அய்யா வைகுண்டர் {1008}
4K Posts • 2M views
D Muthu Prakash, Kanchipuram 💐
1K views 14 days ago
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர், வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை அம்மானை 17ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 12.09.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் -------------- நடுத்தீர்ப்பு தொடர்ச்சி ------------------------------------------ மாலும்நா னப்போ மகாகோப மாய்வெகுண்டு சுட்டிப் பயலே சுணைவந்து தில்லையென்று மட்டிப் பயலே மாறிப்பின் னேதுரைத்தேன் . விளக்கம் ---------------- திருமாலாகிய நான் மிகுந்த கோபம் கொண்டு உன்னை நோக்கி, சுட்டிப் பயலே, உனக்கு இப்பொழுதும் சிறிதுகூட உணர்வு வரவில்லையே என்று சொல்லி விட்டு மீண்டும் உன்னை நோக்கி கூறலானேன். . . அகிலம் -------------- உன்றனுட தம்பி ஒருவன்மிக வந்தெனக்கு சிந்தையுற்ற உன்பெலங்கள் தெரியப் படுத்தியல்லோ கொன்றாய்நீ யென்று கூறினா யின்னமுனை இன்னம் பிறவி ஏற்றதுரி யோதனனாய் துவாபர யுகத்தில் தோன்ற உனையருளிப் . விளக்கம் ----------------- உன் தம்பி ஒருவன் என்னிடம் வந்து உன் உயிர் நிலை பற்றி தெரியப் படுத்திய காரணத்தால்தான் நான் உன்னைக் கொல்ல முடிந்ததாக நீ சொன்ன காரணத்தால், இனி உன்னைத் துவாபரயுகத்தில், தோன்ற செய்தேன். . . அகிலம் -------------- பவரா யுனக்குப் பக்கத் துணையாக ஒருநூறு பேராய் உலகில்மிக நீதோன்றி இருபேர்க்கும் நான்பொதுவாய் இருந்து வுனைவதைத்து இன்றுரைத்தப் பேச்சு யானன்று கேட்பேனென . விளக்கம் ---------------- உன் சகோதர்களோடு உன்னையும் சேர்த்து நூறு பேராகவும், இன்னும் கிளைகளும் உலகில் தோன்றச் செய்து கௌரவராகிய உங்களுக்கும், பஞ்சவர்க்கும் நான் பொதுவாய் இருந்து உன்னை அழியச் செய்து, இன்று நீ உரைத்த பேச்சுகளை அன்று உன்னிடம் கேட்பேன் என்று கூறினேன். . . அகிலம் ------------- அன்று உனதுடைய அன்னசுற்றம் வேரறுத்து உன்னுயி ரைமழித்து உற்றயுக முமழித்து என்னுடைய லட்சுமியை யான்மீட்டு என்னுள்வைத்து உற்ற திரேதா யுகமழித் துன்றனையும் சுத்ததுவா பரயுகத்தை தொல்புவியில் தோணவைத்தேன் . விளக்கம் ---------------- அன்று உன்னுடைய சுற்றத்தோடு உன் உயிரையும் அழித்து, அப்போதுள்ள யுகத்தையும் அழித்து என் இலட்சுமியை நான் மீட்டு, சுத்தத் துவாபரயுகத்தைப் பழமையான பூமியில் தோன்ற வைத்தேன். . . அகிலம் --------------- பிறந்தாய்ப் புவியில் பிறப்பொரு நூறுங்கூட அறந்தான் பெரிய ஐவர்களு மங்குதித்தார் அப்படியே நீபிறந்து ஆளுகின்ற நாளையிலே முப்படியே நானும் உகத்தில்கோ பாலனெனப் பாலனென வுதித்து பாண்டவர்க ளோடிருந்து தூலமொன்று வீமனுக்குச் சொல்லியுனைச் சங்கரித்தேன் . விளக்கம் ---------------- பிறகு நீ அந்த யுகத்தில் நூறுபேரோடு