HiNana

5 Posts • 5K views
Real Music
555 views 10 hours ago
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் ‘ஹாய் நானா’ பட இயக்குநர் `ஷௌர்யுவ்' #VijayDevarakonda #NewMovie #HiNana #Director #Shouryuv #realmusic2007 Follow our socialmedia pages for more interesting comedy,songs ,movies and cinema related information Real music india : https://whatsapp.com/channel/0029Vb2A2BA2kNFmgEnChl3d Real music Whatsapp Channel : https://whatsapp.com/channel/0029Va58jZsHltYBCXld3E3d Instagram : https://www.instagram.com/realmusic2007/ Twitter : https://x.com/realmusic_2007 Telegram : https://t.me/realmusic2007 Facebook : https://www.facebook.com/realmusicindia #vijaydevarakonda #newmovie #newmovie updates #HiNana #director
10 likes
7 shares
திரைபாரதி
4K views 3 days ago
சிலருக்கு கூட்டம் கூட்டுவதற்கே மூச்சு முட்டுகிறதாம்... காலம் விசித்திரமானது! ரேடியோ அழிந்தது என்று மனிதகுலம் நினைத்தபோது அது FM என்ற வடிவம் எடுத்து மீண்டும் வந்து கார் பிரயாணத்தில் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. ஆங்கில வைத்தியம் தலை தூக்கியபோது சித்த மருத்துவம் சீரழிந்துவிடுமோ என்ற கவலை இருந்தது. அந்த எண்ணத்திற்கு உரம் போடுகிற வகையிலே சில சித்த மருத்துவர்களும் நடந்து கொண்டார்கள். மூன்று மாதங்களுக்கு மருந்து தருகிறேன் 10,000 பணம் கொடுங்கள் என்றார்கள். சாதாரண மூலிகைப் பொடிகளை "ஒரு செட் 4,000" என்று விலை வைத்து விற்றார்கள். சித்த மருத்துவர்கள் லேகியம் தருவார்கள். ஆனால் அது எதனால் ஆனது என்று கேட்டால் எதையாவது சொல்லி அல்வா கொடுத்து மழுப்புவார்கள். இன்று இணையத்தின் உபயத்தில் பேத்தியே வீட்டில் "பாட்டி வைத்தியம்" பார்க்கிறாள். எல்லா வகையான தைலங்களும் சூரணங்களும் மாத்திரைகளும் சல்லிசான விலைகளில் கடைகளில் கிடைக்கின்றன, மூலிகை விவசாயிகளும் பலனடைகிறார்கள். கிராமங்களில் ஒரு காலத்தில் வீடுகளில் களி, கம்மஞ்சோறு, சோளச்சோறு ஆகியவையே பிரதான உணவாகவும், நெல்லுச்சோறு என்பது அருந்தலாகவும் இருந்தது. இன்று அரிசி வதகழிகிறது. ஆனால் சிறுதானியங்கள் மீண்டும் வலம் வருகின்றன. பன்னாட்டு உணவுப்பொருள் நிறுவனங்களும் அவற்றை தனது உணவுப் பொருட்களில் அதிகம் பயன்படுத்துகின்றன. மானாவரி விவசாயிகளுக்கு விலை கட்டுபடி ஆகிறது. பிறகு? அரிசி கோதுமையை விட சிறு தானியங்களின் விலைகள் இன்று அதிகம்! சென்ற தலைமுறையினர் கருப்பட்டி மற்றும் வெல்லத்திலிருந்து சர்க்கரைக்கு மாறினார்கள். இன்று சர்க்கரையே வேண்டாம் என்று மீண்டும் வெல்லத்திற்கு மாறிவிட்டனர். சிலரோ - மண்பானையில்தான் சமைப்பேன், சாதத்தை குக்ககரில் வைக்காமல் வடிக்கத்தான் செய்வேன், இட்லி கொப்பரையில் துணியை விரித்துதான் இட்லிக்கு மாவை ஊற்றுவேன் என இறங்கி விட்டார்கள். நல்ல விஷயம்தான், நடக்கட்டும்! கடைசியில் தேர்தல் பிரச்சாரம்! செல்போன்களின் வருகையால் அரசியல் பொதுக்கூட்டங்கள் கடந்த சில தேர்தல்களில் சோபிக்கவில்லை. ஆனால், இந்தத் தேர்தலில் கூடுகிற கூட்டத்தைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. அதுவும் விஜய், அண்ணாமலை, சீமான், எடப்பாடி ஆகியோருக்கு கூட்டம் அள்ளுகிறது. இதெல்லாம் தானாச் சேந்த கூட்டம். பேச்சுக்கு பேர்போன திமுக கூடாரமே கொஞ்சம் கலகலத்துதான் கிடக்கிறது! கூட்டம் கூட்டுவதற்கே மூச்சு முட்டுகிறதாம். #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
214 likes
24 shares