Failed to fetch language order
அய்யா வைகுண்டர் {1008}
4K Posts • 2M views
D Muthu Prakash, Kanchipuram 💐
1K views 1 months ago
கர்த்தாதி கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை நான்காம் நாள் வாசிப்பு தொடர்ச்சி- நாள் 17.12.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ========= பூமிதனில் வெடித்த பொல்லாத நீசனையும் சுவாமிமுன் பானதிலே சுரண்டியத னாலிழுத்து கொண்டுவந்து விட்டார் குருநாதர் முன்பதிலே கண்டுஅந்த ஈசர் கனமாய் விசேசமுற்று உன்றனக்கு வேணுமென்று உகந்ததெல்லா மிப்போது என்றனிடங் கேளென்று ஈசுரனார் தானுரைக்க உடனே யவனும் உள்ள மிகக்களித்து விடமேதான் பூண்டு விரிகந்தைத் தானுடுத்து மேலெல்லாங் குப்பை மிகப்பூசி யானையுடத் தோலி லிருப்பவனோ சொன்னதெல்லாந் தாறதுதான் என்று களிப்பாய் ஈசுரரை யந்நீசன் அன்று மொழிய அமர ரதையறிந்து பொல்லாத நீசா பொருளறிய மாட்டாமல் எல்லாரைப் போலே ஏசாதே ஈசுரரை லோகம் படைத்தவர்காண் உறுபொருளாய் நிற்பவர்காண் ஏகம் நிறைந்தவர்காண் இறவா திருப்பவர்காண் பட்சிப் பறவை பலசீவ செந்துகட்கும் நிச்சயமாய்ப் பொசிப்பு நிதமு மளிப்பவர்காண் மாயவனும் நான்முகனும் மறையு மிகக்காணாமல் தேயவா றுங்காணாத் திட்டிக்க வல்லவர்காண் . விளக்கம் ========== இரு கவளியாகிய கவை ஆயுதத்தால் கோரி எடுக்கப் பெற்ற அந்தக் கலிநீசனை, இன்னொரு ஆயுதமான கரண்டியால் இழுத்துக்கொண்டு வந்து, சிவபெருமானின் முன்னிலையில் நிறுத்தினார்கள். அந்தக் கலிநீசனைக் கண்ட சிவபெருமான், மிகவும் ஆச்சிரியத்தோடு அவனைப் பார்த்து உனக்கு என்னென்ன வேண்டுமென்று தோன்றுகிறதோ அவற்றையெல்லாம் என்னிடம் கேள் தருகிறேன் என்றார். . அதனால் அகமகிழ்ந்த நீசனோ, நல்லபாம்பின் விஷத்தை உண்டதுமல்லாமல், மிகக் கிழிந்த ஆடையை அணிந்து கொண்டு அங்கமெல்லாம் சாம்பலைப் பூசியபடி யானையின் தோலிலே அமர்ந்திருக்கும் நீ நான் கேட்பதையெல்லாம் தரப்போகிறாயா? என்று சிவபெருமானை மிக ஏளனமாகப் பார்த்துப் பரிகசித்தான். . இதைக் கவனித்த வானவர்களோ, நிலை குலைந்தவர்களாகி, நீசனைப் பார்த்து, பொல்லாதவனே, சிவபெருமானின் வல்லமைகளை அறியாமல் வாய்க்கு வந்தபடி உளறாதே. அவர் இந்த உலகத்தைப் படைத்தவர். தாம் படைத்தவைகளுக்குள்ளும் அவற்றைக் கடந்தும் இருப்பவர். இந்த உலகில் அவர் இல்லாத இடமே இல்லை. எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். என்றென்றும் இறவாதிருப்பவர். . பச்சி பறவை முதல் உலகிலுள்ள எண்பத்து நான்கு லட்சம் விதமான உயிரினங்களுக்கெல்லாம் அவ்வப்போது தேவையான உணவை கொடுத்து வாழ்வளிப்பவர். . மகாவிஷ்ணு, பிரம்மதேவன், மற்றும் நான்கு