ஆன்மிகம்
1K Posts • 1M views
RamaswamyAnnamali
750 views
#ஆன்மீக #😍குட்டி கதை📜 யார்? கிருஷ்ணண் யார்?*இரண்டிற்கும் வித்தியாசம், வயது மட்டுமே...* 35 , வருடங்களுக் வில்கு முன்னாள் பள்ளி பருவத்தில், எனது ஆசிரியர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்...... கிருஷ்ணருக்கும், கண்ணனுக்கும், என்ன வித்தியாசம் என்று..., அதற்கு , நான் சொன்ன பதில்...,. இரண்டிற்கும்... *வயதுதான் வித்தியாசம் என்றேன்.....* கண்ணன் என்பது செல்ல பெயர். குழந்தை பருவம். கிருஷ்ணன் என்பது வளர்ந்த பிள்ளை. இரண்டிற்கும் , வயதுதானே வித்தியாசம் சின்ன உதாரணம்... ஒருநாள், நான் ... முகம் முழுக்க சோப்பு தேய்த்து , குளித்துக் கொண்டிருந்தேன். திடீர் என்று , பக்கத்தில் வைத்திருந்த தண்ணீர் சொம்பை காணவில்லை. கண்ணை திறக்க முடியாமல், இரண்டு கையாலும், என்னை சுற்றி , சுற்றி, சொம்பை, தேடினேன். அப்போது ,..எனது குழந்தை சிரிக்கும் சப்தம் கேட்டது. எனக்கு புரிந்து விட்டது. சொம்பை அவள் தான் வைத்திருக்கிறாள் என்று. எனக்கு , கண் எரிகிறது என்று அவளுக்கு தெரியவில்லை. நான் , சொம்பை தேடுவதில், அவளுக்கு ஒரு ஆனந்தம். இதுதான்.... குழந்தையின் குறும்பு. என்பது. தற்போது , எனது கண்ணில் , ஒரு தூசி விழுந்தாலும் அவள் கண்ணில் நீர் வடிகிறது. இரண்டிற்கும் , வித்தியாசம் வயது மட்டுமே.... மகாபாரதத்தில், கண்ணன் சிறு குழந்தையாக இருக்கும் போது.... கோபிகளின் ஆடைகளை , மறைத்து வைத்து... அவர்கள் தேடுவதை கண்டு ஆனந்தப் பட்டான். அதே கண்ணன் கிருஷ்ணனாக மாறும் போது.... மேலாடை இன்றி ஒரு பெண் தவிக்கும்போது... மேலாடையை அவளுக்கு கொடுத்து, அவள் மனதை, காத்து நின்றான்.. இரண்டிற்கும் வித்தியாசம் , வயது மட்டுமே..... கண்ணன் சிறு பிள்ளையாக இருக்கும்போது.... நண்பர்களுடன் , பக்கத்து வீட்டில் வெண்ணெயை திருடி தின்றான். தாய் கேட்கும் போது... நான் திருடவே இல்லை என , பொய்யும் சொன்னான்... அதே கண்ணன் கிருஷ்ணனாக மாறும் போது.... திருடுவது கூடாது.... பொய் சொல்வது கூடாது , என கீதை உபதேசம் செய்தார்.... இரண்டுக்கும் வித்தியாசம் வயது மட்டுமே. சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..
14 likes
1 comment 12 shares
PEN TV TAMIL
2K views
இன்றைய ( 03.02.2026 ) செவ்வாய்க்கிழமை, ஷீரடி சாய்பாபா காலை தரிசனம்🙏ஓம் சாய்ராம் 🕉️ சாய்பாபாவின் அருளால், உங்களின் பிராத்தனைகள் நிறைவேறட்டும்🙏 #devotionalcontents #ஆன்மீகம் #சாய்பாபா 🙏 #பக்தி #சீரடி சாய்பாபா
48 likes
46 shares