#உங்கவிஜய்_நா_வரேன்

48 Posts • 2K views
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
663 views 1 months ago
திருச்சி காப்பக விவகாரம் - தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்கேடு! திருச்சி மாவட்டம், அரசு உதவி பெறும் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 83 சிறுமிகள், அங்கு நடத்தப்பட்ட திடீர் ஆய்வுக்குப் பிறகு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. வசைபாடுதல், உடல்ரீதியான தாக்குதல்கள் மற்றும் மிரட்டல்கள், உணவு மறுப்பு எனப் பிஞ்சு உள்ளங்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி நெஞ்சை ரணமாக்குகிறது. இது ஒரு நிறுவனத் தோல்வி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தி.மு.க அரசின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்றாகும். குழந்தைகள் நலக் குழுவால் (CWC), பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒப்படைக்கப்பட்ட சிறுமிகளுக்கு, அரசு நிதி பெறும் ஒரு நிறுவனத்திலேயே இத்தகைய கொடுமைகள் நிகழ்ந்திருப்பது மன்னிக்க முடியாதது. அரசின் மாதாந்திர மானியத்தைப் பெற்றுக்கொண்டு, அதே அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு இல்லத்தில் குழந்தைகளுக்கு மிரட்டலும், கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டது, தி.மு.க அரசு தன் பொறுப்பில் இருக்கும் குழந்தைகளைக் கூடக் காக்கத் தவறிவிட்டதையே காட்டுகிறது. அதிகாரிகள் ஒரு "திடீர் ஆய்வு" நடத்திய பிறகுதான் இந்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அப்படியென்றால், இதற்கு முன்பாக அங்கு வழக்கமான ஆய்வுகள் முறையாக நடத்தப்பட்டனவா? அல்லது வெறும் காகித அளவிலேயே ஆய்வுகள் முடிக்கப்பட்டனவா? என்ற கேள்வி எழுகிறது. புகார்கள் தொடர்ச்சியாக வந்தும், நிலைமை முற்றிய பிறகே 83 சிறுமிகளும் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது, வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு நிறுவனம், அராஜகத்தின் கூடாரமாக மாறியிருப்பதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததா? சமூக நலம் மற்றும் குழந்தைகள் மேம்பாடு குறித்துப் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்யும் தி.மு.க அரசு, தரைமட்டத்தில் நிர்வாகத்தை எவ்வளவு மோசமாக வைத்திருக்கிறது என்பதற்கு திருச்சி சம்பவமே சாட்சி. திருச்சி போன்ற ஒரு முக்கிய நகரத்திலேயே அரசு நிதியுதவி பெறும் காப்பகத்தின் நிலை இதுவென்றால், தொலைதூரக் கிராமங்களில் உள்ள இல்லங்களின் நிலை என்னவாக இருக்கும்? அரசின் நலத்திட்ட முழக்கங்கள் வெறும் வெற்றுச் சொற்கள் என்பதை இந்தச் சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது. இத்தனை காலமாக அச்சத்திலும், பசியிலும் வாடிய அந்தச் சிறுமிகளுக்குப் பதில் சொல்லப்போவது யார்?அரசு வழங்கிய நிதி எதற்காகப் பயன்படுத்தப்பட்டது? முறைகேடுகள் நடந்துள்ளதா? இந்த அவல நிலை தொடரக் காரணமாக இருந்த அதிகாரிகள் மற்றும் காப்பக நிர்வாகத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஒரு நாட்டின் எதிர்காலமான குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறும் எந்த அரசும், மக்கள் நல அரசு என்று சொல்லிக்கொள்ளத் தகுதியற்றது. இந்த விவகாரத்தில் வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! இந்த கேவலமான திமுக அரசுக்கு தேர்தல் தினத்தன்று தகுந்த பாடம் கிடைக்க போவது உறுதி!- தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ##உங்கவிஜய்_நா_வரேன் #✨💗TVK 💗✨ ##TVK Vijay #தமிழக வெற்றி கழகம் (TVK) ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு
7 likes
12 shares
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
1K views 3 months ago
#ஈரோடு தமிழக வெற்றிக்கழகம் ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் செய்யும் இடத்தை பார்வையிட வந்த அனைத்து மக்களுக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில்.... 🥰🤌🏻 என்றும் மக்கள் நலனுக்காக இருக்கும் ஒரே கட்சி.... TVK...💥💥 ##உங்கவிஜய்_நா_வரேன் #தலைவர் விஜய் (TVK) #தமிழக வெற்றி கழகம் (TVK) ##TVK Vijay
35 likes
13 shares