினைத்துத் தானாகவே பாலைச் சுரப்பது போல, அடியவர்கள் மீது எல்லையற்ற கருணையோடு அருளைச் சுரக்கும் வள்ளலுமான சிவபெருமானைக் கண்டு நாம் நாளும் தொழுது உய்ய வேண்டும்.* *திருச்சிற்றம்பலம்* *அருள்தரும் ஆனந்தநாயகியம்மை உடனாகிய அருள்மிகு அரத்துறைநாதர் திருவடிகள் போற்றி! போற்றி!!*
16 likes
14 shares