💖 நினைவுகளில்....

223 Posts • 91K views
நடேசன் S
512 views 3 hours ago
“என்னை முதல் முதலாக” 1942 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணகி’ படத்திற்குப் பின் 1964 ஆம் ஆண்டு சிலப்பதிகாரம், காவிய அடிப்படையில் உருவாக்கப்பட்ட இரண்டாவது படம் இது. கதை வசனம் எழுதியது கலைஞர் கருணாநிதி. இப்பாடலை எழுதிய கவிஞர் இராதாமாணிக்கம் அவர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை. “கண்ணும் கண்ணும் கலந்த போது காந்தம் கவர்ந்ததா” என்று காதலன் கேட்க “ஏகாந்தம் பறந்தது” என்ற காதலியின் பதிலில் கவிஞரின் எதுகை மோனை சொல்லாடல் ரசிக்க வைக்கிறது. நான் பார்க்காதபோது கள்ளத்தனமான பார்க்கும் என்னவளின் கடைக்கண் பார்வை, எங்களின் காதல் ரசனையில் பாதியளவைக் காட்டிலும் பெரிது…! என்ற வள்ளுவரின் குறளை நினைவு படுத்துகிறார். குறள்:1092 கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது டி.எம்.எஸ், ஜானகியின் ஆரம்பகால குரல்களில், இனிய மெட்டுடன் எளிமையான இசைப் பின்னணியில் இப்பாடலை கேட்கும்போது நமக்கும் சொர்க்கம் தெரிவதில் வியப்பில்லை. இப்படத்தைப் பற்றிய ஒரு கொசுறு செய்தி. “அன்று கொல்லும் அரசின் ஆணை…” என்ற பாடலில் “நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது” எனக் கவிஞர் மாயவநாதன் எழுதியிருந்தாராம். கே. பி. சுந்தராம்பாள் அந்த வரியைப் பாட மறுத்துவிட்டார். மாயவநாதனோ ஊருக்குப் போய்விட்டார். எனவே கருணாநிதியே அந்த வரியை “நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது” என மாற்றி எழுதிக் கொடுத்தாராம். —————————- படம்: பூம்புகார் (1964) இசை: S ஸுதர்சனம் படியவர்கள்: T M S, S ஜானகி வரிகள்:இராதாமாணிக்கம் —————————- பாடல் வரிகள்: என்னை முதல் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய் என்னை முதல் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய் நான் உன்னை நினைத்தேன் என் கைகள் உன் மேல் பட்ட போது என்ன உணர்ந்தாய் நான் என்னை மறந்தேன் நான் என்னை மறந்தேன் என்னை முதல் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய் நான் உன்னை நினைத்தேன் கண்ணும் கண்ணும் கலந்த போது காந்தம் கவர்ந்ததா கண்ணும் கண்ணும் கலந்த போது காந்தம் கவர்ந்ததா ஏகாந்தம் பறந்தது ஏகாந்தம் பறந்தது இதழும் இதழும் நெருங்கும் போது சுகம் தெரிந்ததா இல்லை சொர்க்கம் தெரிந்தது சொர்க்கம் தெரிந்தது ஹா ஹா ன்னை முதல் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய் நான் உன்னை நினைத்தேன் காலமெல்லாம் என் மடியில் தூங்க வந்தவரே காலமெல்லாம் என் மடியில் தூங்க வந்தவரே காதலுக்கு பாடம் சொல்ல பிறந்து வந்தவரே குளிர் கால காற்று போலே குழைந்து வந்தவளே குளிர் கால காற்று போலே குழைந்து வந்தவளே கோடி கோடி இன்பம் தந்து ஆடி வந்தவளே #📷நினைவுகள் #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா
13 likes
14 shares