#🔍ஜோதிட உலகம் 🌍 ##ஆன்மீக தகவல்கள் 🕉️ #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🌾🌴🙏🏼ஸ்ரீ வராகி அம்மன்🙏🏼🌴🌾 #🙏🪔 ஓம் வராகி அம்மா போற்றி 🪔🙏 செல்வ வளம் பெருக வராஹி வழிபாடு
உங்களுடைய ஜன்ம நட்சத்திரத்திற்கு 2,4,6,8,10 வது நட்சத்திரம் வரும் நாளன்று இரவில் குரு ஓரை அல்லது புதன் ஓரையில் பின் வருமாறு அன்னை மஹாவராகியை வழிபட வேண்டும்
மரிக்கொழுந்து மாலையை அன்னையின் படத்திற்கு அணிவிக்க வேண்டும்.
பிறகு,மல்லிகை உதிரிப்பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
அப்போது கோரைக்கிழங்கால் செய்த பாயாசத்தை அன்னையின் படையலாக வைக்க வேண்டும்
இருகுழைக் கோமளம் தாள்புட்ப ராகம் இரண்டு கண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக்கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே!
என்ற வராகி மாலை பாடலை 25 முறை ஜபிக்க வேண்டும்.
இப்படி ஓராண்டு வரை செய்து வர படிப்படியாக வருமானம் அதிகரித்துக் கொண்டே செல்லும்;l.
அசைவம்,மதுவைக் கண்டிப்பாக கைவிட்டிருக்க வேண்டும். தமிழ்ப் பண்பாட்டினை விடாப்பிடியாக பின்பற்றி வந்திருந்தால்,இந்த வருமான அதிகரிப்பு பூஜை முழுமையான பலனைத் தரும்.
.