திருமுறை
226 Posts • 14K views
A Mohan Raj
1K views 8 hours ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஆறாம் தந்திரம் - 9. தவவேடம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. திருமந்திரத்தின் ஆறாம் தந்திரம், இறைவனான சிவகுருவின் தரிசனம் மற்றும் அவரை அடையும் வழிகளைப் பற்றி விளக்குகிறது. இந்த தந்திரம், குருவின் வழிகாட்டுதலால் ஆன்மிகப் பாதையில் செல்பவர்கள் நல்ல வழியை அறிந்தவர்கள் என்றும், தவறான ஆசைகளின் வழியே செல்பவர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பார்கள் என்றும் கூறுகிறது. இந்த தந்திரத்தில் உள்ள பாடல்கள், புறக்கண்களை நிறுத்தி அகநோக்கைப் பார்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. *"தவவேடம்" என்பது, அகத்தவத்தின் உண்மையான தன்மையை வெறும் புறத்தோற்றத்தில் காட்டிக்கொள்வது தவறு என்பதைக் குறிக்கிறது. உண்மையான தவமானது தவத்தை மேற்கொள்பவர்களுக்கே உரியது, ஏனெனில் அவர்கள் மட்டுமே அதன் தன்மையை தாங்க முடியும் என்று திருமூலர் கூறுகிறார். புற வேடங்களை மட்டும் பூணுபவர்கள் தவத்தின் உண்மையான தகுதியை அடைவதில்லை*. பாடல் வரிகள் : *9. தவவேடம்* 1661 தவமிக் கவரே தலையான வேடர் அவமிக் கவரே யதிகொலை வேடர் அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந் தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே. 1 1662 பூதி யணிவது சாதன மாதியிற் காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந் தீதில் சிவயோகி சாதனந் தேரிலே. 2 1663 யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையதொன்று றாகத்து நீறனி யாங்கக் கபாலஞ் சீகந்த மாத்திரை தின்பிரம் பாகுமே. 3 1664 காதணி குண்டலங் கண்டிகை நாதமும் ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம் ஏதமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே. 4 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
27 likes
24 shares
A Mohan Raj
1K views 9 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசினம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது*. *திருமந்திரத்தின் ஆறாம் தந்திரம், இறைவனான சிவகுருவின் தரிசனம் மற்றும் அவரை அடையும் வழிகளைப் பற்றி விளக்குகிறது. இந்த தந்திரம், குருவின் வழிகாட்டுதலால் ஆன்மிகப் பாதையில் செல்பவர்கள் நல்ல வழியை அறிந்தவர்கள் என்றும், தவறான ஆசைகளின் வழியே செல்பவர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பார்கள் என்றும் கூறுகிறது. இந்த தந்திரத்தில் உள்ள பாடல்கள், புறக்கண்களை நிறுத்தி அகநோக்கைப் பார்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன*. *ஆறாம் தந்திரத்தின் முதல் பகுதியில், "சிவகுரு தரிசனம்" என்பது, இறைவனே குருவாக வந்து, அருளாட்சி செய்து, மாணவனுக்கு ஞானத்தைப் புகட்டி, அவனை முக்திக்கு அழைத்துச் செல்வதைக் குறிக்கிறது. இந்த தரிசனம், பாசங்களைக் களைந்து, சத்தையும் அசத்தையும் பிரித்து, இறைவனது உண்மையான வடிவத்தைக் காட்டுவதன் மூலம் சாத்தியமாகிறது*. பாடல் வரிகள் : *1. சிவகுரு தரிசினம்* 1573 பத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச் சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச் சத்தும் அசத்துஞ் சதசத்துங் காட்டலாற் சித்தம் இறையே சிவகுரு வாமே. 1 1574 பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு நேசித்த காயம் விடிவித்து நேர்நேரே கூசற்ற முத்தியிற் கூட்டலா நாட்டத்த தாசற்ற சற்குரு அம்பலமாமே. 2 1575 சித்திகள் எட்டோடுந் திண்சிவ மாக்கிய சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச் சத்தியும்மந்திர சாதக போதமும் பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே. 3 1576 எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய் நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால் எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற் சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே. 4 1577 தேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள் யாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே மூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால் யாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே. 5 1578 சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய் தத்தனை நல்கருள் காணா அதிமூடர் பொய்த்தகு கண்ணான் நமரென்பர் புண்ணியர் அத்தன் இவனென் றடிபணிவாரே. 