வேதங்களாலும் தேவர்களாலும் கண்டுகொள்ளமுடியாதவர். எல்லாவற்றையும் படைக்கும் இறைவனே இவர்தான் என்று வானவர்களெல்லாம் அந்தக் கலிநீசனுக்குச் சிவபெருமானின் பெருமையைப் புகட்டினார்கள். . . அகிலம் ======== இத்தனையும் நீசனுக்கு இயம்ப அமரர்களும் புத்திக்கு நட்புப் போதாமல் பின்சொல்லுவான் கலிச்சி தோற்றம் ஆனால்தான் தேவர்களே அப்படிநீ ரொப்பினீரே தானா யிருந்து சர்வமதுமுண் டாக்கிவைத்த ஆனா லெனதுடைய அளவி லளவாக மானா ரொருகுழலை வகுக்கச்சொல் பார்ப்போங்காண் என்றந்த நீசன் இழிவாகச் சொல்லிடவே அன்றந்த ஈசர் அவரறிந்து ஏதுரைப்பார் நல்லதுநீ கேட்டதுதான் நாம்படைத்துத் தாறோமென்று வல்லபர மேசுரனார் வகையே தெனப்பார்த்து உந்தனக்கு நேரே ஒத்த பலம்போலே அந்தமுடன் பிறந்தால் ஆகுமோ வென்றுரைத்தார் . விளக்கம் ========== சிவபெருமானை ஏளனமாக நினைத்து, எள்ளி நகைத்த கலிநீசனுக்கு, வானவர்களெல்லாம் சேர்ந்து, சிவபெருமானின் வானளாவிய பெருமைகளையெல்லாம் புகட்டினார்கள். ஆனால் அந்தக் கலிநீசனின் புத்திக்கு வானவர்கள் போதித்த நல்லுபதேசங்கள் எட்டவில்லை. . எனவே, அந்தக் கலிநீசன் தேவர்களைப் பார்த்துச் சொல்லுகிறான். தேவர்களே ! இந்த சிவபெருமானின் பெருமைகளைச் சிறப்பாகச்சொன்னீர்கள். நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருந்தால், அதாவது இவரே சர்வதையும் படைத்தது உண்மையானால், எனக்குப் பொருத்தமான அளவும் அழகும் உடையதோர் பெண்ணை உருவாக்கித் தரச்சொல்லுங்கள் பார்ப்போம் என்று அந்தக் கலிநீசன், சிவபெருமானை மிகவும் இழிவாக நினைத்துச் சொன்னான். . கலிநீசன் தம்மை மிகவும் தரக்குறைவாக நினைக்கிறான் என்பதை உணர்ந்த சிவபெருமான், கலிநீசனைப் பார்த்துச் சொல்லுகிறார். நீ கேட்டது மிக நல்லது. உன் விருப்பப்படியான ஒரு பெண்ணை யாம் படைத்துத் தருகிறோம் என்று சொல்லிவிட்டு, அதற்கான உபாயத்தை ஒரு கணம் சிந்தித்த சிவபெருமான், மீண்டும் கலிநீசனைப் பார்த்து உனக்கு உண்டான பலத்திற்கு ஈடான ஒரு பெண்ணைப் பிறவி செய்து தந்தால் போதுமா என்று கலிநீசனிடம் சிவபெருமான் கேட்டார். . . அகிலம் ======== அப்போது நீசன் அரனார் தனைநோக்கி ஒப்பமாகா தென்பலத்தில் ஒன்றி லரைப்பலமாய் அழகி லதிகமுமாய் ஆங்காரம் பாதியுமாய் குழகிய வாயழகாய்க் குரும்பத் தனத்தழகாய் மேனி யழகாய் விழியழகாய் வீச்சழகாய் யோனி யழகாய் ஒடுங்கு மிடையழகாய் கரமழகாய்க் காலழகாய்க் கண்ணழகாய்ப் பல்லழகாய் சரக்கூடு முன்னழகாய்த் தலைகண்டம் பின்னழகாய் தொடையழகாய் விரலழகாய்ச் சொல்லழகாய்ப் பல்லழகாய் நடையழகாய் வீச்சழகாய் நல்ல குழலழகாய் இடையழகாய் மேனி இறுக்கத் துடனழகாய் உடையழகாய்த் தேகம் ஓங்காரத் தொங்கலுமாய் அழகுக்கு