ஒருவனாய்ப் பிறந்தாய். தருமத்தைப் பெரிதாக நினைத்து வாழும் ஐவர் பஞ்ச பாண்டவர்களும் அங்குத் தோன்றினர். இப்படியாக நீ அங்குத் தோன்றி ஆட்சி புரிந்து வருகின்ற சமயத்தில் முன் வினைப்படியே நான் அந்த யுகத்தில் கோபாலன் என்னும் பெயரோடு குழந்தையாகத் தோன்றினேன். பஞ்சபாண்டவர்களோடு நானும் கூடி இருந்து, வீமனுக்கு இரகசியமான ஒரு சூட்சுமம் ஒன்றைச் சொல்லிக் கொடுத்து உன்னை அழியச் செய்தேன். . . அகிலம் ------------- சங்கரித்து உன்னைச் சகுனி யிழுக்கையிலே பங்கமாய் முன்னுரைத்த பாங்கு மிகக்கேட்டேன் அப்போது நீயும் அகமகிழ்ந்து கொள்ளாமல் இப்போது வீமன் எனைக்கொன்றா னல்லாது ஏலுமோ போடா இடையா எனவுரைத்தாய் . விளக்கம் ---------------- உன்னை இவ்வாறு அழிக்கும்போது, உன்னைச் சகுனியானவன் போர்க் களத்திலிருந்து இழுத்துச் சென்றான். அப்போது மிகவும் இதமாக முன்பு உரைத்த வாக்குகளைப் பற்றி உன்னிடம் கேட்டேன். நீ மனம் மகிழ்ந்து கொள்ளாமல் என்னை நோக்கி, போடா இடையனே, இப்பொழுது என்னை வீமன்தான் கொன்றானே அல்லாமல் உன்னால் என்னைக் கொல்லுவதற்கு முடியுமோ? என்று வினவினாய். . . அகிலம் ------------- மேலும்வந் தயுகத்தில் மேட்டிமையா யுன்னையிப்போ தன்னால் பிறக்கவைத்து தன்னா ழிவையென்று சொன்னே னானுன்னைச் சொன்ன மொழிப்படியே உன்னால் குதித்து உற்ற கலியனென இந்நாள் வரைக்கும் இருந்தாயே பார்மீதில் . விளக்கம் ---------------- எனவே அந்த யுகத்தில் அகந்தையாகப் பேசிய உன்னிடம் கலியுகத்தில் தன்னாலே தான் பிறந்து தன்னாலே தன் அழிவைத் தானே தேடிக் கொள்வாய் என்று சொன்னேன். அந்த வாக்குப்படியே உன்னால் நீயே உதித்து எழுந்து, இந்தக் கலியுகத்தில் கலியன் எனப் பிறந்தாய். இந்த நாள்வரைக்கும் இந்தக் கலியுகத்தில் வாழ்ந்து வந்தாய். . . அகிலம் ------------- பார்மீதில் நானும் பரதேசிப் போலிருந்து போரேது மில்லாமல் பொறுதி யுடனிருக்கக் கர்ம வயசுனக்குக் காலஞ் சரியாகி வர்மம்வந்து மூடி மாண்டாயே தன்னாலே . விளக்கம் ----------------- கலியுகத்தில் நான் ஏழைப்பரதேசியைப் போல் இருந்து கொண்டு எந்தவிதப் போரும் செய்யாமல் பொறுமையுடன் இருந்தேன். நீ செய்த வினைகளுக்கு எல்லாம் சரியான நேரம் வந்ததும், பழிகள் எல்லாம் உன்னைச் சூழ்ந்து உன் கிளைகள் எல்லாம் இறந்து நீயும் உன்னாலே அழிகிறாய். . . அகிலம் ------------- கலி முடிவு --------------------- முன்னுனக்குத் தந்த முடியு மென்சக்கரமும் மன்னுகந்த நல்ல வரங்கள்மிகத் தத்துவமும் எல்லாம் நீயிப்போ என்முன் னெடுத்துவைத்துப் பொல்லாத வனேநகரம் புக்கிடுநீ யென்றனராம் . விளக்கம் ---------------- முன்பு உனக்கு நான் தந்த முடியையும், என் (பணமாக ஆக்கப்பட்ட) சக்கரத்தையும், சிறந்த வரங்கள் எல்லாவற்றையும் இப்போது என் முன்பாக எடுத்து வைத்து விடு, பொல்லாதவனே, பிறகு நீ நரகம் சென்று விடு என்று தீர்ப்பு சொன்னார். . . தொடரும்.... அய்யா உண்டு. #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர்
