ஸ்ரீராம்
13 Posts • 23K views
RamaswamyAnnamali
1K views 5 months ago
#பத்திஸ்டேட்ஸ் #🙏ஜெய் ஆஞ்சநேயா #ஸ்ரீராம் ஸ்வாமி* _குரங்கு புத்தி என்றே சொல்வது வழக்கம்._ எதுஒன்றிலும் புத்தி கண நேரம் நிற்காமல் எந்நேரமும் ஒன்று மாற்றியொன்றாக மாறிக் கொண்டு இருப்பதற்குப் பேர் போனது குரங்கு. துளிக்கூடகட்டுப்பாடேஇல்லாமல் இருப்பதற்க்கு உதாரணம் அதுதான். இதனால்தான் மனுஷ்யர்களான நம் சித்தமும்எதிலும்கட்டுப்பட்டு நிலையில்லாமல் இருப்பதை ‘குரங்கு புத்தி’ என்கிறோம். ஹ்ருதய – கபிம் அத்யந்த சபலம் என்று சொல்வார்கள் பகவானே ரொம்ப ரொம்பச் சபலமான இந்த என்னுடைய மனக்குரங்கை பக்திக் கயிற்றாலே கட்டி உன் கையிலே பிடித்துப் போடு என்கிறது 'ஹ்ருதய கபி’ அதாவது ‘மனக்குரங்கு’, என்கிற வார்த்தையைப் போட்டிருக்கிறார்கள் வெள்ளைக்காரர்களும் ஆங்கிலத்தில் ‘மங்கிமைண்ட்’ என்கிறார்கள். கட்டுப்பாடேயில்லாமல் எந்நேரமும் சரீரத்தாலோ, மனஸாலோ, அல்லது இரண்டினாலுமோ அலையாக அலைந்து கொண்டேயிருப்பதற்குக் குரங்குதான் ரூபகம். இப்படிபட்ட குணத்தை தன்குலப் பெருமையாக கொண்ட ஒருவரை பற்றிய பதிவு இது ஒரு பசு இருக்கிறது, யானை இருக்கிறது – இவை மாம்ஸம் சாப்பிடுவதேயில்லை, சைவ உணவுதான் தின்கின்றன என்றால் அதிலே ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில். 'பசித்தாலும் புல் தின்னாது’ என்கிற ஒரு புலி சாக பக்ஷிணியாக மாறினால் அதுதான் ஆச்சர்யம் ! ஒரு இடத்தில் நிலையே இல்லாத புத்தியை உடைய குரங்கினத்தில் பிறந்த நம் ஆஞ்ஜநேயஸ்வாமியின் பெருமை இதில்தான் இருக்கிறது. சஞ்சலத் தன்மைக்கே பேர்போன கபியாக அவர் இருந்தபோதிலும், அதோடு மஹாபலிஷ்டராக இருந்த போதிலும், மனஸைக் கொஞ்சம் கூட சஞ்சலம், சபலம் என்பதேயில்லாமல் அடக்கி, புலன்களையெல்லாம் அடக்கி, இந்த்ரிய நிக்ரஹம் பண்ணி, சரீரத்தையும் ராமசந்த்ரமூர்த்தியின் தொண்டுக்கே என்று அடக்கி அடிபணிந்து அவர் இருந்ததுதான் அவருடைய மஹிமை. இதிலே இன்னொரு ஆச்சர்யம், அவர் மனஸை அடக்கினார், பூர்ணமான இந்த்ரியக் கட்டுப்பாட்டோடு இருந்தாரென்றால், எல்லாக் கார்யத்தையும் விட்டுவிட்டு அதாவது ஊரைவிட்டு எங்கேயோ குஹையிலே போய் மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட வில்லை. மனித ஸம்பந்தமில்லாமல், கார்ய ப்ரபஞ்சத்தில் பட்டுக் கொள்ளாமல் ஓடி எங்கேயோ ஒதுங்கி மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்காருபவர்கள் தமது இந்த்ரியம், சித்தம் ஆகியவற்றை ஓடாமல் அடக்கிப் போட்டு விடலாம். ஆஞ்ஜநேயர் அப்படி இல்லை. ‘அஸாத்ய ஸாதகர்’ என்கிற அளவுக்குக் கார்ய ப்ரபஞ்சத்திலே செய்திருக்கிறார். ஸமுத்ரத்தையே தாண்டுவது, ஒரு