ஏற்ற அஸ்தர் மணத்தோடு கழப கஸ்தூரி கம்மென்ற வாசனைபோல் மூவர்தே வர்களையும் மோக மாய்மயக்கச் சீவ னதுகொடுத்துத் திட்டித்துத் தாருமென்றான் . விளக்கம் ========== சிவபெருமான் அப்படிக் கேட்டதுமே, கலிநீசன் சிவபெருமானை நோக்கி சொல்லுகிறான், என்னுடைய பலத்திற்குச் சமமான பலத்தோடு பெண்ணைப் பிறவி செய்ய வேண்டாம். என்னுடைய பலத்தில் பாதி அளவு பலமும், அழகில் என்னைவிட அதிகமானவளாகவும், ஆங்காரத்தில் என்னைவிட பாதியுடையவளாகவும், மலரின் இதழ்களையொத்த உதடுகளையுடைய வாய் அழகும், தேங்காயக் குரும்பல் போன் அழகான மார்புகளையுடையவளாய், வாழிப்பான உடல் வாகும், கவர்ச்சியான கண்களும் வசீகரமான வார்வையும், வயப்படுத்தும் அக்குல் உடையவளாகவும், ஒடுங்கிய இடையும், அதற்கிசைந்த கைகளும், கால்களும், கண்களும், பற்களும் அமைந்தவளாய், மலர்ச்சரங்களைச் சூடுகின்ற கூந்தல், பின்னழகைவிட முதன்மை வாய்நததாகவும் இருக்க வேண்டும். மொத்தத்தில் அவளுடைய விரல்களும், சொற்களும், பற்களும், தொடையழகும், நடையழகும், இடையழகும், கூந்தல் சடையழகும் உடையழகும், இறுக்கமான உடலமைப்பில் ஓர் மென்மையும், அந்த அழகுக்கு ஏற்ற அத்தம் களபம், கஸ்தூரி ஆகியவற்றைப் போன்ற வாசனையுடையவளாய், மூவர் முதலான தேவர்களுக்கெல்லாம் மோக மயக்கத்தை ஏற்படுத்தத் தக்கதோர் பெண்ணைப் பிறவி செய்து உயிர் கொடுத்து தாரும் என்றான். . . அகிலம் ========= அப்போது ஈசுரனார் அகமகிழ்ந்து கொண்டாடி இப்போது கேட்டதற்கு என்செய்வோ மென்றுசொல்லி அருகில் சிவனார் அகமதிலே வீற்றிருக்கும் திருவுக்கு நன்றாய்த் தெரிவித்தா ரம்மானை கேட்டமா நீசனுக்குக் கீர்த்தியென்ன மாமயிலே தேட்டமுட னிப்போ செப்பென் றெனவுரைத்தார் அப்போது சத்தி ஆதி யடிவணங்கி ஒப்பொன் றில்லாத உடைய பெருமானே பாதியாய் நீசனையும் பகுந்தே யவனுடம்பில் விதியாயிடது விலாவி லொருயெலும்பைத் தட்டிக் கழற்றி சச்சுவருந் தானாக்கி திட்டித்து நீசனுக்குச் சிணங்கொடுவு மீசுரரே . விளக்கம் ========== கலிநீசனின் அவ்வுரையால் அகமகிழ்ந்த சிவபெருமான், இப்பொது இந்தக் கலிநீசன் கேட்டபடியான பெண்ணை எப்படி பிளவி செய்வது என்று சிந்தித்தவாறு, தம் அருகில் அமர்ந்திருக்கும் லோகமாதாவாகிய உமாதேவியைப் பார்த்து, உமையவளே ! கலிநீசன் கேட்டபடியான பெருமைமிகு பெண்ணை எவ்வாறு படைத்துக் கொடுக்கலாம்? அதற்கான ஓர் உபாயத்தை உடனே சொல் என்றார். . உடனே உமையவள் சிவபெருமானை வணங்கியவாறு, ஒப்பு உவமைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஆதிப் பரம்பொருளே ! என்னுடைய பெருமானே ! இந்தக் கலிநீசனை பாதியாக பகிர்ந்து, அதை வலது, இடது எனப் பிரித்து, அவனுடைய இடது பக்கத்து விலா எலும்பைக் கழற்றி எடுத்து, அந்த எலும்பை ஒரு பெண்ணாகப் படைத்து, உடனடியாக அந்தப் பெண்ணை இந்தக் கலிநீசனுக்குக் கொடுத்துவிடுங்கள் சுவாமி என்றாள். . . தொடரும்….. அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar
