Failed to fetch language order
ஓம் சிவாயநம
338 Posts • 44K views
N Murugesan
612 views 2 months ago
சென்னை போன்ற பகுதிகளிலிருந்து திருச்சி வருபவர்கள் கவனித்திருப்பீர்கள். திருச்சிக்கு வருவதற்கு முன் இரண்டு பெரிய ஆறுகளை கடக்க வேண்டும். அவற்றில் பெரியது கொள்ளிடம். மற்றொன்று காவிரி. நான் சிறு வயதிலிருந்தே இரண்டு பாலங்களையும் கடக்கும் போது கவனிக்கும் ஒன்று: "ஏன் எப்போதும் கொள்ளிடம் வறண்டே கிடக்கிறது; காவிரியில் சிறிதாவது தண்ணீர் இருக்கிறது?!". வெள்ளம் அல்லது மழைக்காலம் தவிர்த்து கொள்ளிடம் பாவமாக வறுமையில் வாடுவது போல் இருக்கும்!! 😄😄😂 இதற்கான விடை சில நாட்கள் முன்பு கிடைத்தது!! ******************************************************. சில நாட்களுக்கு முன்பு திருப்பராய்த்துறை கோவிலுக்கு சென்றேன். அது கரூர் போகும் வழியில், முக்கொம்பு அணை சுற்றுலா மையத்திலிருந்து ஒரு ஸ்டாப் தள்ளி இருக்கிறது. ஆதிகாலத்தில் காவிரி ஆற்றில் எப்போதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டவாறே இருந்திருக்கிறது. ஆகையால், அதை இரண்டாக பிரித்து காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாக ஆக்கியிருக்கின்றனர். அந்த இடத்தில் உள்ள அணையே முக்கொம்பு அணை. அது தண்ணீரை காவிரிக்கே எப்போதும் திருப்பி விடுகிறது!! வெள்ளம் அணை மீறினால் தான் கொள்ளிடத்திற்கு தண்ணீர்!! (கர்நாடகாவில் வேறு அணைகள் வந்து விட்டதால் இந்த நிலை!). ஆனால், இந்த பதிவு கொள்ளிடத்தின் வறுமை பற்றியதல்ல!! சைவத்திலும், சிவ தத்துவத்திலும் இந்த நிலைமை!! *********************************************** ஆம், ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் சிவ தத்துவம் மிகவும் மேலோங்கி (காவிரியை போல் அடக்க இயலா!!) இருந்திருக்கிறது. ஆகையால், சிவ தத்துவம் இரண்டாக உடைக்கப் பட்டுள்ளது. ஒன்று, சித்தாந்த சிவ தத்துவம் (உலகம் உண்மை என்பதை சார்ந்தது. அற வாழ்க்கையை போதிப்பது.) இரண்டாவது மாயை தத்துவத்தை சார்ந்த சிவ தத்துவம். எதனால் இந்த யூகம்?! ************************************************ ஒரு முறை குணசீலம் பெருமாள் கோவில் சென்றிருந்தேன். போவதற்கு முன் அதன் முன்னதாக ஒரு சிவபெருமான் கோவில் உள்ளது. உள்ளே சென்றால் அந்த பாழடைந்த சிவன் கோவில் அவ்வளவு சான்னியத்துடன் இருந்தது!! குணசீலம் பெருமாள் கோவிலுக்காக இல்லாவிட்டாலும் இந்த சிவன் கோவிலுக்காக குணசீலம் வர வேண்டும் என்று தோன்றும் அளவுக்கு!! பிறகு, தல புராணத்தை படித்தால், அது காவிரி வரலாறு போன்றது!! ஒரு முறை சிவபெருமானின் கோவில் இரண்டாக பிளந்து விட்டதாம். ஒன்று, திருப்பராய்த்துறை சிவன் கோவில். இரண்டாவது இந்த "தார்மீக நாதர்" கோவில். முன்பு மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இப்போது பல வருடங்களாக நன்கொடை இல்லாத காரணத்தால் தொடர்ந்து திருப்பணி நடந்து வருகிறது. நான் கூட ஏன் அறநிலையத்துறை இந்த கோவிலுக்கு நிதி வழங்க கூடாது என்றேன். கடைசியில் பார்த்தால் அறநிலையத்துறை குணசீலம் பெருமாள் கோவிலுக்கு பல கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது. அவர்கள் ஏற்கனவே இருந்த முன் மண்டபத்தை மீண்டும் இடித்து கட்டத் தொடங்கி உள்ளனர்!! அருகில் உள்ள இந்த கோவிலோ கொள்ளிடம் போல் வறுமையில் உள்ளது!!