6 1579 உண்மையிற் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பார் திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன் வண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும் அண்ணல் அருளன்றி யாரறி வாரே. 7 1580 சிவனே சிவஞானி யாதலாற் சுத்த சிவனே யெனஅடி சேரவல் லார்க்கு நவமான தத்துவ நன்முத்தி நண்ணும் பவமான தின்றிப் பரலோக மாமே. 8 1581 குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவமென் பதுகுறித் தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே யுரையுணர் வற்றதோர் கோவே. 9 1582 சித்த யாவையுஞ் சிந்தித் திருந்திடும் அத்தம் உணர்த்துவ தாகும் அருளாலே சித்தம் யாவையுந் திண்சிவ மானக்கால் அத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே. 10 1583 தாநந்தி சீர்மையுட் சந்தித்த சீர்வைத்த கோனந்தி யெந்தை குறிப்பறி வாரில்லை வானந்தி யென்று மகிழும் ஒருவற்குத் தானந்தி யங்கித் தனிச்சுட ராமே. 11 1584 திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை மருளா தருளும் மயக்கறும் வாய்மைப் பொருளாய வேதாந்த போதமும் நாதன் உருவாய் அருளாவிடிலோர ஒண்ணாதே. 12 1585 பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர சித்திக்கு வித்தாஞ் சிவோகமெ சேர்தலான் முத்தியின் ஞான முளைத்தலால் அம்முளை சத்தி யருள்தரில் தானெளி தாமே. 13 1586 பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை முன்எய்த வைத்த முதல்வனை எம்மிறை தன்எய்துங் காலத்துத் தானே வெளிப்படு மன்னெய்த வைத்த மனமது தானே. 14 1587 சிவமான ஞானந் தெளியவொண் சித்தி சிவமான ஞானந் தெளியவொண் முத்தி சிவமான ஞானஞ் சிவபரத்தே யேகச் சிவமான ஞானஞ் சிவானந்த நல்குமே. 15 1588 அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ் செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன் மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை பிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே. 16 1589 தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன் இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாங் கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே. 17 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
16 likes
17 shares
A Mohan Raj
773 views 11 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஐந்தாம் தந்திரம் - 19. நிராசாரம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது*. *திருமந்திரத்தின் ஐந்தாம் தந்திரம், இது சைவ சமயத்தின் பல்வேறு மார்க்கங்களைப் பற்றியும், குறிப்பாக அக வழிபாட்டு முறைகளைப் பற்றியும் பேசுகிறது. இது "உட் சமயம்" (அக வழிபாடு) மூலம் இறைவனை அடையும் வழிமுறைகள், யோகம், சன்மார்க்கம் போன்றவற்றை விளக்குகிறது*... *"நிராசாரம்" என்பது, தீய செயல்களிலிருந்து விலகி, வினையின் தளைகளை அறுத்து, அருவமான இறை உணர்வோடு கலக்கும் ஆன்மீக நிலையைக் குறிக்கிறது. இங்கு "நிராசாரம்" என்பது "அல் ஒழுக்கம்" என்றும், "நிராகாரம்" என்பது "வடிவின்மை" என்றும் பொருள்படும். இதன் மூலம், வடிவம் இல்லாத இறைவனின் உணர்வை அருவமான உயிர் உணர்வில் கலப்பது விவரிக்கப்படுகிறது*. பாடல் வரிகள் : *19. நிராசாரம்* 1550 இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங் கமையறிந் தாருட் கலந்துநின் றானே. 1 1551 பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர் நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர் ஏங்கி உலகில் இருந்தழு வாரே. 2 1552 இருந்தழு வாரும் இயல்புகெ ட்டாரும் அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில் வருந்தா வகைசெய்து வானவர் கோனும் பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே. 3 1553 தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர் பாரறி வாளர் படுபயன் றானுண்பர் காரறி வாளர் கலந்து பிறப்பர்கள் நீரறி வார்நெடு மாமுகி லாமே. 4 1554 அறிவுடன் கூடி அழைத்தோர் தோணி பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங் குறியது கண்டுங் கொடுவினை யாளர் செறிய நினைக்கிலர் சேவடி தானே. 5 1555 மன்னும் ஒருவன் மருவு மனோமயன் என்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள் துன்னி மனமே தொழுமின் துணையிலி தன்னையும் அங்கே தலைப்பட லாமே. 6 1556 ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற் றாங்கார மற்ற அனுபவங் கைகூடார் சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார் நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே. திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