19 likes
7 shares
D Muthu Prakash, Kanchipuram 💐
752 views 8 days ago
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 15.01.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= இப்படியே வைத்த இவன்வேத மானதுக்குள் அப்படியே மற்றோரை அகப்படுத்த வேணுமென்று பணமா னதைக்கொடுத்துப் பகட்டினான் மானிடரைச் சிணமாக மானிடவர் சேர்ந்தா ரவன்வேதமதில் இப்படியே வேதமொன்று இவன்பலத்தா லுண்டாக்கி அப்படியே தானிருக்க அவனேது தானினைப்பான் ஆணுவங்கள் சேனை ஆயுதங் கள்வெகுவாய் வாணுவங்கள் ரெம்ப வம்மிசத்தோ ரெம்பரெம்ப படையாலு மற்றொருவர் பணத்தாலும் நம்மையுந்தான் தடைசெய்து நம்மைத் தடுப்பவரா ரென்றுசொல்லி ஆரா ரெதிரியென்று அவன்பார்த் திருக்கையிலே பூராய மாயொருவன் போதித்தா னவன்றனக்குச் சோழனென்றும் சேரனென்றும் துய்யபாண் டியனென்றும் வேழமுடி மன்னர் விபரீதமா யாண்டிருந்த தேச மைம்பத்தாறு உண்டுகாண் செந்துரையே வாசமுட னாண்டு வகையா யிருக்கையிலே வேசையொரு தாசி வழிநுதலாள் தன்வயிற்றில் பேசரிய வோர்மதலை பிறந்ததுகாண் மாயமுடன் மதலை பிறந்து வையகத்தி லேயிருந்து குதலை வளர்ந்து குடுமி வளர்க்கையிலே சேரனுக்குஞ் சோழனுக்கும் சிறந்தபாண் டியனுக்கும் வாரமுள்ள தெய்வ மாதருட சாபமதால் அவர்கள் கிளையிறந்து ஆணுவங்கள் தானழிந்து இவர்களும் போய்க்கடலில் இருந்தார்கள் கல்லெனவே ஆனதினால் முன்னம் அவனிதனை யாளுதற்கு மானமுள்ள பேர்கள் மறுத்தேதா னில்லாமல் மாயமுடன் தாசி மகன்தானும் சீமைதன்னை ஞாயமில்லா வண்ணம் நாடாண் டிருந்தனனே சென்றால்தா னந்தச் சீமைநமக் காகுமென்று அன்றேதான் சொல்ல அவன்கோபத் தால்வெகுண்டு வந்தானே யந்த மாநீசன் தன்பேரில் . விளக்கம் ========== இப்படி அந்த வெண்ணீசன் ஏற்படுத்திய வேதங்களை எல்லாம் மக்கள் மறுப்பு தெரிவிக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் பணத்தையும், ஏனைய பொருட்களையும் கொடுத்துப் பெருமளவு மக்களைத் தன் வயமாக்கிக் கொண்டான். மக்களும் மிகவும் எளிதாக அவனுடைய செயல்பாடுகளுக்கு உடன்பட்டனர். இவ்வணமாக வெண்ணீசனுடைய சக்தியினாலும், யுக்தியினாலும் வேதம் ஒன்றை உருவாக்கிவிட்டான். இந்நிலையில் அந்த வெண்ணீசனுக்குப் படைகளும், ஆயுதங்களும் ஏனய செல்வங்களும் பெருகின. வகை தொகையில்லாத அளவில் வம்சா விருத்தியும் பெற்றிருந்தான். எனவே