ஓம் சிவாயநம

311 Posts • 44K views
N Murugesan
655 views 1 months ago
சென்னைக்கு செல்ல தத்காலில் டிக்கெட் எல்லாம் புக் செய்து கடைசியில் போகவில்லை. இப்போது திருச்சியில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. நான் வாங்கிய புத்தகங்கள்!! (தமிழ் நாவல், இலக்கியம் எல்லாம் படிக்க இப்போதைக்கு நேரமில்லை) #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
18 likes
7 shares
N Murugesan
611 views 1 months ago
இன்று இரவு முழுவதும் விழித்திருந்து சிவபெருமானை பூஜித்து வழிபடும் நாள்!! மற்ற பௌதீக எண்ணங்கள் அனைத்தையும் உதறி, மனம் முழுவதும் சிவ தத்துவத்தில் நிறைந்து, பக்தியில் நனைந்து இரவை கழிக்கும் நாள். அவ்வாறு காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்க சிவபெருமானை வழிபட அனைவருக்கும் மகாசிவராத்திரி வாழ்த்துக்கள்!!😄 ஓம் நமசிவாய!! #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
12 likes
8 shares
N Murugesan
686 views 2 months ago
காதலை பக்தியுடன் இணையாக பேசுவது இல்லற ஆன்மீகம் செழிக்க வேண்டும்; இல்லறத்தில் இருந்தாலும் இறைவனை அடைய முடியும் என்பது போன்ற உண்மைகளை வலியுறுத்துவதற்காக மட்டுமல்ல. உண்மையாகவே காதலும், பக்தியும் ஒரு போன்ற தன்மையை உடையவையே. இதை மேலும் ஆராய்வதற்கு பதிலாக காதலியிடம் நமக்கு ஏற்படும் ஈர்ப்பும், இறைவனிடம் நாம் கொள்ளும் ஈர்ப்பும் ஒரு தன்மையானதே என்று புரிந்து கொண்டால் போதுமானது. ஆனால், மனிதர்களின் காதலும், இறைவனிடம் கொள்ளும் பக்தி / காதலும் எல்லா விதத்திலும் ஒன்றாகாது. ****************************************†*********. நான் முன்பு எழுதியது போல் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அதை பயன்படுத்தி பெறக்கூடிய புலன் இன்பம் ஓரளவிற்கு தான். பணக்காரர்கள் தமக்கு பிடித்த உணவை பத்து மடங்கு அதிகம் சாப்பிட முடியுமா என்ன?! ஆனால், அந்த இன்பத்தை அதிகரிக்க ஒரு வழி இருக்கிறது. அது தான் அந்த அதிக பணத்தை மற்றவர்களுக்கு உதவ உபயோகப் படுத்தி அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைவதை பார்த்து நாமும் மகிழ்வது. இன்பத்தை நம் புலன்களுக்கு அப்பால் அதிகப்படுத்தும் வழி மற்றவர்களையும் மகிழ்ச்சிப் படுத்தி பார்ப்பது தான். ஒரு முறை நான் கோவிலுக்கு அதிகாலை சென்று கொண்டிருந்த போது, வழியில் ஒரு பெரிய ஏழைகள் க்யூ! என்னவென்று பார்த்தால் யாரோ அன்னதானம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த ஏழைகள் அவ்வளவு சந்தோஷமாக, ஆர்வமாக க்யூவில் நின்று கொண்டிருப்பதை பார்த்தவுடன் ஏதோ நானே அவர்களுக்கு அன்னதானம் அளிப்பது போன்ற ஒரு சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது. அந்த காலத்தில் பணம் அதிகம் சம்பாதிப்பதே அதனால் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்ற எண்ணத்தில் தான் என்று ஒரு திருக்குறள் கூட இருக்கிறது. வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியை அதிகம் பெறுவதற்கு