🙏🌚 இன்று சித்திரை அமாவாசை 🌚🙏

25 Posts • 1M views
அமாவாசை தர்ப்பணத்தை நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கொடுக்கலாம். நமது முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து நமக்கு நல்லருள் புரிய வேண்டி வழிபாடு செய்வதே தர்ப்பணம். தர்ப்பணம் செய்த பின் வீட்டில், தலை வாழையிலையில் முன்னோர்களுக்கு படையல் போட்டு விட்டு, அதன் பின்னர் காக்கைக்கு வைத்து விட்டு, உணவு சாப்பிடலாம். அத்துடன் பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவு அளிப்பது கூடுதல் சிறப்பான பலன்களை தரும். பசுவுக்கு அகத்திக்கீரை தருவது இன்னும் சிறப்பு. சாப்பிடுவதற்கு முன்னர் மூதாதையருக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைக்க வேண்டும். முன்னோர்களுக்கு உணவைப் படைக்கும் முன்பு, யாரும் சாப்பிடக் கூடாது. நாள் முழுவதும் விரதம் இருக்கலாம் அல்லது முன்னோர்களுக்கு உணவு படைக்கும் வரை எதுவும் சாப்பிடாமல் இருந்து, விளக்கேற்றி, கற்பூர ஆராதானை செய்து விட்டு, காக்கைக்கு உணவு வைத்து விட்டு அதன் பின்னர் சாப்பிடலாம். காகம், நம் பித்ருக்களின் அம்சமாகக் கருதப்படுகிறது. சாதத்துடன் காய்கறி, குழம்பு ஆகியவற்றில் நெய் சேர்த்து காகத்துக்கு படைப்பது சிறப்பு. காகங்கள் அமாவாசை அன்று வைத்த உணவை சாப்பிட்டால், முன்னோர்கள் நம் வீட்டிற்கு சாப்பிட வந்திருப்பதாகவும், நம் சந்ததியினரை ஆசீர்வதிப்பதாகவும் ஐதீகம். இதனால், தோஷங்கள் நீங்கி, வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.காகம் வரவில்லை என்றாலோ, அல்லது உணவை சாப்பிடவில்லை என்றாலோ, உங்கள் குடும்பத்தில் இறந்தவர்கள் ஏதோ குறையுடன் இருப்பதாக கருதப்படுகிறது. பித்ருக்களுக்கு திதி கொடுக்கும் போது, அவரவரால் இயன்ற அளவுக்கு, உணவு, ஆடை போன்றவைகளை வறியவர்களுக்கு தானமாக வழங்கலாம். கால்நடைகளுக்கு உணவுகளை தானமாக வழங்கலாம். அமாவாசையன்று அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. அரிசி, தானியங்கள் தானம் செய்தால் மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை #🙏🌚 இன்று சித்திரை அமாவாசை 🌚🙏 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🙏நமது கலாச்சாரம்
9 likes
18 shares
அமாவாசையன்று சில காரியங்களைச் செய்ய கூடாது என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. மாதத்தின் அனைத்து நாட்களுமே அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து, வாசலில் கோலமிட்டு, விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை தரும். ஆனால் அமாவாசையன்று வீட்டு வாசலில் மறந்தும் கோட கோலம் போடக்கூடாது என்கின்றனர் பெரியோர்கள். அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து காகங்களுக்கு அன்னமிட்ட பின் வாசலில் கோலமிடுவதில் தவறில்லை. அல்லது அன்றைய தினம் முழுவதுமே வாசலில் கோலம் போடாமல் இருக்கலாம். விநாயகருக்கு சதுர்த்தி.முருகனுக்கு சஷ்டி. பெருமாளுக்கு ஏகாதசி. பைரவருக்கு அஷ்டமி.பௌர்ணமிக்கு அம்பிகை . இதைப் போலவே, பித்ருக்களுக்கு அமாவாசை. அதனால் தான் தினமும் இல்லாவிட்டாலும், அமாவாசை திதியில் மட்டுமாவது தான தருமங்களைச் செய்ய வேண்டும் அமாவாசையில் செய்கின்ற தர்ப்பணம் மற்றும் தானங்களால் முன்னோர்களின் தாகமும், பசியும் நிவர்த்தியாவதுடன் குலம் செழிக்கும். நம் இருப்பிடத்தைத் தேடி வரும் முன்னோர்கள் பசி, தாகம் தீர எள்ளு கலந்த நீரினால் தர்ப்பணம், சிராத்தம் செய்யும் போது, ஏற்றுக்கொண்டு நம்மை ஆசிர்வதிக்கிறார்கள். அமாவாசையில் வாசலில் கோலம் போடுவது, மணி அடிக்கும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி இவற்றால் பித்ருக்களின் வருகை தடைபடும். இதனால் தர்ப்பணம் முடிந்து காகத்திற்கு அன்னமிடும் வரை அதாவது வீட்டுக்கு பித்ருக்கள் வந்து செல்லும் வரை, வீட்டு வாசல் மற்றும் பூஜை அறையிலோ கோலம் போடுவதையும், மணியடித்து ஒலி எழுப்பி பூஜைகள் செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் சாஸ்திர நிபுணர்கள். #🙏நமது கலாச்சாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #🙏🌚 இன்று சித்திரை அமாவாசை 🌚🙏
13 likes
13 shares