*#மதுமேகநோய்* - 9
1. மகேந்திர வர்ணி
சிறுநீர் நெய் போல் வடியும். துணியில் நனைத்து தீ எரித்தால் விளக்கு போல் எரியும். உடல் மெலியும். தாகம் அதிகரித்து அத்தியில் சூடுண்டாகி 1 நாள் 7.5 லிட்டர் சிறுநீர் வெளியேறும்.
2. இந்திர வர்ணி
சிறுநீர் பசுவின் சிறுநீரின் நிறம் போல் காணப்படும். பசுவின் சிறுநீரின் வாசமும் காணும். அதைக் காய்ச்சி தீ எரித்தால் தீ எரியும். உடம்பு அசதி உண்டாகி முகம் மெலிந்து கன்னம் ஒட்டும். ஒரு வேளைக்கு 3 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும் என சித்தர்கள் கூறியுள்ளனர்.
3. ருத்திராங்க வர்ணி
சிறுநீர் பசுவின் சிறுநீர் போல் நிறம் உடையதாகவும், மாமிச வாடை உடையதாகவும், அதை காய்ச்சினால் தேன் போல் வாடையும் வரும். இளம் வயது வாலிபனுக்கு இந்நோய் வந்தால் கிழவன் போல் ஆவான். அத்தி வெந்து சுரம் உண்டாகி 1 வேளைக்கு 3 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும்.
4. சூத்திர வர்ணி
சிறுநீர் ஆட்டின் கொழுப்பு போல் வெளியேறும். காய்ச்சினால் ஆட்டின் நெய் போல் வாடை உடையதாகவும், இன்னும் வற்றினால் கரும்பின் சாறு போல் வாடை உடையதாகவும் காணும். லிங்கத்தில் எரிவு, குத்து, சுரம், தாகம், குமட்டல், வாந்தி காணும். ஒரு நாளில் 15 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும்.
5. விசுவ பிறபன்
சிறுநீர் யானையின் சிறுநீர் போல் நிறத்தில் காணும். மணமும் அதுபோல இருக்கும். காய்ச்சி பார்த்தால் உப்பு உறையும். மனம் தளரும். உடல் அயரும். உடல் மெலியும். ஒருவேளை 3 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும்.
6. துர்கந்த வாகினி
சிறுநீர் கற்றாழைச்சாறு போல் நாறும். சிறுநீரை காய்ச்சினால் பிணம் போல் நாற்றமெடுக்கும். உடல் சக்தி குறையும். கண்ணின் ஒளி மங்கும். 1 வேளை 3 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும்.
7. சம்பீர வர்ணி
சிறுநீரில் சுண்ணாம்பின் வாசம் வரும். தெளிய வைத்து பார்த்தால் அடியில் சுண்ணாம்பு போல் வீழ்படிவு காணும். துர்வாசம் வீசும். வெளியிடங்களில் சிறுநீர் கழித்தால் எறும்பு அரிக்கும். காய்ச்சினால் அடியில் சுண்ணாம்பு போல் படியும். 1 வேளை 3 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும்.
8. மது பிறவாகினி
சிறுநீர் மஞ்சள் நிறம் போல் வெளியேறும். பீசமுடன் கோசம் வலிக்கும். அடிக்கடி சிறுநீர் வெளியேறும். அந்நீரை சிறிது நேரம் வைத்திருந்தால் அடியில் மாவு போல் உறையும். உடல் விளறும். உடம்பின் அழகு மாறி 1 வேளை 375 மில்லி அளவு சிறுநீர் வெளியேறும்.
9. சலப்பிறவாகினி
சிறுநீர் படிக நிறமாக இருக்கும். பீசம் முதல் கோசம் வரை வலிக்கும். சிறுநீர் தாழை விளிர் சாற்றின் நிறம் உடையதாக இருக்கும். சிறுநீரை காய்ச்சினால் சீழ் நாற்றம் உருவாகும். 1 வேளை 750 மில்லி சிறுநீர் வெளியேறும். முகம் வாடும். மேனி குன்றும். அத்தி காயும்.
