✡️ஜோதிட பரிகாரங்கள்

13K Posts • 513M views
Jayakannan
19K views 7 days ago
பாம்பின் கால் பாம்பறியும். ஒரு திருடனைப் பற்றி இன்னொரு திருடனுக்கு மட்டுமே நன்றாக தெரியும். ஒரு ஞானியின் மனநிலையை பற்றி இன்னொரு ஞானிக்கு மட்டுமே நன்றாக தெரியும். அதுபோல.... கேதுவைப் பற்றி ராகுவிற்கும். ராகுவைப் பற்றி கேதுவிற்கும். நன்றாகவே தெரியும். ராகு .. தன்னைப் போல செயல்பட வேண்டும் என.. கேதுவை நிர்பந்திப்பார். கேது .. தன்னைப் போல செயல்பட வேண்டும் என.. ராகுவை நிர்பந்திப்பார். இதற்கு நடுவில் .. பகடை காயாக அங்கும் இங்கும் உருண்டு கொண்டிருப்பது நாம் தான். பொதுவாக.. கேதுவிற்கு நேர் எதிரில் இருக்கக்கூடிய ராகு.. கேதுவை போக வாழ்க்கையை அனுபவிக்க வைத்து ... ஏண்டா இவ்வளவு பெரிய உச்சத்திற்கு வந்தோம். பேசாமல் பழைய மாதிரி எளிமையாகவே வாழ்ந்து இருக்கலாமோ..? என்கிற ரீதியில் கேது.. தன்னை நோக்கி.. சிந்திக்க செய்வார்.... ராகுவிற்கு நேர் எதிரில் இருக்கக்கூடிய கேது... ராகுவை போக வாழ்க்கையிலிருந்து பிரித்து இழுத்து வந்து .. ஞானத்தின் வழி சிறிது காலம் வாழ விட்டு.. ஞான வாழ்க்கையை விட போக வாழ்க்கையே மேல் என்கிற ரீதியில்... ராகு... தன்னை நோக்கி... சிந்திக்க வைப்பார்.... இந்த இருவரின் செயல்பாடுக்கு நடுவில் ஒருவரின் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கும். இந்த இரு கிரகங்களில் எந்த கிரகம். சுப கிரக தொடர்பை பெற்று இருக்கிறதோ.? அதன் வழி செல்வது உத்தமம்.. இரண்டுமே சுபத்துவம் அடைந்திருந்தால்.? ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் வைத்ததை போல வாழ்வு அமையும். இரண்டுமே சுபத்துவம் அடையாமல் இருந்தால்.? ராகு கேது இழுக்கும் திசைக்கு எல்லாம் செல்லும்படி வாழ்வு பரிதாபகரமாக ஆகிவிடும். மேலும்.. குறிப்பாக... இவ்விருவர்கள் அமர்ந்திருக்க கூடிய இடத்திலிருந்து.. 3,11 ஆம் இடங்களில் ஒரு கிரகம் அமர்ந்து தசை நடத்தும்போது... அந்த தசா புத்தியில் அவர்களையும் ஆட்டுவிப்பார்கள். இதுபோன்று ராகு கேது செய்யக்கூடிய லீலைகளை புரிந்து கொண்டு... மனதை ஒருநிலைப்படுத்தி தீர்க்கமாக.. முடிவெடுப்பதற்கு. லக்னாதிபதி வலு அவசியம். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 Jaya Kannan Contact WhatsApp only 78100 226 28
725 likes
3 comments 232 shares