அய்யா வைகுண்டர் {1008}
4K Posts • 2M views
D Muthu Prakash, Kanchipuram 💐
3K views 13 days ago
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை 2ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 28.10.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== திரேதா யுகம் தொடர்ச்சி =========================== அகிலம் ====== சீதை வளர்ந்து சிறந்த வயதானதிலே மாதை மணமிடவே மாதா மனதிலுற்றுத் தன்புரு சனோடே தையல்நின் றேதுசொல்வாள் அம்பும்வில் லும்வளர ஆயிழையுந் தான்வளர்ந்து பக்குவங்க ளாச்சே பைங்கிளிக்கு மாலையிட ஒக்குவ தென்ன உரைப்பீரென் னுத்தமரே என்று மடமாது ஏற்ற தினகரரை நின்று வணங்கி நேரிழையுஞ் சொல்கையிலே . விளக்கம் சீதாதேவி திருமண வயதை எய்தினாள். சீதையின் மாதாவின் மனமோ மகளின் மணக்கோலம் காண மனாட்டமானது. எனவே, கணவன் தினகரனாம் ஜனகனிடம் தம் எண்ணத்தை இதமாக எடுத்துரைத்தாள். தினகரனோ சற்று யோசித்தார். என்ன யோசிக்கிறீர்கள் என வினவினாள் மனைவி. . . அகிலம் ======= வில்லை வளைத்தல்லவோ மெல்லிமணஞ் சூடுவது வல்ல கலைக்கோட்டு மாமுனியைத் தான்வருத்தி இன்னபடி யீதென்று எடுத்துரைக்க மாமுனியும் அன்னப் பொழுதில் அருளுவான் மாமுனியும் பூரா சமான புவியைம்பத் தாறிலுள்ள இராசாதி ராசரெல்லாம் இப்போ வரவழைத்து வில்லை வளைத்தவர்க்கு மெல்லிமணஞ் சூட்டுமென்று சொல்லியே மாமுனியும் தசரதனார் கண்மணியைக் கண்டுநின்று மாமுனியும் கண்ணனார்க் கேதுரைப்பான் பண்டு உனக்குப் பரம சிவனாரும் வில்வளைத்து மாலையிட விதியில் விதித்திருக்குச் செல்லந்த மன்னன் தினகரானர் தன்மகட்கு இன்று கலியாணம் இப்போது அங்குசென்றால் பண்டு அமைத்த பலனுனக்குக் கிட்டுமிப்போ என்று கலைக்கோட்டு மாமுனியுந் தானேகி சென்றான் தினகரரின் செல்வி மணந்தனிலே . விளக்கம் ========== மனைவியின் வினாவிற்கு, வில்லை வளைத்தவருக்கல்லவா நம்முடைய மகளை மணமுடித்துக் கொடுக்கவேண்டும் என்று விடையளித்த தினகரன், உடனே கலைக்கோட்டு மாமுனிவரை அங்கு வரவழைத்தான். அவருக்குத் தன்னுடைய மகள் மற்றும் வில்லின் விவரங்களை எடுத்துக்கூறி இதற்கு என்ன உபாயம் செய்ய வேண்டும் என வேண்டினார். . அதைக் கேட்ட கலைக்கோட்டு மாமுனிவர், தினகரனாகிய ஜனக மகாராசனைப் பார்த்து, மன்னா இந்த மண்ணுலகில் காலங்காலமாக அரசர்களையும் இங்கே வரவழைத்து அவர்களிடம் என் மகளோடு பிறந்த இந்த வில்லை, எந்த மாமன்னன் வளைக்கிறாரோ அவருக்கு என் மகளை மணமுடித்துத் தருகிறேன் என்று அறிவித்துவிடுங்கள். தங்களின் அறிவிப்பின்படி யார் அந்த வில்லை எடுத்து வளைக்கிறாரோ அவருக்கே உங்கள் மகளை மணமுடித்துக் கொடுத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்றார். . அவர் செல்லும் வழியில், ராமபிரானை போய் சந்தித்தார். மாமுனிவரின் வருகையால் மகிழ்ந்த ராமரிடத்தில் கலைக்கோட்டு மாமுனிவர் ராமா உனக்கு ஒரு வில்லை வளைப்பதின் மூலமே திருமணம் நடைபெறவேண்டுமென்று பரமசிவனார் விதிப்பயனை விதித்துள்ளார். . அதற்கேற்ப இப்போது தினகரன் என்னும் ஜனகராஜனின் மகளுக்குத் திருமண ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கே இப்பொழுது நீ சென்றால் உடனே உன் விதிப்பயன் நிறைவேறும் என்று சொல்லிவிட்டுச் சென்றார். . . அகிலம் ======== அன்றைம் பத்தாறு அரசருக்கு மாளனுப்பி தேசாதி தேசர் திசைவென்ற மன்னரெல்லாம் மேசாதி யானோரும் மேவுந்தெய் வேந்திரனும் இராவண சூரன் இராமர்முத லானவரும் இராமர்குல ராசாதி நல்லமன்னர் வந்தனராம் வில்லை வளைத்து வில்லில் நாண்பூட்டாமல் முல்லைமன்ன ரெல்லாம் முகம்வாடிப் போயிருந்தார் இராம ரெடுத்து இராம சரமேற்றி சிராமர் மணஞ்செய்தார் சீதைத் திருமாதை