ரவிசங்கர் ராஜா, ஆரணி
2K views • 27 days ago •
காலை சிவசிந்தனை
====================
ஸ்ரீ பத்மமஹாபுராணம் கூறும் துரீயசிவம்:
---------------------------------------------------------
பத்மமஹாபுராணத்தின்,பாதாளகாண்டத்தில் 108ஆம் அத்யாயத்தில் ஸ்ரீ ஶம்புவானவர் ஸ்ரீராமரிடம் பஸ்மம் தயாரிக்கும் முறை பற்றி விளக்குகிறார்.முதலில் துரீயமூர்த்தியான ஸதாசிவரிடமிருந்து மும்மூர்த்திகள் தோன்றியதை விளங்குகிறார்.
ஶம்பு கூறினார்,
====÷==========
5.108.2-8.ஹே ராமா!நான் உனக்கு அனைத்து பாபங்களையும் அழிக்கவல்லதான பஸ்மம் எவ்வாறு தோன்றியது என்பதையும்,அதனை நினைத்தாலும்,அதைப்பற்றிக் கூறினாலும் என்னென்ன நற்பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் கூறுகிறேன். ஹே நராதிபகவனமாகக் கேட்பாயாக.ஒருவரேயானவரும்,ஶாஶ்வதமானவரும்,ப்ரஹ்மாவால் வணங்கப்படுபவரும்,முக்கண்ணரும்,குணங்களுக்கு ஆதாரமும்,குணங்களுக்கு அப்பாற்பட்டவரும்,அக்ஷரமும்,அவ்யயருமான ஸதாஶிவரானவர்,ஒருமுறை தன்னுள் இருக்கும் மூன்று குணங்களையும் கண்டு,ஸ்ருஷ்டியை ஆரம்பிக்க விருப்பம் கொண்டார். அம்மூன்று குணங்களும் மூன்று வேதங்கள் என்று அறியவேண்டும்.தன்னை மூன்றாகப் பிரித்துக்கொண்டு,அந்த இடத்தையும் மூன்றாகப் பிரித்துத்,தனது வலதுபக்கத்தில் மகனான ப்ரஹ்மாவைப் படைத்தார்,இடதுபக்கத்தில் ஹரியைப் படைத்தார்.தனது முதுகுப்பக்கத்திலிருந்து மஹேஶானரைப் படைத்தார்,இவ்வாறு வலிமையானவரான அவர் மூன்று மகன்களைப் படைத்தார்.அம்மூவரும் பிறந்த உடனேயே ப்ரஹ்மா,விஷ்ணு,மஹேஶ்வரர் எனும் மூன்று தெய்வங்களாக ஆனார்கள்.அவர்கள் ஒவ்வொருவரும் இவ்வாறு கூறினர்,"நீங்கள் யார்? நாம் யார்?"அம்மூன்று மகன்களிடமும் சிவபெருமான் கூறினார்,"நீங்கள் அனைவரும் எனது மகன்கள்,நான் உங்களின் தந்தை".ஹே புத்ரர்களே!அனைத்து செயல்களுக்கும் காரணமாக அமைந்த இம்மூன்று குணங்களையும் ஏற்பீர்களாக.
" 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்
26 likes
44 shares