வேளாங்கன்னி மாதா

144 Posts • 493K views
தமிழ்சீயான்43
2K views 16 days ago
*💘மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு ✝️குடும்பங்களை🛐 ஒப்புக்கொடுக்கும் ஜெபம்🙏 #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #பிரார்த்தனை #சகாய மாதா #வேளாங்கண்ணி மாதா ஒ மரியாயின் மாசற்ற இருதயமே இயேசுவின் திருஇருதயத்தின் மாதாவே,எங்கள் இல்லத்தின் அரசியும் அன்னையுமாகிய மாமரியே,உமது அதிமிகு விருப்பத்தின்படி எங்களை உம்மிடம் அர்பணிக்கின்றோம், நீரே எங்கள் குடும்பங்களை ஆண்டருளும் எங்கள் ஒவ்வொருவரையும் வழிநடத்தும். இயேசுவின் திருஇருதயம் எவ்வாறு உம்மை ஆண்டு நடத்தினாரோ, அது போல் எங்களையும் ஆண்டு வழிநடத்தும்படி செய்தருளும். ஒ அன்பு நிறைந்த அன்னையே, நாங்கள் எப்பொழுதும் வளமையிலும், வறுமையிலும், இன்பத்திலும், துன்பத்திலும், உடல்நலத்திலும், நோயிலும், வாழ்விலும், மரணத்திலும், உம்முடையவர்களாகவே இருக்கும்படி செய்தருளும். ஒ இரக்கமுள்ள மாதாவே, கன்னியர்களின் அரசியே, எங்கள் ஆன்மாக்களையும், இருதயங்களையும் காத்தருளும். அகங்காரம் கற்புக்கெதிரன சிந்தனைகள் அஞ்ஞானம் போன்ற தீமைகள் எங்களை நெருங்காதவாறு செய்தருளும். மாதாவே தேவரீருக்கும், தேவரீருடைய திருமகனுக்கும் எதிராக செய்யப்படும் எண்ணற்ற பாவங்களை பரிகரிக்க ஆவல் கொண்டுள்ளோம். தாயே எமது இல்லங்களிலும் உலகெங்குமுள்ள இல்லங்களிலும் கிறிஸ்து நாதரின் நேசமும் நிதியும் பிரகாசிக்க செய்தருளும். ஆண்டவரே, உமது புண்ணிய மாதிரிகையை நாங்கள் கண்டு பாவிக்கவும், ஓர் உண்மையான கிறிஸ்துவ வாழ்வு வாழவும், அடிக்கடி தேவநற்கருணை வாங்கவும், முகத்தாட்சன்யத்தை புறந்தள்ளவும் வாக்களிக்கின்றோம். வரப்பிரசாதத்தின் சிம்மாசனமே அரிய நேசத்தினுடைய மாதாவே நம்பிக்கையோடு உம்மை அண்டி வருகிறோம். உமது மாசற்ற இருதயத்தில் பற்றியெரியும் தெய்வீக நெருப்பு எமது இருதயத்தில் பற்றியெரியச் செய்யும் தாயே பரிசுத்தனமும், ஆன்ம தாகமும், பரிசுத்த கிறிஸ்தவ வாழ்வும் என்மேல் சுமத்தும் அத்துனை சுமைகளையும் பரிகார கருத்தோடு தவமுயற்சியாக நாங்கள் உமது மாசற்ற இருதயத்தின் வழியாக இயேசுவின் திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம். இயேசுவின் திருஇருதயத்திற்கும் மரியன்னையின் மாசற்ற இருதயத்திற்கும் முடிவில்லாத காலமும் நேசமும், புகழ்ச்சியும் மகிமையும் உண்டாவதாக. *🙏🏻ஆமென்.🙏🏻* *👑வெளியீடு👑* *✝️கத்தோலிக்கன்📖* *🛡️🗡️ஜெப📿வீரர்கள்🗡️🛡️*
30 likes
29 shares
தமிழ்சீயான்43
2K views 1 months ago
🌹*இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.* 27.03.2026 *(வெள்ளி)* *துயர்நிறை மறையுண்மைகள்.* *1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,* இன்றையத் திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட எரேமியா நூலில், *"ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள்."* என கூறப்பட்டுள்ளது. ஆண்டவர் நம்மையும் நம் குடும்பத்தையும் வன்கண்களிலிருந்து காக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,* இன்றைய பதிலுரைப்பாடல் தி.பா.18:6-ல், *"என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது."* என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். நமது இக்கட்டான வேளைகளில் நாம் இறைவனே துணை என விசுவசித்து நாம் இறைவனிடம் மன்றாட இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,* புனித வாரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நாம் நமது பாவங்களை விட்டு விட்டு மனம் திரும்பி இறைவனிடம் திரும்ப வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,* வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் மற்றும் அன்றாட அலுவல்கள் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,* நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *ஆமென்.*🙏 #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #சகாய மாதா #வேளாங்கண்ணி மாதா #பிரார்த்தனை
30 likes
24 shares