மணம் முகித்துவானோர் மங்களகீ தத்தோடே துணைவர் தலைவரொடு சென்றா ரயோத்தியிலே . விளக்கம் ======== கலைக்கோட்டு மாமுனிவரின் ஆலோசனைப்படியே ஐம்பத்து ஆறு தேசத்திலுள்ள அரசர்களுக்கும் தினகரன் செய்தியனுப்பினார். அதற்கிணங்கி தன்னிகரில்லா மன்னர்கள் யாவரும் உயர் சாதியாகிய உத்தம தர்மவான்களும் தெய்வேந்திரனும், இராவணனும், இராமகுலமாகிய வானவர்களும் வருகை தந்து அமர்ந்தார்கள். . சபை நடுவே வைக்கப்பட்டிருந்த வில்லில் வீராதி வீர்ர்களான தேசாதி தேசமன்னர்களெல்லாம் நாண் ஏற்ற முயன்றார்கள். வில்லை நகர்த்தவே முடியாமல் நாணி நின்றார்கள். அதிலே சிலர் வில்லை எடுத்தார்கள். வளைத்து நாண் ஏற்ற முடியாமல் முகவாட்டமானார்கள். அத்தகையோரின் வரிசையில் இராவணனும் ஒருவன் என்பது குறிப்படத்தக்கதாகும். . இத்தகைய நிலையிலான வில்லை எடுத்தார் இராமபிரான். தொடுத்தார் சரத்தை, வில்லை இராமபிரான் வளைத்தபோது வேல்வழியாள் சீதையின் மனமும் இராமர்பால் வளைந்தது செல்வன் அந்த இராமன் சீதையை மணம் முகித்தார். . மங்கள கீதங்கள் முழங்க வானோர் மனமகிழ, மணமுகித்த சீதைத் திருமாதைக் கரம்பிடித்த களிப்போடு இராமபிரான் தன் பெற்றோர்களோடும் தம்பியர்களோடும் ஏனைய அரச பாரம்பரியம் பரிவாரங்களோடும் அயோத்தியாபுரியை வந்தடைந்தார். . . தொடரும்… அய்யா உண்டு. #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர்
36 likes
1 comment 40 shares
D Muthu Prakash, Kanchipuram 💐
1K views 23 days ago
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை-1ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 18.10.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======= கிரேதா யுகம் தொடர்ச்சி ==================== . . அகிலம். ====== என்றேதான் தூதன் இவையுரைக்கச் சூரனுந்தான் அன்றே மனது அளறித்துணிந் தேதுரைப்பான் ஆனா லறிவோம் ஆண்டி தனையுமிங்கே போனா லென்னோடே போருசெய்ய யேவிடுநீ சூர னிவையுரைக்கச் சூலாயுதப் பெருமாள் தூதன் மிகநடந்து சொன்னான் சுவாமியர்க்கு . விளக்கம் ====== தூதுவனாக எந்த வீரவாகு தேவரின் உறுதி வாய்ந்த வார்த்தைகள், சூதுமதி கொண்ட சூரபத்மனின் மனதை உலைக்களமாக்கிற்று என்றாலும் திடப்படுத்திக் கொண்டவனாய், வீரவாகுதேவரைப் பார்த்து, என்னைக் கொன்று தீர்த்துவிட்டு இந்த உலகத்தையே அந்த ஆண்டி ஆளப்போகிறானா? அதையும் தான் பார்ப்போம். . இப்போது நீ அந்த ஆண்டியிடம் சென்றால்தான், அவனை என்னொடு போரிடுவதற்கு நீ ஏவி விடுவாய். உடனே ஓடிப்போ ஏவி விடு அந்த ஆண்டியை என்று முழக்கமிட்டான். வேலாயுதப் பெருமானின் விவேகமிக்கத் தூதுவனோ அங்கிருந்து விரைந்து வந்து. எல்லாச் செய்திகளையும் கந்தபிரானிடம் எடுத்துரைத்தார். . . கந்தபிரான் சூரனை வதைக்கப் புறப்படுதல். =================================== அகிலம் ======= சுவாமி மனமகிழ்ந்து சூரன் தனையறுக்கக் காமிவே லாயுதத்தைக் கையிலெடுத்தா ரம்மானை வேலா யுதமெடுத்து வேதப் படைசூழ சூலாயுதப் பெருமாள் துடியாய் நடக்கலுற்றார் கந்தனார் வேசம் கரந்திருந்த மாயவனார் வந்தார்காண் சூரன் வலுவிழந்தா னம்மானை . விளக்கம் ======== தூதுவனின் சொற்கேட்ட வேலாயுதனார் வெற்றிக் களிப்படைந்தார். சூரனை சம்காரம் செய்தேயாக வேண்டுமென முடிவெடுத்தார். வேதப்படைகளை அணிவகுக்கச் செய்தார். சக்தியாகிய வேலாயுதத்தைக் கையிலே எடுத்துக் கொண்டு வீறுநடை நடந்தார். அழகுத் திருவேசம் கலந்திருந்த மாயப்பெருமாளாம் மகாவிஷ்ணுவின் வருகையால் சூரபத்மன் வலுவிழந்தான். . . அகிலம் ======== சூர னவன்கண்டு தோசப் படையணிந்து மூரன் படைக்கு முன்னே நடக்கலுற்றான் கண்டா ரீராறு கரத்தோ னகமகிழ்ந்து பண்டார வேசம்பண்பா