#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் செய்த அதிசயம்* 👆👇
🔆ஆரம்ப நாட்களில் ஆச்ரமம் எளிய முறையில் நடந்து வந்தது.
🔆தேவைகளோ சௌகரியங்களோ மிகவும் குறைவு.
🔆அடிப்படைத் தேவைகளை மட்டுமே நிறை வேற்றக் கூடிய வரவு தான்.
🔆சமையல றையில் வயது முதிர்ந்த பெண்கள் சமையல் செய்து வந்தனர்.
🔆அன்று ஒரு நாள் மண்டக்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த எச்சம்மாள் ஆச்ரமத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே உணவைச் சமைத்திருந்தாள்.
🔆அப்பொழுது பகவான் தரிசனத்திற்கு வெளியூரிலிருந்து பத்து பதினைந்து பக்தர்கள் எதிர் பாராத விதம் வந்தனர்.
🔆அவர்கள் வந்தது உணவு அருந்தும் நேரம்.
🔆வெயிலும் கடுமையாக இருந்தது.
🔆அக்காலத்தில் ஆச்ரமம் ஊருக்கு வெளியே இருந்த தினால் சாப்பிட வேண்டுமானால் ஊருக்குள் தான்
போக வேண்டும்.
🔆ஆச்ரமத்தில் உணவிற்கான மணி அடிக்கும் நேரம் நெருங்கியது.
🔆எச்சம்மாளுக்கு ஒரே கவலை.
🔆இனி சமைத்து போடவும் நேரமில்லை.
🔆சாப்பாட்டு மணி அடித்ததால் பகவான் அங்குள்ள அனைவரையும் சாப்பிட வருமாறு அழைப்பார்.
🔆இதை நன்கு அறிந்த எச்சம்மா சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பகவான் அருகில் சென்று
🔆"பகவான் இங்கு உள்ளவர்களுக்கு மட்டுமே சமையல் செய்திருக்கிறேன்!"
🔆என்று கையைப் பிசைந்த வண்ணம் கூறினார்.
🔆ஆனால் பகவான் அதைக் கேட்ட மாதிரியே தோன்றவில்லை.
🔆சமையல றைக்குள் சென்ற எச்சம்மா ஒன்றும் தோன்றா வண்ணம் நின்றார்.
🔆அருகிலிருந்த மாதவ ஸ்வாமி நிலைமையை புரிந்து கொண்டு
🔆"கவலைப் படாதீர்கள்! நாம் இலையைப் போட்டு எல்லோருக்கும் பிரசாதமாக கொஞ்சம் கொஞ்சம் பரிமாறவோம்" என்றார்.
🔆மணியும் அடித்தது.
🔆எதிர்பார்த்தது போல் பகவானது சமிக்ஞையின்படி அனைவரும் வந்து உணவுக் கூடத்திற்கு சென்று இலையின் முன் அமர்ந்தனர்.
🔆 எச்சம்மாள் கலையுடன் பரிமாற ஆரம்பித்தாள்.
🔆பாத்திரத்தில் சாதம் எடுக்கும் போதெல்லாம் கவலையுடன்
🔆"ரமணா, ரமணா!" என்று வேண்டிக் கொண்டே எடுத்தார்.
🔆என்ன ஆச்சரியம்!
🔆சாதம் எடுக்க எடுக்கக் குறையாமல், வந்திருந்த அனைவருக்கும் போதுமானதாக இருந்தது.
🔆எல்லோரும் பசி தீர உண்டு திருப்தி யுற்றனர்.
🔆மேலும் பல அன்பர்கள் சாப்பிடும் அளவுக்கு உணவு மீதமிருந்தது.
🔆எச்சம்மாளுக்கு ஒரே ஆச்சரியம்.
🔆மாலை வேலைகளில் பகவான் ஹாலுக்கு வெளியே திறந்த கூடத்தில் மலையை நோக்கியவாறு ஒரு சாய்வு நாற்காலியில் அமருவார்.
🔆அவரைச் சுற்றி மிகச் சிலரே இருப்பர்.
🔆இந்த நேரத்தில் எச்சம்மாள் பகவானிடம் நெருங்கி
🔆" பகவானே! இன்று பெரிய அதிசயம்!
🔆நான் இங்குள் ளவர்களுக்கு மட்டுமே சமைத்திருந்தேன்.
🔆ஆனால் மேற் கொண்டு வந்த பக்தர்கள் எல்லோரும் வயிறாரச் சாப்பிட்ட பிறகும் பத்து பேர் உணவு மீதமிருந்தது.
🔆இது பகவானது பெரிய ஸித்தி தான்!" என்று வியப்புடன் கூறி நின்றார்.
🔆"ஓ ! மணி அடிப்பதற்கு முன் நீ என்னிடம் வந்து ஏதோ சொன்னாய்!" தானே
🔆என்று கூறிய பகவான் எச்சம்மாவைப் பார்த்து
🔆"இன்று யாருடைய சமையல்?" என்றார்.
🔆"நான் தான் செய்தேன் பகவானே!" என்றார் எச்சம்மாள்.
🔆உடனே பகவான் " ஆகவே அந்த ஸித்தி உனக்குத் தான் இருக்கிறது!
🔆நீ தான் சமைத்தாய்!" என்று அந்த பெருமையை அவளுக்கே உரியதாக்கினார்.
🔆என்னே ! பகவானது சமத் காரமான பேச்சு!
#ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய.
ஶ்ரீரமணார்ப்பணம்🙇🙇🙇