😄😂. ************************************************ தல புராணம் கூறுவது போல இந்த கோவில் அதே நேர்கோட்டில் அமைந்துள்ளது!! நான் திருப்பராய்த்துறை சென்று விட்டு பேருந்தில் ஒரு ஸ்டாப் கடந்து முக்கொம்பு வந்து, சுற்றுலா மையம் வழியாக இரண்டு ஆறுகளையும் கடந்து காவிரியின் இந்த கரைக்கு வந்து மீண்டும் பஸ் பிடித்தால், அதே டிஸ்டன்ஸ் - ஒரு ஸ்டாப் மேலே கடந்தால் இந்த தார்மீக நாதர் கோவில் இந்த கரையில் அமைந்து உள்ளது!!! ************************************************* நான் திருப்பராய்த்துறையை தான் சைவத்தை சார்ந்த "அறம் சார்ந்த சிவ தத்துவத்தை" சேர்ந்ததாக நினைத்து வந்தேன். அப்படியானால் "இந்த பாதி சிவனுக்கு" ஏன் "தார்மீக நாதர்" என்று பெயர்?! தார்மீகம் என்றால் அறம் சார்ந்தது என்று அர்த்தம்!! அழிக்கும் தத்துவத்தை சார்ந்த ஆகம, அத்வைத சிவ தத்துவமா அல்லது அறம் சார்ந்த அன்பே சிவம் என்ற சைவ சித்தாந்த சிவதத்துவமா? எது இன்று உலகில் மேலோங்கி நிற்கிறது?! (ஒரு வேளை திருப்பராய்த்துறை சிவன் தாருகாவன முனிவர்களை காப்பாற்றிய சிவனோ? ஆகையால் தான் பிட்சாடனர் என்ற பெயர் இல்லையோ?!😄😄😂) *********************************************** எனக்கென்ன தோன்றுகிறது என்றால், அந்த காலத்திலேயே, சிவ தத்துவம் இரண்டாக பிரிந்து, அறம் சார்ந்த தத்துவம் வைணவத்திற்கு தரப்பட்டு விட்டது !! சிவபெருமான் "அறன்" அல்ல!! மாறாக "அரன்" - அதாவது பக்தர்களுக்கு அரணாக நிற்பவன் - அழிக்கும் தத்துவத்தை தான் குறிக்கிறது!! இதனால் தான் முருகனும் வைணவத்தை சார்ந்த வரலாறு இருக்கிறது!! ஆகையால் தான் காவிரிக்கு இந்த கரையில் உள்ள தலத்தில் சிவன் கோவில் சிதிலமடைந்தும், வைணவ திருக்கோவிலாக குணசீலன் பெருமாள் கோவில் பெரும் புகழ் பெற்றும் இருக்கிறது என்று நினைக்கிறேன்!! நான் முதல் முறை இந்த சிவன் கோயில் சென்ற போது சிவபெருமான் கூறியது போல் இருந்தது - "நான் தான் இங்கு முன்பு புகழ்பெற்ற கோவிலாக இருந்தேன்; ஆனால் அது இப்போது பெருமாள் கோவில் ஆகிவிட்டது!!" - உண்மை தான் போலிருக்கிறது!! **************************************************** #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
8 likes
5 shares
N Murugesan
708 views 2 months ago
நிறங்கள் ஓர் ஐந்து உடைய (அதாவது தனக்கென்று ஒரு தனி வர்ணமோ, வண்ணமோ இல்லாதவன்), தேவர்கள் துதித்தும் அவர்களுக்கு புலப்படாமல் மறைந்திருந்த பெருமான், ஆனால், நமக்கு எளியவனான உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் (சிவபுராணத்தில் வரும் நிறங்கள் ஓர் ஐந்துடையாய் இந்த கோவில் சிவபெருமானைத் தான் குறிக்கிறது என்று நினைக்கிறேன்!!😄) கோவிலுக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். அப்போது ஒருவர் வந்து அன்னதானத்திற்கு நன்கொடை தரமுடியுமா என்று கேட்டார். நான் அவரிடம் "நானே பல வருடங்களாக வேலைக்கு செல்லாமல் ஆன்மீக வாழ்வில் இருக்கிறேன்; என்னிடம் அதிகம் பணம் இல்லை" என்றேன். பிறகு ஒரு 50 ரூபாய் கொடுத்தேன். அதனால் மகிழ்ந்த அவர், "வேலை கிடைக்கும் உபாயம் நான் கூறுகிறேன்; அதை அப்படியே செய்தால் வேலை கண்டிப்பாக