மற்றவர்களுக்கு உதவி செய்வது தான்!! ************************************************* மேற்கூறிய உண்மை பலருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், பலரும் உணராத ஒரு உண்மை இருக்கிறது. அது என்னவென்றால் மேற்கூறியது பக்திக்கும் பொருந்தும்!! ஒரு முறை உறையூர் சிவன் கோவிலில் பக்தியுடன் இருந்த போது இது எனக்கு தோன்றியது: "இந்த பக்தி உணர்வை, அதனால் வரும் மகிழ்ச்சியை எப்படி அதிகப் படுத்துவாய்?! இதற்கு ஒரு வழி இருக்கிறது; உண்மையான பக்தியில் ஆழ்ந்த அனைவரும் இதை இயற்கையாகவே செய்வர்; ஆனால், காரணம் இதுதான் என்று அவர்களுக்கு தெரியாது! அது தான், மற்றவர்களையும் பக்தியில் ஈடுபட செய்வது!! மற்றவர்களுக்கு இறை நம்பிக்கையை ஊட்டுவதும், அவர்களுக்கு பக்தியை மேலும் பெருகச் செய்வதும் நம்முடைய பக்தியையும் அதிகரிக்கும்!!' இதை பக்தியில் ஆழ்ந்த பலர் புரிந்து கொள்வர்! (பகவத் கீதையில் அர்ஜுனன்: "இறைவனை அடைந்தவர்கள் எப்படி காலம் கழிப்பர்? உலக இன்பத்தை துறந்த அவர்களுக்கு இன்பம் தான் ஏது?" என்று கேட்க, கிருஷ்ணர் கூறுவது இதைத்தான்: "அவர்கள் என்னுடைய புகழை மற்றவர்களிடம் கூறி அதனால் இன்பம் பெறுவர்"!!). இதனால் தான் அடியவர்கள் மத்தியில் இருப்பதும் மகிழ்ச்சியை தருகிறது. உங்களுக்கு அவனருளால் அவன் தாள் வணங்கி உண்மையான பக்தி கிடைத்து விட்டால், இயற்கையாகவே மற்றவர்களுக்கும் அந்த நம்பிக்கையை, பக்தியை ஊட்டுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். உண்மையான இறையருள் பெற்ற பலருடைய வாழ்க்கை வரலாறு இதற்கு சான்று!!************************************************** இப்போது பக்தி = காதலுக்கு வருவோம். மேற்கூறியது தான் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு!!. உலகியல் காதலில் என்னுடைய காதலியை மற்றவர்கள் பார்க்கக் கூட நான் அனுமதிக்க மாட்டேன்!!😄 அப்படியிருக்க மற்றவர்கள் நம் காதலியை கொஞ்சுவதற்கு அனுமதிப்போமா?! ஆனால், ஆன்மீகத்தில் இது ரிவர்ஸ்!! ஆன்மீகத்தில் என் காதலியை மற்றவர்களையும் கொஞ்ச செய்வதில் மேலும் இன்பம்!! எல்லோரும் என்னுடைய இறைவனை வழிபட வேண்டும்; அவன் புகழ் பாட வேண்டும்; அதனால் நன்மை பெற வேண்டும் என்று நினைப்பது உண்மையான பக்தி உணர்வு!! ஆக, இது போன்ற விஷயங்களில் பக்தியும், காதலும் ஒன்று என்ற உவமை பொருந்தாது! அது போல் தான் சிவபெருமானை மட்டும் தான் வணங்க வேண்டும்; வேறு கடவுளை வணங்கக் கூடாது என்பதும் இந்த பக்தி=காதல் என்ற ஒற்றுமையில் அடங்காது. அனைத்து கடவுள்களும் ஒன்றே - ஒரே பொருளில் தோன்றியவர்களே என்பதால் இந்த விஷயத்தில் தவறாகாது. சைவ சித்தாந்தம் சிவபெருமானே அனைத்து கடவுள்களுக்கும் ஆதாரம் என்று கூட கூறுகிறது!! (ஆனால், முக்தி நிலையடைய இது அவசியம் - முக்தி என்பது இறைவனுடன் இரண்டற கலப்பது; அதற்கு நிஷ்டா பக்தி தேவை தான். அதே வேளையில் மற்ற கடவுள் கள்ள காதலி என்ற உவமை பொருந்தாது!! 😄😄) ******************* #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
14 likes
13 shares