22 likes
1 comment 18 shares
D Muthu Prakash, Kanchipuram 💐
736 views 7 days ago
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர், வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை அம்மானை 17ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 19.09.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் -------------- பட்டாபிஷேகம் --------------------------- இப்படியே யாமம் எல்லாம் நிறைவேற்றி முப்பத்தி ரண்டறத்தால் முகித்தசிங் காசனத்தில் செப்பொத்த மாணாக்கர் சேவிக்க இருபுறமும் ஒப்பற்ற பொற்பதிக்குள் உயர்ந்தசிங் காசனத்தில் மறுமஞ்ஞ ரெதிரி வையகத்தி லில்லாமல் விறுமஞ்ஞ ரான வெற்றிவை குண்டருமே . விளக்கம் ----------------- இப்படியாக வைகுண்டராக இருந்தபோது இட்ட எல்லாச் சாபமும் முடிவடைந்தன. மறுபடியும் தொடர்ந்து உருவாகும் மேகத்தைப் போன்ற வலி மிக்க எதிரிகள் உலகில் இல்லாத வண்ணம் முப்பத்திரண்டு அறங்களினால் ஆன சிங்காசனத்தில் அமர்ந்து வலிமை பொருந்திய வெற்றியையுடைய வைகுண்டமாமணி ஆனார். . . அகிலம் ------------- சிங்கா சனமிருந்து தெய்வச்செங் கோல்நடத்தி பொங்கா ரமான புவிதர்ம ராச்சியத்தில் ஆளுவா ரென்ற ஆகம நூற்படியே ஏழுபெண் மக்கள் இனமொன்றாய்த் தான்கூடி வாழவே ணுமெனவே வாய்த்தசிங் காசனத்தில் ஆளவை குண்டர் அவரிருந்தார் பொன்மாதே . விளக்கம் ---------------- அவர் முப்பத்திரண்டு அறங்களினால் உருவாக்கி முடித்த சிங்காசனத்தில் அமர்ந்து தெய்வச் செங்கோல் நடத்தி எல்லா நல்லவையும் பொங்கி வருகின்ற தருமபூமியை ஆளுவார் என்னும் முன் ஆகம நூலின்படி ஏழு தெய்வக் கன்னிமாருடைய சான்றோர் மக்களும் ஒரே இனமாக்க் கூடி இருந்து வாழ வேண்டும் என்று நினைத்து ஆட்சி புரிய மேன்மையான அந்தச் சிம்மாசனத்தின் மேல் வைகுண்ட மாமணி அமர்ந்தார். . . அகிலம் -------------- அய்யா அருள்வாக்கு -------------------------------------- ஆதியாம் வைந்த ராசர் அருள்செங்கோ லேந்தித் தர்ம சோதியி னொளிபோல் ரத்தினந் துலங்கிய முடியுஞ் சூடி நீதிபோல் தர்ம ஞாய நெறிபுரிந் தரசே யாள சாதியா முயர்ந்த சான்றோர் தம்மையே வருத்திச் சொல்வார் . விளக்கம் ---------------- எல்லாவற்றுக்கும் ஆதியாகிய வைகுண்ட அரசர் அருள் பொருந்திய செங்கோலை ஏந்திக் கொண்டு தரும சோதியின் ஒளி போன்ற இரத்தினங்கள் பொருந்திய திருமுடியைத் தலையில் சூடியவண்ணம், உயர்வு பொருந்திய நீதியைப் போன்ற தரும நியாயநெறியை நிலை நாட்டி அரசாட்சி புரிந்து வந்தார். அப்போது சாதியில் உயர்ந்த சான்றோர் சாதியினரை வரவழைத்து வைகுண்டர் அவர்களுக்கு ஞானமொழி உபதேசிக்க ஆரம்பித்தார். . . அகிலம் ------------- மக்களே நீங்க ளெல்லாம் வாழ்பொன்னம் பதியிற் சென்று முக்கிய