மாரியம்மன் அம்பாள் மகமாயி அம்மன் துணை தஞ்சாவூர்

94 Posts • 27K views
MUTHUPANDIAN RAMKUMAR
623 views 8 days ago AI indicator
#அம்பாள் #மாரியம்மன் அம்பாள் மகமாயி அம்மன் துணை தஞ்சாவூர் #அம்பாள் மந்திரம் மாதத்தில் முளைப்பாரி எடுப்பது ஏன்? 🌱 பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், கர்கடக மாதம் என்றும் சொல்வார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது. 🌱 அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன. 🌱 வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிக சிறப்பானது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மழை வளம் பெருகவும், திருமணத்தடை நீங்கவும் கன்னி பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வார்கள். 🌱 பிற்காலத்தில் கன்னியரோடு சுமங்கலி பெண்களும் இதில் பங்கேற்றனர். "முளைப்பாலிகை" என்ற சொல்லே திரிந்து முளைப்பாரி என்று மருவியதாக சொல்வர். சிறிய மண் சட்டியில் சிறு பயிறு, மொச்சை பயிறு போன்ற விதைகளை தூவி கோவிலுக்கு அருகிலேயே தனியாக குடில் அமைத்து அங்கு வைத்து வளர்ப்பார்கள். 🌱 ஒவ்வொரு நாள் இரவும் அதனை தெய்வமாக கருதி கும்மியடித்தபடி வலம் வந்து பாடுவார்கள். அம்மன் கோவில் திருவிழாவின் கடைசி நாளில் பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக கொண்டு வந்து நீர்நிலைகளில் அல்லது கிணற்றில் கரைப்பார்கள். அம்மன் அருளால் முளைப்பாரி செழிப்பாக வளர்வது போல நம் வாழ்வும் சிறப்படையும் என்பார்கள். 🌱 முளைப்பாரி எடுப்பதால் கிராமத்திலுள்ள நீர்நிலைகள் நிறையும் என்பதும், நீர்நிலைகளில் உள்ள உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்பதும் நம்பிக்கை. 🌱 மேலும் முளைப்பாரியில் வளர்ந்த பயிர்களின் வளர்ச்சியைக் கண்டு அந்த ஆண்டின் விளைச்சல் எப்படி இருக்கும் என்பதை கணிக்கும் சடங்காகவும் முளைப்பாரி எடுக்கும் வைபவம் கருதப்படுகிறது. 🌱 முளைப்பாரியில் பயிர்கள் செழித்து வளர்வதைப் போலவே, தங்கள் வம்சமும் செழித்து வளர வேண்டும் என்பதற்காகவும் முளைப்பாரி வைபவம் கொண்டாடப்படுகிறது. 🙏 கு பண்பரசு
9 likes
9 shares
MUTHUPANDIAN RAMKUMAR
572 views 8 days ago
#மாரியம்மன் அம்பாள் மகமாயி அம்மன் துணை தஞ்சாவூர் #அம்பாள் #அம்பாள் மந்திரம் 64 வகை உபசாரங்கள்..!! 1.பாத்யம் - - திருவடிகளைக் கழுவதற்கான தீர்த்தம் கொடுத்தல். 2.ஆவராணாவரோபணம் --- -நகைகளை கழற்றுதல். 3.ஸுகந்திதைலாப்யங்கம் -- வாஸனை எண்ணை தேய்த்தல். 4. மஞ்ஜனசாலாப்ரவேசனம் - குளியலறைக்குச் செல்லுதல். 5. மஞ்ஜனசாலாமணிபீடோபவேசனம் -குளியலறையிலிலுள்ள மணிமயஆஸனத்திலிருத்தல் 6. திவ்யஸ்னானீயோத் வர்த்தனம் - ஸ்நானத்திற்குரிய வாஸனைப் பொடிகளை சரீரத்தில் தேய்த்தல். 7. உஷ்ணோதகஸ்நானம் - வென்னீரில் குளித்தல். 8. கனககலசச்யுதஸகலதீர்த்தாபிஷேகம்- தங்கமயமான குடங்களிலிருந்துகொட்டும் எல்லாவித தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்தல். 9. தௌதவஸ்த்ரபரிமார்ஜ்ஜனம் -வெளுத்ததுணியால் உடம்பு துடைத்தல் 10. அருணதுகூலபரிதானம் - சிவப்பு பட்டை உடுத்துதல். 11.அருணகுசோத்தரீயம் -சிவப்பு ரவிக்கை அணிவித்தல். 12. ஆலேபமண்டபப்ரவேசனம் - அலங்கார அறைக்குச் செல்லுதல். 13. ஆலேபமண்டப மணிபீடோபவேசனம் -மேற்கூறின அறையில் உள்ள ரத்னமயமான பீடத்தில் இருத்தல். 14.