நீதிக்கதைகள்
5 Posts • 12K views
*“நான் வெற்றியை தேடி ஓடவில்லை… ஆனால் என் உழைப்பு என்னை அங்கே கொண்டு சென்றது”* “நான் தொடங்கும்போது ஒரு நாள் மாபெரும் வெற்றி பெறுவேன் என்று நினைக்கவில்லை…” இதை தான் இன்று நான் உங்களிடம் முதலில் சொல்ல விரும்புகிறேன். என் வாழ்க்கை பெரிய கனவுடன் தொடங்கவில்லை. என் வாழ்க்கை ஒரு சிறிய தேவையுடன் தொடங்கியது. என் குடும்பத்திற்கு உதவ வேண்டும். என் வாழ்க்கையை நான் எனக்காக உருவாக்க வேண்டும். அதுதான். நான் ஒரு சிறிய உணவு வியாபாரத்தை தொடங்கினேன். அது பெரிய நிறுவனம் இல்லை. பெரிய முதலீடு இல்லை. பெரிய ஆதரவு இல்லை. முதல் மாதம் லாபம் இல்லை. இரண்டாம் மாதம் நஷ்டம். மூன்றாம் மாதம் சந்தேகம். பலர் கேட்டார்கள்: “இதில என்ன future இருக்கு?” “வேற ஏதாவது தொழில் செய்யலாமே என்று பலர் கூறினார்கள்…” நானும் சில நேரம் நினைத்தேன் — “நான் சரியான பாதையில் தானா செல்கிறேனா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்?” ஆனால் ஒரு விஷயம் மட்டும் விட்டுவிடவில்லை. என் முயற்சி மற்றும் என் உற்சாகத்தை. நான் வேலை செய்தேன் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல… நான் வேலை செய்தேன் எனக்கு எடுத்துக்கொண்ட வேலையை நான் நேர்மையாக செய்ய வேண்டும் என்பதற்காக. நான் காலை எழுந்தது ஒரு நாள் பெரிய மனிதன் ஆக வேண்டும் என்பதற்காக அல்ல… இன்று நான் செய்யும் வேலையை நான் முழு மனதோடு செய்ய வேண்டும் என்பதற்காக. நான் வெற்றியை நோக்கி என் பயணத்தை தொடங்கவில்லை. ஆனால் என் பயணம் ஒரு நாள் வெற்றி தரும் என்ற நம்பிக்கையை மட்டும் நான் கைவிடவில்லை. சில நாட்கள் சோர்வு. சில நாட்கள் ஏமாற்றம். சில நாட்கள் “இதெல்லாம் வேண்டாமோ?” என்ற எண்ணம். ஆனால் நான் ஒருநாளும் என் உற்சாகத்தை இழக்கவில்லை. ஏனெனில் நான் புரிந்துகொண்டேன் — திறமை இருந்தால் போதாது. துணிவு வேண்டும். இடைவிடாத முயற்சி வேண்டும். முக்கியமாக — விடாமுயற்சிக்கு பின்னால் நம்பிக்கை வேண்டும். இன்று பலர் என்னை பார்த்து சொல்கிறார்கள்: “உனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது… அதனால் தான் இவ்வளவு பெரிய இடத்திற்கு உயர்ந்தாய்.” ஆனால் உண்மை என்ன தெரியுமா? வாய்ப்பு ஒரு நாள் வந்தது. ஆனால் நான் தினமும் உழைத்தேன். வாய்ப்பு ஒரு கதவு தட்டியது. ஆனால் நான் பல வருடங்கள் அந்த கதவுக்கு முன் தயாராக நின்றேன். இன்று நான் ஒரு மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறேன் என்று மக்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் உண்மையாக சொல்கிறேன் — நான் வெற்றியை நோக்கி ஓடவில்லை. நான் வெற்றியை பிடிக்க முயற்சி செய்யவில்லை. நான் செய்தது ஒன்றே ஒன்று… எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நான் உண்மையாகவும், உற்சாகத்தோடும் செய்தேன். அதுதான் ஒரு நாள் எனக்கு அங்கீகாரமாக திரும்பி வந்தது. அதுதான் இன்று மாபெரும் வெற்றியாக மாறியது. முடிவாக நான் சொல்ல விரும்புவது: பெரிய வெற்றி கிடைக்க வேண்டும் என்று தொடங்க வேண்டாம். இன்று உங்களிடம் இருக்கும் வேலையை நேர்மையாக தொடங்குங்கள். வெற்றி என்பது தூரத்தில் இல்லை. அது உங்கள் தினசரி உழைப்பின் உள்ளே தான் இருக்கிறது. “நான் வெற்றியை தேடி போகவில்லை… என் உழைப்பு தான் என்னை வெற்றியிடம் கொண்டு சென்றது.” முடிவு: இன்று பலர் அவர்கள் செய்யும் துறையில் உச்சத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்கள் என்றால் அவர்கள் தொடங்கும் பொழுது நான் மாபெரும் வெற்றியை பெறுவேன் உச்சத்திற்கு செல்வேன் என்று யாரும் தொடங்குவதில்லை ஆனால் அவர்கள் தொடங்கிய செயலை தோல்வி வெற்றி கேலி கிண்டல் அனைத்தும் கடந்து அவர்கள் ஏற்றுக் கொண்ட பாதையில் அவர்களுடைய முயற்சி உழைப்பு மற்றும் உற்சாகத்தோடு செயல் புரிந்தார்கள் அதுவே அவர்களே அந்தந்த துறையில் உச்சத்திற்கு கொண்டு சென்றது அது போல் தான் நாம் எந்த வேலை செய்கிறோம் எப்படி செய்கிறோம் என்பது முக்கியமில்லை செய்யும் செயல்களில் சில நேரம் வெற்றி வரும் பல நேரம் தோல்வி வரும் சில நேரம் கேலி கிண்டல் கூறுவார்கள் அதை கடந்து நாம் செய்யும் செயலை நம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் உற்சாகத்தோடும் செயல் புரியும் போது நாமும் ஒரு மாபெரும் வெற்றியை பெற முடியும். வெற்றி என்பது ஒரே நாளில் வருவது அல்ல ஒவ்வொரு நாளின் உழைப்பிலும் நமக்கான வளர்ச்சியாக வருவது தான் வெற்றி. இறுதியாக..... நாம் ஒரு செயலை தொடங்கும் பொழுது அதில் நாம் வெற்றி பெறும் வரை நம்மை பலர் ஏளனமாகவும் மற்றும் நம் நம்பிக்கையை இழக்கும் படி பேசக்கூடும். ஆனால் அதையெல்லாம் நம் காதில் வாங்கிக் கொள்ளாமல் நமது பயணத்தை நோக்கி செல்ல வேண்டும் அப்போதுதான் நாம் எடுத்துக் கொண்ட பயணத்தில் வெற்றி பெற முடியும். வெற்றி பெற்ற பின்பு நம்மை ஏளனமாகவும் கேலியாகவும் பேசியவர்கள் அப்பொழுதுதான் நமது வெற்றியை கொண்டாடுவார்கள். ஒரு பாதையை தொடங்கி விட்டால் அதை நோக்கி பயணத்தை விடாமுயற்சியுடன் சென்று வெற்றி பெறுவது தான் நாம் ஏற்றுக் கொண்ட #தன்னம்பிக்கை கதைகள் #கதைகள் #கதை #story பாதையின் உண்மையான வெற்றியாகும். #கதை படிப்போம்.... ரசிப்போம்....📒
14 likes
9 shares
“ *அவனுக்கான பாதை”* மகன் தலை குனிந்து அமர்ந்திருந்தான். மௌனம் அதிகமாக இருந்தது. தந்தை அதை கவனித்தார். அதிகம் கேள்வி கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து மெதுவாக பேசினார். “உனக்குத் தெரியும் தானே… உன்னோடு படித்த ரவி, சுரேஷ்… இப்போ நல்ல நிலைக்கு போயிட்டாங்கன்னு?” மகன் மெதுவாக தலை ஆட்டினான். “அதான் அப்பா….... நான்தான் எதிலும் சரியாக இல்லை போல.” தந்தை சிரிக்கவில்லை. கடுமையாகவும் பேசவில்லை. அவனுடைய தோளில் கை வைத்து சொன்னார்: “ஒரு விஷயம் தெளிவா கேள் மகனே. நீ ஏன் இன்னும் வாழ்க்கையில் வெற்றி பெறவில்லை என்று..... உன்னை நீயே குறை சொல்லாதே. அவர்கள் வாழ்க்கைப் பாதை வேறு. உன் வாழ்க்கைப் பாதை வேறு. மூணு பேரும் ஒரே இடத்திலிருந்து பயணம் தொடங்கியிருக்கலாம். ஆனால் யாருக்கு எப்போ வாய்ப்பு கிடைக்கும், யாருக்கு எப்போ வெற்றி கிடைக்கும் என்று..... அது ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமே இல்லை.” மகன் எதுவும் பேசவில்லை. தந்தை தொடர்ந்தார்: “சிலருக்கு வாழ்க்கை என்ற கதவை சீக்கிரம் திறந்து வைக்கும். சிலருக்கு தட்டத் தட்ட கதவை திறக்க வைக்கும். சிலருக்கு கதவையே சுற்றி சுற்றி தேட வைக்கும். அதனால் ‘நான் தோற்றுட்டேன்’ என்று முடிவு பண்ணாதே. நீ இன்னும் நிற்கிறாயே தவிர, தோல்வியுற்றவன் இல்லை.” சிறிது நேரம் அமைதி. பிறகு தந்தை மெதுவாகச் சொன்னார்: “உனக்கான வாழ்க்கை உன்னுக்காக காத்திருக்கிறது. அது தாமதமாக வரலாம். ஆனால் வரும்போது அது உன்னை கண்டிப்பாக தேடி வரும். அதுவரை துவண்டு விடாதே. உன்னை யாரோடும் ஒப்பிடாதே. நீ போகும் பாதை கடினமா இருக்குதுன்னா, அது உனக்கு பலம் சேர்க்கத்தான்.” மகன் கண்களில் சிறிது ஒளி. தந்தை இறுதியாக சொன்னார்: “வெற்றி சீக்கிரம் கிடைக்க வில்லை என்றால் அது தோல்வி இல்லை. வாழ்க்கையில் முயற்சியை விட்டு விடுவது தான்உண்மையான தோல்வி. நீ உனது பாதையில் நடந்து கொண்டே இரு மகனே… உனக்கான வெற்றி உனக்கான நேரத்தில்தான் கண்டிப்பாக வந்து தீரும்.” மகன் தலை நிமிர்த்தினான். அந்த நாள் முதல் அவன் வேகமாக ஓடவில்லை. ஆனால் நம்பிக்கையோடு நடந்தான். இந்தக் கதை பல தந்தைகளின் மனசையும், பல மகன்களின் பாரத்தையும் பேசும். நீங்கள் இதை பகிர்ந்தால் ஒரு மகனுக்காவது “அப்பா சொன்ன மாதிரி தான்” என்று தோன்றினால் — அதுவே இந்தக் கதையின் வெற்றி. 🌱 #தன்னம்பிக்கை கதைகள் #கதைகள் #சிறுகதைகள் #சிந்திக்க சிறுகதைகள் #தமிழ் சிறுகதைகள்
8 likes
5 shares