மான தர்ம யுகநில மதிலே தன்னால் கக்கிய பொன்கள் சொர்ணம் கைமனங் குளிர அன்னம் பொக்கிஷம் நிறைய வைத்துப் புகழவுண் டினிதாய் வாழ்வீர் . விளக்கம் ---------------- என் அருமை மக்களே, நீஙய்கள் எல்லோரும் நிலைத்த வாழ்வையுடைய பொன்னம்பதியை அடைந்து மேன்மையான தருமயுகப் பூமியில் வெளிப்படும் பொன்னையும், சொர்ணத்தையும் இன்னும் பல பொக்கிசங்களையும் கைகுளிரவும், மனங்குளிரவும் சேமித்து, அனுபவித்து எல்லாரும் புகழும்படியாக இனிய முறையில் அன்னமாகிய அமது உண்டு வாழ்வீராக. . . அகிலம் ------------- வாழுவீர் தாழ்வில் லாமல் மக்களுங் கிளைகள் கொஞ்சி நாளுமே மகிழ்ச்சை கூர்ந்து நலமுடன் வாழும் போது நீளுமே யெனது செங்கோல் நீதியும் நெறிபோல் வந்து ஆளுமே யுங்கள் தம்மை அன்புட னலையா வண்ணம் . விளக்கம் --------------- எந்தவித்த் தாழ்வும் இல்லாமல் உங்கள் மக்களோடும் அவர்கள் கிளைகளோடும் என்றென்னும் மகிழ்ச்சியடைந்து கொஞ்சிக் குலாவி நலமுடன் வாழ்ந்து வாருங்கள். இவ்வாறு வாழுகின்றபொழுது உங்களுடைய மனம் வருந்தி அலையாவண்ணம் உங்கள் நீதியும் நல்ல ஒழுக்கமும் உடையவராகச் செயல்படுத்த நான் செங்கோல் ஆட்சி புரிவேன். . . தொடரும்.... அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar
14 likes
1 comment 12 shares
D Muthu Prakash, Kanchipuram 💐
682 views 5 days ago
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர், வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை அம்மானை 17ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 21.09.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் -------------- பாவித்து நித்தம் பரமவை குண்டரையும் சேவித்துப் போற்றி தினமேவல் செய்திடவே கன்னியர்க ளோடும் காதலாய்த் தானீன்ற மன்னதிச் சான்றோர் மக்கள் மனைவியோடும் ஆதி வைகுண்ட ஆனந்த நாரணரும் நிதியாய்த் தர்மம் நேரோர் மணிதூக்கிச் சிங்கா சனத்தில் சிவசூர்ய குடைக்குள் கங்கா தரனார் கற்பினையை யுள்ளிருத்தி ஆண்ட பரனும் ஆதி முறைப்படியே சான்றோர்கள் போற்ற தர்மபதி யாண்டிருந்தார் . விளக்கம் ---------------- பரம்பொருளான வைகுண்டமாமணிக்கு நித்தம் சிறப்பான பணிவிடைகள் செய்து அவரைப் போற்றி வந்தனர். வைகுண்டர் தம்மோடு இருக்கின்ற கன்னிகளோடும் அன்புடன் தாம் பெற்றெடுத்த உயர்வான அரசர்களாகிய சான்றோர் மக்களுடனும், மனைவி இலட்சுமியுடனும் அங்கே காட்சி அளித்தார். ஆதி வைகுண்டராகிய ஆனந்த நாராயணர், நீதி தருமத்தைப் போற்றி, நேர் எதிராக ஒரு நீதி மணியை தொங்க விட்டு சிங்காசனத்தில் சிவசூரிய குடைக்குக் கீழ் சிவனாகிய நாராயணரின் எண்ணத்தை மனதில் கொண்டு முந்தைய ஆட்சி முறைப்படியே சான்றோர்கள் போற்றி நிற்க, தருமபதியை ஆண்டு வந்தார். . . அகிலம் ------------- ஆண்டிருந் தரசு செய்ய அணிவரை போலே நீதம் பூண்டிருந் தினிது