தம்முடைய திட்டங்களை எதிர்ப்பதற்கோ, தடை செய்வதற்கோ, எவர் ஒருவராலும் முடியாது. அதற்கான படை பலமும், பணபலமும் எவரிடமும் இல்லை என்ற ஆணவம் அவனிடம் குடி கொண்டது. . இப்படித் தனக்கு நிகர் யாருமில்லை என்ற மமதையில் அவன் இருக்கும்போது, பாரதபூமியின் தென்புலத்தின் பூர்வீகத்தை பற்றி ஆராய்ந்து அறிந்த, விசித்திரமான விருப்பமுடைய ஒரு விஷமி அந்த வெண்ணீசனை அணுகிச் சொல்கிறான். செந்துரையே, பாரத நாட்டின் தென்புலத்தில் சோழன், சேரன், பாண்டியன் என்ற மூவேந்தர்கள் வலிமை வாய்ந்த முடி மன்னர்களாக ஐம்பத்தாறு தேசங்களும் வியக்கத்தக்க நிலையில் ஆட்சிபுரிந்து வந்தனர். . அப்பொழுது, தாசி குலத்தில் பிறந்த அடியவள் ஒருத்தி பிறை போன்ற கண்களுடன் மிக அழகாக இருந்தாள். அவளுடைய வயிற்றில் சொற்களால் விளக்க முடியாத வகையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவன் பிறந்ததே மாயச் செயலாகத் தான் இருக்க முடியும். . அவன் பிறந்து வளர்ந்து குடுமி வளர்ந்து வாலிப பருவமாய் இருந்து கொண்டிருக்கும் பொது, அன்றொரு காலத்தில் காளி இட்ட சாபத்தின்படி இம்மூன்று நாட்டையும் ஆள்வதற்கு ஒரே சமயத்தில் முறைப்படியான வாரிசு இல்லாமல் ஆகி விட்டது. எனவே, அந்த மூன்று நாட்டையும் அந்தத் தாசி பெற்ற மகன் கைப்பற்றிற ஆண்டு கொண்டிருக்கிறான். . அதைப்பற்றி கேட்க, மானமும் வீரமும் உள்ள மனிதர்கள் யாரும் முன்வரவில்லை. இப்படி எதிர்ப்பே இல்லாத காரணத்தால் தன்னுடைய மாய சக்தியினால் அந்த தாசியின் மகன் மூவேந்தர்களின் நாட்டையும் சேர்த்து நியாயமில்லாமல் ஆண்டு கொண்டிருக்கிறான். எனவே, இத்தருணத்தில் நாம் அங்குப் படையெடுத்துச் சென்றால் அந்த மூன்று நாட்டையும் நமது வசமாக்கிவிடலாம் என்று ஆலோசனை கூறினான். இதைக்கேட்ட வெண்ணீசன் வெகுண்டெழுந்து, படைதிரட்டிப் பயணித்தான். . . அகிலம் ======== வெண்நீசன் படையெடுத்து வந்து தோல்வியுறல் ==================================================== செந்தார மாயன் சேனை வருவதையும் அறிந்தே நீசன்தனக்கு அச்சுதருஞ் சொல்லலுற்றார் வெறிந்தமுள்ள நீசன் வேண்டும் படைகூட்டி நசுறாணி யான நல்லவெண் ணீசனுக்குத் துசுவான மாநீசன் திருமாலின் தன்னருளால் எற்றுக் கொடாமல் இவன்வெற்றி கொண்டனனே மற்றுமந்த நீசன் மாறியவன் போயிருந்தான் அப்போது அந்த அன்னீத மாநீசன் இப்போது படையை யாம்வெற்றி கொண்டோமென்று கோட்டைபின்னு மிட்டுக் கொடிய விருதுகட்டித் தாட்டிமையா யுலகில் சட்டமது வைத்தனனே . விளக்கம் ========== வெள்ளை நீசன் படையெடுத்து வருகிறான் என்பதை உணர்ந்த மகாவிஷ்ணு அச்செய்தியை கலி நீசனுக்கு அறிவித்தார். அததால் தன்னைச் சுதாரித்துக்கொண்ட