📚ஊக்குவிக்கும் தன்னம்பிக்கை கதைகள் 📚

8 Posts • 1K views
*"வாழ்க்கை இங்கு சில நேரங்களில் இப்படி தான் சோதிக்கும்* " மாலை சூரியன் மறைந்து கொண்டிருந்தது. அந்த ஒளியுடன் சேர்ந்து ஒரு இளைஞனின் நம்பிக்கையும் மங்கிக் கொண்டிருந்தது. அவன் கையில் ஒரு மடித்த காகிதம்… அது ஒரு வேலை இழப்பு கடிதம். அவன் அந்த வேலைக்காக மட்டும் வேலை செய்யவில்லை. அவன் குடும்பத்தின் நம்பிக்கைக்காக வேலை செய்தான். அம்மாவின் சிகிச்சைக்காக வேலை செய்தான். அவன் கனவுகளுக்காக வேலை செய்தான். “இந்த வேலையை நம்பி தான் வாழ்ந்தேன்… இப்போ என்ன செய்ய?” அவன் குரல் மெதுவாக இருந்தது. ஆனால் அவன் வலி மிகவும் ஆழமாக இருந்தது. அதே வேளையில் அங்கு ஒரு முதியவர் இந்த இளைஞனை பார்த்தவாறு அவன் அருகே வந்தார். அவன் அருகே வந்து தம்பி ஏன் இது சோகமாக இருப்பது போல் தெரிகிறது என்று கேட்கிறார். அதற்கு அந்த இளைஞன் அந்த முதியவரை பார்த்து கூறினார் நான் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தேன் என்று எதிர்பாராத விதமாக அந்த வேலையை வீட்டு என்னை நீக்கி விட்டார்கள். நான் என்ன செய்வது என்று தெரியவில்லை என்னை நம்பி தான் என் குடும்பம் இருக்கிறது இப்பொழுது திடீரென்று வேலை இல்லை என்பதால் எப்படி நான் வீட்டுக்கு செல்வது என்று தெரியவில்லை அதுதான் குழப்பமாக இருக்கிறது என்று இந்த கடற்கரையில் வந்து அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். அதற்கு அந்த பெரியவர் அந்த இளைஞனை பார்த்து தம்பி இது கடினமான நேரம் தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று வேலை இழப்பு இருக்கும்போது மனம் சற்று தடுமாறும் என்னதான் ஆறுதல் கூறினாலும் மனம் குழப்பம் அடையும். ஆனால் இது நிரந்தரம் அல்ல தற்காலிகம். சற்று வீட்டிற்கு சென்று ஓய்வெடு பின்பு நாளை காலையில் உன் மனது அமைதியில் இருக்கும் அப்பொழுது நீ சிந்தனையில் என்ன செய்யலாம் என்று சிந்தித்தால் தெளிவான முடிவு கிடைக்கும். இப்போது உனக்கு பயம் குழப்பம் மற்றும் என்ன செய்வதென்று குழப்பமான மனநிலையில் எது சிந்தித்தாலும் அது சரியான தீர்வாகாது. உனக்கு வேலை தான் போய்விட்டது இன்னும் வயது இருக்கிறது வாய்ப்பு இருக்கிறது அதனால் துவண்டு விடாதே. ஒரு கதவை மூடினால் உனக்கு வேறொரு கதவு திறக்கும் அதை நாம் தான் சிந்தித்து செயல்பட வேண்டும். அந்த முதியவர் அந்த இளைஞனிடம் இவ்வாறு கூறிவிட்டு “தம்பி… உன் கையில் இருந்தது வேலைதான். உன் உள்ளத்தில் இருக்கிறது திறமை.” “அது போதுமா?” — இளைஞன் almost கோபமாக கேட்டான். முதியவர் மெதுவாக சிரித்தார். “ஒரு வேலை போனால் வாழ்க்கை போய் விடாது. வாழ்க்கை நமக்கு சொல்றது — ‘நீ இன்னும் பெரியதுக்கு தயாராகு’ என்று.” “நான் பயப்படுறேன்…” “பயம் இருக்கும் இடத்தில்தான் புதிய தொடக்கம் இருக்கும். நீ இழந்தது