யெடுத்திறுக்கி முன்னே வருஞ்சூரன் முகத்தை யவர்பார்த்துப் பின்னே சுவாமி புத்தி மிகவுரைப்பார் . விளக்கம் ========= மாயனின் வருகையால் மனம் புழுங்கிய சூரன் தன்னுடைய குதர்க்கமான படைகளைப் போருக்கு ஆயத்தமாக்கிக் கொண்டு அந்தக் குற்றப்படைக்கு முன்னிலை வகித்து வந்தான். படை நடத்தி வரும் சூரபத்மனை பன்னிரு கரத்தோனாகிய மாயோன் கண்டு அகமகிழ்ந்தார். தன்னுடைய பண்டார வேசத்தை அதாவது உலகம் யாவுமே தம் உடைமை என்ற நிலைப்பாட்டை இதமாக எதிரே நிற்கும் சூரனுக்கு எடுத்துக் காட்டியவாறு சூரனின் முகத்தைப் பார்த்து சூரனுக்கு அறிவுரை வழங்க ஆயுத்தமானார். . . சூரபத்மனுக்குப் போர்க்களத்தில் புத்திமதி ========================================= அகிலம் ======== . வம்பி லிறவாதே வாழ்விழந்து போகாதே தம்பி தலைவன் தளமு மிழவாதே பற்பக் கிரீடப் பவுசு மிழவாதே அற்ப மிந்தவாழ்வு அநியாயம் விட்டுவிடு கரணமீ தில்லாமல் கௌவையற்று வாழ்ந்திருந்து மரணம் வந்துசீவன் மாண்டுபோ கும்போது நன்மை யதுகூட நாடுமே யல்லாது தின்மை வராது தேவரையும் விட்டுவிடு தீட்சை யுடன்புத்தி செவ்வேநே ரிட்டுவொரு மோட்ச மதுதேட முடுக்கமதை விட்டுவிடு . விளக்கம் சூரபத்மா, வீரனான நீ வீணான விபரீத புத்தியால் வம்பாக அடம் பிடித்து துஷ்டன் என்ற பெயரோடு துர்மரணம் அடையாதே. . உன்னுடைய ஆட்சி என்னும் அதிகார துர்ப்பிரயோகத்தால் உன்னுடைய வலிமை வாய்ந்த சூரப்படைகளுக்குத் தளபதியாகத் தலைமையேற்றிருக்கும் உன் தம்பியையும், படைகளையும் சேனைத் தளங்களையும் பரிதாபத்துக்குரியவனாகப் பறிகொடுத்து விடாதே. . சூரபத்மா, உன் பெயருக்குப் பொருத்தமாக உனக்கு அமைந்திருக்கும் தடாகத்துத் தாமரை மலர் போன்ற அழகு மிகு மகுடத்தையும், வளமான செழிப்பும், வலுவான சிறப்பும் பொருந்திய சொகுசான சிங்கார வாழ்வையும் சீர்குலைத்து விடாதே. . இந்த உலகத்தில் நாம் என்றென்றும் நிரந்தரமாக இருக்கப் போகிறோம் என்ற தவறான எண்ணத்தினால் ஈடழிந்து போகாதே. நிலவுலக வாழ்க்கை என்பது நீர்க் குமிழி போன்றது. நிலையில்லாதது. .. குறுகிய கால அளவைப் கொண்ட வாழ்க்கையானது சில சமயங்களில் வானவில் போன்று பகட்டாகத் தோன்றும். ஆனால் வானவில் நிரந்தரமாக எப்போதும் வானத்தில் இருப்பதில்லை. அதுபோல் இந்த பூவுலக வாழ்க்கையும் தோன்றி மறையும் தன்மையுடையதேயாகும். .. ஆகவே, இவற்றையெல்லாம் இதமாக உணர்ந்து வாழுகின்ற நாளில் மற்றவர்களின் மனம் குமுறும்படியான குற்றங்களையும், குதர்க்கமான நடவடிக்கைகளையும், அபாண்டமான பழி பாவங்களையும் செய்து உனக்கு நீயே படுகுழியைத் தோண்டாதே. . உனக்காக இறைவன் அருளிய காலத்தையும், அறிவையும், ஆற்றலையும் அட்டுழியங்களுக்குப் பயன்படுத்தாமல், பலருக்குப் பயன்படத்தக்க, பலரால் பாராட்டத்தக்க நற்கைங்கரியங்களுக்கு உபயோகப்படுத்தி உலகில் கவலை என்ற துன்பமற்று, நிம்மதி என்ற சுகத்தோடு வாழ்க்கையை நடத்து. . உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனுக்கும் மரணம் உண்டு. மரணம் என்பது கருவில் உருவாகும்போதே நிச்சயிக்கப்படுவதாகும். அது இறைவன் ஒருவனைத் தவிர வேறு எவருடைய பிடியிலும் இல்லை. அதிலிருந்து தப்பிக்கவோ, தள்ளிப்போடவோ, மரணம் எப்போது வரும் என்று கணக்கிடவோ யாராலும் முடியாது. . படைத்தவனால் கணிக்கப்பட்ட நேரத்தில் திணிக்கப்படுவதே மரணம். அத்தகைய இயற்கையான மரணத்தால் உயிர் பிரிந்து உடல் சடமாகும் நேரத்தில் நீ செய்த நற்செயல்கள்தான் உன்னை நாடி நிற்குமே தவிர நீ செய்த தீவினைகள் உன்னைக் காப்பாற்றாது. ஆகவே, நீ சிறைப்படுத்தி வைத்திருக்கும் விண்ணவர்களை எல்லாம் உடனே விட்டு விடு. . நான் இப்போது கூறும் இந்த வரதநியம உபதேசத்தை, உன் சிந்தையிலே ஏற்றி. நற்புத்தியோடு