கலிநீசன், மிக ஆவேசமாகத் தன் படைகளையெல்லாம் திரட்டி, நசுறாணி எனப்படும் வெள்ளை நீசனின் படைகளை எப்படி வெற்றி கொண்டான் என்பதை யாரும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாத அளவில் போர் புரிந்து, மகாவிஷ்ணுவின் அருளால் வெற்றி வாகை சூடினான். . இந்த வெற்றியே அந்தக் கலிநீசனை இன்னும் கொடியவனாக்கி. இப்பொழுது எதிரியின் படையை நாம் வெற்றி கொண்டுவிட்டோம் என்ற ஆணவத்தோடு, இன்னும் பல கோட்டை மதில்களைக் கட்டி அந்தக் கோட்டையில் தாம் வெற்றி பெற்றதற்கான அடையாளக் கொடியைப் பறக்கவிட்டதோடு, அகந்தையின் உச்சக் கட்டமாக அநியாயமான பல சட்டங்களை நாட்டு மக்கள் மீது திணித்து வைத்தான். . . தொடரும்... அய்யா உண்டு.
20 likes
1 comment 7 shares
D Muthu Prakash, Kanchipuram 💐
1K views 1 months ago
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை நான்காம் நாள் வாசிப்பு தொடர்ச்சி- நாள் 24.12.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ========= பணமாகிக் கீழே பறந்து குதித்திடவே இணமான நீசன் எட்டி யவன்பிடித்துக் கண்ணில்மிக வொற்றிக் காரிகையாள் கைகொடுப்பான் பெண்ணே நமக்குப் பெலங்கள்வந்து வாய்த்துதடி என்று பிரியமுற்று ஈசுரரைத் தான்வணங்கி மன்று தனில்போக வரந்தாரு மென்றுரைத்தான் அப்போது தன்னில் ஆண்டியவ ரங்குசென்று இப்போது இங்கேவைத்து இவன்தான் மொழிந்ததெல்லாம் தப்பாம லாகமத்தில் தானெழுதி வையுமென்றார் முப்போது வுள்ள முறைபோலே மாயவரும் ஆகமத்திற் பதித்து ஆண்டார் துரிதமுடன் நாகரீக நாதன் நடந்தார்ஸ்ரீ ரங்கமதில் நீசனையு மூரேபோ என்று நிமலனுந்தான் ஈயுகிற போது ஏதுரைப்பாள் சத்தியுமே . விளக்கம் ========== சக்கராயுதம் பணமாக மாறி பறந்து கீழே விழுந்ததுமே, அதை எட்டிப் பிடித்த கலிநீசன் அந்தப் பணத்தைத் தன்னுடைய கண்களில் ஒற்றிக்கொண்டே அவனுடனிருக்கும் கலிச்சியாகிய தன் மனைவியைப் பார்த்து, பெண்ணே ! நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு வகையான அத்தனை பலங்களும் இந்த பணத்திலே அடங்கியிருக்கிறது என்று சொல்லிக்கொண்டே சிவபெருமானை நினைத்து வணங்கி மண்ணுலகில் செல்வதற்கான சக்தியைத் தாரும் என்று வேண்டினான். . அப்போது மகாவிஷ்ணு தேவலோம் சென்று அங்கிருந்த தேவர்களையெல்லாம் அழைத்து, தேவர்களே ! இப்போது என்னிடம் இந்தக் கலிநீசன் செய்து தந்த சத்தியத்தையும் இந்த சத்தியத்தில் அவன் சொன்ன வாக்குறுதிகளையும் எதுவுமே விடுபட்டுப் போகாதபடி ஆகமத்தில் எழுதி வையுங்கள் என்று ஆணையிட்டார். மகாவிஷ்ணுவின் கட்டளைப்படி தேவர்கள் அங்கே அப்போது நடைபெற்ற நிகழ்வுகளோடு சேர்த்து