Arafta

4 Posts • 16K views
Islamic Way ❤️ Of Life
875 views 9 days ago
"அரஃபா ❤️💐 1.அல்லாஹ் புகழ்ந்து பேசுகிறான் அபூஹுரைரா மற்றும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் போன்றோர் அறிவிக்கிறார்கள் : 'நிச்சயமாக அல்லாஹ் சுப்ஹானஹூ வ தஆலா அரஃபா தினத்தின் மாலையில் அரஃபாவிற்கு வந்திருக்கக்கூடிய மக்களை குறித்து மலக்குமார்களிடம் புகழ்ந்து பேசுகிறான். "எனது மலக்குமார்களே! எனது அடியார்களை நோக்கி பாருங்கள். அவர்களில் அந்தஸ்த்து உள்ளவர்கள், அந்தஸ்து இல்லாதவர்கள் என அனைவரும் பரட்டை தலையுடையவர்களாகவும், புழுதி படிந்தவர்களாகவும் என்னிடம் வந்துள்ளார்கள்" என்று அல்லாஹ் கூறுகிறான் என்று ரஸுலுல்லாஹி ﷺ கூறினார்கள். நூல்: (முஸ்னத் அஹ்மத்) 2. நரக விடுதலை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'அல்லாஹ் தபாரக வ தஆலா அதிக அதிகமாக தனது அடியார்களை நரகத்திலிருந்து விடுதலை செய்யக்கூடிய தினம் அரஃபா தினத்தை விட வேறு தினம் இருக்க முடியாது' என்று ரஸுலுல்லாஹி ﷺ கூறினார்கள். நூல்: (ஸஹீஹ் முஸ்லிம்) 3. சிறந்த துஆ அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'துஆக்களில் மிகவும் சிறந்த துஆ அரஃபா தினத்தில் செய்யப்படக்கூடிய துஆ நானும் எனக்கு முன் வந்த நபிமார்களும் கூறிய கூற்றுகளில் மிகச் சிறந்த கூற்று லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் ஆகும் என்று ரஸுலுல்லாஹி ﷺ கூறினார்கள். நூல்: (திர்மதி முஸ்னத் அஹ்மத்) அஷ் ஷெய்க் அல்-அல்பானி ரஹிமஹுல்லாஹ் இதை ஹஸன் என்று கூறியுள்ளார்கள். 4. அரஃபா தினம் நோன்பு வைப்பதன் சிறப்பு [ரஸுலுல்லாஹி ﷺ கூறினார்கள், "அரஃபா தினத்தன்று நோன்பு வைப்பது முன்சென்ற வருடத்திலும் பின் வரக்கூடிய வருடத்திலும் நிகழ்ந்து விடுகின்ற பாவங்களுக்கு பரிகாரமாக இருக்கின்றது" என்று கூறினார்கள். நூல்: ஸஹீஹ் முஸ்லிம்] 5. அரஃபா தினம் - மார்க்கம் பரிபூரணமாக்கப்பட்ட தினம் அரஃபா தினம் என்பது இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு தினமாக இருக்கிறது. அன்றைய தினத்தில் தான் அல்லாஹ் சுப்ஹானஹூ வ தஆலா இஸ்லாமிய மார்க்கத்தை பரிபூரணப் படுத்தி கொடுத்தான். "சுப்ஹானல்லாஹ் ❤️✨ தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக்கின் இறுதி நாளான துல்ஹஜ் பிறை 13 அஸர் தொழுகை வரைக்கும் கூறுதல் வேண்டும். இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மினாவில் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும், கூடாரத்திலும்,படுக்கையிலும், மஜ்லிஸிலும், அனைத்து நாட்களிலும் தக்பீர் சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்…. நூல்: புகாரி 4/123. #islam #அரஃபாதினம் #அரஃபா நோன்பின் சிறப்பு #arafahday
