#✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் #🙏புரட்டாசி சனி கிழமை🙏 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #📅பஞ்சாங்கம்✨ #🪴சனிகிழமை வணக்கம் 🪴 நலம் தரும் கோடியம்மன் கோவில்💚⚛️
🏵️வடகிழக்காக ஈசானிய மூலையில் அம்பிகை அமர்ந்திருப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.
🏵️ஆலயத்தின் அருகே வெண்ணாறு பாய்ந்து கொண்டிருக்கிறது.
🏵️முன்னொரு காலத்தில் சோலைகள் சூழ்ந்த,அழகாபுரி என்னும் தஞ்சையில் பராசரர் என்ற முனிவர் தவம் இயற்றிக் கொண்டிருந்தார்.அப்போது தாரகன்,தஞ்சகன் என்ற அரக்கர்கள் முனிவரின் தவத்துக்கு இடையூறு செய்து கொண்டி ருந்தனர்.
🏵️அரக்கர்கள் இருவரும் சிவன்,விஷ்ணு,பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளிடம் வரம் பெற்றிருந்த காரணத்தால்,அவர்களை அழிக்க முடியாது என்று கருதிய முனிவரும் தேவர்களும்,அன்னை பராசக்தியிடம் சரணடைந்தனர்.
🏵️தஞ்சபுரீஸ்வரர் என்னும் சிவாலயத்தில் மேற்கு நோக்கிய ஈஸ்வரனும்,தெற்கு நோக்கிய ஆனந்தவல்லி என்ற அம்பிகை யும் வீற்றிருப்பதைக் கண்டு,அந்த அன்னையிடம் தங்களைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர்.இதையடுத்து ஆனந் தவல்லி விஸ்வரூபம் எடுத்து,கோடி உருவங்களாக மாறி போர்க்கோலம் பூண்டு,அரக்கர்களை வதம் செய்தாள்.
🏵️அன்னை கோடி உருவம் பெற்றதால், #கோடியம்மன் என்ற பெயர் ஏற்பட்டது.
🏵️அன்னையால் வதம் செய்யப்பட்ட தஞ்சகன் என்ற அரக்கன்,இறக்கும் தருவாயில் வேண்டிக் கொண்டபடி,தஞ்சன் ஊர் என்பதே ‘தஞ்சாவூர்’ஆனதாக வரலாறு கூறுகிறது.
🛕கோவில் அமைப்பு🛕
🌸இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை.தோரண வாயிலைக் கடந்து உள்ளே சென்றால்,விநாயகரும்,பாலமுருகனும் இருபுறமும் காட்சி தருகின்றனர்.
🌸கோவிலுக்கு முன்பு காவல் தெய்வமான மதுரை வீரன் ஒரு சன்னிதியிலும்,அய்யனார் பூரணம்,பொற்கொடி ஆகிய கிராம தேவதைகள் மற்றொரு சன்னிதியிலும் கிழக்கு பார்த்து வீற்றிருக்கின்றனர்.பலிபீடமும், அதன் அருகே நந்தியும் உள்ளது.
🌸இத்தல அன்னை சிவசக்தி சொரூபம் என்பதால் நந்தி வாகனமாக இருக்கிறது.
🌸மகா மண்டபத்தின் உட்புறம்,அரக்கர்களை அழிக்க அம்பாள் எடுத்த அவதாரமும்,போர் நிகழ்வுகளும் அழகிய வண்ணங்களில் ஓவியமாக தீட்டப்பட்டு கண்களைக் கவருகின்றன.
🌸துவார சக்திகள் இரு புறமும் நிற்க,அர்த்த மண்டபத்தில் விநாயகரும்,பச்சைக் காளியும்,பவளக்காளியும் இரு புறங்களிலும் கற்சிலைகளாக காட்சி தருகின்றனர்.
🌸அபிஷேகம் என்றால் இவர்களுக்குத் தான்.உள்ளே கோடியம்மன் ‘வெற்றி தேவதை’யாக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
🌸வன்னி மரத்தினை பீடமாகக் கொண்டு,முழுவதும் சுதையினால் ஆன அன்னை,சிவப்புத் திருமுகம் காட்டி திரிசூலத்தைக் கீழே பாய்ச்சிய படி எட்டு கரங்களுடன் அருள்மழை பொழிகிறாள்.
🌸திருமணத் தடை நீங்கவும்,மகப்பேறு கிடைக்கவும் பெண்கள் இத்தல அன்னையை வழிபாடு செய்கிறார்கள்.
🌸மேலும் சாலை ஓரமாக இருப்பதால் வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாகவும் இந்த அன்னை விளங்குகிறாள்.கண் திருஷ்டி விலகவும்,பகை வெல்லவும்,வறுமை நீங்கவும் கண்கண்ட தெய்வமாக கோடியம் மனைக் கும்பிடுகிறார்கள்.
🌸தேவியைத் தரிசித்து விட்டு பிரகாரம் வலம் வரும் போது,தென் கிழக்குப் பகுதியில் கணபதி,சிவன்,சிவதுர்க்கை,விஷ்ணு துர்க்கை,கால பைரவர் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன.
🌸இயற்கையிலேயே பசுமை வண்ணத்தில் பச்சைக் காளியாக இருக்கும் பராசக்தி,அரக்கனை அழிக்கப் புறப்பட்ட போது, கோபத்தின் காரணமாக சிவப்பு நிற பவளக் காளியாக மாறினாள்.
🌸எனவே,இந்த ஆலயத்தில் நடைபெறும் பச்சைக்காளி,
பவளக்காளி விழா இத்தலத்தின் தனிச்சிறப்பு.
🌸தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் சித்திரைத் திருவிழாவிற்கு 15 நாட்களுக்கு முன்பாக,கோடியம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அப்போது முதல் திங்கட்கிழமை ‘அய்யனார் காப்பு’என்றும்,
செவ்வாய் ‘அம்மன் முதல் காப்பு’என்றும்,
அதற்கடுத்த செவ்வாய் ‘அம்மன் இரண்டாம் காப்பு’என்றும் சொல்லப்படுகிறது.
🛣️அமைவிடம்🛣️
தஞ்சையின் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் திருவையாறு செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது கோடியம்மன் கோவில்.
🙏⚛️ௐ சக்தி பராசக்தி⚛️🙏
🙏💚#சர்வம் #சக்திமயம்💚🙏