🌹வண்ணமயம்*!தங்கத்தின் வண்ணம் எதுவோ, அதுதான் சிவனின் மேனி வண்ணம்.
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி, பொலிந்து இலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை, வெள்ளிக் குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை, தன்னைக் கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே!
நூல்: பொன்வண்ணத்து அந்தாதி (1)
பாடியவர்: சேரமான் பெருமான் நாயனார்
சூழல்: ஒரு பெண், சிவனைப் பார்க்கிறாள், அவர்மீது நேசம் கொள்கிறாள், அப்போது அவள் பாடும் பாடல் இது
தங்கத்தின் வண்ணம் எதுவோ, அதுதான் சிவனின் மேனி வண்ணம்.
சிறந்து விளங்குகின்ற மின்னலின் வண்ணம் எதுவோ, அதுதான் சிவனுடைய அவிழ்த்துவிடப்பட்ட சடையின் வண்ணம்.
வெள்ளி மலையின் வண்ணம் எதுவோ, அதுதான் சிவனின் வாகனமாகிய காளையின் வண்ணம்.
இப்படிப்பட்ட சிவனை நான் பார்த்தபோது என்னுடைய உடல் என்ன நிறத்தை அடைந்ததோ, அதுதான் சிவனின் இயற்கையான நிறம்.
துக்கடா
நாலு வரியில் 12 ‘வண்ண’ங்கள், கலர்ஃபுல் பாடல்தான்!
காதல் கொண்ட பெண்களின் உடலில் பசலை படரும் என்று சொல்வார்கள்.
இந்தப் பாடலின் நான்காவது வரி அதைதான் குறிப்பிடுகிறது
இந்தப் பாடலின் இன்னொரு விசேஷம், இது ’கட்டளைக் கலித்துறை’ என்ற வகையைச் சேர்ந்தது.
மிகச் சவாலான விதிமுறைகளைக் கொண்ட
பா வகை இது.
ஒவ்வொரு வரியிலும் ஐந்து அடிகள்இருக்கும், இவை தம்மிடையே ‘செப்பலோசை’ எனப்படும் பிணைப்புகளைக் கொண்டிருக்கும்.
மெய்யெழுத்துகளை நீக்கிவிட்டுப் பார்த்தால்
வரிக்கு வரி மிகச் சரியாகப் பதினாறு (அல்லது பதினேழு) எழுத்துகள்மட்டுமே இருக்கும்.
சந்தேகமிருந்தால் அசை பிரிக்காத இந்தப் பாடலை எண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள்:
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.
(11.006)பதினோராம் திருமுறையில்
சேரமான் பெருமாள் நாயனார் சிதம்பரத்தில் அருளிச்செய்த
பொன்வண்ணத்தந்தாதி
100 பாடல்களில் முதலாவது பாடல்.
🌹அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹
🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷
🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺
🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி
#சிவ #சிவன் #🙏நமசிவாய ஓம்✨ #சிவ சிவா சிவன் #சிவன் #சிவ சிவ #ஓம் நம சிவாய 🦜