மலையையே (ஸஞ்சிவி பர்வதம்) தூக்கிக் கொண்டு வருவது, ஒரு பெரிய வனத்தை (அசோகவனம்) அப்படியே நிர்மூலம் பண்ணுவது, ஒரு பெரிய பட்டணத்தையே (லங்காபுரி) தஹனம் பண்ணுவது-என்றிப்படிச் செய்தவர் அவர். மனஸ் கொஞ்சங்கூடச் சலிக்காதவர்; ஸ்ரீராமனின் பாதாரவிந்தத்தை விட்டு இந்தண்டை, அந்தண்டை துளிக்கூட ஆடாமல் மனஸை நிறுத்தியிருந்தவர். ஆனால் உடம்பால் அவரைப்போல ஓடி ஆடித் தொண்டு செய்த இன்னொருத்தர் இல்லை. ராம த்யானத்திலே அசையாத மனஸு; ராம கார்யத்திலே ‘இதைவிட வேகமில்லை’ என்னும்படியாக ஓடியாடுகிற உடம்பு ! ரொம்ப வேகமாக ஓடுவது எது? ‘வாயுவேகம், மனோவேகம்’ என்பார்கள். காற்றுதான் ஸ்தூலத்திலே பஹுவேகமாகச் செல்வது, ஸூக்ஷ்மத்திலே மனஸின் ஓட்டத்துக்கு மிஞ்சி எதுவுமில்லை. ‘காற்று மாதிரி இந்த மனஸு கிடந்து பறக்கிறதே ! காற்றைப் பிடித்து வைத்து அடக்க முடியாத மாதிரியே அல்லவா இந்த மனஸையும் கட்டுப்படுத்தி வைக்க முடியவில்லை?’ என்று அர்ஜுனன் முறையிடுகிறான். சஞ்சலம்ஹிமந:க்ருஷ்ண…….வாயோரிவ ஸுதுஷ்கரம் (கீதை 6-34) பகவானும் ஆடாமல் அசையாமல் நிறுத்தப்பட்ட யோகியின் மனஸைக் கொஞ்சங்கூடக் காற்றேயில்லாத இடத்தில் ‘ஸ்டெடி’யாக ஜ்வலிக்கிற தீபத்தோடு உவமித்துத்தான் சொல்லியிருக்கிறார்: யதா தீபோ நிவாதஸதோ நேங்கதே ஸேபமா….. (கீதை 6-19) ‘ நிவாதம்’ என்றால் ‘காற்று இல்லாமல்’ என்று அர்த்தம். வாதம் என்றால் காற்று. வாதம்,வாயு இரண்டும் ஒன்றுதான். ‘ வாயுப்பிடிப்பு’ என்றும் ‘வாத ரோகம்’ என்றும் ஒன்றையேதான் சொல்கிறோம்? ஆஞ்ஜநேய ஸ்வாமி யார்? சஞ்சலத்துக்கே பேர்போன குரங்கு இனத்தில் பிறந்த அவர் ஸதாகாலமும் சஞ்சலித்துக் கொண்டேயிருக்கும் வாயுவுக்குப் புத்ரர் ! வாயு குமாரர். ‘வாதாத்மஜர்’ என்றும் சொல்வார்கள். ‘வாத’ என்றாலும் வாயுதானே? ‘ஆத்மஜன்’ என்றால் புத்ரன். வாத – ஆத்மஜன் என்றால் வாயு புத்ரன். வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி யூதம்’ என்றால் கூட்டம். ஸேனை. வானரப்படையில் முக்யஸ்தர் இவரே. ஆனபடியால் ‘வாநர-யூத-முக்யர்’. இது ச்லோகத்தின் பின் பாதி. முன் பாதி என்ன? அதிலேஎன்னசொல்லியிருக்கிறது? வாயுவேகம், மனோவேகம் அந்த இரண்டு வேகமும் படைத்தவர் இவர் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் மனஸ், இந்த்ரியங்கள் ஆகியவற்றின் சலனத்தில் அல்ல. சரீரத்தாலே செய்கிற கார்யத்தில்தான் வாயுவேக, மனோவேகக்காரராக இருக்கிறவர். "மனோ – ஜவம் மாருத – துல்ய – வேகம் ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்" 'மனோ-ஜவம்’ – மனஸைப் போன்ற வேகம் கொண்டவர். ‘ஜவம்’ என்றால் வேகம். 