14 likes
17 shares
A Mohan Raj
824 views 8 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஆறாம் தந்திரம் - 2. திருவடிப் பேறு* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. திருமந்திரத்தின் ஆறாம் தந்திரம், இறைவனான சிவகுருவின் தரிசனம் மற்றும் அவரை அடையும் வழிகளைப் பற்றி விளக்குகிறது. இந்த தந்திரம், குருவின் வழிகாட்டுதலால் ஆன்மிகப் பாதையில் செல்பவர்கள் நல்ல வழியை அறிந்தவர்கள் என்றும், தவறான ஆசைகளின் வழியே செல்பவர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பார்கள் என்றும் கூறுகிறது. இந்த தந்திரத்தில் உள்ள பாடல்கள், புறக்கண்களை நிறுத்தி அகநோக்கைப் பார்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. *ஆறாம் தந்திரத்தின் இரண்டாவது பகுதியான 'திருவடிப் பேறு' என்பது, குருவான இறைவனின் திருவடிகளைப் பற்றிப் போற்றுவதாகும். இது புலன்வழியே செல்லும் இருவினைகளை நீக்கி, சிவலோக சேர்க்கையை அளித்து, ஆன்மாவைச் சிறைமாலையிலிருந்து விடுவித்து ஆன்மஞானத்தை அளிக்கும்*. பாடல் வரிகள் : *2. திருவடிப் பேறு* 1590 இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே பசைந்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச் சிவந்த குருவந்து சென்னிகை வைக்க உவந்த குருபதம் உள்ளத் துவந்ததே. 1 1591 தாடந்த போதே தலைதந்த எம்மிறை வாள்தந்த ஞான வலியையுந் தந்திட்டு வீடந்த மின்றியே யாள்கென விட்டருட் பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே. 2 1592 தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்நந்தி தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே. 3 1593 உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத் திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக் கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த சொரூபத் திருத்தனன் சொல்லிறந் தோமே. 4 1594 குரவன் உயிர்முச் சொரூபமுங் கைக்கொண் டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு பெரிய பிரானடி நந்தி பேச்சற் றுருகிட என்னையங் குய்யக்கொண் டானே. 5 1595 பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக் காச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டு வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே. 6 1596 இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும் பதிவித்த பாதப் பராபரன் நந்தி கதிவைத்த வாறும் மெய்காட் டியவாறும் விதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே. 7 1597 திருவடி வைத்தென் சிரத்துருள் நோக்கிப் பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக் குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக் கருவழி வாற்றிடக் கண்டுகொண் டேனே. 8 1598 திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந் திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந் திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந் திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே. 9 1599 மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும் பால்வைத்த சென்னிப் படரொளி வானவன் தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே. 10 1600 கழலார் கமலத் திருவடி என்னும் நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா அழல்சேரும் அங்கியுள் ஆதிப் பிரானுங் குழல்சேரும் என்னுயிர்க் கூடுங் குலைத்தே. 11 1601 முடிமன்ன ராகிமூ வுலகம தாள்வர் அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின் முடிமன்ன ராய்நின்ற தேவர்கள் ஈசன் குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே. 12 1602 வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான் பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல் எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு மெய்த்தேன் அறிந்தே னவ்வேதத்தின் அந்தமே. 13 1603 அடிசார லாம்அண்ண ல்பாத மிரண்டும் முடிசார வைத்தனர் முன்னை முனிவர் படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக் குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே. 14 1604 மந்திரமாவதும் மாமருந் தாவதுந் தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ் சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதும் எந்தை பிரான்தன் இணையடி தானே. 15 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
13 likes
10 shares