கிடைக்கும்" என்றார். இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆனாலும் சரி, சொல்லுங்கள் என்றேன். முதல் விஷயம் - நிலக்கடலை வாங்கி வேக வைத்து அதை ஆடுகளுக்கு கொடுக்க வேண்டும் என்றார். சரி, அடுத்தது? வீட்டில் ஊத்தப்பம் செய்து ஆனியன் சட்னி வைத்து அதை அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று தானம் கொடுக்க வேண்டும் என்றார்!! நான் சற்று யோசித்ததை பார்த்த அவர், "இதையெல்லாம் நான் சொல்லவில்லை; அந்த சிவனே என்னை அனுப்பி கூறச் சொல்லி இருக்கிறார்" என்றார். பிறகு, மூன்றாவதாக, ரவையை வேக வைத்து, சக்கரை சேர்த்து கோவிலிலோ மற்ற இடங்களிலோ உள்ள மரத்தில் வைத்து விட வேண்டும்; சித்தர்கள் எறும்பு ரூபத்தில் வந்து சாப்பிடுவார்கள் என்றார். பிறகு, சந்தனக் கட்டை வாங்கி சந்தனத்தை அரைத்து நாச்சியார் கோவில் தூணில் உள்ள ஆஞ்சனேயர் நெற்றியில் இட வேண்டும் என்றார். பிறகு, "எங்கே, எல்லாவற்றையும் கூறு" என்றார்!! நான் "எல்லாம் ஓகே, ஆனால், இந்த ஊத்தப்பம் வெங்காய சட்னி விஷயம் தான் சற்று.." என்றேன். "நான் மிகவும் கஷ்டப்பட்டு ஆட்டோ பிடித்து இங்கே வந்தது இதை உனக்கு சொல்லத்தான் சிவபெருமான் அனுப்பி இருக்கிறார்" என்றார்!! நானும் கூட சீரியஸாக கேட்டுக் கொண்டிருந்தேன். பிறகு, வேர்கடலை வாங்கி வேக வைத்து ஆடுகளுக்கு கூட கொடுத்தேன். வேலை கிடைப்பதற்காக அல்ல; அதில் ஒரு சந்தோஷம் அதனால்!! ஆனால், பிறகு யோசித்தேன்; அவர் சீரியஸாக சொன்னாரா? அல்லது வெறும் கிண்டலா!! என்னை நன்றாக கிண்டல் செய்திருக்கிறார் என்று பிறகு தான் தோன்றியது!! 😄😄😂 ***************************************************** அது சரி, ஆடுகளுக்கு நிலக்கடலை கொடுத்த போது, அப்படி ஒரு சந்தோஷமாக அவை சாப்பிட்ட போது, எனக்கும் சந்தோஷமாக இருந்தது. ஏன்? பிற உயிர்களுக்கு நன்மை செய்தால் ஏன் சந்தோஷம் வருகிறது?! நமக்கு ஐந்து புலன்கள் தான் உள்ளன. எவ்வளவு கோடி பணம் இருந்தாலும், ஒரு வயிறு அளவுக்கு தான் சாப்பிட முடியும்; நாம் சாப்பிடும் காபிக்கோ, அரிசி, கோதுமைக்கோ பணக்காரர்கள் சாப்பிடுவதற்கோ மிகப்பெரிய வேறுபாடு கிடையாது. ஆகையால், பணம் எவ்வளவு இருந்தாலும் புலன் இன்பங்களுக்கு ஓரளவிற்கு தான். ஆனால், நாம் சாப்பிடும் உணவையோ, மற்ற தானங்களையோ பிற உயிர்களுக்கு செய்வதின் மூலம் நாம் மேலும் சந்தோஷத்தை அதிகப் படுத்தி கொள்ளலாம்‌. நமக்கு இருக்கும் புலன்கள் ஐந்தை பல மடங்காக உயர்த்தி மேலும் மகிழ்ச்சி பெறும் ஆன்மீக வழி, பிற உயிர்களை மகிழ்ச்சியுற செய்வது தான்!! ஆனால், அவை அடையும் மகிழ்ச்சி நம்மையும் வந்து சேர்வதற்கு காரணம் என்ன தெரியுமா? அத்வைதம் கூறும் நாம் அனைவரும் ஒன்றே என்ற தத்துவம் அல்ல. அவற்றின் புலன்களும் உணர்ச்சிகளும் நம் புலன்களும் தொடர்புடையவை அல்ல. ஆனால், எல்லா உயிர்களையும் இணைக்கும் பாலம் இறைவன். அவற்றின் மகிழ்ச்சி இறைவனின் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி நம்மையும் வந்து சேர்கிறது!! இதைத் தான் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றனர்!! ஆகையால், நம் வாழ்க்கை மேலும் மகிழ்ச்சியுற, மேன்மையடைய பிற உயிர்களையும் மகிழ்ச்சியடைய வைப்பதே சிறந்த ஆன்மீக வழி!! ***************************************************** #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
8 likes
11 shares