Makkal Mugam
487 views • 14 days ago
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா ஆகியோர் அனைத்து அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினர். உடன் இயக்குநர், மீன்வளத்துறை விஜயகார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, மற்றும் கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி) திருமதி. ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன் உட்பட அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
13 likes
13 shares