உனது சம்பளம் மட்டுமே… விழுந்தது உன் வாழ்க்கை இல்லை.” இப்போது நான் எது கூறினாலும் சற்று கோபமாக தான் இருக்கும் ஆனால் நான் உனது வயதைக் கடந்து வந்தவன் என்ற முறையில் கூறுகிறேன் குழப்பத்தோடும் பயத்தோடும் எதையும் சிந்திக்க கூடாது அப்படி சிந்தித்தால் தவறாகத்தான் முடியும். எழுந்து வீட்டிற்கு செல் சற்று ஓய்வு எடு காலையில் எழுந்திரு அப்போது உன் மனம் சற்று தெளிவாக இருக்கும். அந்த வார்த்தைகள் அவன் மனதை உடைக்க வில்லை…... உருவாக்க ஆரம்பித்தது. அவன் மெதுவாக எழுந்தான். கையில் இருந்த கடிதத்தை மடித்து வைத்தான். அந்தப் பெரியவரை பார்த்து நான் தவறாக பேசியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் கூறுவது தான் சரி சற்று நான் பயம் மற்றும் குழப்பத்தில் தான் இருந்தேன். உங்கள் ஆறுதலுக்கு நன்றி என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினால் புதிய பாதையை நோக்கி..... அது தோல்வி அல்ல — ஒரு புதிய பாதையின் தொடக்கம். 🔥 முடிவு வரி: “வேலை போகலாம்… ஆனால் உன் மதிப்பு போகாது. நம்பிக்கை இருக்கிற வரை வாழ்க்கை முடிவடையாது.” #📚 ஊக்குவிக்கும் தன்னம்பிக்கை கதைகள் 📚 #📚ஊக்குவிக்கும் தன்னம்பிக்கை கதைகள் 📚 #தன்னம்பிக்கை கதைகள் #ஊக்குவிக்கும் கதைகள் 👆 விடாமுயற்சி 💪 தன்னம்பிக்கை🔥 மோட்டிவேஷன் 💪 Rowdyபொண்ணு 📸 Whatsapp DP #தன்னம்பிக்கை கதைகள்
15 likes
8 shares
🔥 இவன் விழுந்தவன் இல்லை… மீண்டும் #📚 ஊக்குவிக்கும் தன்னம்பிக்கை கதைகள் 📚 #📚ஊக்குவிக்கும் தன்னம்பிக்கை கதைகள் 📚 #தன்னம்பிக்கை கதைகள் #தன்னம்பிக்கை கதைகள் #ஊக்குவிக்கும் கதைகள் 👆 விடாமுயற்சி 💪 தன்னம்பிக்கை🔥 மோட்டிவேஷன் 💪 Rowdyபொண்ணு 📸 Whatsapp DP எழுந்தவன் 🔥 ஒரு இளைஞன் பல தோல்விகளை சந்தித்து மனம் உடைந்து ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தான். அவன் அருகில் இருந்த ஒரு முதியவரை பார்த்து புலம்பினான்: “தாத்தா… எனக்கு மட்டும் ஏன் இப்படி? எதை தொடங்கினாலும் நிலைக்கவில்லை. நான் முயற்சி செய்கிறேன்… ஆனா வெற்றி மட்டும் என்னை தவிர்க்கிறது.” முதியவர் மெதுவாக சிரித்தார். “தம்பி… இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வெற்றி. ஆனா எல்லாரும் ஒரே பாதையில் நடக்கிறார்கள். அதனால்தான் குழப்பம்.” இளைஞன் அமைதியாகக் கேட்டான். முதியவர் தொடர்ந்தார்: “எல்லாரும் செய்கிறார்கள் என்று நீயும் அந்த பாதையில் போகக்கூடாது. அது உனக்கான பாதை என்றால் — அதில் உன் முயற்சி, உழைப்பு, பயிற்சி அனைத்தையும் போடு. அது உனக்கான பாதை இல்லை என்றால் — உனக்கான ஒரு பாதையை உருவாக்கு. அங்கீகாரம் அங்கே தான் கிடைக்கும்.” இளைஞன் மெதுவாக கேட்டான்: “அப்படின்னா நான் இவ்வளவு நாள் தோல்வியடைந்ததுக்கு காரணம் என்ன தாத்தா?” முதியவர் சொன்னார்: “நீ பாதையை தேர்வு