கலிநீசனின் வாக்குறுதிகளையும் சத்தியத்தையும் ஆகமத்திலே எழுதிப் பதிவு செய்தார்கள். . உடனே மகாவிஷ்ணு ஸ்ரீரங்க மாபதிக்கு ஏகினார். மகாவிஷ்ணு ஸ்ரீரங்கமாபதிக்குப் புறப்பட்டதையுணர்ந்த சிவபெருமான், மண்ணுலகிற்குச் செல்ல மாவிருப்பத்தோடு தம்மை நினைத்து விடைவேண்டி நிற்கும் கலிநீசனுக்கு மண்ணுலகத்திற்குச் செல்வதற்கான மனதைக் கொடுத்தார். எனவே கலிநீசன் தன் மனைவியோடும், கையில் பணத்தோடும் மண்ணுலகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். இந்நேரம் அன்னை உமையவள் கலிநீசனைப் பற்றி சிவபெருமானிடம் விசாரிக்கிறார். . . அகிலம் ========= கலியுகம் ========== வன்னச் சிவனாரே மாபாவி கேட்டவரம் என்னென்ன வாயமதாய் இருக்குதுகா ணுத்தமரே வலியான மாதே மாநீசன் கேட்டதுதான் கலியுகம் போலிருக்கு கண்ணமுதே யென்றுரைத்தார் சிவம்வாய் திறந்து செப்பக் கலியுகமாய் இதமான தேவர் எழுதினா ரகமத்தில் . விருத்தம் ========== கலியுக மெனச்சிவம் கருதிடத் தேவர்கள் பொலிவுடன் சேர்த்தனர் புராண மீதினில் சலிவுடன் நீசனும் தரணியில் போந்திட வலியுள்ள மாயன் ஸ்ரீரங்க மேவினார் . விளக்கம் ========== சர்வேஸ்வரா ! இப்போது தங்களிடம் எண்ணவொண்ணா வரங்களைக் கேட்டு வாங்கிவிட்டு வையகத்திற்குச் செல்லும் இந்த மாநீசன் யார்? இவன் இத்தனை வரங்களைக் கேட்பதற்கும், அதை நீங்கள் கொடுப்பதற்கும் என்ன காரணம்? இவன் வாங்கிச் செல்லும் இத்தனை வரங்களையும் வைத்து இவன் என்ன செய்யப் போகிறான்? இதைப்பற்றி தாங்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அந்த உபாயங்களைப் பற்றி எனக்கு சற்று எடுத்துரையுங்கள் என்று சிவபெருமானிடம் அம்மை உமையவள் கேட்கிறாள். . அதை கேட்ட சிவபெருமான் உமையவளைப் பார்த்துச் சொல்லுகிறார். வல்லமைகளுக்கெல்லாம் வல்லமையாகிய வனிதையே ! இந்த மாநீசன் பெற்றுச் செல்லும் வரங்களையெல்லாம் உற்றுப் பார்க்கும்போது, நிகழ்ந்து நிறைவேறிய மகாயுகங்களில் நடைபெற்ற கலியுகம்போல் இருகிறது கண்ணமுதே என்று சொன்னார். . சிவபெருமான் தன்னுடைய திருவாய் மலர்ந்து கலியுகம் என்று சொன்ன உடனே தேவர்களெல்லாம் சேர்ந்து இது கலியுகம் என்று ஆகமத்தில் எழுதிப் பதிவு செய்தார்கள். . கலியுகம் என்று சிவபெருமான் நினைத்துரைத்ததுமே, அதை புராதன ஆகமத்தில் தேவர்கள் பதிவு செய்தார்கள். அக்கணத்தில்தான், தான்பெற்ற வரங்களில் பலவற்றை இழந்து விட்டோமே என்ற விரக்தியோடு கலிநீசன் மண்ணகத்தில் கால் ஊன்றினான். அதே வேளையில் மகாவிஷ்ணுவும் ஸ்ரீரங்கமாபதில் சென்றுறைந்தார். . . தொடரும்….. அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008}
15 likes
19 shares