10. இரத்த சலாக்கினி
சிறுநீர் முயலின் சிறுநீர்போல் காணும். காய்ச்சினால் இறைச்சி நாற்றம் வரும். பீசமுடன் கோசம் வலிக்கும். உடல் மெலியும். சூடு மீறும். 1 வேளைக்கு 1.5 லிட்டர் சிறுநீர் வெளியேறும்.
11. சுக்கில பிறவாகினி
சிறுநீர் நிணம் போல் வெளியேறும். சிறுநீரில் வாடை காணும். காய்ச்சினால் நிண வாடை காணும். உடல் உலரும். மேனி குன்றும். உடல் தள்ளாடும். 1 வேளைக்கு 2.25 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும்.
12. உதக வர்ணன்
சிறுநீர் தெளிந்த நீர் போல் வெளியேறும். அசதி, மயக்கம், மூர்ச்சை காணும். உடல் அயர்ந்து போகும். 1 நாள் 7.5 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும்.
13. மல்சிய வர்ணி
சிறுநீருடன் நிணநீர் வெளியேறும். சிறுநீரை காய்ச்சினால் மீனின் வாடை உண்டாகும். உடல் உலர்ந்து உடல் வலிமை குன்றி எலும்பு காயும். 1 வேளை 2.25 லிட்டர் சிறுநீர் வெளியேறும்.
14. தூல வர்ணன்
சிறுநீர் இளநீர் போல் வெளியேறும். இளநீரின் வாசமும் இருக்கும். உடல் மெலிந்து உடல் நொந்து மன கலக்கம் காணும். அசதி, தளர்வு ஏற்படும். 1 வேளை 750 மில்லி சிறுநீர் வெளியேறும்.
15. சுராரி வர்ணன்
சிறுநீர் கள்ளின் நிறத்தில் வெண்மை நிறமாக நுரையோடு வெளியேறும். இதை காய்ச்சினால் கள்ளின் வாசம் வீசும். இடுப்பு பொருத்து, குறுக்கு வலிக்கும். பெண் போகம் குறையும். உடல் பலம் குறையும். 1 வேளை 750 மில்லி சிறுநீர் வெளியேறும்.
16. அஸ்தி வர்ணன்
சிறுநீர் சுக்கிலத்தின் நிறத்தில் வெளியேறும். சிறுநீர் வெளியேறும் போது நு}ல் போல கட்டுக்கொடியை தண்ணீரில் கலக்கினாப்போல் கட்டியாக வெளியேறும். காய்ச்சினால் புகைந்து துர்நாற்றம் காணும்.
17. கசாய பிறபன்
சிறுநீர் காடிநீர் போல் வெளியேறும். அதை காய்ச்சி வற்ற வைத்தால் அடியில் சுண்ணாம்பு படியும். உடம்பிலிருந்து துர்வாசம்; வீசும். அதிகமான சிறுநீர் வெளியேறும். உடம்பு உலரும்.
18. நீல வர்ணன்
சிறுநீர் தேனின் நிறமாக வெளியேறும். தெளிய வைத்தால் மெழுகு போல் கட்டியாகும். எறும்பரிக்கும். உடம்பிலிருந்து தேன் வாடை உருவாகும். 1 நாள் 7.5 லிட்டர் சிறுநீர் வெளியேறும்.
19. லவண பிறவாகினி
சுண்ணாம்பு நீர் போல் சிறுநீர் வெளியேறும். காய்ச்சினால் சுண்ணாம்பு போல் காரம் காணும். உடல் எரிந்து கடுத்து சூடு காணும். அத்திச்சூடுண்டாகி 1 வேளை 3 லிட்டர் சிறுநீர் வெளியேறும்.
20. சுக்கில வர்ணன்
இறைச்சி கழுவின நீர் போல் சிறுநீர் வெளியேறும். காய்ச்சினால் மாமிச வாடை காணும். நீர்த்தாரை முறுகும். உடல் பலம், உடல் வலு குறையும். உடல் தள்ளாடும். 1 வேளை 2.25 லிட்டர் சீறுநீர் வெளியேறும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்*
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495.
#சித்த மருத்துவம்