வாழ பூதல மனுவோர் வாழ கூண்டிருந் தருளாய்ச் செல்வம் குணமுடன் மகிழ்ச்சை கூர்ந்து வேண்டிருஞ் செல்வ மோங்க வேற்றுமை யில்லா வாழ்ந்தார் . விளக்கம் ---------------- இவ்வாறு தருமபூமியை வைகுண்ட மாமணி அரசாளவும், ஒழுங்காக அணி வகுத்து நிற்கும் மலைகளைப் போன்று தருமநீதம், தெய்வநீதம், மனுநீதம் ஆகிய மூன்று நீதங்களும் இனிதாக சேர்ந்து வாழ்ந்து வரவும், இப்பூமியிலுள்ள மக்கள் எல்லாரும் இனிதாக வாழவும், மக்கள் கூடி இருந்து இறை அருளாகிய செல்வத்தை மன நிறைவோடு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளவும், தேவையான செல்வங்கள் எல்லாம் சிறந்து ஓங்கும்படியாகவும் எல்லாம் பெற்று எல்லாரும் எந்தவித வேற்றுமையுமின்றி அங்கே வாழ்ந்தனர். . . அகிலம் ------------- தருமமாய்ப் புவியி லுள்ள சனங்களும் பலது செந்தும் பொறுமையாய் வாழும் போது புரந்தர வானோர் விண்ணோர் நன்மையா யவருங் கூட நாடொன்றாய் மேவி வாழ வன்மமே யில்லா வண்ணம் வைந்தரும் புவியை யாண்டார் . விளக்கம் ----------------- இப்படியாகத் தரும சிந்தனையோடு பூமியில் உள்ள மக்களும் பல சீவ செந்துக்களும் பொறுமைக் குணத்தை உடையவராகி வாழ்ந்து வருகின்ற பொழுது இந்திரனும், வானோரும் மிகுந்த நன்மைகளை அவர்களுக்குச் செய்து எல்லாரும் ஒரு நாட்டு மக்களாகி அங்கே வாழ்ந்தனர். எந்தவிதத் துன்பமும் இல்லாதவாறு வைகுண்டமாமணி தருமபூமியை ஆண்டு வந்தார். . . அகிலம் ------------- ஆண்டனர் புவிதிரி மூன்றினு மோரினம் கூண்டநற் குலமெனக் குலாவி வைந்தரும் தாண்டிய வோர்குடைத் தாங்கு குவலயம் மூன்றினு மோர்மொழி முகுந்தன் வாழ்ந்தனர் . விளக்கம் ---------------- பூலோகம், பரலோகம், பாதாளலோகம் ஆகிய மூவுலகங்களிலும் திரிகின்ற உயிரினங்கள் எல்லாம் ஒரே இனம் போன்று வாழ்ந்து வர அவர்களுடன் சேர்ந்து வைகுண்டமாமணியும் கூடிக் குலாவி ஆட்சி புரிந்து வந்தார். எல்லாவற்றையும் கடந்த பொருளான முகுந்தனான வைகுண்ட மாமணி தாம் தாங்குகின்ற மூன்று உலக மக்களையும் தமது ஒரே ஆட்சியின் கீழ் ஒரே சொல்லின் கீழ் அடக்கி ஆட்சி புரிந்து வாழ்ந்து வந்தார். . . அகிலம் ------------- பருதியு மதியெனப் பவந்து சேவனர் கருதியு முகமனும் கமழ்ந்து கைமலர் அருதியு மலர்மகள் அணிந்து பூவினர் கருதியு முறைவழி தூக்கி வாழ்ந்தனர் . விளக்கம் ---------------- சூரியனும், சந்திரனும் எல்லா இடங்களும் நிறைந்து ஒளிமயமாகச் செய்தன. பணிவிடைக்கார்கள் அருகிலிருந்து மதிப்பும், மரியாதையும் செய்து வாழ்த்துக்கள் கூறி நின்றனர். மணம் வீசும் மலர்களைக் கையில் எடுத்து மலர் மகளிரான இலட்சுமியும், சரசுவதியும் தூவினர். பூவுலகச் சான்றோர் மக்கள் வேத முறை தவறாவண்ணம் அவரைப் புகழ்ந்து பாடினர். இவ்வாறாக எல்லாரும் இன்பமுடன் வாழ்ந்து வந்தனர். . . அகிலம் -------------- பொன்முக வருளது பொதுமி யாவியே அன்முக மதிலு