N Murugesan
636 views • 28 days ago
உங்களுக்கு மனிதனை நாயாக்கும் கடவுள் வேண்டுமா? அல்லது நாய் போன்றவனை கடவுள் நிலைக்கு உயர்த்தும் கடவுள் வேண்டுமா?! நம்பினால் நம்புங்கள்; இரண்டு வகையானவர்களும் இருக்கிறார்கள்; ஆனால், இருவருமே தங்களை கடவுள் என்று தான் சொல்லிக் கொள்கிறார்கள்!! 😄 நமக்குத் தெரியும் யார் உண்மையான கடவுள் என்று!! நமக்கு நாய்ச் சிவிகை ஏத்தும் சிவபெருமான் தான் வேண்டும். நாய் போன்ற கீழான என்னையும் கூட சிவிகையில் அவ்வபோது ஏத்துவதும் செய்கிறான்!!😄 மாணிக்கவாசகர் பாடியது உண்மை தான். ஆனாலும் கூட சைவத்தில் இது குறித்த ஊடல் ஒன்றும் உண்டு!! 😄. **************************************************** ஏன் பிரம்மா, விஷ்ணு போன்றோர் நம்மை கடவுள் நிலைக்கு ஏத்த மாட்டார்களா?! பிரம்மா தன்னையே கடவுள் என்ற நிலையில் பார்ப்பதில்லை. பெருமாளை வணங்கினால் நம்மை ஆன்மீகத்தில் உயர்ந்த நிலைக்கு உயர்த்தி, "இந்த அடியவன் என்னை விட உயர்ந்தவன்" என்று பிறர் நினைக்கும் அளவுக்கும் செய்வார். ஆனால், ஒரு முக்கியமான விஷயம். நம்மை கடவுள் நிலைக்கு உயர்த்த - அதற்காக நாம் தவம் செய்து, தூய்மை அடைந்து, ஆன்மீக சாதனைகள் பல புரிந்து - பிறகு சிவிகையில் (அதாவது கடவுள் பல்லக்கில்) ஏற்றுவார். ஒருவன் கடவுள் நிலைக்கு உயர்ந்த பிறகு, அவன் எனக்கு இணையானவன் என்று அங்கீகரிப்பதில் என்ன வியப்பு இருக்கிறது?! அதில் இறைவனின் சாதனை என்ன இருக்கிறது?! மற்ற கடவுள்களின் வழியில் சென்றால் நாம் அந்த நிலைக்கு உயர நாம் படாதபாடு பட்டு முயல வேண்டும். அதற்கு அந்த கடவுள்களும், அவர்கள் வகுத்த பாதையும் துணை செய்வர். ஆனால், நமது சிவபெருமானின் வழி வேறு. நமது பெருமான் நினைத்தால், நீங்கள் நாய் நிலையிலிருந்து மனித நிலைக்கு கூட உயர தேவையில்லை; அப்படியே நாயாகவே சிவிகையில் சிவமாக ஏத்துவான்!!😄 இது தான் சைவத்தின், சிவபெருமானின் சிறப்பு. அப்படியென்றால் பெரும் தவம், ஆன்மீக சாதனை எதுவும் தேவையில்லையா?! அப்படியில்லை. அனைத்தும் தேவை தான். ஆனால், அவை எதற்கு?! அவை நம் ஆணவ, கர்ம, மாயா மலங்களை கலைந்து, உள்ளம் தெய்வீக நிலைக்கு உயர வழி செய்வதற்கு. ஆனால், அதற்கு தகுதியிருந்தும் விடாமல் நம்மை நாய் போல் கீழ் நிலையில் வைத்திருந்தால் என்ன செய்வது?! பெருமாளாக இருந்தால், "அது உன் கஷ்டம் - நான் வகுத்த தகுதியை அடையும் வரையில் எதுவும் செய்ய இயலாது" என்று நம்மை மேலும் மேலும் உயர்த்தத் தான் வழி செய்வார். ஆனால், சிவபெருமானோ, அப்படியே நாயாகவே சிவிகை ஏத்துவான்!! ஏனென்றால் அவன் வெளிப்புற துறவை, ஆடம்பர தூய்மையை பார்ப்பதில்லை. அவன் நம் உள்ளத்தை தான் பார்க்கிறான். காதாலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கினால் நம் கர்மத்தை கரைப்பதையும் எளிமையாக்குகிறான். உயிர்களிடம் விளையும் அன்பினால் பெருகும் தூய்மையான பக்தியால் அவனை கட்டிப் போடவும் முடியும். ஆகையால், சிவபெருமானிடம் பக்தி கொண்டு வணங்குபவர்கள் அனைவரும் பெரும் பேறு பெற்றவர்கள் தான்!! பிறகு இதிலும் கூட ஊடல் ஏன் என்றால் - அப்படியே நாயாக இருந்தால் போதுமா?! நமக்கு வெளிப்புற தூய்மையும் நல்கி, உலகில் வாழ்வாங்கு வாழ வழிசெய்ய வேண்டாமா?!! உலகில் கோடானுகோடி இன்பங்கள் இருக்கிறதாம் - அப்படியே நாய் சிவிகையிலிருந்து முக்தி கொடுத்து விட்டால் நாம் என்ன செய்வது?!😄 நாமும் உலகியலிலும் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டாமா?! 😄. ************************************************
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
12 likes
14 shares