இறைமொழி

• 3K views
A Mohan Raj
2K views 23 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஒன்பதாம் தந்திரம் 1. குருமட தரிசனம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமந்திரத்தின் ஒன்பதாம் தந்திரம் (மகுடாகமம்) திருமூலரால் அருளப்பட்ட சைவ சித்தாந்தத்தின் உச்சகட்ட ஞான நிலை, குருமட தரிசனம், பஞ்சாக்கர மந்திரங்கள், சிவனின் நடனங்கள், மற்றும் சமாதி நிலை பற்றிப் பேசுகிறது. இது ஆத்மா சிவத்தோடு கலக்கும் பரமானந்த நிலையையும், மெய்ஞான அனுபவங்களையும், பிரணவ மந்திரத்தின் நுட்பங்களையும் விளக்கும் உயரிய பகுதியாகும்.* *ஒன்பதாம் தந்திரத்தில் உள்ள "குருமட தரிசனம்" குரு இருக்கும் இடமான ஞான சபையைத் தரிசிப்பதன் சிறப்பைக் கூறுகிறது. பலி, அவி, புகை, ஒலி ஆகியவற்றுடன் சிவனை வழிபட, குருமடத்தைக் கண்டவர்கள் இறைவனின் மலரடியை அடைகிறார்கள். இது ஞானகுருவையும், அவர் அருளும் ஒளி வடிவத்தையும் தரிசிப்பதைக் குறிக்கிறது.* பாடல் வரிகள் : *1. குருமட தரிசனம்* 2649 பலியும் அவியும் பரந்து புகையும் ஒலியும் ஈசன் தனக்கென்ற உள்கிக் குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த் தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே. 1 2650 இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின் அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும் அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே. 2 2651 நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின் கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி தேட அரியன் சிறப்பிலி எம்இறை ஓடும் உலகுயிர் ஆகிநின் றானே. 3 2652 இயம்புவன் ஆசனத் தோடு மலையும் இயம்புவன் சித்தக் குகையும் இடமும் இயம்புவன் ஆதாரத் தோடு வனமும் இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே. 4 2653 முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம் அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி அகம்பர மாதனம் எண்எண் கிரியை சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே. 5 2654 அகமுக மாம்பீடம் ஆதார மாகும் சகமுக மாம்சத்தி யாதன மாகும் செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும் அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே. 6 2655 மாயை இரண்டும் மறைக்க மறைவுறும் காயம்ஓர் ஐந்தும் கழியத்தா னாகியே தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள் ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே. 7 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
61 likes
2 comments 20 shares