மண்ணோரும், விண்ணோரும் மனம் மகிழத்தக்க நற்பணிகளை நாட்டமுடன் நேர்மையாகச் செய்து, மோட்சத்தை ஈட்ட முற்படும் வகையில், உன்னுடைய ஆணவ மலத்தால் ஏற்பட்ட அகம்பாவத்தால், அதிகார துஷ்பிரயோகத்தால் அடுத்தவர்களுக்குத் துன்பம் ஏற்படுத்தும் கொடூர குணத்தை விட்டுவிடு என்று சூரபத்மனுக்குக் கந்தபிரான் உபதேசம் செய்தார். . . . அகிலம் ======= இத்தனையும் நாதன் எடுத்து மிகவுரைக்கப் புத்திகெட்டப் பாவி போர்சூர னேதுரைப்பான் இரந்து திரியுகின்ற இரப்பனுக் குள்ளபுத்திப் பரந்த புவியாளும் பாரமுடிக் காவலற்கு ஏற்குமோ ஞானம் இரப்போருக் கல்லாது ஆர்க்குமே சொல்லாதே ஆண்டிவுன் ஞாயமதை சண்டைக்கு வாவெனவே தரங்கூறித் தூதுவிட்டப் பண்டார மென்ற படைக்கார னும்நீயோ என்னுடைய சேனை எல்லாமிக அழித்து என்னையும் நாய்நரிக்கு இடுவேனென் றதும்நீயோ என்றே யச்சூரன் இயம்பி மிகநகைத்துப் பண்டார னோடே படையெடுத்தா னம்மானை . விளக்கம் ========= கந்தபிரான் உரைத்த கருத்தாழமிக்க உபதேசங்களைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த கெடுமதியாளனாகிய சூரபத்மன், கந்தபிரானைப் பார்த்துச் சொல்கிறான், கந்தா நீயோ ஒரு பிச்சைக்காரன். ஒரு பிச்சைக்காரனுக்கே இத்தனை விவேகம் இருக்கிறதென்றால் இந்த பெரும் புவியை ஆண்டுகொண்டிருக்கும் பேரசனான எனக்கு எவ்வளவு விவேகம் இருக்கும் என்பதை எள்முனையளவாவது எண்ணிப் பார்த்தாயா? . இரப்பனான உன்னுடைய தர்ம ஞாயங்களை இன்னொரு இரப்பன் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளக் கூடுமே தவிர, என்னைப் போன்றோர் யாருமே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இத்தகைய பிச்சைக்காரத் தனமான பிதற்றல்களை யாரிடத்திலும் இன்னொரு முறை சொல்லிவிடாதே. . என்னைச் சண்டைக்கு வா என்று தூது அனுப்பிய பண்டாரமாகிய பலசாலி நீதானோ? என்னுடைய படைகளையெல்லாம் கொன்று குவித்துவிட்டு, என்னையும் நாய் நரிகளுக்கு உணவாக்குவேன் என்று சூளுரைத்த வேலாயுதன் நீ தானோ? என்று சூரபத்மன் சிந்தனையற்று கந்தபிரானை நிந்தித்தான். உலகம் யாவையும் உடைமையாகக் கொண்ட கந்தனாகிய அந்த விந்தா வினோதனோடு போர் தொடுத்தான். . . அகிலம் ======= சூரன் வதை =========== சூரனுட படைகள் துண்டந்துண்ட மாய்விழவே வீரர்களும் வந்து வெட்டினா ரம்மானை வெட்டிதினால் செத்தார் மிகுசூ ரக்குலங்கள் பட்டார்க ளென்று பார்சூரன் தான்கேட்டு வந்து எதிர்த்தான்காண் மாயாண்டி தன்னோடே இன்றுவந்து வாய்த்துதென்று எம்பெருமா ளுமகிழ்ந்து வேலா யுதத்தை விறுமா பதஞ்சேவித்து மேலாம் பரனார் விமல னருளாலே எறிந்தார்காண் சூரன் இறந்தானே மண்மீதில் பறிந்தேவே லாயுதமும் பாற்கடலில் மூழ்கியதே சூரன் மடிந்து துடித்துயிர் போகுகையில் வீரமுள்ள நாதன் வீணனவன் முன்பில்வந்து சொன்ன மொழியெல்லாம் சூட்சமாய்க் கேளாமல் இந்நிலமேல் பாவி இறந்தாயே வம்பாலே நாட்டமுடன் நானுரைத்த நல்லமொழி கேளாமல் கோட்டையு முன்னுடைய குஞ்சரமுந் தோற்றாயே சந்துவிட்ட சொற்படிக்குத் தந்தரசு ஆளாமல் விந்துக் குலங்களற்று வீணாய்நீ மாண்டாயே மாளா வரங்கள் மாகோடி பெற்றோமென்று பாழாக மாண்டாயே பண்டாரங் கையாலே என்றந்த ஆதி இத்தனையுந் தான்கூற . விளக்கம் ========= அசுரப்படைகளுக்கு அரசனாகிய சூரபத்மன் போர்புரிய ஆணை பிறப்பித்ததுமே, அனைத்து அசுரர்களும் ஆயுத பாணிகளோடு களம் புகுந்தனர். கணப்பொழுதில் கந்தபிரானின் படைகளும் களம் வந்து சேர்ந்தன. இருமுனைப் படைகளும் ஒன்றோடு ஒன்று மோதின. கந்த பிரானின் படைகள் சூரபத்மனின் படைகளை வெட்டி வீழ்த்தினர். . அழிந்தது அசுரகுலம் என்ற செய்தியை அறிந்தான் சூரபத்மன். ஆறுமுகமாக ஆண்டிக்கோலத்தில் காட்சியளிக்கும் மாயோனை மாய்த்துவிட வேண்டும் என்ற