azagaana vaakkiyam

14 Posts • 3K views
saravanan
4K views 16 days ago
#azagaana vaalkkay thathuvam _*இல்லாத வாழ்க்கை*_ _*இல்லை, வழி இல்லாத வாழ்க்கையும் இல்லை,*_ _வலிகளை கடந்து வாழ்க்கையை தேடுவோம்....!!!!_ _*இருந்தால் உறவு, பிரிந்தால் நினைவு இதுதான் வாழ்க்கை.*_ _தேவையில்லாத பயம், வாழ்நாளில் பாதி காலத்தை வீணாக்கும்...!!!!_ _*மனிதன் மிகவும் சுய நலக்காரன்....*_ _நேசித்தால் கெட்டதைப் பார்க்க மாட்டான்..._ _*வெறுத்தால் நல்லதைப் பார்க்க மாட்டான்.....!!*_ _எதிர் பார்க்காமல் பழகினால், எல்லோரையும் பிடிக்கும்._ _*ஒருவர் தன்னை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்தும் போது, வெற்றி பெறுகிறார்.*_ _மன நிம்மதியின் மாளிகை, தனிமையே!..!!!!_ _*எப்போதும் சுலபமானதை செய்வதை விட.........*_ _சரியானதை செய்வதே சரியானது........!!_ _*ஏமாற்றுதலையும் நயவஞ்சகத்தையும் "சாதுர்யம்" என்கிறார்கள்,*_ _நேர்மையையும் நியாயத்தையும் "ஏமாளித்தனம்" என்கிறார்கள்._ _*வாழ்க்கை என்னும் புத்தகத்தில்..!*_ _முடிவுரைக்கு வந்த பிறகு தான்_ _முன்னுரையே_ _புரிகிறது..!_ _*திரும்ப வாசிக்கத்தான் எந்த*_ _*வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை,*_ _மாறிப்போவதும்,_ _கடந்துபோவதும் பின்_ _*பழகிப்போவதும்*_ _*தான்*_ _*வாழ்க்கை......!!*_ 🌹
44 likes
50 shares
saravanan.
9K views 1 months ago
#azagaana vaalkkay thathuvam எதிர்மறை சூழ்நிலை புத்திசாலித்தனத்தால் சாதகமாக மாற்றுதல். எந்த சூழலையும் சாதகமாக மாற்றுதல் குறித்த வெற்றி ஃபார்முலா. இது வெற்றியாளர்களுக்கே இருக்கும் பிரத்தியேகத் திறமை எனலாம். அவர்களுக்கு எதிராக எந்தவித சதிகள் நடந்தாலும் எந்தவித எதிர்மறை விஷயங்கள் நடந்தாலும் அதைக் குறித்து பெரிதாக கவலைப்பட மாட்டார்கள். உடனே இடிந்து போய் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று எண்ண மாட்டார்கள். இந்த சூழ்நிலையைத் தங்களுக்கு சாதகமாக எவ்விதம் பயன்படுத்திக் கொள்வது என்று மட்டுமே பார்ப்பார்கள். எத்தகைய எதிர்மறைச் சூழலையும் தங்களுக்குக் கிடைத்திருக்கும் புதிய வாய்ப்பாகவும் புதிய சவாலாகவும் பார்க்கிறார்கள் அதனை வெற்றி கொண்டு தங்களுக்குச் சாதகமான ஒரு சூழலாக அதனை மாற்றுகிறார்கள். கவலைகள் என்பது உதிரும் இலைகள் சந்தோசம் என்பது துளிர்க்கும் இலைகள்.. உதிரும் இலைகளை துளிர்க்கும் இலைகளுக்கு உரமாக்கிடுங்கள்.. வெற்றி எனும் மரம் அற்புதமாக வளரும்.. ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாலும் மீன் கிடைக்கும் வரையில் முயற்சியை கைவிடாத வெண்கொக்கு! ஆயிரக் கணக்கினில் அடி வாங்கினாலும் சிலையாகும் வரையில் உளியை உறவாக எண்ணும் கருங்கல்! கால்களில்லாத போதிலும் பாறைகளில் மோதியும் படுகுழியில் விழுந்து கடலைச் சேரும் குறிக்கோள்களை கடத்தி விடாத நதி! கைகளைத் துண்டித்தாலும் தலையைத் தறித்தாலூம் நிழல் பரப்பும் எண்ணத்தில் மீண்டும் தழைக்கின்ற மரம்! இரும்பு முள்ளில் குத்தினாலூம் ரணத்தையும் கூட ரசித்துக்கொண்டே வண்டியிழுக்கும் எருதுகள்! கனவு நிறைவேறும் வரை கலைத்து விடாதீர். முயற்சியை ஏனெனில்.. முயற்சி மட்டுமே முன்னேற்ற மாளிகைக்கு முதலிடமாகும்! உருக்கப்படும் தங்கம் தான் உரு மாறி நகையாகிறது! அறுக்கப்படும் மரம் தான் அழகான ஜன்னலாகிறது! இடிக்கப்படும் நெல் தான் உமி நீங்கி அரிசியாகிறது! துவைக்கப்படும் துணி தான் தூய்மை பெற்று வெண்மையாகிறது! ஏற்றப்படும் விளக்கு தான் இருள் நீக்கி ஒளி தருகிறது! தட்டப்படும் தந்தி தான் தம்புராவில் இசை தருகிறது! செதுக்கப்படும் பளிங்கு தான் செம்மை பெற்றுச் சிலையாகிறது! பதப்படுத்தப்படும் தோல் தான் பயனுள்ள காலணியாகிறது! மிதிக்கப்படும் மண் தான் மிருதுவான பானையாகிறது! புதைக்கப்படும் விதை தான் மண்ணை விட்டு மரமாக எழுகிறது! தோற்றுப் போகும் மனிதன் தான் துணிவு பெற்று வீரனாகிறான்! தொடர்ந்து முயலும் வீரன் தான் சரித்திரம் படைத்து வாழ்கிறான்! 😊😊😊
92 likes
160 shares