kandukatha

499 Posts • 11K views
saravanan.
2K views 23 days ago
#kanthar anuboothi அனுபூதி🌷...!🦚* 🌷அருணகிரிநாதர் அருளியது🌷...!* ➿➿➿➿➿➿➿➿➿ 🔴🟢🔴🟢🔴🟢🔴🟢🔴 *நூல் :07...!* கெடுவாய் மனனை கதிகேள் கரவா திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவே தனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே. *விளக்கம் :* ஏ மனமே, நீ கெட்டு வீணே ஒழிகின்றாய், நீ உய்யும் வழியைக் கூறுகின்றேன் கேட்பாயாக, இரப்பவர்களுக்கு ஒளிக்காமல் தானம் செய்வாயாக, வேலாயுதக்கடவுளின் திருவடிகளைத் தியானிப்பாயாக, நீண்ட பிறவித் துன்பத்தை, பொடியாக்கி ஞானாக்கினியால் சுட்டு எரிப்பாயாக வினைகள் யாவையும் விட்டு விடுவாய் .. *🌷ஓம் சுப்பிரமணியனே போற்றி🌷* *🌷ஓம் சரவணபவா போற்றி🌷* *🌷ஓம் சக்திவேலா போற்றி !🌷* *🌷ஓம் கார்த்திகேயா போற்றி !🌷* *🌷ஓம் செந்திலாண்டவா போற்றி !🌷* *🌷ஓம் சிவபெருமானின் புதல்வா, போற்றி! போற்றி !🌷* *தொடரும்...* 🟩🟤🟩🟤🟩🟤🟩🟤🟩🟤🟩🟩🟤🔊🟤🟩🟤🟩🟤🟩🟤🟩
37 likes
24 shares
saravanan
694 views 1 months ago
#kanthar anuboothi அனுபூதி🌷...!🦚* 🌷அருணகிரிநாதர் அருளியது🌷...!* ➿➿➿➿➿➿➿➿➿ 🔴🟢🔴🟢🔴🟢🔴🟢🔴 *நூல் :05...!* மகமாயை களைந்திட வல்ல பிரான் முகமாறு மொழிந்து மொழிந் திலனே அகமாடை மடந்தைய ரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங் குவதே. *விளக்கவுரை:* வல்லமை மிக்க பெரிய மாயைகளை எல்லாம், நீக்க வல்லவராகிய, உயிர்களைவிட்டு பிரியாதவராகிய முருகப் பிரான், தன் வாயினால் வழிகளை (உபதேசங்களை), தந்து அருளிய போதிலும், வீடு, பொன் (செல்வம்), மாதர் என்று இவைகளை சதா நினைத்து, சோர்வு அடையச் செய்கிற, உலக மாயைக்குள் கிடந்து, கலங்குவதை நான் விடவில்லையே. .. *🌷ஓம் சுப்பிரமணியனே போற்றி🌷* *🌷ஓம் சரவணபவா போற்றி🌷* *🌷ஓம் சக்திவேலா போற்றி !🌷* *🌷ஓம் கார்த்திகேயா போற்றி !🌷* *🌷ஓம் செந்திலாண்டவா போற்றி !🌷* *🌷ஓம் சிவபெருமானின் புதல்வா, போற்றி! போற்றி !🌷* *தொடரும்...* 🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥
6 likes
13 shares