மமதையோடு போர் புரியத் துணிந்தான். .. கந்தபிரானை நேரடியாக எதிர்த்துப் போர் புரிய வந்த சூரபத்மனைப் பார்த்து மனம் மகிழ்ந்த மாயோன். இதுவே நல்ல சந்தர்ப்பம் என்றெண்ணி, வேகமாக வேலாயுதத்தை எடுத்து, அந்த வேலாயுதம் என்ன செய்ய வேண்டுமோ அதற்கான உபாயத்தை அதற்குப் போதித்து, பரம்பிரம்ம நிலையாகி நின்று கொண்டு வேலாயுத்தை வீசினார். வேலாயுதம் சூரபத்மனை கூர்பார்த்துவிட்டது. எனவே சூரபத்மன் மண்ணிலே சாய்ந்தான். .. சூரபத்மனை கூர்பார்த்த வேராயுதம் அந்த வேகத்திலேயே பறந்து சென்று பாற்கடலில் மூழ்கியது. அப்போது சூரபத்மன் குற்றுயிராகக் கிடந்தான். மரண தருணத்தில் இருக்கும் அந்த மகாபாதகனின் அருகில் சென்ற கந்தபிரான், சூரபத்மா, நான் உன்னிடம் உரைத்த உபதேசங்களை உணர்வுப்பூர்வமாக உற்றுப் பார்க்காமல் அவற்றை உதாசினப்படுத்தியதால் தானே இப்போது வேரற்ற மரம்போல் இந்த மண்ணில் வீழ்ந்து மாளக்கிடக்கிறாய்? .. உன்னைத் திருத்திவிடலாம் என்ற திடமான சிந்தையோடு நான் உரைத்த கருத்தையெல்லாம் குறைத்து மதித்ததினால்தானே உன்னுடைய கோட்டை கொத்தளங்களையும், யானை, சேனைகளையும் இழக்க வேண்டியதாயிற்று. . நான் தூதுவன் மூலமாகச் சொல்லி அனுப்பியபடி சிறையில் அடைத்து வைத்திருக்கும் தேவர்களையெல்லாம் விடுவித்து விட்டு, நல்ல முறையாக நாட்டை நீ ஆண்டு இருக்கலாம். இப்படி உன்னுடைய வம்சா வழிகளை எல்லாம் பூண்டோடு ஒழித்து விட்டு வீணாக நீயும் மாண்டிருக்க வேண்டாமே? . சாகாத வரங்கள் பல கோடி பெற்றுவிட்டோமென்ற ஆங்காரத்தோடு வாது சூது செய்து வம்புரைத்த காரணத்தால், நீ இந்தப் பண்டாரத்தின் கையினால் பாழாக மாண்டு விட்டாயென்று கந்தபிரான் சூரபத்மனிடம் சொல்லி உணர்த்தினார். . . அகிலம் ======= முந்து பிறந்த முப்பிறப்புச் சூரமதால் என்னையோ கொல்ல இரப்பனோ ஏலுவது உன்னையோ கொல்ல ஒட்டுவனோ நான்துணிந்தால் வேலா யுதத்தாலே வென்றுகொன்ற தல்லாது ஏலாது வுன்னாலே இளப்பமிங்கே பேசாதே என்றானே சூரன் எம்பெருமாள் கோபமுடன் கொன்றாரே சூரனுட குறவுயிரை யம்மானை . விளக்கம் ========= கந்தபிரானின் சொற்றொடர்கள் சூரபத்மனின் சிந்தையில் பாய்ந்து சிலநொடி தேங்கி நின்றது. ஆகவே அவ்வரக்கனின் சித்தம் சற்று தெளிவடைந்தது. என்றாலும், பிறவிக்குணம் பேய்க்குக் கொடுத்தாலும் திருந்தாது என்று பாமரர்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் பழமொழியொன்று சொல்வார்களே அது போல, கந்தபிரானின் கருத்துரையால் சூரபத்மன் உண்மையை உணர்ந்த போதிலும் அவனுடைய பிறவிக்குணம் அவனுடைய நாவை ஆக்கிரமித்துக் கொண்டது. . ஆகவே, சூரபத்மன் கந்தபிரானைப் பார்த்துச் சொல்கிறான், அடே பிச்சைக்காரா பிதற்றாதே. என்னைக் கொல்வதற்கு இரப்பனாகிய உன்னால் முடியாது. நான் மட்டும் மனப்பூர்வமாக நினைத்திருந்தால் உன்னைக் கொல்லாமல் ஒருபோதும் விட்டிருக்கவே மாட்டேன். ஆனால் நீயோ, வேலாயுத்ததின் துணை கொண்டு என்னை வென்றுவிட்டாய். இத்தலத்தில் கொன்றுவிட்டாய். வேலாயுதம் மட்டும் இல்லாவிட்டால் என்னைக் கொல்ல உன்னால் ஏலாது. என்னைப் பார்த்து இன்னும் இளப்பமாகப் பேசாதே என்றான். . சூரபத்மனின் இந்தச் சூதுரை கந்தபிரானுக்குக் கடும் கோபத்தைத் தூண்டியது. எனவே, குற்றுயிராக் கிடக்கும் சூரபத்மனின் குறை உயிரையும் கந்தபிரான் கவர்ந்து கொண்டார். . அகிலம்: ======= விருத்தம் ========= சூரனைத் துணித்த சத்தி சூலமும் கடலில் மூழ்கி வீரமால் பதத்தைப் போற்றி விளம்புவாள் சத்தி மாது மூரனைச் செயிக்க முன்னே முச்சூலமாய்ச் சபித்த சாபம் தீரவே வேணு மென்று திருப்பதம் வணங்கி நின்றாள் . விளக்கம் ========= சூரபத்மனை சம்காரம் செய்த சக்தியாகிய வேலாயுதம் கடலில் நீராடிவிட்டு, திரும்பிவந்து திருமாலின் திருப்பாதங்களைத் தொட்டு வணங்கி, சூரபத்மனை கொல்வதற்காக என்னை வேலாயுதமாக்கிய தாங்கள் மீண்டும் எனக்கு பழைய நிலையை அருள வேண்டும் என்று வேண்டி நின்றது. . . தொடரும்... அய்யா உண்டு. #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008}
