♥️கெத்து 🍎பசங்கா 🌹கெத் து பெண்ணுங்கா 🇮🇳😍

265 Posts • 1M views
திரைபாரதி
26K views 19 days ago AI indicator
எதற்கும் ஓர் எல்லை உண்டு! EPS அதிமுகவின் உரிமையாளர் இல்லை! அதிமுகவில் ஒரு பிரிவினர் தவெக ஆட்சியமைப்பதற்கான சட்டசபை வாக்கெடுப்பில் ஆதரவு கொடுக்க முடிவெடுத்த நிலையில் EPS அதை எதிர்க்கிறார். வாக்கெடுப்பின் போது கட்சித் தலைமையின் வழிகாட்டுதலுக்கு சில நீதிமன்றத் தீர்ப்புகள் முக்கியத்துவம் கொடுத்தாலும் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தவெகவிற்கு ஆதரவளிப்பது என எடுக்கும் ஒரு முடிவினை சபாநாயகர் முற்றிலும் புறந்தள்ளிவிட முடியாது. ஒவ்வொரு பிரச்சினையும் வித்தியாசமானது. அடிப்படை நியாயயங்களில் வேறுபட்டவை. அதிமுகவில் கட்சித் தலைவராக EPS பதவியேற்றதில் இருந்து அவரது தலைமை நீதிமன்றங்களில் கேள்விப் பொருளானது. அதே காலகட்டத்தில் தன்னை எதிர்த்த கட்சியின் பெரிய தலைவர்களை EPS திட்டமிட்டு ஓரம் கட்டியது வரலாறு. கலைஞர், MGR, ஜெ போன்ற வலிமையான மக்கள் தலைவர்கள் பழியுணர்ச்சியுடன் நடந்து கொண்டதில்லை. அதிலும் எங்கிருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் தனக்கென ஒரு அணியை உருவாக்கி அரசியல் செய்தறியாத செங்கோட்டையன் பழிவாங்கப்பட்ட விதம் கொடுமையிலும் கொடுமையானது. OPS, சசிகலா ஆகியவர்களின் ஓயாத சட்டப் போராட்டங்கள் உலகப் பிரசித்தமானவை. இன்றைய சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் தமிழகத்தின் கண்ணியமிக்க மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர். மேலும் அதிமுகவில் EPS இன் தன்னிச்சையான முடிவுகளால் அவரும் பாதிக்கப்பட்டவர்தான். EPS அதிமுகவின் உரிமையாளர் போல செயல்பட்டு வந்தார். EPS இன் வழக்கமான நடைமுறைகள் சபாநாயகருக்கு நன்கு தெரிந்ததுதான். அதுமட்டுமல்ல, இந்த பஞ்சாயத்துக்கள் வேறு எந்தக் கட்சிகளிலும் ஒரு தொடர்கதை போல நடந்தது இல்லை என்பதில் இருந்தே ஜெ க்குப் பின் காலங்காலமாக அதிமுகவில் நிலவி வரும் பிரச்சினைகள் புரியவரும். திமுகவின் ஆதரவுடன் முதலமைச்சராக விரும்பிய EPS, எதற்கும் ஒரு எல்லை உண்டு என்று புரிந்துகொள்ளாததால் வந்த விளைவுதான் இது. எனவே இந்தப் பின்புலத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கு அதிமுகவில் ஒரு பிரிவினர் முன்வந்தால், சபாநாயகர் நியாயமான முடிவினை எடுப்பார் என நம்பலாம். #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
63 likes
6 comments 70 shares