தெரிந்தது கொள்ளுங்கள்

18 Posts • 14K views
உலகமே உறைந்துப்போய் பார்க்கும் ஒரு மகா யுத்தம் மத்திய கிழக்கில் வெடித்துள்ளது. இதுவரை "வல்லரசு" என்று மார்தட்டிக்கொண்டிருந்த அமெரிக்காவின் பாதுகாப்பு கவசம், இன்று சுக்குநூறாக உடைக்கப்பட்டு, அந்த நாடு அங்கே "பார்வையற்ற ஊனமுற்ற நிலைக்கு" தள்ளப்பட்டுள்ளது. ஜோர்டானில் அமைக்கப்பட்டிருந்த Raytheon தயாரிப்பான அமெரிக்காவின் மிகவும் சக்திவாய்ந்த THAAD (Terminal High Altitude Area Defense) AN/TPY-2: Army Navy/Transportable Radar Surveillance என்ற ஏவுகணை எதிர்ப்பு ரேடார் அமைப்பை ஈரான் தனது துல்லியமான தாக்குதலால் தரைமட்டமாக்கியுள்ளது. இதனால் அமெரிக்காவிற்கு 1.1 பில்லியன் டாலரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு முழுவதையும் கண்காணிக்கும் அமெரிக்காவின் "கண்கள்" இப்போது குருடாக்கப்பட்டுவிட்டன. ஒரு சண்டையில் ஒருவனின் கைகளை (ஏவுகணைகள்) வெட்டுவதை விட, அவனது கண்களை (ரேடார்) பிடுங்குவது மிகவும் ஒரு Smart move. இப்போது அமெரிக்காவிடம் ஏவுகணைகள் இருக்கலாம், ஆனால் எங்கே தாக்க வேண்டும் என்று காட்டும் ரேடார் இல்லை. இப்போது அவர்கள் ஏவுவது எல்லாமே 'குருட்டு இலக்கு' தான்! அது மட்டுமல்ல…. ஈரான் மிக சாதுரியமான ஒரு "பொருளாதார அழிவு" வேலையைச் செய்துள்ளது. ஈரான் அனுப்பும் வெறும் $2,000 மதிப்புள்ள மலிவான ட்ரோன்களை (Drones) சுட்டு வீழ்த்த, அமெரிக்கா $1,000,000 மதிப்புள்ள விலையுயர்ந்த ஏவுகணைகளைச் செலவிடுகிறது. அமெரிக்காவின் ஏவுகணை இருப்பு தீர்ந்து வருகிறது என்று அந்தோணி பிளிங்கன் ஒப்புக்கொண்ட கசப்பான உண்மை இன்று Wall Street Journal செய்தியாக வெளிவந்துள்ளது. ஒரு THAAD ரேடாரை மீண்டும் உருவாக்க 5 முதல் 6 ஆண்டுகள் ஆகும். ஆனால் ஈரான் அதை ஒரு நிமிடத்தில் அழித்துவிட்டது. இந்த ரேடார் அழிப்பால் ஏற்பட்ட மிகப்பெரிய பாதகமான விளைவு எதுவெனில் 20 நிமிட அவகாசம்... இப்போது வெறும் 2 நிமிடம் ஆகியுள்ளது. இதற்கு முன்பு ஈரான் ஏவுகணையை ஏவினால், அதை தற்காத்துக்கொள்ள 20 நிமிடங்கள் அவகாசம் இருக்கும். ஆனால் இப்போது ரேடார் இல்லாததால், ஏவுகணை தலைக்கு மேல் வரும் வரை தெரியாது. வெறும் 60 முதல் 120 வினாடிகளில் எல்லாம் முடிந்துவிடும்! அதிலும் குறிப்பாக, ஈரான் பயன்படுத்தும் 'கிளஸ்டர்' (Cluster) ஏவுகணைகள் வான்வெளியில் பிரிந்து நூற்றுக்கணக்கான குண்டுகளாக விழும். அந்த 2 நிமிடத்தில் மக்கள் பதுங்கு குழிக்குக் கூட செல்ல முடியாது. மரணம் நிச்சயம் என்ற நிலைக்கு அமெரிக்கப் படைகள் தள்ளப்பட்டுள்ளன. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த போர் 6 நாட்களில் முடியும் என்றார், பிறகு 4 வாரங்கள் என்றார், இப்போது 7 மாதங்கள் என்கிறார். இது ஒரு ராணுவத் திட்டம் அல்ல; மாறாக அமெரிக்காவின் தோல்வியை மறைக்கச் சொல்லப்படும் பொய்கள். ஈரானின் நிஜமான ஆட்டம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை! இதுவரை ஈரான் தனது இரண்டாம் தர ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளது. அதன் அதிநவீன 'ஹைப்பர்சோனிக்' (Hypersonic) ஏவுகணைகள் இன்னும் அப்படியே பாதுகாப்பாக உள்ளன. அமெரிக்காவை நிதானமாக, பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் ரத்தம் சொட்டச் சொட்ட சாகடிப்பதே ஈரானின் தாக்குதல் வியூகம். அமெரிக்கா தனது பிடியை இழந்துவிட்டது. "நாங்கள் தோற்றுக்கொண்டிருக்கிறோம்" என்று pentagon ல் இருந்து தகவல்கள் கசிய ஆரம்பித்துவிட்டன. வல்லரசு என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்கா, இப்போது மத்திய கிழக்கில் “ஆப்பிழுத்த குரங்காக” மாட்டிக் கொண்டுள்ளது. #தெரிந்து கொள்ளுங்கள் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩
8 likes
10 shares