ஆதி சிவன் பக்தன்

308 Posts • 1M views
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2K views 7 days ago AI indicator
காலை சிவசிந்தனை ==================== சிவ நாம மஹிமை =================== பஞ்சாக்ஷர மந்த்ரம் எப்போதும் ஹ்ருதயத்திலிருக்க தீர்த்தமோ தவமோ யாகமோ எதற்கு? (பஞ்சாக்ஷரம் ஒன்றே போதும்) (கிம்தஸ்ய பஹுபிர்மந்த்ரை: கிம் தீர்த்தை:கிம் தபோத்வரை: யஸ்யோ நம:சிவாயேதி மந்த்ரோ ஹ்ருதயகோசர:) சிவபூஜை மகிமை =1 ===================== பூஜை:சம்போ - ஸ்ரீபதேசக்விரதானிச' என்பது வாக்கு. பத்தாயிரம் ஆண்டுகள் ஆசார நியமத்துடன் கங்கையில் குளித்த தூய்மையை வில்வதளத்தால் சிவனை அர்ச்சனை செய்து பெறலாம் என்பது சிவபுராணத்தின் கூற்று. மஹாபாரதம்-துரோணபர்வம் =========================÷÷÷=÷÷ "துர்லபம் ப்ராப்ய மானுஷ்யம் யேஅர்ச்சயந்தி சதாசிவம் தேஷாங்கி ஜன்மசாபல்யம் க்ருத்தார்ஸ்தே நரோத்தமம் அன்யஞ்ச ஸிவபூஜாரஹிதோ மனுஷ்யோ நிஷ்ப்ரயோஜனம்" பொருள் ,======== அடையமுடியாத மனிதப்பிறவியை அடைந்து எவர்கள் சதாசிவனை பூஜிக்கின்றாரோ அவர்கள் ஜன்மம் பயனுடையது. அவர்கள் செய்யவேண்டியதை செய்பவர்கள்.சிவபூஜை செய்யாதவர்கள் பிறவி வீண்ஆனது. சிவ சிவ சிவ சிவ சிவ 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #சிவன் பக்தி #ஓம் நமசிவாய
27 likes
42 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
965 views 6 days ago AI indicator
காலை சிவசிந்தனை ===================== நித்யமான சிவம் ================ யதா³(அ)தமஸ்தான்ன தி³வா ந ராத்ரிர்ன ஸன்ன சாஸச்ஶிவ ஏவ கேவல꞉ | தத³க்ஷரம் தத்ஸவிதுர்வரேண்யம் ப்ரஜ்ஞா ச தஸ்மாத்ப்ரஸ்ருதா புராணீ || - ஶ்வேதாஶ்வதரோபநிஷத் "எப்போது இருள் உளதாய்ப் பகலுமின்றி இரவுமின்றிச் சத்துமின்றி அசத்துமின்றி இருந்ததோ, அப்போது சிவன் ஒருவரே இருந்தார்; அந்தச் (சிவ) சூரியனுடைய அந்த அழியாத முக்கியப்பொருளாகிய பிரஞ்ஞை எனப்படும் பராசத்தி உதித்தார்'' என்று சுவேதாசுவதரமும் கூறுமாற்றால், இருக்கு வேதத்திலே ஏகம் எனக் கூறப்பட்டது சிவபெருமான் என்றும், அவரினின்று பின்னர்த் தோன்றியவர் பராசத்தி என்றும் பெறப்படுகின்றது. (அஃதாவது சந்திர சூரியரொளியெல்லாம் ஒழித்து, பகலிது இரவிது எனப் பகுத்தலில்லாத சூனியமாய், நாமரூப விசேஷமின்றி, ஸ்தூல சூக்கும சேதநாசேதனமாகிய (சத்து) பசு, (அசத்தின்) பாசத்தின் வியக்திநிலையற்று, ஈதெல்லாம் இருண்மயமாயிருந்த அந்தக் காலத்திலே அந்தச் சிவபிரானார் அத்துவிதீயராய், கேவலராய், சிவப்பிரகாசராய்த் தம்மினின்று பகுக்கப்படாத வியல்படைந்த சேதனாசேதனச் சத்தியோடுளராயினர் என்பதாம்.) "இருநில னதுபுன லிடைமடி தரவெரி புகவெரி யதுமிகு பெருவெளி யினிலவி தரவளி கெடவிய னிடைமுழு வதுகெட இருவர்க ளுடல்பொறை யொடுதிரி யெழிலுரு வுடையவ னினமலர் மருவிய வறுபத மிசைமுரன் மறைவன மமர்தரு பரமனே" திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருமறைக்காட்டு தேவாரம். "பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய் இருங்கடன் மூடி யிறக்கு மிறந்தான் களேபரமும் கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய் வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே." திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #சிவன் பக்தி #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள்
20 likes
21 shares