'மாருத – துல்ய – வேகம்’ – காற்றுக்கு ஸமமான வேகமுடையவர். ‘மாருதம்’ என்றாலும் காற்றுதான். ‘மந்த மாருதம்’ என்கிறோமல்லவா? மாருதத்தின் புத்ரர் என்பதால்தான் அவருக்கு ‘மாருதி’ என்று பெயர். ‘வீர மாருதி கம்பீர மாருதி’ என்று (பஜனையில்) பாடுவார்கள். அசல்பதிவேற்றியவருக்கு நன்றி. ஓயாமல் சலிக்கிற மனஸைப் போல ‘மனோஜவர்’ : அப்படியே, ஓயாமல் சலித்துக் கொண்டிருக்கிற வாயுவைப் போல ‘மாருத-துல்ய-வேகர்’; அவரே வாயுவின் பிள்ளைதான்- ‘வாதாத்மஜர்’; சஞ்சல குணத்தைக்கே பேர் போன வானரகுல முக்யஸ்தராக இருப்பவர் வேற- ‘வாநர-யூத-முக்யர்!’. இப்படியெல்லாம் இருக்கிறவருடைய ஆச்சர்யமான மஹிமை என்ன என்றால், இவரையே, ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் என்று ஸ்தோத்ரிக்கும் படியாக இருக்கிறார் ! புலன்களை வென்றவர் இவர்: ‘ஜிதேந்த்ரியர்’- ஜித இந்த்ரியர்: ஜயிக்கப்பட்ட இந்த்ரியத்தை உடையவர். மனஸ்தான் அத்தனை இந்த்ரிய கார்யத்துக்கும் மூலம். ஆகையால் அதை ஜயிப்பவர்தான் ஜிதேந்த்ரியர். மஹா சஞ்சலம் வாய்ந்த மனஸை ஜயித்த வாய்ந்த மனஸை ஜயித்த ஜிதேந்த்ரியர் இவர். அதனாலேதான் புத்திமான்களுக்கு எல்லாம் உச்சியிலுள்ள ‘புத்திமதாம் வரிஷ்ட’ராகி யிருக்கிறார். மனஸை நல்லதிலேயே ‘ஸ்டெடி’யாக நிறுத்தி வைப்பதுதான் புத்தி. ஆகையினாலே ஜிதேந்த்ரியாக மனோ நிக்ரஹம் செய்துள்ள ஆஞ்ஜநேய ஸ்வாமி 'புத்திமதாம்வரிஷ்ட’ராய் இருக்குறார. 'புத்திமான்’ என்று சொன்னாலே உசத்திதான். அதைவிட உசத்தி ‘புத்திமதாம் வர’ என்று சொல்லியிருப்பதால் ‘புத்திமான்களில் சிறந்தவர்’ என்று அர்த்தம் கொடுக்கும். அதையும்விட உசத்தி, ‘புத்தி மதாம் வரீய’ என்று சொல்லியிருந்தால். சிறப்புப் பொருந்தியவர்களிலேயே ஒருத்தரை மற்றவரோடு ஒப்பிட்டு, ‘கம்பேரடிவ்’ – ஆக அவர் மற்றவர்களை விட உயர்வு பொருந்தியவராக இருக்கும் போது ‘வரீய’ என்பர்கள். ஆனால், ஆஞ்ஜநேயரை இப்படிச் சொன்னால்கூடப் போதாது ! இதையும்விட உசத்தியாக, ‘இதற்கு மேலே உசத்தியில்லை ; இவரோடு கூட கம்பேரிஸ’னுக்கும் இடமில்லை; இவர்தான் புத்திக்கு ‘ஸூபர்லேடிவ்’; புத்திமான்கள் அத்தனை பேருக்கும் உச்சத்தில் இவரைத்தான் வைக்கணும்’ என்றே (ச்லோகத்தில்) ‘புத்திமதாம் வரிஷ்ட’ என்று சொல்லியிருக்கிறது. 'வரிஷ்ட’தான்சிறப்பின்உச்சஸ்தானம். அதற்கு மேலேயும் இல்லை, ஸமதையும் இல்லை, அதற்கு அடுத்தபடியாக ‘கம்பேர்’ பண்ணக்கூட இன்னொன்று இல்லை. ஞானிகளில்கூட இப்படி ப்ரஹ்மவித், ப்ரஹ்மவித்வரன், ப்ரஹ்மவித்வரீயன், ப்ரஹ்மவித்வரிஷ்டன் என்று உயர்த்திக் கொண்டே போவதுண்டு. மாருதி புத்திமதாம் வரிஷ்டர். ஆனால் இந்த இந்த்ரிய ஜயம், புத்திச் சிறப்பு எல்லாவற்றையும்விடப் பெரிய அவருடைய பெருமை என்ன என்றால் அவர் ராமதாஸனாக இருந்து, ‘பகவானுக்கு