சினிமா🎤தகவல்
14 Posts • 9K views
பாக்யராஜ்: சினிமாவை தனது திரைக்கதையால் திரும்பி பார்க்க வைத்த பாக்யராஜ், நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர். சாந்தனுவும் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இதே போன்று மகள் சரண்யா, பாக்யராஜ் இயக்கி தயாரித்த 'பாரிஜாதம்' படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், இந்தப் படம் பெரியளவில் ரீச்சாகவில்லை. இந்தப் படத்தில் பிருத்விராஜ் ஹீரோவாக நடித்திருந்தார். சரண்யா பாக்யராஜ்: அந்த படத்திற்கு பிறகு சரண்யா வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை, வெளியில் தலைகாட்டவும் இல்லை. அவர் காதல் தோல்வியால் மூன்று முறை தற்கொலைக்கு முயன்றதாக அப்போது பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தன. இந்த தகவலை, பாக்யராஜ் தரப்பில் இருந்தோ, சரண்யா தரப்பில் இருந்தோ எந்தவிதமான விளக்கத்தையும் கொடுக்கவில்லை. பல ஆண்டுகளாக வெளியில் தலைகாட்டாமல் இருந்தார் சரண்யா. பல ஆண்டுக்கு பிறகு: அண்மையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில், தனக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாகவும் அந்த குழந்தை தான் ஒட்டுமொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்து இருப்பதாக கூறினார். ஆனால் சரண்யாவுக்கு எப்போது திருமணமானது? அவருடைய கணவர் யார் என்பதை அவர் கூறவில்லை. தற்போது சரண்யா வீட்டில் இருந்த படியே காஸ்ட்யூம் டிசைனர் வேலையை பார்த்து வருகிறார். பல ஆண்டுகளாக வெளிஉலகத்திற்கு தலைகாட்டாமல் இருந்த இவர்,ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தனது அம்மாவுடன் கலந்து கொண்டார். தற்போது சரண்யா தனது இன்ஸ்டாகிராமில், கையில் பூவுடன் இருக்கும் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீயோவை பார்த்த அனைவரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். #தகவல் களஞ்சியம் (TSK) #சினிமா🎤தகவல் #பாக்கியராஜ் ஸ்டேட்டஸ்
13 likes
12 shares
இயக்குனர் மணிரத்னம், பாலா ஆகியோரிடம் உதவி இயக்குனாக பணியாற்றி, 2008-ம் ஆண்டு ஆந்திரா ஆந்தகாடு என்ற தெலுங்கு படத்தன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதன்பிறகு 2010-ம் ஆண்டு விஷ்ணு விஷால் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான துரோகி என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான இவர், படத்தன் தோல்வியால் 6 வருடங்கள் படம் இயக்காமல் இருந்தார், தொடர்ந்து 2016-ம் ஆண்டு மாதவன் - ரித்திகா சிங்க நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஒரே நேரத்தில் இந்தி - தமிழ் என இரு மொழிகளில் வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் குரு என்ற பெயரில் இந்த படத்தை ரீமேக் செய்த சுதா கொஙகரா, 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று என்ற படத்தை இயக்கினார். நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சூரரைப்போற்று திரைப்படத்தை இந்தியில் அக்ஷைகுமார் நடிப்பில் இயக்கி தோல்வி கண்ட இவர், தற்போது பராசக்தி என்ற படத்தை இயக்கியுள்ளார். பொங்கல் வெளியீடாக ஜனவரி 10-ந் தேதி வெளியாக இந்த படம் கலவையாக விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், சுதா கொங்கரா இயக்குனர் பாக்யராஜ், பாண்டியராஜன், மற்றும் பி.வாசு ஆகியோர் குறித்து மேடையில் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் பாக்யராஜ் சார் அவர்கள் என் உயிர் போன்றவர். இன்று ஒரு இயக்குநராக அமர்ந்து கொண்டு, அவர் அன்று அப்படிப் பண்ணாரே, இப்படிப் பண்ணாரே என்று வியந்து பேசும் நிலையில் நான் இருக்கிறேன். அவருடைய மகன் சாந்தனு ஒரு மிகச்சிறந்த நடிகர், மிக அழகாகவும் இருக்கிறார். அவருடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி.(பாவக்கதைகள்: ஆந்தாலஜி படம்) அந்தச் சமயத்தில்தான் பாக்யராஜ் சாரைப் பற்றி நிறையப் பேசினேன். என் பள்ளி நாட்களில் நடந்த சில சுவாரசியமான நினைவுகள் இப்போதும் பசுமையாக இருக்கிறது. பாக்யராஜ் சார் இயக்கி நடித்து ஏ.சான்றிதழுடன் வெளியாக முந்தானை முடிச்சு படத்தை பள்ளிக்குச் செல்லாமல் 'கட்' அடித்துவிட்டுச் சென்று பார்த்தது இப்போதும் நினைவிருக்கிறது #சினிமா🎤தகவல்
12 likes
9 shares