St Antony/புனித அந்தோனியார்

540 Posts • 4M views
தமிழ்சீயான்43
1K views 27 days ago
🌿 இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள். 23.06.2026 (செவ்வாய்) துயர்நிறை மறையுண்மைகள். முதலாவது. கெத்சமணித் தோட்டத்தில் ஆண்டவர் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து, இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில் "உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்." என கூறப்பட்டுள்ளது. உலகின் ஒளியான நம் இயேசுவை நாம் எந்நாளும் பின் தொடர்ந்திட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம். இரண்டாவது. ஆண்டவர் இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து, இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், "பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்." என இயேசு கூறுகிறார். நமதாண்டவர் இயேசு கூறிய பொன்விதியை நாம் அனுதினமும் கடைபிடித்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். மூன்றாவது. ஆண்டவர் இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து, தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். நான்காவது. ஆண்டவர் இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து, 'தூக்கு மேடையின் குரு' (Priest of Gallows) என அழைக்கப்பட்ட இன்றைய புனிதர் புனித ஜோசப் கஃபஸ்ஸோ தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளின் பாதுகாவலராவார். தூக்குத் தண்டனைக் கைதிகளுக்காக இப்புனிதர் வழியாக செபிப்போம். அவர்கள் மேல் இறைவன் கருணை கொண்டிட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். ஐந்தாவது. ஆண்டவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து, அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய்க் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். ஆமென். பெர்னதெத்துக்கு 18 முறை தரிசனமளித்த தூய லூர்து அன்னை, திருக்காட்சிகளில் செபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறைபொருள்களில் 15 மறையுண்மைகளை நாளுக்கு ஒன்றாக தியானித்து செபிக்க வலியுறுத்தினார். (மற்றும்) பாத்திமா அன்னை காட்சியில் மக்கள் மனமாற்றத்திற்காக செபமாலை செபிக்கச் சொன்னதை நாம் அனுதினமும் பின்பற்ற மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபமாலை செபிக்கும் பழக்கத்தை இன்னும் அதிகரிக்க வேண்டுவோம். Zoom Online வழியாக, வருடம் முழுவதும் 24 மணி நேரமும் தொடர்ந்து ஜெபமாலை சொல்லும் வாய்ப்பு உள்ளது. மேலும், லூர்து மாதா பெர்னதெத்துக்கு 18 முறை மாதா காட்சி அளித்த இடத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும். விருப்பமுள்ள அனைவரும் இதில் கலந்து கொண்டு, அன்னையின் அருளும் ஆசீர்வாதமும் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். 🙏 அன்னை மரியாவின் அருளும் ஆசிகளும் அனைவருக்கும் கிடைக்க இறைவனை வேண்டுகிறோம். 🙏 அன்னை மரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ✨🙏🌼🍃🌸🍂🌼✨️✞✨️🌼🍃🌸🍂🌼 #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #அன்னை வேளாங்கண்ணி மாதா,இயேசு ஆண்டவர்,புனித அந்தோணியார்,குழைந்தை இயேசு,இயேசு மரியாள் சூசை, #புனித அந்தோணியார் #✝️வேளாங்கண்ணி சர்ச்⛪
18 likes
10 shares