18 likes
1 comment 9 shares
D Muthu Prakash, Kanchipuram 💐
936 views 22 days ago
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை-1ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 19.10.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======= கிரேதா யுகம் தொடர்ச்சி ========================== . . அகிலம் வேலாயுதம் மீண்டும் சக்தியாக உருமாற்றமாகுதல் ============================== ஆதியே நாதி அனாதித் திருவுளமே சோதியே யென்னுடைய சூலசா பந்தீரும் என்று உமையாள் எடுத்து மிகவுரைக்க நன்றெனவே அந்த நாரா யணர்மகிழ்ந்து சாப மதுதீரச் சாந்தி மிகவளர்த்தார் தாபமுடன் மாயன் சாந்தி மிகவளர்க்க அம்மை உமையாளின் ஆனசாபந் தீர்ந்து செம்மையுடன் கயிலை சென்றனள்கா ணம்மானை . விளக்கம் ======== சக்தியாகிய வேலாயுதம் மகாவிஷ்ணுவின் பாதார விந்தங்களைப் பணிந்து, ஆதியே, நித்தியமாகிய நிரந்தரவஸ்துவே, முதன்மையாகிய மூலத் திருவுள்ளமே, உலகிற்கு வெளிச்சத்தை அருளுகின்ற ஒளியே, நான் வேலாயுதமாவதற்கான காரண காரியம் நிறைவேறிவிட்டதால் எனக்கே உரித்தான உருவத்தை அருளும் என்று கேட்டதும், மகாவிஷ்ணு அதற்கான தோஷ நிவாரணம் செய்தார். வேராயுதம், அம்மை உமையவளாக உருமாற்றம் பெற்று கயிலைக்குச் சென்றாள். . . அகிலம் ======== இரணியன் பாடு ================ சத்திசா பந்தீர்த்துத் தவலோக மேயனுப்பித் தத்தியாய்ச் சூரனையும் சங்காரஞ் செய்துஅந்த சூரனூர் தன்னைத் தீயோன் தனக்களித்து வீரசூ ரன்தனையும் மேலுமந் தவ்வுகத்தில் பார இரணியனாய்ப் படைத்தார்கா ணம்மானை . விளக்கம் ======== அம்மை உமையவளைக் கயிலைக்கு அனுப்பிவிட்டு, வல்லமையோடு சூரபத்மனை வதை செய்வதற்கு உதவிய, அதாவது, சூரன் ஆட்சிபுரிந்த நாட்டை இது தியோன் ஆண்ட நாடு என்ற பழியைப் போக்கி, சூரபத்மனை மீண்டும் அதே கிரேதாயுகத்தில் சகல வகையான பலமும் பொருந்திய இரணியனாகப் படைத்தார். . . அகிலம் ======== இரணியன் வதை. ================ சூர னிரணியனாய்த் தோன்றினா னவ்வுகத்தில் மாய னொருகோலம் மகவா யுருவெடுத்து வாயல் நடையில்வைத்து மாபாவிச் சூரனையும் நெஞ்சை யவர்நகத்தால் நேரேப் பிளந்துவைத்து வஞ்சக னோடே மாயன் மிகவுரைத்தார் சூர பற்பனாகத் தோன்றினா யந்நாளில் ஊரிரப்ப னாக உருவாக நான்தோன்றிக் கொன்னே னானென்று கூறினே னப்போது அந்நேரம் நீதான் ஆண்டியல்லக் கொன்னதென்றாய் வேலா யுதத்தாலே வென்றாய்நீ யல்லாது ஏலாது உன்னாலே என்றன்று பேசினையே ஆயுதங்க ளம்பு அஸ்திரம்வா ளில்லாமல் வாயிதமா யென்னகத்தால் வகிர்ந்தேனா னுன்வயிற்றை என்றுமா யனுரைக்க ஏதுரைப் பான்சூரன் . விளக்கம் ======== கிரேதாயுகத்தின் வயது முடிவடைவதற்கு முன்பே சூரசம்ஹாரம் நடைபெற்றுவிட்டதாலும், சூரபத்மன் சாகும் தருணம், சக்தியை வேலாயுதமாகக் கொண்டு தான் என்னைக் கொல்ல முடிந்ததே தவிர, அல்லாமல் என்னைக் கொல்ல ஏலாது உன்னாலே, என்று வீறாப்பு பேசியதாலும் சூரபத்மன் மீண்டும் அதே யுகத்தில் இரணியனாகப் பிறப்பிக்கப்பட்டான். . மகாவிஷ்ணுவின் ஒரு அம்சம் இரணியனுக்கு மகனாகப் பிரகலாதன் என்ற பெயரோடு பிறந்தது. அதே மகாவிஷ்ணு நரசிம்மாகவும் அவதாரமெடுத்தார். இரணியனின் அரண்மனை வாயில் நடையில் வைத்து இரணியனின் நெஞ்சைத் தன் நகத்தால் பிளந்து வைத்துக் கொண்டு இரணியனோடு நரசிம்மனாக மகாவிஷ்ணு உரையாடுகிறார். . இரணியா, இதே கிரேதாயுகத்தில், நீ சூரபத்மனாகப் பிறந்து கொலையாட்சி புரிந்தாய். அப்போது நான் பிச்சைக்காரக் கோலத்தில் தோன்றி உன்னைக் கொன்றேன். நீயோ, வேலாயுதமே என்னைக் கொன்றது உன்னால் என்னைக் கொல்ல முடியாது என்றாய். எனவே, இப்போது எவ்வித ஆயுதங்களும் இல்லாமல் என்னுடைய நகத்தால் உன்னை இரண்டாகப் பிளந்து விட்டேன்.. இப்போதாவது உன்னையும் மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணருகிறாயா என்று கேட்டார். அதற்கு, இறக்கும் தருணத்தில் இருக்கும் இரணியன் ஏறுக்கு மாறாக அன்று சூரனாகச் சொன்னது போலவே பதில் சொல்கிறான். . . அகிலம் ======== பத்து மலையைப் பாரநக மாய்ப்பதித்து இத்தலத்தி லென்னை இறக்கவைத்தா யல்லாது ஏலாது உன்னாலே இந்தமொழி பேசாதே மாலா னவேதன் மனதுகோ பம்வெகுண்டு உன்னை யின்னமிந்த உலகில் பிறவிசெய்து கொன்னா லேவிடுவேன் கிரேதா யுகம்வயது திகைந்தல்லோ போச்சு திரேதா யுகம்பிறந்தால் பகையுந் தானப்போ பார்மீதி லுண்டாகும் முப்பிறவித் துண்டம் உயிர்ப்பிறவி செய்கையிலே இப்பிறவி தன்னில் இசைந்தமொழி கேட்பேனான் என்று இரணியனை இரணசங் காரமிட்டு அன்று கிரேதா யுகமழித்தா ரம்மானை அந்தக் கிரேதா யுகமழித்த அந்நாளில் கந்தத் திருவேசம் கலந்திருந்த மாயவனார் செந்தூர்ப் பதியில் சேர்ந்திருந்தா ரம்மானை . விளக்கம் ======== பத்து பெரிய மலைகளை உன் விரல்களின் நகமாகப் பதித்து வைத்துக்கொண்டு இந்த இடத்தில் என்னைக் கொன்றுவிட்டாய். இந்த நகங்கள் இல்லையென்றால் உன்னால் என்னைக் கொல்ல ஏலாது. வீணாக இரணியனைக் கொன்றுவிட்டதாக நினைத்து மகிழாதே என்றான் இரணியன். . இரணியனின் இந்த குதர்க்கமான கூற்று மகாவிஷ்ணுவுக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது. என்றாலும் சொல்கிறார், இரணியா, இன்னும் ஒரு முறை இதே யுகத்தில் உன்னைப் பிறப்பித்து உனக்குமேல் ஒரு சக்தி இருப்பதாக உனக்கு உணர வைத்து உன்னைக் கொன்றிருப்பேன். ஆனால் கிரேதாயுகத்தின் வயது முடிந்துவிட்டது. . அடுத்து திரேதாயுகம் பிறக்கப் போகிறது. அதில் குறோணியின் உடலில் உள்ள நான்காவது துண்டத்தல் வழக்கம்போல் உன் உயிரை இணைத்து பிறப்பித்து, உன்னைக் கொல்லுவேனே அப்போது, இப்பிறவியில் நீ மரண வாக்கு மூலமாக மொழிந்த இந்த வார்த்தைகளை அன்றுனக்கு நினைவுபடுத்துவேன் என்று சொல்லி இரணியன் உயிரைக் கவர்ந்து அத்துடன் கிரேதாயுகத்தை நிறைவு செய்தார். . கிரேதாயுகம் நிறைவு பெற்றதும், ஆறுமுகனாக வடிவெடுத்திருந்த மகாவிஷ்ணு திருச்செந்தூர் பதியில் பள்ளி கொண்டார். . . கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை 1ஆம் நாள் வாசிப்பு நிறைவு பெற்றது. அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩
8 likes
1 comment 13 shares
D Muthu Prakash, Kanchipuram 💐
850 views 8 days ago
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை 2ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 02.11.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== திரேதா யுகம் தொடர்ச்சி =========================== மாண்டாய்நீ யென்று வசைகூறக் கேட்டரக்கன் ஏண்டா மழுப்புகிறாய் இராமனோ கொல்லுவது தம்பி யெனப்பிறந்து சத்துருப்போல் தான்சமைந்து என்பெலங்க ளெல்லாம் எடுத்துரைத்தா னுன்றனுக்கு ஆனதா லென்னுயிரு அடையாளம் பார்த்துலக்காய் ஊனமுற எய்தாய் உயிரழிந்தே னல்லாது நீயோடா என்பெலங்கள் நிலைபார்த்துக் கொல்லுவது பேயா நீபோடா புலம்பாதே யென்னிடத்தில் . விளக்கம் ========== இராமபிரானின் உரைகளை இகழ்ச்சியுரையாக உணர்ந்த இராவணனோ, இராமபிரானை சினத்தோடு சீறுகிறான். இராமா, ஏண்டா உண்மைக்குப் புறம்பாக உளறுகிறாய். என்னை நீ கொன்றாயா? அது எப்படியடா