9 likes
14 shares
Islamic Way ❤️ Of Life
562 views 9 days ago
"அரஃபா நோன்பு 🕋✨❤️📌 "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல் : முஸ்லிம் 1796 மேற்கண்ட ஹதீஸில் அரஃபா நாளில் நோன்பு வைத்தால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கூறப்படுகின்றது. 🌙 அரஃபா நாளின் பிறை விடயம்: 📜 கண்ணியமிக்க அஷ்-ஷெய்க் (முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-உஸைமீன் ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது: 🖋 பிறை தென்படும் விஷயத்தில் வெவ்வேறு இடங்களுக்கு மத்தியில் உள்ள வேறுபாட்டின் காரணத்தினால், அரஃபா நோன்புடைய நாள் வேறுபட்டால் அப்போது, நாங்கள் எந்நாட்டில் இருக்கிறோமோ அந்நாட்டின் பிறைபார்ப்பை பின்பற்றி நோன்பு நோற்கவேண்டுமா அல்லது இரண்டு ஹரம் பள்ளிவாசல்களுடைய (சவுதி அரேபியாவுடைய) பிறைபார்ப்பை பின்பற்றி நோன்பு நோற்கவேண்டுமா? 📌 கண்ணியமிக்க அஷ்ஷெய்க் அவர்கள் பதில் கூறினார்கள்: இவ்விஷயம் உலமாக்களுக்கு மத்தியில் உள்ள வேறுபாட்டின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த உலகத்திற்கும் ஒரே பிறையா அல்லது பிறை தென்படும் இடத்திற்கு ஏற்ப பிறை வேறுபடுமா? இதில் சரியான கூற்று என்னவெனில் பிறை என்பது அது தென்படும் இடத்திற்கு ஏற்ப வேறுபடும். எடுத்துக்காட்டாக, மக்காவில் (துல்-ஹிஜ்ஜா மாதத்தின்) பிறை தென்பட்டு (அவர்கள் அம்மாதத்தை ஆரம்பித்து) அவர்கள் ஒன்பதாவது நாளில் (அரஃபா நாளில்) இருக்க, வேறு ஒரு நாட்டில் மக்காவிற்கு ஒருநாள் முன்னதாகவே பிறை பார்க்கப்பட்டு இருக்குமேயெனில், சவுதியின் அரஃபா நாள்(ஓன்பதாவது நாள்), அவர்களுக்கு அது பத்தாவது நாளாக இருக்கின்றது, ஆகையால் அவர்களுக்கு அந்நாளில் நோன்பு பிடிக்க அனுமதி இல்லை ஏனெனில் அவர்களுக்கு அந்நாள் பெருநாள் ஆகும். அதேபோல் (இன்னொரு) எடுத்துக்காட்டாக (மற்றொரு நாட்டில்) மக்காவிற்கு ஒரு நாள் பின்னதாக பிறை பார்க்கப்பட்டுவிட்டது என்று எடுத்துக்கொண்டால், மக்காவில் ஒன்பதாவது நாள் (அரஃபா நாள்) அவர்களுக்கு எட்டாவது நாளாக இருக்கின்றது. ஆகையால் அவர்கள் தங்களுக்குரிய ஒன்பதாவது நாளில் தான் (அரஃபா) நோன்பு நோற்க வேண்டும். மேலும் அவர்கள் நோன்பு நோற்கும் (ஒன்பதாம்) நாள் மக்காவில் பத்தாவது நாளாக இருக்கும். இதுவே ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட சரியான கருத்தாகும், ஏனென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் கூறுகிறார்கள்: “நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு வைய்யிங்கள் மற்றும் பிறையை பார்த்து நோன்பை விடுங்கள்”. (ஸஹீஹுல் புகாரி-1900) ❤️ இறைவன் நன்கறிந்தவன் ❤️ #உழ்ஹிய்யா #குர்பானிசட்டங்கள் #அரஃபாதினம் #islam
16 likes
14 shares