இவரைப் போலப் பணி புரிந்தவரில்லை’ என்று இக்ர ஸ்தானம்(முதலிடம்)பக்திமான்களுக்கும் வரிஷ்டராயிக்கிறாரே, அதுதான். தேஹ சக்தியோடு, புத்திநுட்பத்தையும் ரொம்பவும் காட்டிச் செய்ய வேண்டிய பணி தூது போவது. அந்தத் தூதுப் பணியை ரொம்பவும் சிறப்பாகச் செய்து, ஸாக்ஷாத் ஸீதா-ராமர்களுக்கே துக்கத்தைப் போக்கிப் பெரிய நம்பிக்கையையும் உத்ஸாஹத்தையும் ஊட்டினாரே, அதற்காகத்தான் முக்யமாக அவரைத் தலைவணங்கிப் பணிய வேண்டும். 'ஸ்ரீ ராமதூதாம் சிரஸா நமாமி’ என்று பாதத்தில் விழுந்து நமஸ்காரம் பண்ண வேண்டும். மனோ – ஜவம் மாருத – துல்ய – வேகம் ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம் | வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி || ஆஞ்சநேயர் புகழ் வாழ்க! ஜெய் ஶ்ரீராம்!!🌹
22 likes
13 shares
RamaswamyAnnamali
600 views 6 months ago
#🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ் #ஸ்ரீராம் ராமனால் வாசுகி பெற்ற பலன்*... ஒரு செயல் ஒரே சமயத்தில் சிலருக்கு மகிழ்ச்சியும், சிலருக்குத் துயரமும் தருவதுண்டு . இப்படித்தான் திருப்பாற்கடலை கடைந்த போது அமுதம் கிடைத்ததில் தேவர்களுக்கு மகிழ்ச்சி, அசுரர்களுக்கு துயரம். அமுதம் கிடைக்க உதவியாருந்த வாசுகிக்கும் துயரம் தந்ததே. தனது உடற்சோர்வு நீங்க மதங்க முனிவரின் ஆசிரமத்திற்கு அருகே சென்று ஓய்வு எடுத்தான். அங்கு தான் வாலி வர மாட்டான் என்ற தைரியமும் இருந்தது. எம்பெருமான் மோகினி அவதாரத்தை முடித்து வாசுகியிடம் வந்தார். அவனோ அவர் வந்ததைக் கூட அறியாமல் வலியில் புரண்டு கொண்டிருந்தான். பகவான் வாசுகியிடம் " வாசுகியே , நல்ல காரியத்திற்கு உதவியிருக்கிறாய் . இந்திரன் உன்னை மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். நீ வேண்டும் வரம் கேள் " என்றார். " எம்பெருமானே, தேவகாரியத்திற்கென்று இசைந்தேன் , ஆனால் தேவர்கள் என்னை லட்சியம் செய்யவில்லை. வாலியை விட்டு இழுக்கச் செய்து பழிவாங்கிவிட்டனர். உடலெல்லாம் காயம், மூச்சு விடவும் முடியவில்லை என்று கூறினான். "எம்பெருமானே , இந்த வலி மறக்கும் அளவுக்கு நீண்ட உறக்கம் தேவை அதை அருளுங்கள் ". " பகவான் அதற்கு , வாசுகி நீ யுக யுகமாக உறங்குவாய் " என்று வரமளித்தார். மேலும் ஓர் வரமும் பெற்றுக்கொள் என்றார். வாசுகி மிகுந்த கோபத்துடன், "சுவாமி உறங்கி எழும் போது வாலி மாண்டு ஒழிந்தான் " என்ற செய்திதான் என் காதில் விழ வேண்டும்" என்றான். "அப்படியே ஆகட்டும் என்று கூறி மறைந்தார் மாயவன். இவ்வாறாக திருப்பாற்கடல் கடைந்த போதே வாலி வதத்திற்கு நாள் குறிக்கப்பட்டு இராம அவதாரத்தில் நிறைவேற்றப்பட்டது.🌹
13 likes
12 shares