திருமுறை
241 Posts • 14K views
A Mohan Raj
1K views 1 months ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஆறாம் தந்திரம் - 7. அருளுடைமையின் ஞானம் வருதல்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. திருமந்திரத்தின் ஆறாம் தந்திரம், இறைவனான சிவகுருவின் தரிசனம் மற்றும் அவரை அடையும் வழிகளைப் பற்றி விளக்குகிறது. இந்த தந்திரம், குருவின் வழிகாட்டுதலால் ஆன்மிகப் பாதையில் செல்பவர்கள் நல்ல வழியை அறிந்தவர்கள் என்றும், தவறான ஆசைகளின் வழியே செல்பவர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பார்கள் என்றும் கூறுகிறது. இந்த தந்திரத்தில் உள்ள பாடல்கள், புறக்கண்களை நிறுத்தி அகநோக்கைப் பார்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. *திருமந்திரம் ஆறாம் தந்திரத்தில் உள்ள "அருளுடைமையின் ஞானம் வருதல்" பகுதி, இறைவனின் அருள் இருந்தால் செல்வம், ஞானம், பெருந்தன்மை மற்றும் தெய்வத்துடனான நெருக்கம் ஆகியவை கிடைக்கும் என்பதை விளக்குகிறது. இது இறை அருளின் மூலம் ஞானம் எவ்வாறு உண்டாகிறது என்பதைக் கூறுகிறது*. பாடல் வரிகள் : *7. அருளுடைமையின் ஞானம் வருதல்* 1645 பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம் பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம் பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே. 1 1646 தமிழ்மண் டலம்ஐந்துந் தாவிய ஞானம் உமிழ்வது போல உலகந் திரிவார் அவிழு மனமும்எம் ஆதியறிவுந் தமிழ்மண் டலம்ஐந்துந் தத்துவ மாமே. 2 1647 புண்ணிய பாவம் இரண்டுள பூமியில் நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள் எண்ணி இரண்டையும் வேர்அறத் தப்புறத் தண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வீரே. 3 1648 முன்னின் றருளு முடிகின்ற காலத்து நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும் பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும் முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே. 4 1649 சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர் சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர் சிவனரு ளால்வினை சேரகி லாமை சிவனருள் கூடின்அச் சிவலோக மாமே. 5 1650 புண்ணியன் எந்தை புனிதன் இணையடி நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது மண்ணவ ராவதும் வானவர் ஆவதும் அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே. 6 1651 காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட மாயத்தே ரேறி மயங்கு மவையுணர் நேயத்தே ரேறி நிமலன் அருள்பெற்றால் ஆயத்தே ரேறி யவனிவ னாமே. 7 1652 அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும் அவ்வுல கத்தே யருந்தவர் நாடுவர் அவ்வுல கத்தே யரனடி கூடுவர் அவ்வுல கத்தே யருள்பெறு வாரே. 8 1653 கதிர்கண்ட காந்தங் கனலின் வடிவாம் மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாஞ் சதிகொண்ட சாக்கி யெரியின் வடிவாம் எரிகொண்ட ஈசன் எழில்வடி வாமே. 9 1654 நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத் தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல்ல வீடும் அளவும் விடுகின் றிலெனே. 10 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
15 likes
15 shares
A Mohan Raj