செய்யாமல் பயணம் தொடங்கிட்டாய். ஒரு ஊருக்கு போகணும் என்றால் முதலில் எந்த ஊர் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அப்போ தான் எப்படி போவது என்று திட்டமிட முடியும். எங்கு செல்ல வேண்டும் என்று பாதை தெரியவில்லை என்றால் நீ பாதையில் நீ நடக்கலாம்… ஆனால் எங்கும் சென்று சேர மாட்டாய்.” சிறிது நேரம் அமைதி. “தம்பி… நீ தோல்வியடைந்தவன் இல்லை. நீ இன்னும் உனக்கான திசையை தேர்வு செய்யாதவன். இங்கு திசை தெளிவானால்..... உனக்கான வெற்றி கண்டிப்பாக வந்தே தீரும். இளைஞனின் கண்களில் ஒரு நம்பிக்கை பிறந்தது. ஆனால் இந்த முறை அது சோர்வின் மனநிலை இல்லை அது நம்பிக்கையின் மனநிலை. அவன் எழுந்தான். அவன் தோல்வியால் விழுந்தவன் அல்ல. அவன் உணர்வால் மீண்டும் எழுந்தவன். 🎯 கதையின் முடிவு: இங்கு விழுவது பிரச்சனை இல்லை. விழுந்தே கிடப்பது தான் பிரச்சனை. எங்கு செல்ல வேண்டும் என்று தெரிந்தால் தான் மெதுவாக இருந்தாலும் வெற்றியை அடையலாம். 🔥 இவன் விழுந்தவன் இல்லை… திசை தெரிந்து மீண்டும் எழுந்தவன்.
11 likes
9 shares
#📚 ஊக்குவிக்கும் தன்னம்பிக்கை கதைகள் 📚 #📚ஊக்குவிக்கும் தன்னம்பிக்கை கதைகள் 📚 #தன்னம்பிக்கை கதைகள் #ஊக்குவிக்கும் கதைகள் 👆 விடாமுயற்சி 💪 தன்னம்பிக்கை🔥 மோட்டிவேஷன் 💪 Rowdyபொண்ணு 📸 Whatsapp DP “சுழன்ற ஒரு ஐநூறு ரூபாய்” ஒரு ஊரில் ஒரு இளைஞன் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்தான். ஒரு நாள் காலை, வழக்கம் போல பேருந்து நிறுத்தத்திற்கு கிளம்பும்போது அவன் பையில் இருந்தது ஒரே ஒரு ₹500 நோட்டு தான். சில்லறை இல்லை. அவன் அருகில் இருந்த தெரிந்த ஒரு சிறிய உணவகத்துக்குள் சென்று “அண்ணா, சில்லறை இருக்கா?” என்று கேட்டான். உணவக முதலாளி சற்றே வருத்தமாகச் சொன்னார்: “தம்பி, இப்போதுதான் கடை திறந்தேன். என்னிடம் இருக்கிறது ₹200 தான்.” இளைஞன் சிறிது நேரம் யோசித்தான். பிறகு ₹500 நோட்டை அவரிடம் நீட்டிவிட்டு சொன்னான்: “அண்ணா, இப்போ அந்த ₹200 மட்டும் தாங்க. மீதியை நான் மாலை வந்து வாங்கிக்கிறேன்.” உணவக முதலாளி அந்த நம்பிக்கையைப் பார்த்து ₹200 கொடுத்தார். இளைஞன் பேருந்தைப் பிடித்து கல்லூரிக்கு சென்றான். அன்று காலை, உணவகத்துக்கு பால் வழங்கும் பால்காரர் வந்தார். “அண்ணா, இன்றைய பால் பணம் ₹500 தரணும்.” உணவக முதலாளி கேஷ் பெட்டியைத் திறந்தார். அதில் இருந்தது அந்த இளைஞன் கொடுத்த அதே ₹500. “மாலை தான் பையனுக்கு தரணும்…” என்று நினைத்தார். ஆனால் வேறு வழி இல்லை. அந்த ₹500-ஐ பால்காரரிடம் கொடுத்தார். பால்காரர் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு நேரே தன் ஊர் மளிகைக் கடைக்கு சென்றார். அங்கு கடைக்காரர் சொன்னார்: “தம்பி, நீங்க எனக்கு ₹500 பாக்கி இருக்கீங்க. கொஞ்சம் சிரமமா இருக்கு.” பால்காரர் தாமதிக்காமல் கையில் இருந்த