உன்னால் முடியும். என்னுடன் பிறந்த தம்பி விபீஷணன் எனக்கு எமனாக உருவெடுத்து, என்னுடைய உற்ற பலம் அத்தனையும் உன்னிடத்தில் உரைத்துவிட்டான். . ஆகவேதான் என்னுடைய இயல்புகளை உற்று நோக்கி இலக்கு வைத்து அம்பை ஈனத்தனமாக எய்துவிட்டாய். எனவேதான் உயிர் இழந்தேன். அல்லாமல் என்னுடைய உயிர் நிலையை உன்னால் ஒரு போதும் அறிய முடியாது. பேயா, நீ போடா இன்னும் இதுபோல் என்னிடம் புலம்பிக் கொண்டிருக்காதே என்றான் இராவணன். . . அகிலம் ======== அப்போது மாயன் அதிகசீற் றத்துடனே ஒப்பொன் றில்லாதார் உரைப்பார்கா ணம்மானை உன்னுட தம்பி யாலே உயிர்நிலை யறிந்து யானும் என்னுட சரத்தால் கொன்றேன் என்றியம்பிய அரக்கா வுன்னைப் பின்னுகப் பிறப்பு தன்னில் பிறப்புநூ றோடுங் கூடி அன்னுகந் தன்னில் தோன்ற அருளுவே னுன்னை நானே . விளக்கம் ========= உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையிலும், உண்மை நிலையை உணர்த்தியும் உணராத அந்த அரக்கனின் அகம்பாவமான பேச்சு, அச்சுதனாகிய இராமபிரானுக்கு அளவில் அடக்காத ஆத்திரத்தை ஏற்படுத்தியது. என்றாலும், ஒப்பிலடங்காத அந்த உத்தமபிரான், உருக்குலைந்து கிடக்கும் இராவணனைப் பார்த்துச் சொல்லுகிறார். . இராவணா, உன்னுடைய தம்பியாகிய விபீஷணனின் உதவியினால்தான் நான் உன்னுடைய உயிர் நிலையை அறிந்து உன்னைக் கொன்றுவிட்டேன் என்று சொல்லிவிட்டாய். . ஒவ்வொருவருக்கும் வாழ்வு முடியும் வேளையில் ஏற்படும் எண்ணத்திற்கேற்பவே அடுத்த பிறப்பு அமைக்கப்படுகிறது. அதுபோல்தான் உன்னுடைய முன் பிறப்புகளும் அமைக்கப்பட்டன. . எனவே, அடுத்து வரபோகும் துவாபர யுகத்தில் இந்த ஒரு தம்பிக்குப் பதில் 99 தம்பிகளோடும் உன்னையும் பிறவி செய்வோம் என்றார். . . அகிலம் ======== என்னொரு தம்பி யாலே என்னையுங் கொன்றா யென்று தன்னொரு மதத்தால் நீயும் சாற்றிய அரக்கா வுன்னைப் பின்னொரு யுகத்தில் நூறு பிறப்புடன் பிறவி செய்து இன்னொரு ஆளின் கையால் இறந்திடச் செய்வே னுன்னை . விளக்கம் ========= என்னுடைய தம்பிகளில் ஒருவனான விபீஷணனின் உதவியோடுதான் என்னை நீ கொல்ல முடிந்தது என்று என்னிடம் ஆணவத்தோடு கூறுகின்ற அரக்கனாகிய இராவணா ! உன்னை அடுத்து வர இருக்கும் துவாபர யுகத்தில் 99 தம்பிகளுடனும், ஒரு தங்கையுடனும் பிறவி செய்து, இன்னொருவரின் கையினால் உன்னை நான் சாகடிக்கிறேன் . . அகிலம் ======= என்னுடைய தம்பி யாலேதா னென்னுயிரை உன்னுடைய அம்பால் உயிரழிந்தே னல்லாது என்னைநீ கொல்ல ஏலாது என்றுரைத்தாய் உன்னை நானிப்போ ஒருபிறவி செய்யுகிறேன் என்றுசொல்லி மாயன் எண்ணவொண்ணாக் கோபமுடன் அன்று கயிலை அரனிடத்தில் சென்றிருந்து முன்னேயுள்ள துண்டம் ஓரிரண்டு உள்ளதிலே ஒன்னேயொரு துண்டம் ஒருநூறு பங்குவைத்துத் துவாபர யுகம்வகுத்துத் துரியோதன னெனவே கிரேதா யுகமழித்துக் கீழுலகில் தோணவைத்தார் . விளக்கம் ========= தன்னுடைய தம்பியை ஆதாரமாக வைத்துக் கொண்டு தான், தன்னைக் கொல்ல முடிந்தது என்று வீராப்புப் பேசிய இராவணன் மீது எல்லையில்லாக் கோபம்கொண்ட இராமபிரான், அந்த திருதாயுகம் நிறைவு பெற்றதும் சிவபெருமான் வீற்றிருக்கும் கைலேங்கிரிக்குச் சென்று, குறோணியை அன்று துண்டித்த ஆறு துண்டுகிளல் இன்னும் மிஞ்சியிருக்கம் இரண்டு துண்டுகிளல் ஒன்றை எடுத்து நூறு கூறுகளாக்கி, துரியோதனனையும் அவனுடன் நூறு சகோதரர்களையும், தோன்றவிருக்கும் துவாபர யுகத்தில் பிறவி செய்ய வேண்டும் என்று ஈசனிடத்தில் எடுத்துரைத்தார். அந்தக் கோரிக்கையின் படியே அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த திரேதாயுகத்தை நிறைவு செய்தனர். . . தொடரும்… அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar
11 likes
1 comment 13 shares