953 views 2 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஏழாம் தந்திரம் - 26. சிவாதித்தன்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. திருமந்திரத்தின் ஏழாம் தந்திரம், திருமூலரால் அருளப்பட்ட பத்தாம் திருமுறையின் ஒரு பகுதியாகும். இது ஆன்மிகப் பாதையில் உயர்ந்து, சகஸ்ரார தாமரையை அடைந்து, சிவனுடன் ஐக்கியமாகும் "தாங்கும் மந்திரம்" பற்றிய ஆழமான ஞானம், யோகப் பயிற்சிகள், பஞ்சாக்ஷர மந்திரத்தின் நுட்பங்கள், மற்றும் பிரம்மன், திருமால் போன்ற ஐம்பெருந்தேவர்களின் தத்துவ விளக்கங்களை உள்ளடக்கியது. இது யோகத்தின் உச்ச நிலையையும், சிவபெருமானின் அருளையும் விளக்கும் மிக உயர்ந்த தத்துவ நூலாகும் *"சிவாதித்தன்" எனும் இப்பகுதியானது ஞானம் மற்றும் இறைவனின் ஒளியைப் பற்றியது, குறிப்பாக சூரிய ஒளி மற்றும் குடத்து நீர் உவமைகளைக் கொண்டு, ஆன்மாவில் மறைந்திருக்கும் சிவனது அருட்சக்தியைப் பற்றியும், பாச இருள் நீங்கி ஞானம் பெறுவதைப் பற்றியும் விளக்குகிறது. இந்த பாடல்கள், சிவபெருமானின் ஒளி ஆன்மாவில் எவ்வாறு பிரகாசிக்கிறது என்பதையும், அறியாமை நீங்கி ஞானம் பெறுவதையும் "சூரியனின் பிரகாசத்தால் இருள் நீங்குவது போல" என்று உருவகப்படுத்துகின்றன*. பாடல் வரிகள் : *26. சிவாதித்தன்* 2001 அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும் சென்றிடு ஞானச் சிவப்பர காசத்தால் ஒன்றும் இருசட ராம்அரு ணோதயம் துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே. 1 2002 கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில் அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான் விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து அடங்கிட நின்றதும் அப்பரி சாமே. 2 2003 தானே விரிசுடர் மூன்றும்ஒன்றாய் நிற்கும் தானே அயன்மால் எனநின்று தாபிக்கும் தானே உடலுயிர் வேறன்றி நின்றுளன் தானே வெளியொளி தானிருட் டாமே. 3 2004 தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும் வையம் புனல்அனல் மாருதம் வானகம் சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர் ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே. 4 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
20 likes
17 shares
A Mohan Raj
1K views 26 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஏழாம் தந்திரம் - 15. போசன விதி (உணவு உண்ணும் முறை)* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. திருமந்திரத்தின் ஏழாம் தந்திரம், திருமூலரால் அருளப்பட்ட பத்தாம் திருமுறையின் ஒரு பகுதியாகும். இது ஆன்மிகப் பாதையில் உயர்ந்து, சகஸ்ரார தாமரையை அடைந்து, சிவனுடன் ஐக்கியமாகும் "தாங்கும் மந்திரம்" பற்றிய ஆழமான ஞானம், யோகப் பயிற்சிகள், பஞ்சாக்ஷர மந்திரத்தின் நுட்பங்கள், மற்றும் பிரம்மன், திருமால் போன்ற ஐம்பெருந்தேவர்களின் தத்துவ விளக்கங்களை உள்ளடக்கியது. இது யோகத்தின் உச்ச நிலையையும், சிவபெருமானின் அருளையும் விளக்கும் மிக உயர்ந்த தத்துவ நூலாகும் *ஏழாம் தந்திரத்தில் உள்ள 15-ஆம் பகுதி "போசன விதி" (உணவு உண்ணும் முறை) ஆகும், இது இறைவனின் அடியவர்களுக்கு உணவு அளிப்பதன் பெருமையையும், இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பதால், அடியவர்களுக்கு உணவு அளிப்பது இறைவனுக்கு உணவு அளிப்பதற்கு சமம் என்பதையும், அடியவர்களை உணவு கொள்ளச் செய்வது இறைவனைப் போற்றுவதே என்பதையும் விளக்குகிறது, மேலும், உணவை ஒரு குறிப்பிட்ட திசையில் வைத்து உண்ணும் விதத்தையும், அது எப்படி இறைவனின் அருளைப் பெற உதவும் என்பதையும் கூறுகிறது*. பாடல் வரிகள் : *15. போசன விதி* 1884 எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு கட்ட அடிசில் அழுதென்று எதிர்கொள்வர் ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம் விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே. 1 1885 அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர் உச்சியம் போதாக உள்ளமர் கோவிற்குப் பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து இச்சைவிட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே. 2 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
9 likes
11 shares