மமர்ந்து புகுந்திரு இன்முக மதிலு மிருந்து லாவியே பொன்முக வைந்தர் புயத்தில் வாழ்ந்தனர் . விளக்கம் ---------------- பொன் போன்ற அழகு முக வைகுண்டமாமணி மகிழ்ச்சியினால் அழுது சான்றோர்களை அணைத்து, துன்பத்தினால் முகம் சோர்ந்து இருப்பவரின் உள்ளத்திலும் இன்பத்தினால் முகம் மலர்ச்சியுடன் இருப்பவரின் உள்ளத்திலும் புகுந்து உலாவியபடி இருந்த அவரது பக்கத்தில் சான்றோர்கள் வாழ்ந்தனர். . . அகிலம் -------------- முதமுக வானவர் மூன்றென வொன்றினர் சதயித காலெனச் சமைந்து வாழ்ந்தனர் உதவென மனமு முவந்து லாவியே நிதம்நினை வளர்வறா நிரந்து வாழ்ந்தனர் . விளக்கம் ----------------- மகிழ்வுடன் வானவர்கள் வைகுண்டமாமணியை முப்பொருளானவன் என்று மனம் ஒன்றித்துத் துதித்தனர். நூற்றுக்கணக்கான வழிகளும் ஒன்றாய் அமைத்தவர் இவ்வைகுண்டர் என அவர்கள் உணர்ந்து இன்பமுடன் வாழ்ந்தனர். அதற்காக ஒருவருக்கு ஒருவர் துணை என எல்லாரும் சேர்ந்து மகிழ்ந்து உலாவி தினந்தோறும் வளரும் இறைவன் நினைவு மாறாதவண்ணம் வாழ்ந்தனர். . . தொடரும்.... அய்யா உண்டு.
9 likes
1 comment 10 shares
D Muthu Prakash, Kanchipuram 💐
773 views 10 days ago
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர், வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை அம்மானை 17ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 16.09.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் -------------- பூமகள் வாணி பொருந்திக் கலைபுரிந்து சீர்முக தர்மச் சீமையி லும்வாழ்ந்து மகிழ்ந்திரு மென்று மாய னருள்புரிந்தார் குவிந்து மலர்மகளும் கொண்டாடிக் கொண்டிருந்தாள் . விளக்கம் --------------- வெண்தாமரைப் பூவிலிருக்கும் கலைவாணியிடம் எல்லா உயிரினத்திடமும் பொருந்தி எல்லாக் கலைகளையும் கொடுத்துத் தருமபூமியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வா என்று அருள் புரிந்தார். கலைவாணியும் கைகுவித்து வணங்கி அங்கே தங்கினாள். . . அகிலம் -------------- கங்கை முதலாய்க் கனகரத்தி னாதிகளும் சங்கையுட னீங்கள் தன்னால் துலங்கிமிக வாழுவீ ரென்று வரமு மிகக்கொடுத்து என்னென்ன பாக்கியங்கள் எல்லா மிகத்தழைத்துப் பொன்னம் பலம்போல் பொருந்திமிக வாழுமென்று நல்ல வகையெவர்க்கும் நாடி மிகக்கொடுத்தார் . விளக்கம் ---------------- கங்கை முதல் உயர்வான இரத்தினங்களிடம் இனி நீங்கள் வெளியே தோன்றி ஒற்றுமையுடன் வாழ்ந்து வாருங்கள் என்று சொல்லி வரமும் கொடுத்தார். என்ன என்ன பாக்கியங்கள் உள்ளனவோ அவற்றை எல்லாம் பெற்றுத் தழைத்துப் பொன்னம்பலமாக எண்ணிக் கூடி இருந்து அன்புடன் வாழ்ந்து வாருங்கள் என்று வரம் கொடுத்தார். . . அகிலம் ------------- வைகுண்ட மாமணிக்குத் திருமுடியும் திருமணமும் ------------------------------------------------------------------------------------------------- வல்ல