அதே ₹500-ஐ அவரிடம் கொடுத்தார். அந்த மளிகைக் கடைக்காரரிடம் மதியம் ஒரு சிறு வியாபாரி வந்தார். “அண்ணாச்சி, நீங்க எனக்கு ₹500 தரணும். இன்று அவசரம்.” மளிகைக் கடைக்காரர் சற்றும் தயங்காமல் அதே ₹500-ஐ அந்த வியாபாரியிடம் கொடுத்தார். மாலை நேரம். அந்த சிறு வியாபாரி அவர் வீட்டில் ஒரு சிறிய நிகழ்ச்சி இருந்ததால் உணவு ஆர்டர் செய்ய அதே உணவகத்துக்கே வந்தார். “அண்ணா, இன்று இரவு சாப்பாடு வேண்டும். இதோ முன் பணம்.” என்று சொல்லி அதே ₹500-ஐ மீண்டும் உணவக முதலாளியிடமே கொடுத்தார். மாலை முடிந்து, கல்லூரி முடிந்து அந்த இளைஞன் உணவகத்துக்கு வந்தான். உணவக முதலாளி அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே ₹300 கொடுத்தார். “நன்றி தம்பி,” என்றார். அதற்கு அந்த இளைஞன் மெதுவாகச் சொன்னான்: “அண்ணா, நான் தான் நன்றி சொல்லணும். காலையில் இந்த ₹500-ஐ பேருந்தில் எடுத்துக்கிட்டு போயிருந்தா எனக்கு பெரிய சிரமம் வந்திருக்கும். நீங்க ₹200 கொடுத்தது எனக்கு பெரிய உதவி.” இருவரும் சிரித்துக் கொண்டே பிரிந்தார்கள். 🌿 கதை சொல்லும் உண்மை ஒரே ஒரு ₹500 நோட்டு ஒரே ஒரு நாளில் எத்தனை பேரின் தேவையை பூர்த்தி செய்தது. அதே பணம் யாரிடமும் நின்றுவிடவில்லை. சுழன்றது. பயன்பட்டது. பலருக்கு உதவியது. **இந்த பூமியிலும் அப்படித்தான். செல்வம் சுழன்றால் அது அர்த்தம் பெறும். குவிந்தால்— அது எண்ணிக்கை மட்டுமே.** செல்வம் பயன்படத் தெரிந்தால் மனிதனுக்கும் பயன். சமூகத்துக்கும் பயன். நாட்டுக்கும் பயன். இல்லையென்றால் அது பெயரளவிலான சொத்து தான்......... 🌍 சமூகப் பொறுப்பு சார்ந்த ஆழமான கருத்துகள் 1️⃣ செல்வம் வைத்திருப்பது பெருமை அல்ல 👉 பயன்படுத்தத் தெரிந்தால் தான் மதிப்பு பலரிடம் செல்வம் குவிந்து கிடக்கிறது. ஆனால் அது அவர்களுக்கும் பயன் இல்லை, சமூகத்துக்கும் பயன் இல்லை. 2️⃣ சிறிய உதவியும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த மாணவன் பெரிய உதவி செய்யவில்லை. ஒரு நம்பிக்கை மட்டும் கொடுத்தான். 👉 அதுவே பல மனிதர்களின் ஒரு நாள் தேவையை தீர்த்தது. 3️⃣ நம்பிக்கை தான் சமூகத்தை இணைக்கிறது அந்த ₹500 எழுத்துப் பத்திரம் இல்லாமல் பல கைகளில் சென்றது. 👉 காரணம்: நம்பிக்கை நம்பிக்கை இல்லாத சமூகம் பணத்தால் கூட ஒன்றாக முடியாது. 4️⃣ செல்வம் ஓட வேண்டும், உறங்கக்கூடாது பணம், அறிவு, திறமை எல்லாமே ஒரே மாதிரி. 👉 பயன்படுத்தினால் வளர்ச்சி 👉 தேக்கினால் வீழ்ச்சி 5️⃣ உண்மையான செல்வம் என்பது பகிர்தல் ஒரு மனிதன் எவ்வளவு வைத்திருக்கிறான் என்பது முக்கியமில்லை. 👉 எவ்வளவு பேருக்கு பயன்படுகிறான் என்பதே முக்கியம். 🌿 இறுதி சமூகச் சிந்தனை **ஒரு நோட்டு சுழன்றால் ஒரு நாள் வாழ்வுகள் நகரும். செல்வம் சுழன்றால் ஒரு சமூகம் முன்னேறும்.** #தன்னம்பிக்கை கதைகள்
11 likes
7 shares