சந்தனாகரு குங்கும ம்ருகமத கஸ்தூரி கோரோசனாதி திவ்யகந்தஸர்வாங்கீண விலேபனம் - அகில்,குங்குமப்பூ, புனுகு, பச்சைக்கற்பூரம், கஸ்தூரி, கோரோசனை முதலான வாஸனை வஸ்துக்கள் கலந்த உயர்ந்த சந்தனத்தை உடம்பில் பூசுதல். 15. கேசபாரஸ்ய காலாகருதூபம் - தலை காய்வதற்கும், வாசனைக்கும் தூபமிடுதல் 16.மல்லிகா, மாலதி, ஜாதி,சம்பகா சோக சதபத்ர பூக குஹளி, புன்னாக கல்ஹார முக்யஸர்வர்த்து குஸுமமாலா: - மல்லிகை(பிச்சகம்-பிச்சி)மாலதி, சம்பகம், அசோகம் தாமரை, பாக்குப் பூ, குஹளி,(வாழைப்பூவில் இருக்கும் கேஸரம்) புன்னைப்பூ, செங்கழுநீர், ஆறுருதுக்களிலும் உண்டானவையாவும் வாசனையாயும் இருக்கும்புஷ்பங்களால் கட்டப்பட்ட மாலைகள். 17. பூஷண மண்டபப்ரவேசனம் - நகைகள் அணிவதற்காக உள்ள அறையில் செல்லுதல் 18. பூஷண மண்டமணிபீடோபவேசனம் - முன்கூறிய அறையில் ரத்னபீடத்தில் இருத்தல். 19. நவமணிமகுடம் -புதிதான ரத்ன கிரீடம் அணிதல். 20. சந்த்ர சகலம் -சந்த்ர கலை. 21.ஸீமந்தஸிந்தூரம் -வகிட்டில் ஸிந்தூரம் வைத்தல் 22. திலகரத்னம் - நெற்றிப்பொட்டில் வைக்கும் ரத்னம். 23. காலாஞ்ஜனம் - கறுப்பு மை. 24. வாளீயுகளம் - காதுகளில் அணியும் வாளி என்ற நகை (ஜிமிக்கி என்பர் இப்போது) 25. மணிகுண்டலயுகளம் - ரத்ன குண்டலங்கள். 26. நாஸாபரணம் - மூக்குத்தி - புல்லாக்கு. 27. அதரயாவகம் - உதட்டின் சிவப்புசாயம் 28. ப்ரதமபூஷணம் - மாங்கல்யம். 29. கனகசிந்தாகம் - தங்கமயமான புளியிலை போன்ற நகை. 30. பதகம் - பதக்கம் 31. மஹாபதகம் - நவரத்னங்கள் இழைத்த ஸ்ரீ சக்ரம்(பெரியோர் கூற்று) 32. முக்தாவலி - முத்துமாலை. 33. ஏகாவளி - ஒருவடமாலை (நக்ஷ்த்ர மாலை) 34. ச்சன்னவீரம் - ஒரு ஆபரண விசேஷம். 35. கேயூரயுகளசதுஷ்டயம் - ஒவ்வொருகையிலும் இரண்டிரண்டு தோள் வளைகள். 36. வலயாவளி - வளைகள். 37. ஊர்மிகாவளி - மோதிரங்கள். 38. காஞ்சீதாம -ஒட்டியாணம். 39. கடிஸூத்ரம் - அரைஞாண்கயிறு. 40. ஸௌபாக்யாபரணம் -அரை மூடி(அரசிலை). 41. பாதகடகம் -கால்காப்பு. 42. ரத்னநூபுரம் - ரத்னமயமான கொலுசு 43. பாதாங்குளீயகம் - கால்மெட்டி. 44. ஏககரேபாசம் - ஓர்கையில் பாசக்கயிறு. 45. அன்யகரேஅங்குசம் -மற்றொருகையில் தொரட்டி 46. இதரகரேபுண்ட்ரேக்ஷுசாபம் - வேறொருகையில் நாமக்கரும்பு. 47.அபரகரேபுஷ்பபாணம் -மற்றொருகையில் புஷ்பபாணங்கள். 48. ஸ்ரீமன்மாணிக்க பாதுகே -ரத்னமயமான மிதியடிகள். 49. ஸ்வஸமான வேஷாபிஃ ஆவரணதேவதாபி: ஸஹ மஹா சக்ராதிரோஹணம் -தன்னைப்போலவே இருக்கும் ரூபத்துடன்கூடின ஆவரண தேவதைகளுடன் மஹாசக்ரத்தில் ஏறி இருத்தல். 50. காமேஸ்வராங்கபர்யங்கோபவேசனம் - காமேச்வரனுடைய இடது பாகமாகிற கட்டிலில் இருத்தல். 51. அம்ருதாஸவ சஷகம் -பானம் செய்யும் அம்ருதத்தோடு கூடிய பாத்திரம். 52. ஆசமனீயம் - ஆசமனம். 53. கற்பூர வீடிகா -பச்சை கற்பூரம் சேர்ந்த பாக்குடன்கூடின பீடா, (செய்விதம்- ஏலக்காய், லவங்கம், பச்சை கற்பூரம், கஸ்தூரி, பாக்கு, கொப்பரை, திப்பிலி, சுக்கு, கருங்காலி, இவைகளின் பொடிகளுடன் சுண்ணாம்பு சேர்த்த வெற்றிலையை மேருபோல் செய்வது.) 54. ஆனந்தோல்லாஸவிலாஸஹாஸம் - ஆனந்த களிப்பில் ஏற்பட்ட சிரிப்பு 55. மங்களாரார்த்திகம் - தங்கம்முதலான பாத்திரங்களில் ஏற்றும் மாவிளக்கு தீபம். 56. சத்ரம் - குடை. 57. சாமரயுகளம் - இரண்டு வெண்சாமரங்கள். 58. தர்பணம் - கண்ணாடி. 59. தாளவ்ருந்தம் -விசிறி. 60. கந்தம் - சந்தணம். 61. புஷ்பம் - பூ 62. தூபம் -சாம்பிராணிதூபம் 63. தீபம் - நெய்தீபம். 64. நைவேத்யம் - நிவேதனம்.
12 likes
13 shares