saravanan
1K views • 14 days ago
#sithar sivavaakkiyar. சிவவாக்கியர் அருளிய🌹...!*
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
*🙏சிவவாக்கியம்..!*
➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿
💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚
*நூல்: 207...!*
அங்கலிங்க பீடமு மசவைமூன் றெழுத்தினுஞ்
சங்குசக் கரத்திலுஞ் சகல வானகத்தினும்
பங்குகொண்ட யோகிகள் பரமவாச லஞ்சினும்
சிங்கநாத ஓசையுஞ் சிவாயமல்ல தில்லையே.
*பொருள் விளக்கம் :*
நம் அங்கத்தில் சூட்சமாக இலிங்க பீடமாக இருப்பதும் அசபை மந்திரம் எனும் “அ, உ, ம்” என்ற மூன்று எழுத்தாக இருப்பதும், சங்கு சக்கரங்களாகவும், சகல சராசரங்கலாகவும் இருப்பதும் மெய்ப்பொருளான சிவமே. இதனை அறிந்து ஆகாயமான தன் மனத்தில் ஈசனையே நினைந்து வாசியோகம் செய்யும் யோகிகள் பத்தாவது வாசல் எனும் பரமபத வாசலில் நாத ஓசையை சேர்த்து பரமனைக் கண்டு ஐம்புலன்களையும் ஐந்தெழுத்தால் அடக்கி தியானத்தில் இருப்பார்கள்.
*🌷நமசிவய ௐ🌷*
*சித்தர் சிவ வாக்கியர் மலரடிகளையும் - நம்பெருமான் (அப்பன்) திருவடிகளையும் போற்றி வணங்குகின்றேன்....!!!!*
*🙏சிவாய நம🙏*
*🙏திருச்சிற்றம்பலம்🙏*
*வளரும்...*
🔲🤎🔲🤎🔲🤎🔲🤎🔲🤎🔲🔲🤎🔲🤎🔲🤎🔲🤎🔲🤎🔲
28 likes
13 shares