புவிக்கு வாழ்வுவர முங்கொடுத்து நல்ல வைகுண்டர் நாரா யணர்மகற்கு வல்ல மகற்கு வாய்த்தமுடி யுஞ்சூடிச் செல்ல கலியாணம் செய்யவே ணுமெனவே . விளக்கம் --------------- மிகவும் வல்லமையுள்ள தருமபூமிக்கு நிலைத்த வாழ்வும் வரமும் கொடுத்தார். நாராயணருடைய மகனும் குருநாதனும் ஆகிய நல்ல வைகுண்ட மாமணிக்கு உயர்வு பெற்ற திருமுடியும் பொடுத்து அருமையான திருமணம் செய்ய வேண்டும் என்று எல்லாரும் நினைத்தனர். . . அகிலம் -------------- வைகுண்ட ரான வாய்த்தகுரு நாதனுக்கு மெய்குண்ட ரான விமலக்குரு நாதனுக்கு நாதக் குருவான நாரா யணமணிக்கு சீதமங்கை மார்கள் தேவிதெய்ட கன்னியரை கன்னியரை நன்றாய்க் கலியாண மும்புரிந்து மன்ன ரவரவர்க்கும் மாலை யுடன்புரிந்து . விளக்கம் ---------------- இலட்சுமிதேவியையும் தெய்வக் கன்னிகளையும் இன்னும் பல பெண்டிர்களையும் நல்ல முறையில் கல்யாணம் முடித்து வைத்தனர். பிறகு பொன்னம்பலத்தை ஆட்சி புரிந்த சிவனுக்கும் பெரிய பொருளான திருமாலுக்கும் தன்னில் பெரியவனான பிரம்மனுக்கும், இன்னும் நாதன்மாருக்கும் நல்ல மாலை அணிவித்துத் திருமணம் முடித்தனர். . . அகிலம் -------------- பொன்னம் பலர்க்கும் பெரிய பொருளதுக்கும் தன்னம் பெரிய சதாபிரம னானவர்க்கும் நாதன்மார்க் கெல்லாம் நல்ல மணம்புரிந்து மாதவர்க ளான வாய்த்ததே வாதிகட்கும் ஆதவ நாதன் அரிகேச வன்தனக்கும் இப்படியே மங்களங்கள் எல்லோருங் கொண்டாடிச் . விளக்கம் ---------------- பிறகு மாதவர்களான தேவாதிகளுக்கும், சூரியன் தானான அரிகேசவருக்கும் இப்படியே எல்லாருக்கும் திருமணம் முடித்து வாழ்த்து மங்களங்கள் பாடினர். செம்மை வாய்ந்த மனைவியர் எல்லாரும் தத்தமது கணவருக்கு மாலை அணிவித்து ஒன்றாகச் சேர்ந்து ஒற்றமையுடன் வாழ்ந்தனர். இவ்வாறு திருமணம் புரிந்து மங்களக் காட்சி கொண்டாடினர்ஃ . . அகிலம் ------------- செப்பமுள்ள நாயகிமார் சேர்ந்தங் கொருப்போலே சரசு பதிமாது தண்டரள சுந்தரியும் விரச குழலுமையும் வீரமகா லட்சுமியும் வாய்த்த பகவதியும் வாழுகின்ற பார்வதியும் ஏற்றபுகழ் தெய்வ இளங்குழலா ரேழ்பேரும் வள்ளி தெய்வாணை வாயீசொரி யுடனே தெள்ளிமையா யுள்ளத் தேவி பராபரையும் . விளக்கம் ---------------- சரசுவதி தேவியும் குளுமையான முத்துக்களை அணிந்த சுந்தரியும், அழகும் நெருங்கிய கரிய கூந்தலுமுடைய வீர மகாஇலட்சுமியும் அழகு வாய்ந்த பகவதியும் நிலைத்து வாழுகின்ற பார்வதியும், உயர்வு பொருந்திய புகழ் பெற்ற இளமையான கூந்தலையுடைய தெய்வக்கன்னிமார் ஏழு பேரும், சக்தியும், வள்ளியும், தெய்வானை நாயகியும், அழகிய வாயையுடைய ஈஸ்வரியாளும் மிகுந்த சக்தி பொருந்தி பராபரை சக்தியும், அங்கே மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். . . தொடரும்.... அய்யா உண்டு.
12 likes
1 comment 13 shares