Eshwar photography (ஈஸ்வர் ஒளிப்படக் காதலன்)
3K views •
என் மானசீக நண்பன் முண்டாசுக் கவிஞனின் பிறந்த நாளில் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
மகாகவி பாரதியாருடைய இளைய மகள் சகுந்தலா. தன் தந்தையைப் பற்றி "என் தந்தை" எனும் தலைப்பில் ஒரு நூலை இயற்றி பாரதியார் பற்றிய பல அரிய செய்திகளை கொடுத்திருக்கிறார் அதில் ஒரு செய்தி.
ஒரு தீபாவளியன்று நடந்த சம்பவம் இன்றும் எனக்கு ஞாபகம் வருகிறது."
"முதல் நாள், ஜவுளிக்கடை சொந்தக்காரரான நண்பர் ஒருவர், வழக்கம் போல, என் தந்தைக்கு வேஷ்டிகள், எனக்குப் பாவாடை சட்டை, என் தாயாருக்குப் புடவை இவற்றை இனாமாக அனுப்பி வைத்தார். அன்பிற் சிறந்த சீடர் பலர், எனக்குத் தேவைக்கு மிஞ்சியே பட்டாஸ், மத்தாப்பு, வாண வகைகளும் மற்றும் பூ, வெற்றிலை, பழங்கள் யாவும் கொணர்ந்து தந்தார்கள். தீபாவளியன்று இரவு, நாங்கள் குதூகலமாக விளையாடிவிட்டுத் தூங்கிப் போய்விட்டோம்."
"என் தந்தை மட்டும் ஆழ்ந்த யோசனையுடன் உட்கார்ந்திருந்தார். கவிதை எழுத யோசிப்பதானால் அவர் அங்குமிங்கும் உலாவுவார். பிறகு எழுதத் தொடங்கினால், கை சளைக்காமல் எழுதிக் குவிப்பார். எனவே, அவர் யோசனையுடன் உட்கார்ந்திருப்பதிலிருந்தே அவர் எதையோ நினைத்துக் கவலைப்படுகிறார் என்று அறியலாம். நடுநிசி. இரண்டு நண்பர்கள் வந்து கதவைத் தட்டினார்களா. என் தந்தை தாமே போய்க் கதவைத் திறந்தார். வந்தவர்களில் ஒருவர் ஓரணாவும் இரண்டணாவுமாக மாற்றிப் பணச்சுருள்களை என் தந்தையின் பாதத்தில் வைத்து நமஸ்கரித்தார். அவர் வியப்புடன், "நான் பணம் வேண்டுமென்று யாரிடமும் சொல்லவில்லையே! நீங்கள் எவ்வண்ணம் என் உள்ளக் கருத்தை உணர்ந்து சில்லறை மாற்றிக் கொணர்ந்தீர்கள்? என்று கேட்டாராம். வந்தவர்கள் பணக்காரர்கள் அல்ல, சாதாரணக் குடும்பத்தில் பிறந்து துணி நெய்யும் தொழிலாளிகள். அந்த அன்பர்களில் ஒருவர் பின்வருமாறு பதிலளித்தாராம்."
"சுவாமி! நாங்கள் யாவரும் சாப்பிட்டுப் படுத்து நித்திரை போய்விட்டோம். என் கனவில், மாதா பராசக்தி காளிதேவி தோன்றி, அடே, உத்தராவதி! எழுந்திரு. என் பக்தன் பாரதி நாளைக் காலையில் தன்னைக் காணவரும் ஏவலர், தொழிலாளிகள், நண்பர்களுக்குப் பரிசளிக்கக் கையிலே காசில்லாமல் நொந்து மனம் வருந்துகின்றான். உடனே உன் கையிலுள்ள பணத்தைச் சில்லறையாக மாற்றி எடுத்துக் கொண்டு போய்க் கொடு என்று சொன்னாள். நான் உடனே எழுந்து, என் கையிலிருந்த ரூபாய் பத்துக்கும், காசுக்கடை செட்டியாரை எழுப்பி, சில்லரை மாற்றிக்கொண்டு, தனியே வரப் பயமாக இருந்ததால், என் சிநேகிதனையும் உடனழைத்துக் கொண்டு வந்தேன் என்றார்."
"தமக்குத் தேவையான துணி முதலியன இருந்தும், மறுநாள் காலையில் தம்மைக் காணவரும் வேலையாள்கள், ஏழைகள், முதலானவர்களுக்குக் கொடுக்க ஓர் பைசாக்கூட இல்லாததை நினைத்து, எங்கு யாரிடம் போய்க் கடன் வாங்கி வருவது என்று என் தந்தை வருத்தத்துடன் யோசித்துக் கொண்டிருந்தாராம். பராசக்தியருளால் அந்தத் தீபாவளி மனக் கவலையின்றிக் கொண்டாடப்பட்டது." #பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாரதி #🤳போட்டோகிராஃபி ரகசியங்கள்📸 #மகாகவி பாரதி பிறந்தநாள் #காலை வணக்கம் #பாரதி பிறந்தநாள்
15 likes
21 shares